தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஏப்ரல் 29, 2016

அரசியல் வியாதிகள்


முதல்வராக இருந்தவர்கள், இருக்கப் போகின்றவர்கள் இவர்கள் சில நேரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமே... ஆனால் இவர்கள் அந்த நேரங்களில் சட்டசபைக்கு போய் இருக்கின்றார்களா ? போகவில்லையே ஏன் ? இவர்கள் முதல்வராகத்தான் போவார்களோ ? இப்படிப்பட்டவர்களுக்கு நாம் மீண்டும் வாக்களிக்காமல் ரிவிட் அடித்தால் என்ன ? நாம் செய்யமாட்டோம் இந்த நேரத்தில் எனக்கு நண்பர் திரு. ஜார்ஜ் புஷ் சொன்ன அமெரிக்க பழமொழி நினைவுக்கு வருகின்றது ‘’Peat the rivet again not coming Political man’’ உண்மைதானே இதனால்தான் இவர்கள் தைரியமாக எதிரிக்கட்சித் தலைவராக ஆனதும் சட்டசபை செல்வதில்லை.

ஐயா திரு. ஜியெம்பி அவர்கள் சொல்வதைப் போல இவர்கள் மக்களின் நாடித்துடிப்பை நன்கறிந்த மருத்துவர்களே.... (நான் மருத்துவர் திரு. ராமதாஸ் அவர்களை சொல்லவில்லை) கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் எவ்வளவு நெஞ்சழுத்தம் இவர்களுக்கு காரணம் என்ன ?

இப்பொழுது ஓட்டு வாங்குவதற்காக டாஸ்மாக்கை மூடப் போகின்றார்களாம் இதற்குத்தானே தோழர் திரு. கோவன் குரல் கொடுத்தார் இதற்காகத்தானே அவரை கைது செய்தார்கள் நள்ளிரவில் கைது செய்ய வேண்டிய அவசியம் அவர் தீவிரவாதியா ? அவரென்ன திரு. விஜய் மல்லையா போன்று வசதி படைத்தவரா ? விமானத்தில் பறந்து விடக்கூடியவரா ? மக்களே என்பதை மக்கழே என்று உச்சரிப்பவனைக்கூட தலைவனாக ஏற்றுக்கொண்டது தமிழனுக்கு இழுக்கல்லவா...

இந்த அரசியல் வியாதிகள் அனைவருக்குமே தாம் பேசுவது அனைத்தும் அக்மார்க் பொய் என்பது தெரியும் இருப்பினும் அவர்கள் பேசுகின்றார்கள் காரணமென்ன ? கொளுத்தும் வெயிலிலும் காத்து நிற்கின்றீர்களே.... இதுதான். அரசியல்வாதிகள் வரும் பொழுது ஒரேயொரு முறை யாருமே போகாமல் இருந்து பாருங்கள் குடியா முழுகிப் போய்விடும் அவர்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள் போவதால்தான் நமது குடி மூழ்கி கொண்டு இருக்கின்றது டாஸ்மாக்கை இன்று தொடங்கினால் தேர்தலின் முதல் நாளுக்குள் மொத்தமாக மூடிவிட முடியாதா ? முடியும் ஆனால் மூடமாட்டார்கள் மற்றொரு கோஷ்டி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடி விடுவோம் என்று கூவுகின்றது திறந்து விட்டதே இவர்கள்தானே தேர்தலுக்கு தேர்தல் ஒரு கட்சியில் கூட்டணி வைக்கின்றார்களே இவர்களை டெபாசிட் இழக்க வைக்கவேண்டும்.

இந்த தேர்தலில் தலைவர்களை அனைவரையுமே தோற்கடிக்க வைக்கவேண்டும் அப்பொழுதுதான் அடுத்த நமது சந்ததிகளுக்கு நல்ல வாழ்க்கை அமையலாம் வேட்பாளர்கள் அந்த தொகுதிக்குள் பிறந்து வளர்ந்தவராக இருக்க வேண்டும் அவர் சுயேட்சையாக இருந்தால் என்ன ? அவருக்கு வாக்களிக்க கூடாதா ? மேலூரில் பிறந்து வளர்ந்த கிராமராஜன் திருச்செந்தூரின் கடலோரத்தில் வெற்றி பெற்றார் அந்த தொகுதி மக்களுக்கு பலன் கிடைத்ததா ? இதன் காரணமென்ன ? அவர் சினிமா நடிகர் நன்றாக பால் கறப்பார் என்பதால்தானே.... இந்த அறியாமை என்று ஒழிகின்றதோ அன்றுதான் அக்கம் பக்கத்து மாநிலத்தான் தமிழனை மதிப்பான் அவன் தமிழனை என்ன நினைக்கின்றான் என்பது அயல் தேசத்தில் வாழும் தமிழர்களுக்கே தெரியும்.

கட்சியை மறந்து, ஜாதியை மறந்து மனிதனை நினைத்து வாக்களிப்போம் வாக்களிக்க விருப்பம் இல்லையா ? இதோ இருக்கின்றது நோட்டோ அதற்கு முத்திரை பதியுங்கள் கண்டிப்பாக நோட்டோவுக்கு பதியுங்கள் இல்லாவிடில் தேசத்துரோகிகள் நம்நாட்டில் நிறைய உண்டு அவர்கள் உங்களது வாக்குகளை பயன் படுத்தி விடலாம் நாடறிந்த நடிகர் திரு. சிவாஜி கணேசன் அவர்களின் ஓட்டையே போட்டவர்கள், இந்தியாவின் முதல் குடிமகன் என்ற நிலையிலிருந்த மறைந்த ஜனாதிபதி திரு. ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சகோதரரின் ஓட்டையே போட்டவர்கள் நம்மவர்கள் ஆகவே நோட்டோவை மறக்காதீர்.


வாக்காளப் பெருங்குடி மக்களே எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் குறிப்பாக சென்னை மக்கள் சமீபத்தில் வந்த வெள்ளத்தை மறக்ககூடாது இதில் அனைத்து கட்சிக்காரர்களும் செய்த ஊழை வேலைகளை மறக்கவே கூடாது அதிலும் சவப்பெட்டியில் ஸ்டிக்கர் ஒட்டியதை கண்டிப்பாக மறக்க கூடாது மக்களே அதிகமாக சிந்திக்க வேண்டாம் தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல்வாதிகள் மக்களைத்தேடி வருகின்றார்களே மற்ற நேரங்களில் வந்து மக்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வதில்லையே ஏன் ? கேட்டால் மக்களுக்கு சேவை செய்வதற்காக சட்டமன்றம் சென்றோம் என்பார்கள் தேர்தல் அறிவித்த நாள்முதல் தமிழக சட்டமன்றம் திண்டுக்கல் பூட்டு போட்டு இருக்கின்றதாமே... இப்பொழுது மக்களுக்கு சேவை செய்வது யார் ? 

இதை மட்டும் யோசியுங்கள் மாநிலங்களிலேயே மொழியின் பெயரைக் கொண்டது நமது தமிழ்நாடு மற்ற மாநிலத்துக்கு இல்லாத பெருமை சமீபத்தில்தான் தெலுகுதேசம் என்று உருவானது ஆகவே... இனியாவது தமிழ்நாட்டை தமிழன் ஆள்வதற்கு வழியென்ன ? கொஞ்சம் சிந்திப்போம் இந்த சிந்தனை நமக்காக அல்ல ! மாற்றம் என்பது உடன் நிகழ்ந்து விடும் செயலும் அல்ல ! அதற்கு காலஅவகாசம் வேண்டும் எப்பொழுதுமே மரத்தை நட்டவன் கனியை சுவைப்பதில்லை இன்று நமது சிந்தனையை தொடங்கினால் நாளைய நமது சந்ததிகள் வாழலாம் நாம் சொத்து சேர்த்து வைக்கத் துடிப்பது நமது சந்ததிகளுக்காகத்தானே முதலில் அவர்களை மானமுள்ள தமிழனாக வாழ வைப்போம் பிறகு மற்றதை அவர்கள் தேடிக் கொள்வார்கள் - கில்லர்ஜி

காணொளி

வியாழன், ஏப்ரல் 28, 2016

42 Inch T.V


ராமன்-
எங்க மாமா துபாய்க்கு டூர் போயிட்டு வரும்போது 42 இஞ்ச் T.V. வாங்கிட்டு வந்தாருடா...
சோமன்-
ஹும் எங்க மாமா துபாயில 25 வருசமா வேலை செஞ்சுட்டு வரும்போது T.B வியாதியைத்தான் வாங்கிட்டு வந்தாரு...
* * * * * * * * * * 01 * * * * * * * * * *
பாபு-
என்னது நீ தினம் T.V. பார்க்கும்போது மட்டும்தான் சந்தோஷமா இருக்கியா ?
கோபு-
ஆமாடா சீரியல் பார்க்கும் போதுதானே என் மனைவி அழுதுக்கிட்டு இருக்கிறதை பார்க்க முடியுது.
* * * * * * * * * * 02 * * * * * * * * * *
தங்கமணி-
ஏன்டா... சாயங்காலம் வீட்டு வாசலில் உட்கார்ந்து பெண்கள் இப்ப பொறணி பேசுறது இல்லையே ?
ரங்கமணி-
எல்லோரையும் இப்ப T.V. சீரியல்காரன் வீட்டுக்குள்ளே சிறை வச்சுட்டான்டா...
* * * * * * * * * * 03 * * * * * * * * * *
மூர்த்தி-
எந்த T.V. வாங்கினால் தெளிவாக படம் பார்க்கலாம் ?
கீர்த்தி-
டாஸ்மாக் போகாமல் படம் பார்த்தால் ? எல்லா T.V.யும் தெளிவாக பார்க்கலாம்.
* * * * * * * * * * 04 * * * * * * * * * *
வருண்-
விளம்பரமே இல்லாமல் எந்த T.V. யில் படம் பார்க்கலாம் ?
அருண்-
D.V.D. போட்டால் எல்லா T.V.யும் பார்க்கலாம்.
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

குறிப்பு - என்னைப் பிடிக்காதவர்கள் யாரோ... நான் பதிவு எழுதிக்கிட்டு இருக்கும் பொழுது இந்த PHOTO வை சொருகி விட்டு போயிட்டாங்கன்னு நினைக்கிறேன் பின்னே எனக்கே தெரியாமல் எப்படி வரும் ?

செவ்வாய், ஏப்ரல் 26, 2016

வெற்றி நிச்சயம்

இன்றைய அரசியல் நிலவரங்களைக் குறித்த YouTube காணொளிகளைக் காணும் பொழுது எனக்கு கோபம் கோபமாக வருகின்றது நண்பர்களே... யாரை நோவது கோமாளிகளையா ? இல்லை கோமாளிகளை அறிவுஜீவிகளாக நினைக்கும் அறியாமை கோமாளிக் கூட்டங்களையா ? சில காணொளிகளை கண்டேன் கீழ்காணும் இந்த காணொளியைக் காணும் பொழுது எனக்கு அரேபியர்கள் அடிக்கடி சொல்லும் பழமொழி ஒன்று எனது நினைவோட்டங்களில் நுழைந்து செல்கின்றது இதோ இதுதான்...

//சவலைப் புள்ளையக் கொடுத்து குவளை வாங்குற கதையாவுல இருக்கு// ஆம் நண்பர்களே எனக்கென்னவோ.. இது எதையோ காண்பித்து எதையோ பறிப்பது போல்தான் தோன்றுகின்றது தெளிந்த சிந்தனையோடும், நல்ல மனநிலையோடும், இருக்க வேண்டிய ஒரு மக்கள் தலைவன் செயல் போல் இருக்கின்றதா ? மனைவியும், மைத்துனரும் கிலுகிலுப்பையை காண்பித்து மக்களை உறங்க வைத்து விடலாம் என்று நினைப்பது போல்தான் தெரிகின்றது இவர்கள் ஆட்சிக்கு வந்தால் ? நான் நினைத்துப் பார்க்கின்றேன் உகாண்டா நாட்டில் சொல்லும் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகின்றதுகூதரைகள் ஊருல பேக்கொதக்கு நாட்டாமையாம்இப்படித்தான் போகுமோ ?

தொ(ல்)லைக்காட்சி பெட்டியைத் திறந்தால் இவர்கள் பேசும் பேச்சு கேட்டு முடிந்தவுடன் பார்த்தால் காதோரம் லோலாக்கு இல்லை காதோரம் குருதி ஒழுகுது. எனக்கு யாருமே இல்லைன்னு சொல்றவங்களுக்கு இவ்வளவு சொத்து எதற்கு ? இன்றே இப்பொழுதே தனது சொத்துக்களை மக்களுக்கு எழுத வேண்டாம் இந்திய மக்களுக்கு வேண்டாம் தமிழ் நாட்டு மக்களுக்கு அரசு வைத்திருக்கின்ற கடன் தொகையைக் கொடுத்து பொருளாதாரத்தை உயர்த்தி விலைவாசியை குறைக்கட்டுமே... வெற்றி நிச்சயம்.

அங்கிட்டு நான் கட்டையில போறவரை கட்டு மரமாவேன் என்னைப் பிடித்துக் கொண்டு கரையேறலாம் என்றால் இது நம்புற மாதியா இருக்கு ? இதைக்கேட்கும் பொழுது எனக்கு இந்தோனிஷியா நாட்டு பழமொழி ஒன்று ஞாபகத்துக்கு வருகின்றது ‘’கேக்கிறவன் கேப்மாரியா இருந்தா... வானத்திலிருந்து SOAPமாரி பொழியும்னு சொல்லுவாங்களாம் உம்மைத் தள்ளிக்கிட்டு போகவே நாலுபேரும், கைவண்டியும் தேவைப்படுது இதுல நாங்க எங்கே கட்டு மரத்துல ஏறி கரையேற ? எனக்கு வயதாகி விட்டது நான் மக்களுக்காக உழைத்தது போதும் ஓய்வெடுக்கப் போகிறேன் நான் சம்பாதித்த சொத்திலிருந்து பகுதியை மட்டும் (இது போதும் ஏழு தலைமுறைக்கு) எனது குடும்பத்தாருக்கு ஒதுக்கி விட்டு பகுதி பணத்தில் நான் மறைந்தாலும் என் பெயர் மக்கள் மனதில் இருக்கும்படி தமிழ்நாடு முழுவதும் திடகாத்திரமான சாலை போட்டு தருகிறேன் என்மீது நீங்கள் அனைவரும் நடக்கலாம், தவழலாம், பயணிக்கலாம் இன்றே பணியைத் தொடங்கி வைக்கிறேன் இளைஞருக்கு (?) வாய்ப்பு கொடுங்கள் என்று சொன்னால் வெற்றி நிச்சயம்.

(ஒரு இந்திய குடிமகன் பொது மக்களுக்காக தனது பணத்தை செலவு செய்ய சட்டத்தில் இடமுண்டு ஏற்கனவே தேவகோட்டையில் பொதுமக்கள் குளிப்பதற்காக தனது இடத்தை ஊரணியாக வெட்டிக் கொடுத்த ஆச்சிமார்களும் உண்டு ஆகவே அந்த ஊரணியின் பெயர் தேனம்மை, கீழக்கரையிலிருந்து இராமநாதபுரம்வரை தனது பணத்தில் சாலை போட்டுக் கொடுத்த கீழக்கரை செல்வந்தரும் உண்டு, நமக்கு தாஜ்மஹாலை ஷாஜஹான் கட்டிக் கொடுத்து பெயரை நிலை நாட்டியது போல், எனது ஐயா ஞானி ஸ்ரீபூவு எங்க அப்பத்தாவை கட்டியது போல் செய்யலாமே)

இங்கிட்டு தமிழன் என்ற வார்த்தையை கையிலெடுத்து போர்களம் குதித்தது பாராட்டத்தக்கது தமிழ் நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று நினைப்பவனே உண்மையான தமிழன் அந்த வட்டத்துக்குள் நானும் நிரந்தரமாய் உண்டு பேச்சுக்களும், சிந்தனைகளும் ஏதோ புது மாதிரியாகத்தான் தெரிகின்றது இருப்பினும் உணர்ச்சிகளையும், கோபத்தையும், பெரியவர்களை பொது இடத்தில் மதித்துப் பேசும் பக்குவமும் வளர்த்துக் கொண்டால் அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம்.

உண்மையிலேயே தமிழக மக்களிடம் ஜாதி, மத உணர்வுகள் இல்லை அதனால்தான் தமிழ் நாட்டில் ஜாதீய உணர்வுகள் உள்ள கட்சிகள் நுழைய முடியவில்லை இருப்பினும் அங்கங்கு இந்த பிரச்சினைகளால் சில உயிர்ப் பலிகள் போவது அரசியல்வாதிகளால் மட்டுமே இதுதான் நடைமுறை உண்மை இது அறிந்தும் ஆட்சியைப் பிடிக்கும் முன்பே இந்தப்படை போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்ற பழைய வசனங்களைப் பேசுவதை நிறுத்தி விட்டு ஜாதீய உணர்வுகளை களைந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி நிச்சயம்.

கழகப் போர்வாள் என்ற பெயர் ஒரு காலத்தில் இருந்தது உண்மையே இன்று நாரதர்போல கலகம் உண்டு பண்ணும் உம்மை இனி மக்கள் நம்புவதாக இல்லை உமது தமிழ்ப் பேச்சுக்களை ரசித்தவர்களில் நானும் ஒருவனே இன்று பேசுவதெல்லாம் அக்கப்போராக இருக்கின்றது இப்படியெல்லாம் பேசுவதற்கு வடிவேல் என்று ஒருவர் இருந்தார் என்னமோ தெரியலை அவரைக் காணோம் ஏதோ பாவம் இப்ப என்னாச்சு ? ஆமை புகுந்த வீடும், ஆமீனா புகுந்த வீடும் விளங்காது அப்படின்னு நான் எழுதவில்லை இதைப் படிக்கும் பதிவுலக நண்பர்கள் நினைக்கிறாங்க போல காரணம் எனக்கு பொரை ஏறுது இந்த தேர்தல் மட்டுமல்ல.........................................................................................நிச்சயம்.

எதற்கெடுத்தாலும் கம்பு எடுக்கும் கூட்டம்கூட கம்யூனிஸ்ட் என்ற வார்த்தைக் கேட்டால் கம்னு போயிடுவாங்க இது ஒரு காலத்தில் இப்ப என்னாச்சு ? இடது, வலது, சோத்தாங்கை, பீச்சாங்கை, லெப்டு, ரைட்டுன்னு ஆளாளுக்கு ஒரு பக்கமாக போனீர்கள் என்னாச்சு எல்லாம் மண்ணாச்சு உங்களை கையையும், காலையும் ஒடிச்சுப் போட்டது யாரு ? திராவிடக்கட்சிகள் இரண்டும்தானே உங்களிடம் சோஸலிசம் இன்னும் இருக்கின்றது வார்த்தைகளில் மட்டுமே நீங்கள் இனியும் வருவோம் என்ற நம்பிக்கை உண்டா ? ஆகவே உங்களுக்கும்......................................................நிச்சயம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு இதுக்கு நான் விளக்கம் வேறு சொல்ல வேண்டுமா ? நீங்களே கொஞ்சம் அதிலும் தெற்கும், வடக்குமாக போனால் என்ன மிஞ்சும் ? எனக்கு பொரை ஏறுது அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் என்னை நினைக்கின்றார் போல எதுக்கு ஜி ? விரலுக்குப் புடிச்ச கேடு என்று ஆமா ஜி இதுக்கு மேல எழுதுனா அப்புறம் கண்ணேறு பட்டு விரலில் நகச்சுத்தி வந்துரும் அப்புறம் தொடர் பதிவு எழுதுறாப்ல வந்துரும் எதுக்கு ?

மக்களிடம் ஒரு விழிப்புணர்வு வரவேண்டும் என்று நாம் அரசியலைப்பற்றி கொஞ்சம் சொல்லலாம் நமக்கு அரசியலும் தெரியாது சரி தெரிந்ததை சொல்லுவோமே அப்படினு நினைக்கும் பொழுது எனக்கு நைஜீரியா நாட்டு மக்கள் சொல்லும் பழமொழி ஒன்று நினைவு வருகின்றது அது ‘’கோவளம் பீச்சுல கோணிச்சாக்கு கட்டிக்கிட்டவன் கேனயனாம்’’ என்று என்னை யாரும் சொல்லி விடுவார்களோ... என்று யோசித்துக் கொண்டு எனது அறையின் மூலையில் மூளையைக் குழப்பிக்கிட்டு ஒக்காந்து இக்கேன் கில்லர்ஜி

இந்த புகைப்படம் எப்படி  மீசை மாமா தளத்துல வந்துச்சு யாரும் வேண்டாதவங்க சொருகி விட்ருப்பாங்களோ..... ? - பர்ஹானா அபுதாபி
சிவாதாமஸ்அலி-
இந்தப் போட்டோவைப் பார்த்தால் ஒரிஜினல் ஒதுங்கியது போல இருக்கே....
சாம்பசிவம்-
ஆமா அத்தாரிட்டி அடங்கியது போலத்தான் இருக்கு...
Chivas Regal சிவசம்போ-
நம்மூருல மூத்த தாரத்துக்குத்தான் முதல் மரியாதை.

காணொளி

ஞாயிறு, ஏப்ரல் 24, 2016

குட்டையில் ஊறிய மட்டைகள்


நண்பர்களே... மேலே பார்த்தீர்களா ? கொடுமைகளை இந்தியக் குடியுரிமை பெற்ற அனைவரும் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று மேடைகளில் முழங்குகின்றார்கள் இதை தீர்மானித்தவர்களுக்கு இது சரியென்று தோன்றுகின்றதா ? கைவண்டி இழுத்து உழைக்கும் தொழிலாளிக்கு ஒருவிலை ஒரு லட்சத்தை நெருங்கும் சம்பளத்தை பெறும் நாடாளுபவர்களுக்கு ஒருவிலை இதிலும் இவர்களுக்கு வீடு இலவசம், தொலைபேசி கட்டணம் இலவசம், அரசு போக்குவரத்து இலவசம், உயரிய மருத்துவசெலவு இலவசம், இறுதியில் ஓய்வூதியமும் உண்டு இவர்களுக்கு செலவு என்பதே கிடையாது மேலும்... மேலும்... உங்களுக்கு விளக்கமும் வேண்டுமா ? இன்று அரசியல்வாதிகள் திரு. காமராஜர், திரு. கக்கன் இவர்களுக்குப் பிறகு யாராவது ஏழையாகவே வாழ்ந்து ஏழையாகவே இறந்திருக்கின்றார்களா ? நாட்டுக்காக உழைத்த திரு. கக்கன் அவர்களின் மகன் இன்றும் மனநலம் தெளிந்தும் 31 ஆண்டுகளாக மனநல மருத்துவ மனையில் இருக்கின்றார் அவரை மீட்டு இனியெனும் வாழ்வளிக்க யாருமில்லை நல்ல மனிதருக்கு இந்த மக்கள் கொடுத்த பரிசு இதுதானே ? அவருக்கு சிலை வைத்து மாலை மரியாதை செய்கின்றார்கள் அவரின் வாரிசு சிலையாகவே வாழ்கின்றார் சிறையில் நல்லவேளை கர்மவீரர் திருமணம் செய்யாமல் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

நாட்டில் மதக்கலவரங்கள் வந்தால் முன் வருகின்றோம் தலைவர்கள் கூட்டம் நடத்தினால் கேட்டு புரிந்தாலும், புரியாவிட்டாலும் அவர்களின் FAVORITE வார்த்தைகள் வந்து விழுந்ததும் கை தட்டுவதற்காக இரவு முழுவதும் காத்துக் கிடக்கின்றோம் இப்பொழுதெல்லாம் மக்கள் கூடும் இடங்களில் வெடுகுண்டு வெடிக்கின்றது அது நமக்கு தெரிந்தும் கண்டிப்பாக தலைவனுக்காகவோ, தலைவிக்காகவோ செல்கின்றோம் ஆனால் மேற்கண்ட விடயங்களை கேட்பதற்கு யாருமே முன்வருவதில்லை ஏன் ? சரி முன் வராததற்க்கு அதிகார வர்க்கங்களைக் கண்டு பயம் (என்னையும் சேர்த்து) இது தெரிந்த விடயமே இவர்களை மௌனமொழியால் கேள்வி கேட்பதற்க்கு 5 ஆண்டுகள் கடந்தவுடன் ஒரு சந்தர்ப்பம் வருகிறதே... அப்பொழுதாவது கேட்ககூடாதா ? (நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்) மழை பெய்து வெள்ளக்காடாகி விட்டது நிவாரண நிதி தரவில்லை என்று மக்கள் அரசை குற்றம் சுமத்துகின்றார்கள் இது எவ்வகை நியாயம் ? பணத்தைப் பெற்றுக்கொண்டு ஓட்டுப்போட்ட மக்களுக்கு சுயசிந்தனையே கிடையாதா ? செய்த வேலைக்கு கூலி கிடைத்து விட்டது பணம் மட்டுமே கொடுத்தால் இந்த மறதியுள்ள மக்கள் மறந்து விடுவார்கள் என்று தெரிந்தே கண்முன் நினைவில் நிறுத்திக் கொள்ளத்தானே இலவசம் என்ற பெயரில் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் கிரைண்டர், மிக்ஸி, ஃபேன், சைக்கிள், ஆடு, கோழி, பூனை, எலி, தாயக்கட்டை, பல்லாங்குழி, வெளக்கமாறு என்று கொடுக்கின்றார்கள் பிறகு என்ன... மசுத்துக்கு அரசியல்வாதிகள் சேவை செய்ய வேண்டும் ? அவர்கள் சம்பாரிக்கத்தான் அரசியலுக்கு வருகின்றார்கள் என்று நமக்கு நன்றாகவே தெரிகின்றது தேர்தல் விதிமுறைகளை மீறியே தேர்தல் செலவு செய்கின்றார்கள் அப்பொழுதே தெரியவில்லையா ? இந்த முதல் போடும் தொழில் லாபத்துக்காகத்தான் என்று நான் சொல்லிக் காண்பித்ததை அரசியல்வாதிகள் சொல்ல மாட்டார்கள் ஆனால் ? உண்மையிலேயே அவர்கள் அவர்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டும், பேசிக்கொண்டும்தான் இருக்கின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.

பிறரை நியாயஸ்தானாக நடக்கவில்லை என்று குற்றம் சுமற்றுமுன் நாம் நியாயஸ்தானா ? என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் அவர்கள் நமது கண்களுக்கு குற்றவாளியாகத் தோன்ற மாட்டார்கள் நாமும், அவர்களும் ஒன்றே ஆம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே... அவர்கள் முதல் போட்டார்கள் நாம் அதில் முழம் போடுகிறோம்.

சாம்பசிவம்-
வில்லங்கத்தார் இவரை பிரதமர்’’னு சொன்னதுலருந்து இவரும் ஒரு மாதிரியாகத்தான் எழுதுறாரு....
சிவாதாமஸ்அலி-
வில்லங்கத்தார் மாதிரி தலைப்பாக்கட்டி விடுற ஆளுகளால்தான் நாட்டில் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் உருவாகின்றார்கள்
Chivas Regal சிவசம்போ-
நினைப்பு (அபுதாபி) பொழைப்பை கெடுத்துறாம.....

 நிலையான அரசு நிலைத்து நிற்கும்.
காணொளி

சனி, ஏப்ரல் 23, 2016

நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் தந்தையாருக்கு அஞ்சலி


வணக்கம் நட்பூக்களே நமது எங்கள் ப்ளாக் நண்பர் ஸ்ரீராம் அவர்களின் தந்தையார் எழுத்தாளர் திரு. பாஹே அவர்கள் (ஹேமலதா பாலசுப்ரமணியன்) நேற்று மரணம் அடைந்து விட்டார்கள் என்னவோ தெரியவில்லை தொடர்ந்து பதிவுகம் பல கெட்ட நிகழ்வுகளையே சந்தித்து வருகின்றது இத்துடன் நிற்கட்டும் நண்பரின் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வோம்
வேதனையுடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

கவிஞர் வைகறை அவர்களுக்கு அஞ்சலி...


வலையுலக நட்பூக்களுக்கு... புதுக்கோட்டை கவிஞர் திரு. வைகறை அவர்கள் மரணமடைந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்ததே இவருடன் நான் ஒருநாள்தான் பழகினேன் மென்மையாக பேசியவர், அன்பானவர் இவருடைய நூல் வெளியீட்டு விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் கொடுத்தார் ஆனால் அந்த தேதியில்தான் நான் அபுதாபி திரும்ப வேண்டியநிலை ஆகவே கலந்து கொள்ள முடியவில்லை இந்த இளம் வயதில் இவருக்கு மரணம் வந்தது நம்பமுடியாத உண்மை இவரின் இழப்பை சகோதரி ஜோஸ்ஃபின் தனது 4 வயது மகனுடன் எப்படித்தான் தாங்கி கொண்டு வாழப்போகின்றாரே... அவருக்கு இறைவன் மன தைரியத்தை கொடுத்து தனது மகனில் நண்பர் வைகறையை காணும் பாக்கியத்தை கொடுப்பாராக... மரணம் தவிர்க்க இயலாதது ஆனால் இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
வேதனையுடன்...
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
01.திரு. தி. தமிழ் இளங்கோ, 02.திரு. கரந்தை ஜெயக்குமார் ஆசிரியர்,
03.முனைவர், திரு. B. ஜம்புலிங்கம், 04.கவிஞர் திரு. சோலச்சி
05.திரு. கில்லர்ஜி, 06.கவிஞர் திரு. நா. முத்து நிலவன்
07.கவிஞர் திரு. வைகறை, 08.கல்வி அதிகாரி திருமதி. ஜெயா
09.திருமதி. மீனா, ஆசிரியர் 10.திருமதி. மாலதி, ஆசிரியர் 
11.கவிஞர் திருமதி. மு. கீதா அவர்கள் இடம் புதுக்கோட்டை.

வியாழன், ஏப்ரல் 21, 2016

பஞ்சப்பட்டி பஞ்சாயத்து பஞ்சவர்ணம்

முன்னறிவிப்பு - புகைப்படத்திற்கும், பதிவுக்கும் சம்பந்தமில்லை காரணம் எனக்கு அரசியல் தெரியாது - கில்லர்ஜி

டேய்...... ராமசாமீஈஈஈஈஈஈஈஈ...... பஞ்சாயத்து வெசத்தை குடிச்சிட்டாருடா.....
என்னாது.................. ஐயோ...... ஐயோ..... நான் என்னாத்தை செய்யிவேன்.... நல்லாயிருந்த மனுசன் இப்படிப் பண்ணிட்டாரே.......ஏஏஏஏஏஏஏஏஏஏஏ......

விசயத்தை கேட்டு கிராமமெங்கும் ஒரே பரபரப்பு ஊரைச்சுற்றி கடனை வாங்கி வச்சுருந்த மனுஷன் இப்படி விசத்தை குடிச்சா  கடனை யாருட்டே கேட்கிறது மூத்த பொண்டாட்டி முருகாயி வாயைத் திறந்தாள்ல் ? எட்டூரு எம்பாட்டு கேட்கும் என்று வடிவேல் பாடியது போலவே இருக்கும், ரெண்டாவது பொண்டாட்டி ரெங்கநாயகி வாயைத் திறந்தாள்ல் ? கேட்டவன் காதுல குருதி ஒழுகும் அவ்வளவு ஒழுக்கமான வார்த்தைகள்ல் வந்து விழும் பஞ்சாயத்து பஞ்சவர்ணம் கொஞ்சம் கோக்குமாக்கானவரு பந்தாவாக போவார், வருவார் அழகாக பேசி கடன் வாங்கி விடுவார் திருப்பிக் கொடுப்பது என்னவோ இவருக்கு பாகற்காய் கடிப்பது போலவே இருக்கும். பஞ்சாயத்துகளை வைத்து நாலு காசு பார்த்து வாழ்க்கையை கடத்துபவர். சுற்று வட்டார பதினெட்டு கிராமத்தாரும் வயக்காடு, வரப்புக்காடு என்று சண்டையில் வருபவர்கள் காவல் நிலையத்துக்கோ, நீதி மன்றத்துக்கோ போகமாட்டார்கள் நேராக பஞ்சவர்ணத்திடம்தான் வருவார்கள் அடுத்த இரண்டு வருடங்களில் வயல் முருகாயி பெயரில் பத்திரமாகி விடும், பிறகு ரெங்கநாயகி பெயரில் ஆரம்பித்தது. வயலில் சண்டை போட்டு கட்டி உருண்டவர்கள் பிறகு கோயிலில் அங்கப் பிரதட்சிணையாக உருண்டு கொண்டு இருப்பார்கள் நீதானா கூலியைக்கொடு என்று. நாளடைவில் அவர்கள் காசிக்கோ, இராமேஸ்வரத்துக்கோ பாதயாத்திரையாக போககூடும் எடுப்பும், துடுப்புமாக இருந்த ரெங்கநாயகியை கண்ட பஞ்சாயத்து பஞ்சாயத்தில் தனக்கு சாதகமாக பேசியே விலக்கி வைத்தவர் காரணம் சோலந்தூர் சோசியர் சோனைமுத்து தனது ஜாதகத்துல மனைவிக்கு பஞ்சமில்லை என்று குறிப்பு கொடுத்ததை நம்பி பக்குவமாக பேசி கழட்டி விட்டு ஆவணியில் கோயிலில் வைத்து தாலியைக் கட்டி வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார் ரெங்கநாயகியின் கணவன் கனகு இப்பொழுது ஏர்வாடி பக்கமாக திரிவதாக அரசல் புரசலான தகவல் மூத்தவள் முருகாயி ஆச்சாக்கும், பூச்சாக்கும் என்று ஒரு வாரம் கத்தி அடங்கி விட்டாள் தன்னையும், முதல் வகுப்பு போகும் தனது மகன் ரத்தினத்தையும் ஒதுக்கி வைத்து விடுவாரோ என்ற பயம் ஊரில் எத்தனை பெண்களை கழட்டி விட்டு போக்கும் வரத்துமாக இருப்பவர் என்பது அவள் அறியாததா ? பாவம் அவளும் யாருட்டே போய் சொல்வாள் மனுஷாள் தப்பு செய்தால் தெய்வத்திடம் முறையிடலாம் தெய்வமே தவறிழைத்தால் ? ஒரே வீட்டில் இரண்டு பக்கம் உலைகள் எந்தப் பக்கம் நல்ல குழம்பு வாசம் வருகிறதோ அந்தப்பக்கம் சாப்பாடு பஞ்சவர்ணம் தனக்கு எடுபிடியாக ஒரு கூதரையை வைத்திருந்தார் அதாவது விசயங்களை சொல்லிட்டு வர, கொடுத்து விட்டு வர இப்படியான காரியங்களுக்கு விபரமானவன் என்றால் தனது கோல்மால் எல்லாம் தெரிந்து கொள்வான் என்பதால் இப்படியொரு அறிவுக்கொழுந்தை வேலைக்கு வைத்துக் கொண்டார் சம்பளம் ஏதும் கிடையாது வீட்டில் மதியச்சாப்பாடு மட்டுமே முருகாயிக்கும், ரெங்கநாயகிக்கும் வசதியாகப் போயிற்று காரணம் மிஞ்சியது, சுண்டியது, ஊசியது, கூசியது எல்லாம் மதியச்சாப்பாடுக்கு வரும் பேக்கொதக்குக்குதான் போடுவார்ள்கள் சொல்ல மறந்துட்டேனே.. அந்தக்கூதரை பேருதான் பேக்கொதக்கு சொந்தப் பெயரை யாரும் சொல்வதில்லை அதன் காரணமாகவே எனக்கும் தெரியவில்லை ரெங்கநாயகி தற்போது முழுகாமல் இருப்பதாக பக்கத்து வீட்டு பத்மாவும், செங்கமலமும் மிளகாய்ப் பிஞ்சையில் வேலை செய்யும் பொழுது பொறணி பேசியதாக செய்தி இப்படியான காலகட்டத்திலதான் ஐயோ பாவம் இதோ பஞ்சாயத்து பஞ்சவர்ணம் விசத்தை குடிச்சிட்டதாக....

ஊரே திரண்டு பஞ்சவர்ணம் வீட்டை நோக்கிப்படை எடுத்து வந்து பார்த்தால் ? வீட்டின் வெளியே முருகாயியும், ரெங்கநாயகியும் பத்ரகாளியாய் நின்றிந்தார்கள் வீட்டின் திண்ணையில் பஞ்சாயத்து கம்பீரமாக உட்கார்ந்து இருந்தார் ஊர் மக்கள் திரண்டு வரவும் எழுந்து வெளியே வந்து கம்பீரமாக நின்றார் பஞ்சாயத்து பட்டு வேஷ்டி சட்டையில் புதுமாப்பிள்ளை போல இருந்த அவரைக் கண்டவர்களுக்கு அதிர்ச்சி இடுப்பில் கை வைத்துக் கொண்டு மனைவிகளைப் பார்த்து அதட்டலாக கேட்டார்...

ஏன்டி.... கொங்காச்சிறுக்கிகளா ? என்னைக் கேள்வி கேட்க ஊரைத் திரட்டுற அளவுக்கு வளந்துட்டீகளோ..... தொலைச்சுப் புருவேன் தொலைச்சு ஏன்டா... எதுக்குடா வந்தீங்க.... சொல்லுங்கடா.... ?
ஐயா... நாங்க ஏதோ கேள்விப்பட்டு பதறி அடிச்சு வந்தோம்.... நீங்க.. இப்படி....
நீங்க எதுக்குடா ? பதறணும் இது எனக்கும், எம் பொண்டாட்டிகளுக்கும் உள்ள விசயம் எவனாவது தலையிட்டீங்க..... நடக்கிறதே வேற.... ஏய்... புள்ளே.. தெய்வானை வெளியே வா...
பஞ்சாயத்து சொல்லவும் உள்ளிருந்து தெய்வானை என்று அழைக்கப்பட்டவள் வெளியே வந்தாள் பட்டுச்சேலை உடுத்தி இருந்தாள் கழுத்தில் புது தாலி தொங்கி கொண்டு இருந்தது கூட்டத்தாருக்கு புரிந்தது ஓஹோ பஞ்சாயத்து இப்பத்தான் சுடச்சுட மூணாவது கல்யாணம் முடித்துக் கொண்டு வந்து இருக்கிறது அதனால்தான் மூத்த சக்களத்திகள் வெளியே நிற்கின்றார்கள் பஞ்சாயத்து சாகவில்லை அப்படீனாக்கா... ஊரெல்லாம் புரளியைக் கிளப்பி விட்டது யாரு ?
டேய்.... தங்கராசு கேட்கிறேன்ல சொல்றா... எதுக்கு வந்தீங்க ?
ஐயா மன்னிக்கணும்.... நீங்க வந்து.....
வந்து.....
இல்லை தவறிப்....... போயிட்டதா.....
என்னடா சொல்றே ?
ஆமாய்யா.... விசத்தை குடிச்சிட்டதா.. கேள்விப்பட்டுத்தான் எல்லோரும் வந்தோம் நீங்க நல்லாத்தான் இருக்கீங்க சந்தோசம்யா....
எவன்டா சொன்னது நான் விசம் குடிச்சேன்னு... ஏன்டி இது உங்களோட வேலையா ? தொறத்தி விட்டுவேன் ஜாக்கிரதை.
ஐயோ.... நாங்க ஏதும் அப்படிச் சொல்லலைங்க...
ஐயா பெரியவரே யாரு சொன்னது உங்களுக்கு ?
இல்லை பஞ்சவர்ணம் எல்லோரும் அரசபுரசலா பேசி பதறிப் போயித்தான்பா வந்தோம் நீ புதுசா கல்யாணம் செய்துட்டு வந்து நிக்கிறே இரு கேட்போம் ஏன்டா முத்து உனக்கு சொன்னது யாருடா ? 
சோமசுந்தரம்தான் எனக்கு சொன்னான், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று விசாரணை நடந்து கடைசியில் கொதக்கு சொன்னான் என்று சொல்வதற்கும் மதியச் சாப்பாடு சாப்பிட கொதக்கு வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது வந்தவன் நேராக ரெங்கநாயகியிடம் போய்....
அத்தாச்சி வாங்க சோறு போடுங்க... இன்னைக்கு என்ன கொழம்பு வச்சீங்க ?
முருகாயி சட்டீரென ஒன்று விட, பெரியவர் அவரது பங்குக்கு ஒன்று விட்டு...
ஏண்டா கொங்காப்பயலே எருமை ஈண்டுக்கிட்டு இருக்கும்போது என்னமோ செஞ்ச கதையா... என்ன கேட்கிறே... சொல்றா.... பஞ்சவர்ணம் மருந்தைக் குடிச்சான்னு ஏண்டா சொன்னே.... ?
ஐயா நான் மருந்து குடிச்சார்னு சொல்லலை பால்ஆயில் குடிச்சார்னுதான் சொன்னேன்...
பாலாயிலா.... எதுக்குடா சொன்னே ?
மேலக்குடிக்காரன்தான் சொல்லச் சொன்னான்..
அவன் சொன்னால் சொல்லிடுறதா.... ?
அவன் முட்டாசி தந்தான் பஞ்சாயத்து பால்ஆயிலு குடிச்சாருன்னு ஊருக்குள்ளே சொல்லிட்டு வா நாளைக்கும் முட்டாசி தாறேன்னு சொன்னான்
பஞ்சவர்ணம் கேட்டியா ? பால்டாயிலுக்குத்தான் பால்ஆயில்னு சொல்லி அது எப்படியோ... பரவி பால்டாயிலைக் குடிச்சிட்.டே... விசத்தைக் குடிச்சிட்டேன்னு ஊருல பரவியிருக்கு... ஹும் நல்ல ஆளைத்தான் வேலைக்கு வச்சுருக்கே.... சரி சரி களைஞ்சு போங்கப்பா.. போங்கப்பா...
கூட்டம் களைந்து போய் விட பஞ்சாயத்திடம் வந்த கொதக்கு கேட்டான்.
அண்ணே கல்யாண மாப்புள்ளே மாதிரி ஜம்முன்னு இருக்கீங்க.... இது யாருண்ணே புது அத்தாச்சியா ? எனக்கும் பால்ஆயில் கொடுங்கண்ணே.... நான் குடிச்சதே இல்லை.
சட்டீரென்று விழுந்தது கொதக்குக்கு.
இங்கே பாருங்கடி தெய்வானை இந்த வீட்லதான் இருப்பாள்... இஷ்டம்னா... இருங்க இல்லையா  பொட்டியைக் கட்டுங்க... நீ வா புள்ளே உள்ளே...

புது மனைவி தெய்வானையை கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே போனது பஞ்சப்பட்டி பஞ்சாயத்து பஞ்சவர்ணம். மூக்காயியும், ரெங்கநாயகியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நிற்க சிறிது நேரம் கழித்து வீட்டுக்குள் நுழைந்த கடந்த இரண்டு வருடத்தில் முதல் முறையாக ரெங்கநாயகி பேசினாள் முருகாயியிடம்...
என்னக்கா செய்யிறது ?
என்ன செய்யிறது  இனிமேல் பத்திரமெல்லாம் தெய்வானை பேருக்குத்தான், வா, வந்தவளை ராத்திரிக்கு ஜோவடிப்போம் இல்லைன்னா.... அதுக்கும் ரெண்டு கிழி கிழிப்பான் பேதியில ஓயிருவான்.
என்று சொல்லி விட்டு உள்ளே நுழையும் பொழுது... கொதக்கு கேட்டான்.
அத்தாச்சிகளா.... எனக்கு சோறு ?
இருவரும் திரும்பியவர்கள் சேலை முந்தானை கொஞ்சம் உயர்த்தி இடுப்பில் சொகுகி விட்டு ஆளுக்கொரு காலை தூக்கிக் கொண்டு ஒரேயொரு மிதி மிதிக்க பக்கத்தில் இருந்த மாட்டுத் தொழுவத்தில கிடந்த சாணியில் போய் விழுந்த கொதக்கு ‘’அம்மா’’ என்றான்.

மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துங்கள் நட்பூக்களே...