தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 12, 2014

காம(ராஜா)ர் (M.A, M.A.B.L, M.com, B.com, M.Sc,)


எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை, யார் சிறந்த மனிதர் ? 
எது 100 ஆண்டுகள் பேசும் சாதனை ?
காமராஜரின் ஆட்சி காலம்.

ராஜாஜி நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி, 6000 ஆரம்பப் பள்ளிகளை இழுத்து மூடினார், அடுத்த சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜர், அதுதான் அவர் முதன் முதலாக ஆட்சியில் அமர்வது. ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளை சில மாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜர் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார், அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள் கட்ட உத்தர விட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென உணவும் அளிக்க திட்டம் தீட்டி நிறைவேற்றினார் ! நிதிப்பற்றாக்குறை, அரசாங்க கஜானாகாலி என்று ராஜாஜி, தமிழகத்தைப் பிச்சைக்கார மாநிலமாக முன்னிருத்தினார். ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த, காமராஜர் அதே பிச்சைக்காரத் தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக் கொண்டு வந்து நிறுத்தினார்.

நெய்வேலி நிலக்கரித்திட்டம்,
பெரம்பலூர் ரயில்பெட்டி தொழிற்சாலை,
திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்,
ஊட்டி கச்சாபிலிம் தொழிர்சாலை,
ஆவடி கனரகவாகன தொழிற்சாலை,
கல்பாக்கம் அணுமின் நிலையம்,
கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை,
சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை,
மேட்டூர் காகிதத்தொழிற்சாலை,
சென்னை அனல்மின் நிலையம்,
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்,
சேலம் இரும்பு உருக்காலை,
பெரம்புர் ரயில்பெட்டி தொழிற்சாலை,
அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட்  தொழிற்சாலை,
சமயநல்லூர் அனல்மின் நிலையம்,
கிண்டி அறுவைச்சிகிச்சைக்கருவி  தொழிற்சாலை,
துப்பாக்கித்தொழிற்சாலை.

இவை மட்டுமா ? மணிமுத்தாறு, ஆரணியாறு, சாத்தனூர், அமராவதி, கிருஷ்ணகிரி, வீடூர், வைகை, காவிரி, டெல்டா, நெய்யாறு, மேட்டூர், பரம்பிக்குளம், புள்ளம்பாடி, கீழ்பவானி என்று இன்றைக்கும் விவசாயிகள் பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும் பாசனத்திட்டங்கள் காமராஜர் உருவாக்கியவை ! அவர் ஆட்சி ஏற்றபோது தமிழகத்தில் இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள். அவர் ஆட்சியைவிட்டு இறங்கியபோது 14.

 இதுமட்டுமா ? 159 நூல்நூற்பு ஆலைகள், 4 சைக்கிள் தொழிற்சாலைகள், 6 உரத்தொழிற்சாலைகள், 21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள், 2 சோடா உற்பத்தித் தொழிர்சாலைகள், ரப்பர் தொழிற்சாலை, காகிதத் தொழிற்சாலை, அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை.  

கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி என்று, தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள் உருவாக்கினார்.  

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே ! காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான், (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன) அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில் இந்தியாவிலேயே தொழில் வளர்ச்சியில் இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா ?
இல்லை இலவசத்தின் பேரில் நம்மை பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா ?
ஆயிரமாண்டுகள் பேசவேண்டிய, சாதனை இது ?
(This is received from "History of Tamilnadu")
என் இனிய, ஓட்டுப்போடும் தமிழக மக்களே.. இனியாவது கொஞ்சம் சிந்திப்போம் !
இல்லையேல் நாளையும் நாம, முச்சந்தியிலே நிற்போம் !

9 கருத்துகள்:

  1. கண்டிப்பாக சிந்திக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. அன்பின் கில்லர்ஜீ - அருமையான் பதிவு - கர்ம வீரர் காமராஜரைப் பற்றிய பதிவு - நன்று நன்று - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனது, Valmeegi யிலும் வந்து என்னை சிலிர்க்கவைத்த Cheena அவர்களுக்கு தொட்டதற்கும், தொடர்வதற்கும் நன்றி. -Killergee

      நீக்கு
  3. காமராஜர் பற்றி படித்து இருக்கிறோம். ஆனால் சகோதரரே... தாங்கள் சுருங்கச் சொல்லி விளங்க வைத்து விட்டீர்கள். நச்சென்று மனதில் பதியும் வண்ணம் இருக்கிறது. செய்ய மனம் இருந்தால் எதையும் மனிதனால் செய்ய முடியும்....நல்ல மனிதர்கள் இறந்தும் வாழ்கிறார்கள்.பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தங்களின் கருத்துரைக்கு நன்றி சகோதரி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
    சென்று பார்வையிட முகவரி இதோ.http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_10.html?showComment=1407632115925#c853170747686434206

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. இது எப்படியப்பா எங்கள் கண்களில் படாமல் போனது?!!! ஸ்ரீ பூவு ஆசியளிக்க மறந்துவிட்டார் போலும்! அருமையான பதிவு ! பாதுக்காக்க வேண்டிய ஒன்றும் கூட! ஸ்ரீ பூவு என்ன சொல்லுறார் காமராஜர் போன்ற ஒருவர் வருவார் என்று?!!!!

    ஆஸ்திரேலியாக்காரர் வந்து கண்ணேருக்கு பதில் சொல்லி உள்ளார். ப்ளாகருக்கு என்னவோ ஆயிருச்சு போல! உங்கள் வலைத்டளம் நேற்று ஒழுங்காக வந்தது அப்டேட்டாகி. அதற்கு முந்தியய பதிவுதான் அப்டேட் ஆகவில்லை.....உங்கள் இந்தியா......அப்ப துக்கு யார் கண்ணேறு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸைபர் க்ரைமில் கம்ப்ளைண்ட் கொடுக்கப்போறேன்.

      நீக்கு