"என் விதி, அப்போதே தெரிந்திருந்தாலே...
கர்ப்பத்தில் நானே, கரைந்திருப்பேனே..."
- கவிஞர் வைரமுத்து
இது சாத்தியமா.. சாத்தியமென்றால் எத்தனை
சிசுக்கள் தன்னைத்தானே கருவறையிலேயே கரைத்திருக்கும் ?
Including me & you is this Correct or
no ? Yes, I know this is 100 % Correct.
பிறப்பு என்பது விதிதான்,
இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
விதியின் வழியென வீதியில்
போகும் மனிதன், சதியின் குழியில் வீழ்ந்திணும் இதுவும் விதி என்கிறான், மதிகொண்டு
தடுத்திடு என்றால் தடுத்தினும் அதுவே விதி என்கிறான், தவறு மானிடா தவறு தவறினும்
இப்படி நினவாதே உதாரணம்....
இருபெண்கள் ஒருத்தி
நல்ல குணமுடையாள், அழகானவள், ஒழுக்கமானவள், அன்பானவள், அறிவானவளும்கூட ஆனால் ஏழை.
மற்றொருத்தி அகங்காரி, அன்பில்லாதவள், ஒழுக்கமற்றவள், அழகற்றவள் மட்டுமல்ல,
அறிவற்றவளும்கூட ஆனால் பணக்காரி. இந்த இருவரைப்பற்றியும் உனக்கு
நன்கு தெரியும், இருவரில் ஒருவரை வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுப்பது உன் கையில்
நீயோ இல்லாதவனாயினும் அறிவாளி, நீ யாரைத் தேர்ந்தெடுப்பாய் ? இரண்டாமாவளை
தேர்ந்தெடுத்தால் நாளைய வாழ்க்கை எப்படியென தெரிந்த அறிவாளியான நீ இறைவன்
அளிக்கும் குணத்தாளை மறந்து விட்டு, மனிதன் அளிக்கும் பணத்தை பெரிதென நினைத்து
பணக்காரியை மணக்கிறாய் பிறகு வாழ்க்கை கசக்கும்போது என் வாழ்க்கையை இறைவன் மாற்றி
எழுதி விட்டான் என்றால் யார் குற்றவாளி ? மாற்றியது இறைவனின்
விதியா ? உனது மதியா ? அப்படியானால் பணக்காரியை
யார் மணப்பது ? எனக்கேட்டு விடாதே இறைவன் அவளுக்கும் ஒருவாழ்வு வைத்திருப்பான்,
அந்த
வாழ்க்கைதான் இது, எனச்சொல்லி விடாதே பணம் பணத்தோடு சேரும்போது
இனம் இனத்தோடுதான் சேரவேண்டும், வாழ்க்கைத் துணையை கட்டுவது மட்டுமல்ல... வாழ்வின்
அணையை கட்டுவதும் உன்செயலே...
இறைவன் கொடுத்த கண்
பார்பதற்கு, எனத்தெரிந்த நீ...
இறைவன் கொடுத்த செவி
கேட்பதற்கு, எனத்தெரிந்த நீ…
இறைவன் கொடுத்த மூக்கு
நுகர்வதற்கு, எனத்தெரிந்த நீ…
இறைவன் கொடுத்த வாய்
பேசுவதற்கு, எனத்தெரிந்த நீ…
இறைவன் கொடுத்த கால்
நடப்பதற்கு, எனத்தெரிந்த நீ...
இறைவன் கொடுத்த கை
உழைப்பதற்கு, எனத்தெரிந்த நீ...
இறைவன் கொடுத்த மூளை
சிந்திப்பதற்கு, எனத்தெரிந்து கொள்.
இது போல்தான் மானிடா
எல்லா விசயங்களுமே... இறைவன் மதியைக் கொடுத்தது சிந்தித்து செயல்படவே.. நாம்
சிந்தித்தால் நாட்டில் ரசிகர் மன்றங்கள் இருக்காது, கட்சி என்ற அமைப்புகள்
இருக்காது, சாதிச் சங்கங்கள் இருக்காது, மதப்பிரிவினைகள் இருக்காது, அரசியல்வாதிகளும்,
சினிமாக்காரர்களும், கோடீஸ்வரர்களாக முடியாது, அவர்களும் உழைப்பாளிகள்தான்.
ஒரு விஞ்ஞானி போல்…
ஒரு நீதிபதி போல்…
ஒரு வழக்கறிஞர் போல்...
ஒரு மருத்துவர் போல்…
ஒரு ராணுவவீரர் போல்…
ஒரு காவல்துறை அதிகாரி
போல்…
ஒரு வங்கி அதிகாரி
போல்...
ஒரு குமாஸ்தா போல்…
ஒரு ஒட்டுனர் போல்…
ஒரு நடத்துனர் போல்…
ஒரு குதிரை வண்டிக்காரர்
போல்...
ஒரு கைவண்டி தொழிலாளி
போல்...
ஒரு புரோட்டா மாஸ்டர்
போல்...
அவர்களும் ஒரு,
உழைப்பாளிகள்தான்.
உழைப்பிற்க்கு பலனுண்டு
உலகிலே... உழைத்தவருக்கு களைப்பு வரலாம் ஆனால் உழைத்த செல்வம் நம்மை களைவதில்லை.
எங்கும் சமத்துவம் மலர.. இனியெனினும் முதலில்
சிந்திப்போம்
பிறகு அதன் வழியே உழைப்போம்.
நாடு பலமுடன் வளம் பெற
அதில், நாமும் நம் குலமும், நலம் பெற.
சாம்பசிவம்-
கருவுல, தொடங்கிய விசயம் உருமாறி பெருங்கொண்ட துருவங்களை
தா(ங்)க்கி நிக்கிதே....
காணொளி