தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 30, 2017

குறிஞ்சி மலருக்கு...

இன்று (17) ஆம் ஆண்டு நினைவஞ்சலி.


எனது வாழ்வாதாரம் தாழ்வாரம் நோக்கி போய்க் கொண்டிருந்த காலம் காரணம் பொருளாதாரம், எனது கஷ்டகாலம் முழுவதும் என் கரம் பிடித்து என்னுடன் வாழ்ந்த என் தாரம், இது நான் வாங்கி வந்த வரம் என நினைத்ததாளோ... என்னவோ... எனக்கு கொடுக்க வேண்டாம் பாரம் என திரும்பாத தூரம் சென்று விட்டாள். இதன் காரணமாய் நான் ஈரம் இல்லாத வேரருந்த மரம் ஆனேன் இனி தழைக்க உரம் இட்டும் பயனில்லை பிறரின் பார்வையில் எனது நிலையோ அபாரம் எனக்கோ சுமைதாங்கி போல் பாரம் என்று நிற்கும் என் வாழ்க்கை துலாபாரம்.


என்றும் நினைவுகளுடன் உன்னவன்
அழும் விழிகளும் விழும் துளிகளும்.....

என்னவளுக்கு இயற்றிய பாமாலைகள் படிக்காதவர்கள் சொடுக்குக...

 காணொளி

வெள்ளி, மே 26, 2017

ஐ.......நூறாவது பதிவு

திருவாரூர் ஐநூற்றுப் பிள்ளையார் துணை

      ணக்கம் நட்பூக்களே... நலமா ? நலமே விளைவு என்ன திடீரென நலகுசலம் என்று நினைக்கின்றீர்களா ? எல்லாம் மஸ்க்காதான். மஸ்க்கா என்றால் அரபு மொழியில் காக்கா பிடித்தல் என்று பொருள் இப்பொழுது காக்கா பிடிக்க காரணம் ? இது எமது ஐநூறாவது பதிவு இதுவே கா’’ரணம். இதுவரை தந்த பதிவுகளில் ஐம்பது பதிவுகளாவது உங்களின் மனதை தொட்டுச்சென்று இருக்கும் என்பது எமது திண்ணமான எண்ணம். இதுவரை எமது எழுத்துக்களின் நன்மையை திறந்த மனதோடு பாராட்டியும், உயர்ந்த மனதோடு தவறுகளை சுட்டியும், காண்பித்துச் சென்ற அனைத்து உள்ளங்களையும் பெயர்களைச் சொல்லி நன்றி பாராட்ட மனதில் இடமுண்டு என்றாலும் யாராவது விட்டுப்போய் விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக பொதுப்படையில் சொல்கின்றேன்.

நன்றி सुक्रिया மஞ்சி Thanks இஸ்தூத்தி നന്നി ஒல்லது  شـــكرا சலாமத்.

இதுவரை எமது தளத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடியே, எண்பத்து ஆறு லட்சத்து, நாற்பத்தி ஏழாயிரத்து, ஐநூற்று முப்பத்தி இரண்டு நபர்கள் (எண்ணால் 1, 86, 47, 532) என்று சொல்லிட ஆசைதான் ஆனால் ஆனை ஏற ஆசையிருக்கு உந்தி ஏற ஜீவனில்லை என்பதைப்போல்தான் என்நிலை ஆகவே எம்பூட்டு பேரு பார்த்தாங்கன்னு சைடு கெஜட்டுல நீங்களே பார்த்துக்கோங்க...

இனி நாமலும் அரசியல் பதிவுகள் எழுதினால்தான் தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் போல தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்க்காரன் என்பதுபோல் தமிழ் நாட்டுக்குள் வந்தவன் எல்லாம் தலைவன் ஆகப்பார்க்கிறான் அப்படி என்றால் மண்ணின் மைந்தன் நான் ஆககூடாதா ? என்னுடைய நிறம்தான் எலுமிச்சை போல மஞ்சலும், சிவப்பும் கலந்த பொன் நிறமே தவிர நானும் பச்சைத்தமிழனே என்பதை பதிவர்களுக்கு நினைவூட்டுகின்றேன்.

மேலும் கடந்த இரண்டு மாதங்களாக எனது கணினி இணையம் பிரச்சனை காரணமாக செல்பேசியின் வழியாக படித்து கருத்துரை இட்டு வருகிறேன் பலரது தளங்களிலும் தமிழ் மணம் ஓட்டு செய்ய இயலவில்லை பொதுவாக அனைவருக்கும் நான் தமிழ் மணம் ஓட்டு போட்டு விடுவேன் அரசியல்வாதிகளுக்குத்தான் ஓட்டுப்போட்டதில்லை.. இணையம் விரைவில் சரியாகி அடுத்த மாதம் முதல் அனைவரது தளத்திலும் மீண்டும் தமனாவுக்கு திடீர், திடீரென குத்து விழும் என்பதை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

முன்பெல்லாம் எனது பதிவுகள் வெளியான ஒரு மணி நேரத்தில் தமிழ் மணத்தில் நுழைந்து விடும் இப்பொழுதெல்லாம் பதிவு வெளியாகி 47 மணி நேரமாகியும் ஏழாவது ஓட்டு கிடைக்காததால் 48 வது மணி நேரத்திலேயே பதிவு காலாவதி ஆகி விடுகிறது.

இதன் காரணமென்ன என்பதை சோலந்தூர், சோசியர் சோனைமுத்து அவர்களிடம் கோடாங்கி அடித்து பார்த்ததில் குரு நாலாம் வீட்டிலிருந்து இடப்பெயர்ச்சி கொண்டுள்ளான் வரும் வைகாசி போயி சித்திரை வந்தால் சுக்கிரன் மீண்டும் உச்சிக்கு வருகிறான் என்று சொன்னார் மேலும் நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று எமது நண்பர் பக்திப்பழம் திரு. வலிப்போக்கன் அவர்களும் ’’ஜொள்ளி’’ இருக்கின்றார் இனியெனும் பகவான்ஜி அருளால் நன்மையே நடக்கட்டும்.

நட்பூக்களே தொடர்ந்து தங்களது கருத்தை ஆவலுடன் தேடும்...
உங்கள் தேவகோட்டை


கில்லர்ஜி किल्लरजि കില്ലർജി  కిల్లర్ జి  Killergee كـــيللرجــــي

திங்கள், மே 22, 2017

உகாண்டா மாப்பிள்ளை

தேவகோட்டை விமான நிலையத்தில் இளநங்கைகளிருவர்.

நளாயினி-
யேண்டி மதிவதனி உனக்கு வெளிநாட்டுல வேலை பார்க்கிற மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா சொன்னியே எந்த நாடு ?
மதிவதனி-
உகாண்டா.
நளாயினி-
மாப்பிள்ளை எப்படி பிடிச்சு இருக்கா ?
மதிவதனி-
யேண்டி நீ வேற மாப்பிள்ளை ஃபோட்டோ அனுப்பி இருக்கார் பாருடீ.....


சாம்பசிவம்-
அடடா.. ராட்டணம் சுற்றலாம் போலயே... 

வியாழன், மே 18, 2017

குளித்தலை, குடிகாரன் குமார்


1.ஜனவரி மாதச்சம்பளம் ஜனகண பாடியாச்சு.

2.பிப்ரவரி மாசசம்பளம் பீப்பீ ஊதியாச்சு.

3.மார்ச் மாசசம்பளம் மார்ச்சுவரியில போச்சு.

4.ஏப்ரல் மாசசம்பளம் ஏப்பம் விட்டாச்சு.

5.மே மாதச்சம்பளம் மேய்ச்சல்ல விட்டாச்சு.

6.ஜூன் மாசச்சம்பளம் ஜூஸ் குடிச்சே போச்சு.

7.ஜூலை மாசச்சம்பளம் ஜூலிகிட்டே விட்டாச்சு.

8.ஆகஸ்டு மாசச்சம்பளம் ஆக்ஸிடெண்ட்ல போயிருச்சு.

9.செப்டம்பர் மாசச்சம்பளம் செப்டிக் ஆகிப்போச்சு.

10.அக்டோபர் மாசச்சம்பளம் டாக்டர்கிட்டே போச்சு.

11.நவம்பர் மாசச்சம்பளம் பம்பர்ல போச்சு.

12.டிசம்பர் மாசச்சம்பளம் டிஸ்மிஸ் ஆச்சு.

சிவாதாமஸ்அலி-
இப்படியே போனா இவன் பூவாவுக்கு என்ன செய்வான்...

செவ்வாய், மே 16, 2017

தலைவா.. அரசாள வா !


நட்பூக்களே... என் மனதில் 2 ½ வயதிலிருந்தே அரித்துக் கொண்டிருந்த விடயமிது நடிகனுக்கும், ரசிகனுக்கும் உள்ள பந்த உணர்வுகள் எப்படி உருவாகின்றது ? எனக்கு மட்டும் உண்டாகாதது ஏன் ?

நடிகன் என்பவன் எல்லா மனிதர்களையும் போலவே வயிற்றுப் பிழைப்புக்காக ஏதோவொரு வகையில் திரையுலகத்தில் நுழைந்து விடுகின்றான் ஆரம்ப காலத்தில் சோத்துக்கு பணம் கிடைத்தால் போதும் என்று வந்தவன் அவனது திரைப்படம் நல்ல கதையம்சத்தின் காரணமாக, நல்ல கருத்துகள் அடங்கிய பாடல்களின் காரணமாக, நல்லதொரு இசையை கொடுத்ததின் காரணமாக, கேட்பதற்கு இனிமையான ராகங்களில் பாடியதின் காரணமாக, நல்ல நகைச்சுவைகளின் காரணமாக, புதுமுக நடிகையின் தாராள மனதின் காரணமாக, தணிக்கைகுழு அதிகாரிகளின் வாழ்வாதாரமும் உயர்வதின் காரணமாக ஏன் ? இவனது நல்ல நடிப்பின் காரணமாகவும் என்பதை ஏற்றுக்கொள்வோம் திரைப்படம் பட்டி தொட்டிகளில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி விடுகிறது. உடனே இவனும் தனக்கு சம்பளத்தை நிர்ணயிக்கிக்கின்றான் இந்த திரைப்படத்தின் பின்னணியில் உழைத்தவர்கள் எல்லோருமே வழக்கம் போல தனது உழைப்பைக் கொடுத்து தனது வழக்கமான சம்பளத்தை பெற்றுக்கொண்டு இருக்கின்றார்கள் இவனது திரைப்படம் வெற்றி பெற்றதால் அடுத்தும் இயக்குனர்கள் இவனுக்கு வாய்ப்பு கொடுக்க அந்தப்படமும் ஏதோவொரு காரணத்துக்காக வெற்றி பெற்று விடுகிறது என்றே வைத்துக் கொள்வோம் உடன் இவன் உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்து விடுகின்றான் அடுத்து தயாரிப்பாளர்கள் இவனை முற்றுகையிட இவனது சம்பளமும் உச்சாணிக் கொம்புக்கு சென்று விடுகிறது இந்த தருணம் பார்த்து வேலையற்ற வெட்டிக்கூட்டம் ஒன்று வீதிகளில் திரியும் பார்த்து இருப்பீர்கள் அவர்கள் இந்த நடிகரை நாடுவார்கள் நாங்கள் உங்களுக்கு நற்பணி (?) மன்றம் அமைக்கப் போகிறோம் தங்களது அனுமதி வேண்டும் என்பார்கள் உடனே இவனும் இந்த மாதிரியான அரைவேக்காடுகள்தான் நம்மை இன்னும் உயரத்துக்கு கொண்டு போகும் என்று சில ஆயிரங்களை தூக்கி எறிவான் இந்த பொறுக்கிகள் அதை பொறுக்கி வந்து பகுதியை வாயில் ஊத்தி விட்டு மிகுதியில் இவனுக்கு ஒரு பட்டம் கொடுத்து ரசிகர் மன்றம் ஆரம்பித்து தியேட்டரில் திரைப்படம் வெளியானதும் பேனர் வைத்து, விசில் அடித்து வர்ணப்பேப்பர்களை வீசியெறிந்து ஆரவாரம் செய்வார்கள் இந்த கேவலத்துக்கு தியேட்டர் உரிமையாளர்கள் அனைவருமே உடன்படுவார்கள் காரணம் இவர்களால் திரைப்படம் விளம்பரமாகி நல்ல வசூலைப்பெறும் இதற்கு பகரமாக இந்த பொறுக்கிகளுக்கு திரைப்படம் பார்ப்பது இலவசம்.

இவனின் 4 திரைப்படங்கள் வெற்றியானதும் இவர் மிகப்பெரிய வீரனாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவான் நாட்டுக்காக போராடுவான், அநியாயங்களை எதிர்ப்பான், திரைப்படத்தில் வில்லன் நாயகியை பலாத்காரமாய் இழுத்துப்போய் தனது இச்சையை தீர்க்கும் தருணத்தில் நாயகன் திடீரென தோன்றி அவனை வீழ்த்தி காப்பாற்றி தியேட்டரில் இருந்த தமிழ் நாட்டு தாய்மார்களின் மனதில் பாலை வார்த்து விடுவான் இதன் மூலமும் இவன் நல்லவன் என்றே மக்கல்ள் நம்பி விடுகின்றார்கள் பிறகு இவன் அவளை பவ்யமாய் கெடுத்து விடுவான். அது இந்த முடுமைகளுக்கு தெபுரியாது என்பது வேறு விடயம். திரைப்படங்களில் ஒரேயொரு உதை விடுவான் கிராஃப்பிக்ஸ் கலைஞர்களின் திறமையால் அந்த உதையில் 50 நபர்கள் அந்தரத்தில் பறப்பார்கள் பறப்பவர்கள் எல்லோருமே யார் தெரியுமா ? உண்மையிலேயே ஸ்டண்ட் கற்றவர்கள் இவர்களில் ஒருவன் நாயகனை ஒரு உதை விட்டால் போதும் அந்த நிமிடமே இந்த அறியாமைகளின் ஆதர்ச நாயகன் செத்து பல வருடங்கள் முடிந்திருக்கும் ஆனால் இதைப்பார்த்து இந்த அரிய ஆமைகள் கை தட்டி ஆரவாரம் செய்யும் திரைப்படங்களில் கடைசிவரை நியாயமானவனாகவே வலம் வருவான் திரைக்குப் பின்னால் இவர்களின் உண்மையான முகம் ஸூட்டிங்குகளில் லைட்பாய் வேலை பார்ப்பார்களே சாதாரண கூலி வேலைக்கு அவர்களுக்கு நன்றாகவே தெரியும் காரணம் இவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து தகுதியின் காரணமாக அவர்களுடன் நெருங்க முடியாமல் பக்கத்திலேயே வாழ்பவர்கள் ஆனால் இந்த பாமரப்பய ரசிகனுக்கு கடைசிவரை தெரியாது இவன் நியாயமானவன்தான் என்பது இந்த அறியாமைகளின் ரத்தங்களில் கலந்து விடும் திரைப்படத்தில் அநியாய ஆட்சி செய்யும் முதல்வரை எதிர்த்து குரல் கொடுப்பான் பாருங்கள் உடனே இந்தப் பாமரப்பய கூட்டம் தலைவா.. அரசாள... வா ! என்று கத்தத் தொடங்கியவன் அவன் கட்சி ஆரம்பித்தாலும் சரி, ஆரம்பிக்கா விட்டாலும் கடைசிவரை கத்துவதை விடமாட்டான்.

திரையில் எத்தியே பலரை வீழ்த்தும் இந்த நாயகர்கள் உண்மையில் வெள்ளமோ, சுனாமியோ வந்து மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் பொழுது ஜன்னல் வழியே அந்தோ பரிதாபம் என்று வேடிக்கை பார்ப்பார்கள் ஆனால் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி துணிந்து இறங்கி யாரையாவது காப்பாற்றி இருப்பான் இதற்காக இந்த நடிகர்களை நான் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை உண்மையில் முடியாதுதான் காரணம் பலகோடிகள் சொத்து சேர்த்து வைத்து இருக்கின்றோம் இந்த உலகில் உள்ள எல்லா சுகங்களையும் அனுபவித்து விடவேண்டுமென்ற திட்டங்களோடு வாழும் மனிதன் இந்த வெள்ளத்தில் இறங்கிச் சென்று இவனையும் கொண்டு போய் விட்டால் ? மேலும் இந்த வெள்ளத்தில் இறங்கிப் போனாலும் அறியாமைக் கூட்டங்கள் ‘’ஹை நடிகர் வால்டர் வடுகநாத் வந்துருக்காரு’’ என்று சொல்லி கூட்டத்தை கூட்டி நெருக்கியடித்து ஆட்டோ கிராப்கூட கேட்பாங்களே வம்பு எதற்கு ?

அறியாமை ரசிகர்களே.. இதுதான்டா யதார்த்த வாழ்க்கை அவனும் மனுஷன்தான்டா அவனுக்கு மட்டும் ஏதோ அமானுஸ்ய சக்தி இருப்பது போல் நினைக்காதே... இதற்கு உசிலம்பட்டி, உடுக்கையடி உலகநாதன் இருக்கின்றாரே அவரிடமாவது ஏதாவது (?) இருக்கும் சமீபத்திய பேரிடரில் நடிகர் ராஜ்கிரண் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டபோது ராணுவ வீரர்கள்தான் அவரை உயிருடன் மீட்டு இருக்கின்றார்கள் இதே நடிகர் திரைப்படத்தில் எத்தனை பேரை தூக்கி அடித்தார் ? நடைமுறை வாழ்க்கையில் இதெல்லாம் முடியாதுடா ரசிகனே... விஞ்ஞான வளர்ந்து விட்ட இந்த காலத்திலாவது கொஞ்சமாவது யோசிடா... இதில் இன்னொரு விடயம் நீங்க யோசிங்கடா... நீங்க கொண்டாடிய, கொண்டாடுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் நம் இன தமிழன் இல்லையடா உன்னால் நாட்டுக்கு பெருமை தேடி கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை சிறுமையை சேர்த்து விட்டு செல்லாதே.

குறிப்பு - நான் எந்த நடிகரையும் மனதில் வைத்து எழுதவில்லை அப்படி யாரும் நினைத்தால் அதனைப்பற்றிய கவலையும் எனக்கு இல்லை ஆனால் இது பெரும்பாலும் எல்லா நடிகருக்கும் பொருந்தும் - கில்லர்ஜி

ஞாயிறு, மே 14, 2017

Mother's Day

Mother of Killergee

அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துகள் - கில்லர்ஜி
தாய்
அதிக அபிப்பிராய கதை சொல்லுகிற பரிசுத்தமான ஒளிவுடன் பிரகாசிக்கும் இருப்புப்பாதை.

More
Observation
Taleteller
Hollow
Effulgent
Rail


 காணொளி

வெள்ளி, மே 12, 2017

பணம்


வர்ண காகிதத்தில் வந்த கலை வண்ணமே
உன்னை சிறை பிடிக்க மனம் எண்ணுமே
நீயும் என்னைப்போல் ஜாதி மதம் மறந்து விட்டாய்
அதனால்தானே எல்லோரிடம் சென்று பழகுகின்றாய்

  என்னிடம் வந்து மனம் மகிழச் செய்கின்றாய்
உடன் ஏனோ பிரிந்தே செல்கின்றாய்
உனது அழகு கண்டு மயக்குகின்றேன்
நீ ஏனோ என்னுள் தங்கிட தயங்குகின்றாய்

உமது வயதில் ஒன்றானாவன் ஆயினும்
நூறானவனாயினும் பாசத்துக்கு குறைவில்லை
என்னை ஏழையென்று நினைக்கின்றாயோ
ஆனால் நான் கோழையில்லை அறிந்தாயே

இன்னும் எதற்கு தயக்கமடி கண்ணே
என்னிடம் நிரந்தரமாய் தங்கிவிடு பெண்ணே
பொன்னைப்போல் பார்த்துக்கொள்வேன் உன்னை
இன்று முதலாவது நேசிப்பாய் நீ என்னை

கடந்த வருடம் ‘’ஊற்று’’ நடத்திய பணம் பற்றிய கவிதைப் போட்டிக்கு அனுப்பி வைத்த கவிதை. வழ(ழு)க்க(கு)ம்போல தோல்வியை இறுகத்தழுவி வந்தது முதல் முறையாக பதிவேற்றுகிறேன். – கில்லர்ஜி

புதன், மே 10, 2017

சோம்பேறிகள்


கருத்த பன்றி-
என்ன... பழனி பொழப்பு தளப்பெல்லாம் எப்படி போகுது ?
White Pick -
என்ன... Brother பொழப்பு out site போக அலுத்துக்கிட்டு அவனவன் House உள்ளேயே Bliss-Out கட்டி வச்சிருக்கான் சோம்பேறிப் பயல்க Afterநம்ம Life எப்படி இருக்கும் ? சரி Two Marriageக்கு Attend பண்ணினா Forth எச்சி எலை விழும்னு பார்த்தா அதையும் Stop பண்ணிட்டு Star Hotel Buffetன்னு வச்சு Limitட்டா எடுத்து தின்னுபுட்டு நம்ம தாலிய அறுக்கிறாங்கே I Think வேற மாதிரி Idea பண்ணுனாத்தான் Lifeப்ப Running செய்ய முடியும் போல Next Board Meetingல இந்த Matterறை பன்றித்தான் Sorry பற்றித்தான் Argument செய்யலாம்னு இருக்கேன் Next Time என்னைக் கூப்பிட்டா பழனின்னு சொல்லாதீங்க இப்ப My NameStyleலா Fannyனு Change செய்துட்டேன் OK
கருத்த பன்றி-
நீ வெளிநாட்ல படிச்சவன் எது சொன்னாலும் சரியாத்தான் இருக்கும்,

CHIVAS REGAL சிவசம்போ-
ஆண்டிப்பட்டியாக இருந்தால் ஊரணியோரம் ஒதுங்கிடலாம் Abu Dhabi Hamdan Streetடா இருந்தா எங்கே போறது ? Corniche ஓரமா போய் உட்கார்ந்தா லத்தி விழுகுறதுக்குள்ள லத்தியில விழுந்துடுமே, பன்னிக்கு பேரு Fannyயா ? என்னங்கடா இது காலக் கொடுமையா இருக்கு.

பெட்டிகளை கிளறியதில் கிடைத்தது1988-ல் பத்திரிக்கைக்கு துணுக்கு எழுதி அனுப்பி எதிலுமே வெளிவராமல் போன எனது பழைய ஜோக் அதை நினைவு படுத்தி இன்றைய எனது பாணியில் கொஞ்சம் இழு........த்தேன் – கில்லர்ஜி

திங்கள், மே 08, 2017

என் நினைவுக்கூண்டு (2)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


வேண்டாம் ஜி.ஹெச். என்ற மரணமடம் ஆனால் சிலிண்டரும், ஒயரின் இணைப்பும் உன்னுடனே என்ன செய்வது  ?

வெள்ளி, மே 05, 2017

ஏமா(ற்)றுவதும் ஒரு கலைதான்


   தேனி பேருந்து நிலையத்தில் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஒதுக்குப்புறமாக நின்று சிகரெட் பிடித்துக்கொண்டு நிற்கும் பொழுதுதான் கவனித்தேன் ஒருத்தி என்னையே விழுங்குவது போல பார்த்துக்கொண்டு நின்றாள் நானும் அவளைப் பார்த்தேன் மலைத்தேன் அத்தனை அழகு மனதில் தைரியத்துக்காக பகவான்ஜியை நினைத்துக்கொண்டு பார்வையால் அருகில் அழைத்தேன் வந்தாள் பெயரென்ன ? என்று வினவினேன் தேன்மொழி என்றாள் வியந்தேன் காரணம் பெயரிலும் தேன் உங்கள் பெயர் கேட்டது தேவதையே தேனப்பன் என்றதும் சட்டென எனக்கு கை கொடுத்தாள் இலவம் பஞ்சு போன்ற கையை தொட்டதும் ஒரு நொடிதான் உடல் சிலிர்த்தேன் உயரத்தில் பறந்தேன் உலகை மறந்தேன். ‘’ஐயா சாமி தர்மம் பண்ணுங்கய்யா’’ சட்டென நினைவோட்டங்கள் சிதற சுயநினைவுக்கு வந்தேன் எதிரே ஒரு பிச்சைக்காரர் ஹூம் இந்த நேரத்தில் வந்துதான் கேட்க வேண்டுமா ? இதுவும் நல்லதுதான் தேவதைக்கு முன் பெருமையாக 10 ரூபாய் போடுவோம் என நினைத்து பேண்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டால் ? எனது பர்ஸ் எங்கே ? அந்த தேவதை எங்கே ? அய்யோ வந்தவள் எங்கே ? அடிப்பாவி இந்த அப்பாவிதான் இன்றைக்கு கிடைச்சேனா ? அவ்வ்வ்வ்வ்வ்.

   கோயமுத்தூர் ரயில்வே நிலையத்தில் இரவு 07.30 உள்ளே நுழைந்தேன் சாரே ஒரு மினிட் குரல் கேட்டு திரும்பினேன் தேவதை ஆம் தேவதையே என்ன ? சாரே நிங்களு பாலக்காடானோ போகுன்னது ? ம்ம் அது வந்து... ஆமா.. என்ன ? அல்ல ஞானும் பாலக்காடு போகுன்னு சகாய்க்கான் ஆளில்லா அதான் சோதிச்சது சரி வாங்க டிக்கெட் எடுத்துட்டீங்களா ? இல்லை நான் எடுக்கட்டுமா ? அல்ல ஞான் எடுக்காம் வேண்டாம் நானே எடுக்கிறேன் கௌண்டரில் 2 பாலக்காடு என்றேன் ச்சே எவ்வளவு அழகாக இருக்கிறாள் பாலக்காடு பக்கம்தானே போய் விட்டு வருவோம் கம்பார்ட்மெண்டில் வேறு யாரும் இல்லாமல் இருந்தால் நல்லது பிறகு அங்கிருந்து சென்னை போகலாம் அப்படியொன்றும் முக்கியமான காரியமில்லை டிக்கெட் எடுத்து அவளிடம் ஒன்றை கொடுத்து விட்டு வாங்க சீக்கிரம் இன்னும் 10 மினிட்தான் இருக்கு என்றேன் டிக்கெட்டை பெற்றுக்கொண்டவள் நிங்கள் போய் ஸீட் பிடிக்கு ஞான் டோய்லெட் போய் இப்போல் திருச்சு வரான் நான் மின்னல் வேகத்தில் ஆளில்லாத கம்பார்ட்மெண்டை தேடி ஏறினேன் டாய்லெட்தான் ரயிலில் இருக்கிறதே... ஒருவேளை இங்கு அசுத்தமாக இருக்கும் என்று நினைத்திருப்பாள். இன்னும் 5 மினிட்டே உள்ளது வாசலில் நின்று அவளுக்காக காத்திருக்க தூரத்தில் யாரோ ஒருவனுடன் பேசிக்கொண்டு அவனது கையில் எதையோ திணித்து விட்டு எதையோ வாங்க அவன் வேகமாக ஓடி வந்து நான் நின்ற கம்பார்ட்மெண்டில் என்னை இடித்துக் கொண்டு ஏறினான் அவ்வ்வ்வ்வ்வ்.

   தூத்துக்குடி துறைமுகத்தில் எனது முகவரிக்கு சிங்கப்பூரிலிருந்து நானே அனுப்பி விட்டு வந்த கார்கோ பெட்டி பார்சலை மதியம் நுழைந்தவன் அவர்களின் கெடுபிடியில் அழுது கட்டி விட்டு மாலை 06.00 மணிக்குதான் வாங்கிவிட்டு வெளியேறினேன் இருட்டுவதற்குள் வீட்டுக்கு போய் விடலாம் 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உழைத்து சம்பாரித்தது போதுமென்று திருச்செந்தூர் முருகன் அருளால் வீடு கட்டுவதற்கான கதவின் பாட்லாக், பூட்டு சாவி, பெயிண்ட் மற்றும் வீட்டுக்கான சாமான்கள் நான் வேலை செய்த கம்பெனியில் டிரைவராக இருந்ததால் ஸ்டோருக்கும் போவதும் வருவதுமாக இருந்து சுட்டதும், சுடாததுமாக சேர்த்து வைத்து 1 டன் சேர்த்து அனுப்பி விட்டு கேன்ஷலில் வந்து விட்டேன் பிக்கப்பை நானே ஓட்டி வந்தேன் பக்கத்து ஊர்தானே என்பதால் துணைக்கும் யாரையும் அழைத்து வராமல் நான் மட்டுமே வந்தேன் காரணம் சொந்தக்காரனைக் கூட்டி வந்தால் வாயைப் பிளப்பான் ரயில்வே கேட்டை தாண்டியதும் ஒரு கணவனும், மனைவியும் நின்று கொண்டு கையை ஆட்ட நிறுத்தி என்ன ? என்றேன் அண்ணே நானும் எம் பொஞ்சாதியும் பஸ்ஸுக்காக ரொம்ப நேரமா நிற்கிறோம் எங்களை உடன்குடியிலே இறக்கி விட்ருங்களேன் நான் அவளைப்பார்த்தேன் செம கிராமத்துக்கட்டை பார்வையே ஒரு மாதிரியிருக்க சரி உடன்குடிதானே ஏறுங்க என்றேன் உடனே ஏ புள்ளே சட்டுனு ஏறு என்று முதலில் அவளைப்பிடித்து ஏற்றி விட்டு பிறகு அவன் ஏற அவள் மையத்தில் உட்கார்ந்து இருந்தது எனக்கு என்னவோ போலிருந்தது அவன் சட்டென சாய்ந்தவன் உறங்கிவிட இவள் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டே வந்தாள் வண்டியே தடுமாறியது கையிலிருந்த பையிலிருந்து பிஸ்கெட்டை எடுத்து தின்றாள் தின்றவள் எனக்கு கொடுக்க நான் வேண்டாம் என்றேன் அவள் சட்டென கணவனை ஒரு கள்ளப்பார்வை பார்த்து விட்டு எனது வாயில் பிஸ்கெட்டை திணிக்க வேண்டாமென்று சொல்லத்தான் முடியுமா ? ’’சுள்’’ என முகத்தில் வெயில் அடிக்க முழித்தேன் கருவக்காட்டோரம் கிடந்தேன் எழுந்து எனது பிக்கப் எங்கே ? அடிவயிறு கலக்கியது காரணம் மனக்கண்னில் மனைவி மருதவள்ளியின் முகம் அவ்வ்வ்வ்வ்வ்.

   சென்னை விமான நிலையத்தின் உள்புறம். குவைத்திலிருந்து ஒருமாத விடுமுறையில் வருகிறேன்
எஸ்க்யூஸ்மி சார்
திரும்பிப் பார்த்தேன் ஏர்ஹோஸ்டல் ட்ரெஸ் போட்டிருந்தாள் இவள் எந்த ஏர்லைன்ஸ் யோசித்துக் கொண்டே எஸ் ப்ளீஸ் என்றேன்
ஐ வாட்ச் யூ வொய் திங்கிங்
நெவர் நோ நத்திங்
ஐ நோ சார்
கௌ யூ நோ
யூ ஹேவ் கோல்ட் அன் லிமிட் கரைட்
நோ...
எஸ் சார் நௌவ் ஹியர் கஸ்டம்ஸ் ப்ராப்ளம் டூ மச் கென் ஐ ஹெல்ப் யூ
கௌ ஹெல்ப் மீ
கிவ் மீ யுவர் கோல்ட் ஐ வில் ரிடெர்ன் அவுட்ஸைட் மை சார்ஜ் ஜஸ்ட் ட்டூ பெர்சண்ட் ஒன்லி
யூ நாட் மீ டெரெட் கரைட் என்ன ? செய்யலாம் கோல்ட் நிறையாத்தான் இருக்கு நண்பர்களும் கொடுத்து விட்டார்கள் தட்ட முடியவில்லை டி.வியும் 42 இஞ்ச் டூட்டி போடாமல் விடமாட்டார்கள் இவள் ஏர்ஹோஸ்டஸ்தானே எவ்வளவு அழகாக இருக்கின்றாள் இவளா ஏமாற்றப்போகிறாள் ? லிப்டிக் போட்டவள் பொய் சொல்ல மாட்டாள் வாய்மையே வெல்லும் என்று சிறுவயதில் குருந்தன் வாத்தியார் சொல்லிக் கொடுத்தாரே.... கூடவே வரப்போகிறாள் வெளியில் வந்து தருவாள் வாங்கி கொள்வோம் அவ்வளவுதானே.... ஓகே யூ ஆர் ஃப்ரம் வேர்
ஐம் ஃப்ரம் மோண்டியா ஐ நோ லிட்டில் டமிள் வண்க்கோம்
இட்ஸ் ஓகே ஐ கிவ் யூ டூ பிக் செயின் அன்ட் ப்ரேஸ் லெட் ஒன்லி
ஓகே டோட்டல் கௌமெனி க்ராம் சார்
டோட்டல் மேபி 60 கிராம் கம்மிங்
ஓகே மை சார்ஜ் 3000 தௌடண்ட் ஒன்லி சார் யூ ஹேவ் இண்டியன் மொணி
நோ ப்ராப்ளம் மை ஃபேமிலி அவுட்ஸைட் வெயிட்டிங்க்
ஓகே கிவ்
ப்ளீஸ் கம் ட்டூ தட் ஸைட் ஒதுக்குப்புறமாகப் போய் கேமரா இல்லாத இடத்தில் பேண்டுக்குள் இருந்த நண்பர்கள் கொடுத்து விட்ட இரண்டு செயினையும் ப்ரேஸ் லெட்டையும் அவளிடம் கொடுக்க அவள் சட்டென வாங்கி ஹேண்ட் பேக்கில் திணித்து விட்டு
ஓகே சார் ஐம் வாட்சிங் யூ யூவில் எக்ஸிட் ஐம் கம்மிங் ஸ்டாஃப் எக்ஸிட் வேய் ஓகே
ஓகே ப்ளீஸ் கிவ் மீ யுவர் செல் நம்பர்
நோட் த நம்பர் 9876543210 பை சீ யூ
அவள் விடைபெற நான் கஸ்டம்ஸ் வரிசையில் நின்று நான் அவளையும் அவள் என்னையும் பார்த்துகொண்டு நிற்க எனக்கு பிரச்சனைகள் சுமூகமாக முடிந்து டி.விக்கு மட்டும் 3000 ரூபாயை தள்ளி விட்டு எனது பெட்டிகளை எடுத்துக் கொண்டு அவளுக்கு கண்களால் சைகை காட்டி விட்டு வெளியேறி மனைவி மக்களைப் பார்த்து குழந்தைகளுக்கு ஒரு முத்தத்தைக் கொடுத்து விட்டு ஸ்டாஃப் வாசலிலேயே நின்று கொண்டு காத்திருந்தேன் அவளுக்காக.... அவள் வருவாளா ? அவ்வ்வ்வ்வ்வ்.