தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், அக்டோபர் 31, 2016

முரண்பாடு

01. சிறப்பாக நடந்த திருமணங்களின் எல்லோருடைய வாழ்க்கையுமே சிறப்பாக இருப்பதில்லை.
02. ஊர் சிரிக்க நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சிறப்பாக இருந்திருக்கின்றது
03. மனங்கள் ஒன்றி நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் பிரிந்து போயும் இருக்கின்றன.
04. மனம் சேராமல் நடந்த திருமணங்களின் பலருடைய வாழ்க்கையும் சேர்ந்தே சிறப்பாக இருந்திருக்கின்றது.
05. விருப்பத்துடன் நடந்த திருமணங்களின் பலர் சமூகத்துக்காக பிரியாமல் வாழ்கின்றார்கள்.
06. விருப்பமில்லாமல் நடந்த திருமணங்களின் பலரும் சமூகத்துக்காக சேர்ந்தே வாழ்கின்றார்கள்.
07. குழந்தைகளுக்காக விருப்பமில்லாத கணவனுடன் வாழும் பெண்கள் இருக்கின்றார்கள்.
08. குழந்தைகளால் விருப்பமுடன் கணவனுடன் வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்
09. குழந்தை இல்லாததால் கணவனை பிரிந்து வாழும் பெண்களும் இருக்கின்றார்கள்.  
10. பேராசையால் பொன்னுக்காக, பலரும் பெண்ணை திருமணம் செய்கின்றார்கள்.
11. ஆசைக்காவும், அழகான பெண்ணுக்காகவும் சில ஆண்கள் திருமணம் செய்கின்றார்கள்.
12. ஆசைப்பட்டு திருமணம் செய்த அழகான பெண்களாலும் சிலர் பிரிகின்றார்கள்.
13. ஆசைப்படாமல் திருமணம் செய்த அழகில்லாத பெண்களால் பலரும் சந்தோஷமாய் வாழ்கின்றார்கள்.
14. நல்ல கணவனுக்கும் துரோகம் செய்து கொண்டும் சில பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
15. அயோக்கிய கணவனுக்கும் துரோகம் செய்யாமலும் பல பெண்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
16. பழிக்குப்பழி என்ற கோட்பாட்டில் கணவனும், மனைவியும் துரோகம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள்.

இந்த முரண்பாடுகளுக்கு எல்லாம் காரணகர்த்தா யார் ? மேல் வீட்டு திருவாளியத்தவனா ? இல்லை விதி என்றும் எல்லாம் அவன் செயல் என்று மேல் வீட்டுக்காரரை கைகாட்டி விட்டு கீழ் வீட்டுக்குச் செல்லும் காலம்வரை வாழ்வின் நெளிவு சுழிவு அறிந்து வலிகளை நீக்கத்தெரியாத வழிப்போக்கர்களான புரியா மடந்தை மனித மனங்களா ? இதன் மூலம் கீழ்காணும்...

விருப்பமற்ற விவாஹம் விருத்திக்கு வராது.
திடீர் திருமணம் திருப்தி தராது.
ட்டாய ல்யாணம் ளத்தில் நிற்காது.
என்பதும் பொய்யாகிறது ஆம் இவை எதிர் புறமாகவும் திரும்பலாம் என்பதே எமது கருத்து உங்கள் கருத்தென்ன, நட்பூக்களே... ?

காணொளி
மணப்பெண் கதறக் கதற கட்டியதாலி நிலைக்குமா ?
பதிவுக்கு காரணமான திருமதி. கீதா சாம்பசிவம் அவர்களுக்கு நன்றி.

42 கருத்துகள்:

  1. கானொளியில் நான் கண்டது , வழங்கப் படுவது ஆசீர்வாதம் அல்ல , ஆ'சீ'ர் வாதம் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி இதெல்லாம் வன்மையாக கண்டிக்கத்தக்க விடயமே வருகைக்கு நன்றி

      நீக்கு
  2. பகிர்வு நன்று.
    இந்த காணொளி முகநூலில் பார்த்திருக்கிறேன்... வேதனையான விஷயம்... கொடுமை...

    பதிலளிநீக்கு
  3. இந்த வீடியோ க்ளிப்பை பேஸ்புக்கில் பார்த்து மனம் நொந்துதான் போனேன் எனக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அங்குள்ள அனைவரையும் எரித்துவிடுவேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே ஆத்திரம்தான் வருகிறது வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. சமூகத்தின் எதிர் மறை யதார்த்தங்கள்,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  5. உங்கள் வரிகளை ரசித்தேன். காணொளி : சதியில் இவ்வளவு பெண்களா கூட இருப்பார்கள்? ஒருவேளை ஆனந்த அழுகையும், மயக்கமுமோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களால் எதிர்த்திருக்க முடியாது என்று நினைக்கிறேன் இன்னும் ஆணாதிக்கம் இருக்கின்றது
      ஆனந்த அழுகை தாலி கட்டிய பிறகு நிதானமாக வரவேண்டுமே நண்பரே

      நீக்கு
  6. ஹை, பதிவுக்கு நான் காரணமா? எப்பூடி? ஆனால் சிந்தனைக்கு வித்திட்ட சிறந்த பதிவு.

    ம்ம்ம்ம்ம் இது எனக்கு அப்டேட் ஆகலை. கூகிளார் மறுபடி தன் வேலையைக் காட்டறார்னு நினைக்கிறேன். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்ப பரவாயில்லையே உடனே வந்துட்டீங்களே....
      கூகிளார் மீது பாரத்தை போச்சு விட்டு பல பதிவுகளை விடுகின்றீர்கள்
      தீபாவளிப்பதிவு 'கொடுத்துட்டு போங்க, அத்தான்' வரவில்லையே...

      நீக்கு
  7. அருமையான வரிகள் சகோ. காணொளியை நானும் பார்த்திருககிறேன்,

    பதிலளிநீக்கு
  8. காணொளி மனதில் வேதனையை ஏற்படுத்துகிறது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே இன்னும் இது போன்ற அநீதிகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது,

      நீக்கு
  9. ஒவ்வொரு கேள்வியும் குத்தீட்டியாகப் பாய்கின்றது...
    (அது சரி!.. யாரையும் விடுவதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டீர்களா?..)

    காணொளி முன்பே Fb ல் வந்திருந்தது..

    கருத்துக் குருடர்கள் திருந்துவது எப்போது?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  10. இன்றுதான் இந்தக் காணொளி கண்டேன்.. திருமணம் என்பது வாழ்க்கைப் பயிர். மனதைப் பாதிக்கும் காணொளி. ஆனாலும், விதி (destiny) அவளுக்கு நல்ல வாழ்க்கையை அமைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது, அட.. இது தெரியாமல் கல்யாணத்தின்போது அழுதேனே என்று எண்ணவும் வாய்ப்பிருக்கிறது. 'ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா' என்ற பாட்டு ஞாபகம் வருகிறது.

    சினிமா கல்யாணங்கள் பொதுவாக, கணவன் படம் எடுத்து கடனாளியாக ஆகும்போது, தன்னையும், குடும்பத்தையும், தன்னுடைய சொத்தையும் பாதுகாத்துக்கொள்ள, பிரிவு நேர்கிறது. இதுதானா காரணம் நளினி-ராமராஜ், பார்த்திபன்-சீதா, ரேவதி-... திருமணங்களில் என்பது நிச்சயமாகத் தெரியாது. ஆனால் இவைகள் காதல் திருமணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொன்னது போலவே அந்த சகோதரிக்கு நல்வாழ்வு அமையட்டும் அனைவரும் பிரார்த்திப்போம் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. i have read that some young women are scared of marriages...

    some of them may be victims of CHILD ABUSE...
    pshchological councelling should be given to them
    HERE THE BRUTAL FAMILIES ARE KEEN ON FORCED MARRIAGE ONLY...JI

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  12. 1 முதல் 16 வரை எல்லாமே சரி . நானும் பலரது திருமண வாழ்வினை அலசி ஆராய்ந்திருக்கிறேன் .
    காணொளி ...........பல பெண்களால் ஒன்று செய்ய முடிவதில்லை ( ஃ பேஸ் புக்கில் பல ஜோக்குகள் மனைவிகள் நோஸ் கட் கொடுப்பது போல கணவர்கள் பாவம் என்பது போல வந்தாலும் யதார்த்தம் என்பது வேறு )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மையே... நடைமுறை யதார்த்தம் வேறுதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  13. சில திருமணங்கள் இல்லாத ஒன்றான சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதால் பிரிந்துபோய் இருக்கலாம். பல திருமணங்கள் வர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதால் பிரியாமல் இருக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தாங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கலாம்.

      நீக்கு
  14. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது என்பர்
    வாழ்க்கை வாழ்வோரால் வாழப்படுகிறது என்பர்
    வாழ்ந்தவர் தான் சான்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகிய கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  15. திருமணம் என்பதே லாட்டரி போல் ஆகிவிட்டது. பல பெண்களால் ஆண்களின் வாழ்க்கை சீரழிந்து போய் இருக்கிறது அது போல் ஆண்களாலும் பெண்கள் அவதிக்குள்ளாகிறார்கள்எதிலும் இருபாலாருக்கும் கவனம் தேவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாஙக ஐயா மிகச்சரியான சொல்லாடல் அதிஷ்டம் வேண்டும் என்பதே உண்மை.

      நீக்கு
  16. பெயரில்லா10/31/2016 5:55 PM

    உலகத்தில் நடப்பவைகளைப் பார்க்கும் போது
    திருமணம் கேள்விக் குறியாகவே உள்ளது.
    தமிழ் மணம் - 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை இப்பொழுது பெண்ணைப் பெற்றவர்கள் பயந்து கொண்டே வாழ்க்கின்றனர் வருகைக்கும், வாக்கிற்க்கும் நன்றி சகோ

      நீக்கு
  17. என்ன சொல்வதென்றே தெரியவில்லை, ச்ச்சீ இவர்களெல்லாம் மனிதர்களா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காட்டுமிராண்டிகள் வகை எள்று சொல்லலாம் நண்பரே

      நீக்கு
  18. மச்சான் உங்களுக்கு நிகர் தாங்கள்தான் என்று உணர்த்தும் பதிவு...

    பதிலளிநீக்கு
  19. வேதனை, சாதனை, சோதனை...அனைத்தையும் உங்களது பதிவுகளில் காணலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  20. இரு மனம் இணைவதே திருமணம். கட்டாயக் கல்யாணம் இருவரது வாழ்க்கையையுமே சீரழித்துவிடும்.
    அந்த காணொளியை பார்க்கும்போது அந்த பெண்ணின் நிலைமையை/ஆற்றாமையை எண்ணி பரிதாபப்படத்தான் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அழகாக சொன்னீர்கள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  21. அத்தனையும் உண்மை.
    காலம் எல்லோரையும் எல்லாவற்றையும் மாற்றவல்லது.
    நம் குடும்ப அமைப்பு, திருமணப்பந்தம் இவற்றின் மகத்துவம் வெளிநாட்டினரின் வாழ்க்கை முறை அதுவும் நாகரீகம் வளர்ச்சி அடையாத ஆப்பிரிக்க நாடுகளைப் பார்த்தால் தான் புரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது கருத்துப் பகிர்வுக்கு நன்றி

      நீக்கு