தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

திங்கள், ஜனவரி 30, 2017

மெய்யா ? பொய்யா ?


1999-ம் ஆண்டு நான் நான்கு மாத விடுமுறையில் இந்தியா வந்திருந்தேன் மீண்டும் அபுதாபி திரும்பும்போது எனது மனைவியிடமிருந்து ஒரு கோரிக்கை என்னைப்பற்றி எனது மனைவிக்கு தெரிந்திருந்தும் தயக்கத்துடன் இப்பொழுது ஜனித்திருக்கும் குழந்தையை அபார்ஷன் செய்து விடுவோமா ? எனக்கு வந்தது கோபம் காரணம் எனக்கு குழந்தைகள் என்றாலே மிகவும் ஆசைப்படுபவன் அப்படியானால் எனது குழந்தை மீது ஆசை இருக்காதா ? அதற்கு அவள் சொன்ன காரணம்தான் மேலும் கோபத்தைக் கிளப்பியது அதாவது மனைவி வீட்டார் ஜோசியம் பார்த்து இருக்கிறார்கள் அதில் மூன்றாவதாக ஜனிப்பது கண்டிப்பாக பெண் குழந்தைதான் மேலும் அது பிறந்தவுடன் தாய் இறந்து விடுவாள் இதுதான் காரணம் சொன்னது ஜோசியர். 

பீதி போதாதா ? நான் சொன்னேன் உனக்கு பயமாக இருக்கிறது என்றால்... அதில் நியாயம் இருக்கிறது யாரோ ஜோசியர் சொன்னதுக்காக சொல்றியே.. இதே ஜோசியர் நான் இப்பொழுது அபுதாபி போனால் திரும்ப மாட்டேன் என்று சொன்னால் உனது கருத்தென்ன ? நீ கண்டிப்பாக தடுக்க மாட்டாய் என்பதும் எனக்குத் தெரியும் அதேநேரம் நீ தடுத்தாலும் நான் கண்டிப்பாக போவேன். 

காரணம் இப்பொழுது குழந்தைகளுக்கு காது குத்தினோம் எவ்வளவு செலவு முக்கியமாக வரும்போது நிறைய வெளியூர் நண்பர்களிடம் கடன் வாங்கி வந்திருக்கிறேன் அதை எப்படிக் கொடுப்பது ? சர்ச்சைகள் சண்டையாகி அவள் இறப்பதை நான் விரும்புவதாக அந்த தீர்க்கதரிசி ஜோசியரைப் போலவே எனது மனைவி கணித்து விட்டாள் காரணம் அம்பூட்டு அறிவு என்னவளுக்கு இதற்கு உறுதுணையாக மனைவி வீட்டார் ஆத்திரத்தில் நீ அப்படி நினைத்தால் ? உனது இஷ்டப்படி செய்து கொள் என்று அந்தப்பாவச் செயலுக்கும் பணத்தைக் கொடுத்து விட்டு சென்று விட்டேன்.

நான் மீண்டும் அவசரமாக வந்து 2001-ல் பார்க்கும்போது அவள் இதயத்தில் BLOOD CENCER மரணத்தின் கடைசி நிலை. எல்லாம் முடிந்தும் விட்டது இதற்கு காரணம் யார் ? அழிக்கப்பட்ட அந்த சிசு காரணமில்லையே ஒருக்கால் அந்தக் குழந்தையையும் கொடுத்து விட்டு சென்றிருக்கலாமே என்ற கவலையும் எனக்கு வந்தது மீண்டும் தோன்றியது ஒருக்கால் நான் வெற்றி பெற்றிருந்தால்.

(நான் எதில்தான் வெற்றி பெற்றேன் இதில் வெற்றி பெற) 

இவளது மரணத்திற்கு அந்தக் குழந்தையும், நானுமே காரணம் என்று முத்திரை குத்தி விடுவார்கள் நான் சமாளித்து விடுவேன் நானில்லாதபோது குழந்தையை பழித்தால் ? ? ? அதன் மனம் எவ்வளவு வேதனைப்படும் எல்லாம் நன்மைக்கே என்று பெரியோர்கள் சொல்லி வைத்தது இதனாலும் தானோ ? நண்பர்களே ஜோசியம் பொய்யா ? இல்லை கணிப்பது பொய்யா ? இதை நம்புவது சரியா ? இல்லை நம்பாதது சரியா ? சிலவற்றை நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை நம்பவும் முடியவில்லை.

நட்பூக்களே தங்களின் கருத்தென்ன ?

சனி, ஜனவரி 28, 2017

சமூகத்து SUNமுகங்கள்


நான் வேலை செய்தது Government Office வேலைக்கு போகும்போது Tie கட்டிப் போகவேண்டும் சில நாட்களில் Got போட்டு போவேன் ஒருநாள் நான் Office போகும்போது வழியில் எனது நண்பர்கள் இரண்டு பேரை சந்திக்க நேர்ந்தது சற்று நலகுசலம் விசாரித்து விட்டு சென்று விட்டேன் அதில் ஒரு நண்பர் எனக்கு மிகமிக வேண்டியவன் மற்றவன் சொல்லியிருக்கிறான், அவனிடம்... 
இவனுக்கு வந்த வாழ்க்கையை பார்த்தீயா ? 
என்று காரணம் நாங்கள் எல்லோருமே ஒருகாலத்தில் ஒன்றாக போனவர்கள் (20 வருடங்களுக்கு முன்பு U.A.E க்கு) இன்று வரை அவர்கள் கந்தூரா என்று சொல்லப்படும் Labor Dress தான் போட்டு இருக்கிறார்கள் காரணம் அவர்கள் இன்றுவரை அதே Company யில்தான் வேலை செய்கிறார்கள் இதற்கு நான் என்ன செய்ய முடியும் ? விதி என்று சொல்வார்களே அதுதான். வேலை முடிந்ததும் எனக்கு பிடித்த கருப்பு நிறத்தில் Pant & T-Shirt போட்டுக் கொண்டுதான் நான் வெளியில் செல்வேன் அதே நிறத்தில் எத்தனை உடைகள் வைத்திருக்கிறேன் என்பது எனது Room metக்கு மட்டும்தான் தெரியும் மற்றொரு நாள் நான் வெளியில் போகும்போது என்னை குறை சொன்னவனை சந்திக்க நேர்ந்தது அவன் கேட்டான் என்னை...
நல்லாத்தானே சம்பாரிக்கிறே... ஏன் நல்ல Dress போட வேண்டியதானே ?
முதல்ல நான் எப்படி ? Dress பண்ணணும்னு சரியா சொல்லு, நல்லாயிருந்தா இவனுக்கு வந்த வாழ்க்கையா ? னு கேட்கிறே, நல்லாயில்லாட்டா இப்படி கேட்கிறே, நான் என்ன செய்ய ? முடிவை நீயே சொல் என்றேன் அவனுக்கு திக்கென்றாகி விட்டது, ஒன்றும் சொல்லாமல் போய் விட்டான்.
என்ன செய்வது சமூகத்தில், இந்த மாதிரி சண்முகங்கள் நிறைய பேர் இருக்கிறார்கள், இவன் என்ன செய்வான் ? என்மீது உள்ள கோபத்தை எப்படி காண்பிப்பது ? ஒரு 4 பேரை சந்தித்து 8 விதமாக சொல்லி விட்டு போய் விடுவான், அந்தப் 8 பேரும் எப்படி  பட்டவர்கள் ஒரு 16 பேரை சந்தித்து 32  விதமாக சொல்லக் கூடியவர்கள், அந்த 32 பேரும் ஒன்று கூடுதலாக போட்டு ஆயக்கலை 65 ன்னு சொல்லிட்டு போய்ட்டே...... இருப்பார்கள், இவர்கள்தான் 
திண்ணைப்பேச்சு வீரர்கள் 
வாழ்நாளில் கடைசிவரை இப்படித்தான் இருப்பார்கள் ஏனெனில் பேய் காலை வளைக்க முடியுமா ? மா


CHIVAS REGAL சிவசம்போ
பேய்க்கு கால் இருக்கா... இல்லையா ?

சாம்பசிவம்
கலர்க்கலரா உடையணியும் மனிதனுக்கே இருக்கும்போது வெள்ளை உடையணியும் வெள்ளை மனம் படைத்த பேய்க்கு இருக்காதா ? தா

வியாழன், ஜனவரி 26, 2017

ஞாயிறு ஒலிளிழி மழையில்....


யேங்க.. சும்மாதானே இருக்கீங்க ?
ய்யேன்... ஒன்னைத்தூக்கி வச்சுக்கிட்டு நிக்கவா ?

இல்லே.. காய்கறி வாங்கிட்டு வாங்களேன்....
வாங்கியாந்ததும், அப்பொறம் அது சொத்தை இது சொத்தைனு சொல்லுவே...

நல்லதை வாங்கியாந்தா... நான் ய்யேன் கொறை சொல்லுறேன்...
யெனக்குத்தான் தெரியாதுனு சொல்லுறேன்ல... பின்னே யெதுக்கு தொந்தரவு பண்ணுறே... ?

ஏழு கழுதெ.. வயசாச்சு ஒரு காய்கறி வாங்கியாறத் தெரியலே... யெப்பிடித்தான் ஒங்களையும் வச்சு ஆபீசுல மேக்கிறாங்கெளோ... ?
ந்நான் ஒன்னை மேக்கிற மாதிரித்தான்..

ஹூம் காலத்துக்கும் எல்லா வேலயும் நாந்தேன் செய்ய வேண்டியிருக்கு..
ஆபீஸுல ய்யேன் வேலைய நீயா செய்யிறே.. நான் செய்யலே ?

அதுக்காக, வீட்டுல இருந்தா, பொழுதன்னைக்கும் இப்பிடி டிவியப்பார்த்தா சரியாகிடுமா ?
இன்னைக்கு நாயித்துக்கெழமை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுறியா ?

ஆபீசுல போயி வெட்டிக் கிழிச்சுட்டிக... ரெஸ்ட் எடுக்கிறாகளாம், ரெஸ்டு.
பேசாம, எந்திரிச்சு ஆபீஸுக்கே போயிருக்கலாம்... செக்குரிட்டி உள்ளே விடமாட்டான்.

அப்பொறென்ன போறது மாதிரி போயிட்டு செக்குரிட்டி திருப்பி விட்டானு அப்படியே... காய்கறி வாங்கிட்டு வரலாம்ல...
யோசனை மஞ்சிவாடு வண்டிதான் சகடை சப்பையாம்....

இப்பிடி பழமொழிக்கு பேசுறதுக்கு, ஒண்ணும் கொறைச்சல் இல்லே...
சரி பையை எடுத்தா... போயிட்டு வர்றேன் ஒங்கிட்டே வாயக் கொடுக்குறதுக்கு காய்கறிக்கடைகாரிகளே... தேவலே..

இந்தாங்க... பணம் போயிட்டு சீக்கிரம் வாங்க... காய்கறிக்கடையில, வாயப்பாத்துக்கிட்டு நிக்காமே, புள்ளே வந்துருவான் பசி தாங்க மாட்டான்.
அயிரமீனு வாங்கியாறேனே....

ஆமாமா... சாம்பாரு வச்சு கஞ்சி ஊத்துறதுக்கு வாய் ரொம்பத்தான் நீளுது.. இதுல அயிரமீனு வேணுமாக்கும் அயிரமீனு...
ஒம்புள்ளைக்கு புடிக்குமேனு சொன்னேன்..

சாமி பேரைச்சொல்லி பூசாரி திங்கவா ? போயி சாம்பாருக்கு வெண்டிக்கா வாங்கிட்டு வாங்க, மூளையாவது வளரட்டும்...
இனிமே மூளை வளந்து என்னத்தே... சாதிக்கப்போறே ?

நான் சொன்னது எனக்கில்லே, ஒங்களுக்குத்தான்...
இன்னைக்கு, நேத்தா நீ ய்யேன் காலைப்புடிக்கிறே....

யென்ன... சொன்னீங்க... ?
இல்லே காலை வாறுறேனு சொன்னேன்.
ம்... அது.

மனைவி மங்காத்தாள் காணாதபோது தலையில் அடித்துக் கொண்டு காய்கறி வாங்கப் போனான் கணவன் கண்ணப்பன்.


இனிய குடியரசு தினவாழ்த்துகள் - கில்லர்ஜி

திங்கள், ஜனவரி 23, 2017

நேர்------மை


நாம் செய்யும் தொழிலில் நேர்----மையானவர்கள்.

இந்தத் தவறுக்கு யார் காரணம் வெள்ளை அடித்துக் கொண்டு போன தொழிலாளியா ? அல்லது இவரது மேஸ்திரியா ? அல்லது இவருக்கும் மேலேயுள்ள மேலதிகாரியா ? இல்லை இவர்களுக்கு சாலை போட அனுமதி கொடுத்த நிறுவனமா ? அல்லது இந்த ஊரின் நகராட்சித் தலைவரா ? அல்லது இந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரா ? யார் காரணம் ?
ஒரு சிறியபணி அந்தக் கட்டையைத் தூக்கி போட்டு விட்டு செய்திருக்கலாம் பிற நாட்டார் இதைப் பார்த்தால் ? என்ன நினைப்பார்கள் நம்மைப்பற்றி ?  
தொழில் பக்தி என்பது யாருக்குமே கிடையாது.
செய்யும் தொழிலே தெய்வம் அதன் திறமைதான் நமது செல்வம்.
என்று படிப்பதை எல்லாம் நாம், பள்ளியின் வாசலிலேயே களைந்து விடுகிறோம். இந்த வகையான தவறுகளை நாம் தடுக்க முடியும்.
 யார் ?
யார் மக்கள்தான்.
ஆனால் முடியவில்லையே, அந்த தொழிலாளியை சாதாரண மக்கள் கேட்டால் என்ன நடக்கும் ? அவர் அந்த மேஸ்திரியிடம் சொல்லி அவர் அவரின் மேலிடத்தில் சொல்லி கடைசியில் எங்கு போகும் ?
POLICE STATION
அங்கு போனால் என்ன ஆகும் ?
கேட்ட சாதாரண ஆளை நொங்கு எடுப்பார்கள்.
நொங்கு உபயம் : தொகுதி M.L.A

நான்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ‘’ஐந்தாம்படை’’ ஆறுமுகம் என்ற ஏழுமலை.

வெள்ளி, ஜனவரி 20, 2017

கும்ப மரியாதை


Nita Ambani Abhishek Bachchan visit Kamakhya Temple in Guwahati
God bless you - Killergee

அந்த ஊருல ஒரு ரிக்ஷாக்காரர் பெயர் தர்மராஜன் நியாயமானவர், நேர்மையானவர், சவாரி வருபவர்களிடம் கூடுதலாக பணம் கேட்க மாட்டார், கொடுத்தாலும் வாங்க மாட்டார் ஒருமுறை ரிக்ஷாவில் தவற விட்ட பணம் ஒரு லட்சத்தை எடுத்துக் கொண்டு போய் தவற விட்டவர்கள் வீட்டில் பணத்தை தேடிக்கொண்டு போய் கொடுத்து வந்தவர் பொய் பேசமாட்டார் இறைபக்தி உள்ளவர் அவரைப் போலவே அவருடைய தர்மபத்தினியும் அடுத்த பெண்களைப் போல பொறணி பேசும் பழக்கம்கூட இல்லாதவர் வீட்டில் சும்மா இருக்கும் நேரங்களில் பூ கட்டி கடைகளுக்கு கொடுத்து விடுவார் அதையும் கணவரே கொண்டு போய் கொடுக்க வேண்டும் அவசியமில்லாமல் பிற ஆண்களிடம் பேசமாட்டார் பழக மாட்டார் தனது ஒரே பெண்ணையும் அவரைப் போலவே கௌரவமாக வளர்த்து எட்டாவது வரை படிக்க வைத்து கட்டிக் கொடுத்து விட்டார்கள் அந்த மகளும் கணவனுடனும் மகனுடனும் நல்ல விதமாக வாழ்கின்றார் இவர்களின் சரித்திரம் சிறுவயது முதலே முகுந்தனுக்கு தெரியும் வித்தியாசமானவன் அவனுக்கு வெகு நாட்களாக தர்மராஜனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது என்ன செய்யலாம் ? பணஉதவி செய்தாலும் வாங்க மாட்டார்.

ஊரில் பிரசித்தி பெற்ற தேவையறிந்த தேவதையம்மன் கோயில் இருக்கின்றது அதன் பூசாரி முகுந்தனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர் அவரிடம் பணம் தருகிறேன் எனக்கு வேண்டியவரை அழைத்து வருகிறேன் கோயிலில் செய்யும் கும்ப மரியாதை செய்ய வேண்டும் என்றான் 2000 ரூபாய் பேசி 500 ரூபாய் அடிவான்ஸும் கொடுத்து விட்டான் வழக்கம்போல அம்மனுக்கு ஊஞ்சல்கட்டி திருவிழா வந்தது அந்த விழாவின் மண்டகப்படியன்று செய்யலாம் என்று பூசாரி சொல்ல அவனும் சம்மதித்தான். 

திருவிழா தொடங்கியது அவன் தர்மராஜன் அண்ணிடம் மண்டகப்படியன்று என்னுடன் வரவேண்டுமென்று ஏற்கனவே சொல்லி இருந்தான் அதேபோல சரியான நேரத்திற்கு கோயிலுக்கு போனார்கள் பூசாரி அவனை பார்த்தவர் சுற்றும் முற்றும் பார்த்தார் நீ சொன்ன ஆள் எங்கே ? இதோ தர்மராஜன் அண்ணனைக் காண்பித்தான் அதெல்லாம் முடியாது ஏன் ? இவன் ரிக்ஷாக்காரன் அதனாலென்ன ? எல்லோரும் மனுசன்தானே அதிலும் இவர் நல்லமனுசன் இது எல்லோருக்கும் தெரியுமே... இவருக்கு செய்தால் என்ன ? சில செல்வம் கொழித்த பெரிய மனிதர்கள் அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றார்கள் அவன் சட்டென்று கீழே இருக்கும் புகைப்படத்தை காட்டி இவனுக்கெல்லாம் செய்யும் போது இவருக்கு செய்தால் என்ன ? அப்படினு கேட்டுப் பார்த்தான் யாரும் மசியவில்லை அப்புறமா ஒரேயொரு சின்னோண்டு கேள்விதாங்க கேட்டான் அதுக்கு எங்க தலைவனையும், தலைவியையும் எப்படிடா சொல்லுவே அப்படின்னு100 பேர் திரண்டுக்கிட்டு அவனை அடிக்க வந்துட்டாங்கே அவங்கிட்ட ஒரேயொரு கோடரி இருந்துச்சு அதைவச்சு அப்படி இப்படின்னு சமாளிச்சுட்டு தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடியாந்துட்டான் மறுநாள் விசாரித்தால்... பாவம் தர்மராஜன் அண்ணனுக்கு தர்மஅடி கொடுத்தாங்களாம் அந்தக் கேள்வி இதுதாங்க...

முடிசவித்த சிறுக்கிய கட்டிய மொள்ளமாறிப்பயலுக்கு மரியாதை கொடுக்கும் பொழுது உத்தமியை கட்டின தர்மராஜன் அண்ணனுக்கு கொடுத்தால் என்ன ? அப்படின்னு கேட்ருக்கான் அப்பாவி முகுந்தன் அதற்குத்தான் பாவம் அவனை அடிக்க விரட்டி இருக்காங்கே.... 100 பேரும்...

சிவாதாமஸ்அலி-
கேள்வி நியாயமாகத்தான் ஆனால் அம்மணத்தான் ஊருல கோவணம் கட்டியவனை விரட்டித்தான் அடிப்பாங்கே...
Chivas Regal சிவசம்போ-
நாயை அடிப்பானேன் பீயைச் சுமப்பானேன்.
சாம்பசிவம்-
சிரங்கு சொறியிற விரலும், மீசை முறுக்குற விரலும் சும்மா இருந்தால் நகச்சுத்தி வருமாம்.

திங்கள், ஜனவரி 16, 2017

நிற்கட்டுமா ? போகட்டுமா ?


நான் நாத்திகத்திலும், ஆத்திகத்திலும் சேர்க்கப்படாத விசித்திகத்தை தேடிக்கொண்டிருப்பவன், விஞ்ஞானத்தையும் மெஞ்ஞானத்தையும் குழைத்து என்ஞானம் பேசமுயல்பவன். நான் மதவாதி அல்ல ! மிதவாதி.

புராணக்கதைகளில் சொல்லப்படும் தசரதனுக்கு 60000 மனைவிகள் என்று சொல்கிறார்களே இது உண்மையா ? பொய்யாகத்தான் இருக்க முடியும் என்பதே எமது கருத்து காரணம் சொல்லும்போதே... புராணக் ’’கதை’’ என்று சொல்கிறார்களே... மேலும் இத்தனை மனைவிகளோடும் இவர் நியாயமான கணவனாக வாழ்ந்திருக்க முடியுமா ? என்பதும் எமக்கு ஐயமாகத்தான் இருக்கிறது காரணம் எப்பூடி ? நேரமில்லையே... சரி விசயத்துக்கு வருவோம்... அப்படீனா, மற்றவைகளும் புராணக் கதைகள்தானே நம்ம அண்ணன் ராமர் இருக்காரே... அவரு அயோத்தியில் பிறந்ததாக சொல்லப்படுவதும் கதைதானே, அவர் பிறந்த இடம் அயோத்தி என்றே வைத்துக் கொள்ல்வோம். 
அப்படியானால் தம்பி லட்சுமணன் பிறந்த இடம் எது ? 
அது ஏன் ? பிரச்சனைக்கு வரவில்லை 
(உள்ள பிரச்சனை போதாதுனு  இவன் வேறயா ?) 
அப்புறம் கர்ணன் யாரு ? 
எங்கே பிறந்தார் ? 
இப்படி போய்க் கொண்டே இருக்கும் சரி ராமண்ணா அங்கே பிறந்ததாகவே இருக்கட்டும் ராமர் கோயிலை கட்டுவதாலேயோ, பாபர் மசூதியை இடித்ததாலேயோ, மக்கள் பிரச்சனைகள் தீர்ந்து விட்டதா ? 
பிரச்சனைகள் புதிதாக முளைத்ததே மிச்சம் எத்தனை உயிர்கள் இருபுறமும் இழக்கடிக்கப்பட்டன ? 
யாராவது நினைத்து பார்க்கின்றார்களா ? நினைத்து பார்த்தாலும் திரும்பாது என்பது நாம் அறிந்ததே.. எல்லாம் அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டு. 
இதனால் லாபம் யாருக்கு ? 
நஷ்டம் யாருக்கு ? 
ஒருக்காலமும் கோயில் கட்டப்போவதும் இல்லை பிரச்சனை ஓயப்போவதும் இல்லை தமிழ் நாடு முழுவதும் ட்ரக்களில் செங்கல்கள் வாங்கி கொண்டு போனார்களே.... 
அவை எல்லாம் எங்கே ? 
யாராவது நினைத்து பார்த்திருக்கின்றோமா ? எல்லாம் மாட மாளிகைகள் கட்டி விட்டனர் பகுதி விற்றனர் மீதி பார்வைக்காக பார்வையற்ற மக்களுக்கு...

இப்ப விசயம் என்னவென்றால் ? அதாவது சமீபகாலமாக எமக்கும் சாமியார்களின் வாழ்க்கைமீது ஒரு விதமான மோகம் உண்டாகி விட்டது இதன் காரணமாக நாமலும் மக்களின் குறிக்கோள் அறிந்து குறி சொல்லி வாழ்ந்தாலென்ன ? எனத்தோன்றுகிறது காரணம் நானும் சொல்வதெல்லாம் நடக்கிறதே.... ஆம் அடுத்த வீட்டு அழகர்சாமியின் மகன் இன்னும் 6 மாதத்தில் நடப்பான் என்றேன் அதேபோல் அவன் மகனும் நான்கு வயதானதும் நடந்து விட்டான், அதேபோல் கல்யாண சுந்தரத்திற்க்கு எப்படியும் கல்யாணம் நடக்கும் என்றேன் சரியாக 42 வது வயதில் கல்யாணம் நடந்து விட்டதே.... அதேபோல் நடிகை நளினாவுக்கு இன்னும் மூன்று மாதத்தில் விவாகரத்து நடக்கும் என்றேன் இரண்டே மாதத்தில் நடந்து விட்டதே... ஆகவே நாமலும் சாமியார் ஆனாலென்ன ? ஒருவேளை அப்படியே நித்தியானந்தா சுவாமிகள் அல்லது பிரேமானந்தா சுவாமிகள் மாதிரி மக்களுக்கு சேவை செய்து சமாதி ஆகிவிட்டேன் என்று வைத்துக் கொல்வோம்.

அடுத்த 500 ஆண்டுகளுக்கு பிறகு எமது பாடசாலை சான்றிதழ்களையும், எமது கடவட்டையையும் வைத்து சுவாமிஜி கில்ஜியானந்தா இங்குதான் பிறந்தார் என்று கீழக்கரை அரசாங்க மருத்துவமனையை இடிக்கப் போவார்களே.. இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் என்னால் படப்போகும் அவஸ்தையை நினைத்துப் பார்க்கிறேன் அந்த வேதனையின் விளைவே இந்தப்பதிவு ஆகவே இது தேவையா ?

இனிய நண்பர்களே... 
நான் இப்படியே இருக்கட்டுமா ? 
அல்லது அப்படியே போகட்டுமா ? என்பதை தாங்களே சொல்லுங்கள்.
நிற்கட்டுமா ?  போகட்டுமா ?