தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 14, 2018

சேனையனுக்கு எதற்கு குரங்கு ?


அன்பு நெஞ்சங்களே மேலேயுள்ள புகைப்படத்தில் மையத்தில் இருக்கும் வி..........யைத் தெரிகிறதா ? தெரியாமலா இருக்கும் ? நமது பாரதப்பிரதமர் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் மரியாதைக்குறிய திரு. மோடிஜி அவர்கள் ஒருமுறை ஃப்ரான்ஸில் நடந்த விழாவொன்றில் கலந்து கொள்வதற்காக போனது தாங்கள் அறிந்ததே அப்பொழுது சிறப்பு அரசு விருந்தினராக கண்ணகி பரம்பரையில் வந்தவர் என்ற உயர்ந்த சிந்தனையின் காரணமாய் இந்திய அரசின் செலவில் விசாவும், விமான பயணச்சீட்டும், பாரீஸ் பஸ் ஸ்டாண்ட் ஓரமாய் மூத்திரச்சந்தில் இருக்கும் வைத்தியநாதா லாட்ஜின் தங்கும் செலவும் வழங்கப்பட்டது விழாவை சிறப்பித்து வைத்தவர் இவரே... இந்த இடத்தில் சேனையனுக்கு எதற்கு குரங்கு ? என்ற பழமொழியெல்லாம் யாரும் கேட்காதீர்கள் இதையெல்லாம் நாம் யாருமே கேட்க முடியாது என்பது மட்டுமல்ல ஐந்து வருடம் கழித்தும் மறந்து விடுவோம் அதுதானே நமது பாரம்பரிய குணம் ஆனால் இவ்வழிகளில்... நான் கேட்பேன் காரணம் என் மனவேதனை. இவளுக்கு ஆன செலவில் எனது பணமும் ஒரு ரூபாயாவது இருக்கின்றதே என்ற ஆதங்கம் அதை வெளிப்படுத்த மட்டுமல்ல இந்தப்பதிவு வேறொரு கோணமும் உண்டு மேலேயுள்ள புகைப்படத்தை சொடுக்கி பெரியதாக்கி கூர்ந்து கவனித்த பிறகு பதிவை தொடருங்கள்...

பார்த்து விட்டீர்களா ? அந்தப் புகைப்படத்தில் முன்புறத்தில் அமர்ந்திருக்கும் மூவரில் மையத்தில் இருப்பவரே நமது வி...... மன்னிக்கவும் கண்ணகி இடதுபுறமும். வலதுபுறமும் அமர்ந்திருக்கும் மற்ற இரண்டு ஆங்கிலேயப் பெண்மணிகளைப் பற்றிய சிந்தனையை விட்டு விடுவோம் மையத்தில் அமர்ந்திருக்கும் இவளுடன் புகைப்படம் எடுத்து விடவேண்டும் என்பதற்காக பின்னால் நிற்பவர்கள் எல்லாம் தனது படிப்புத்தகுதியால் ஃப்ரான்ஸில் வேலை வாங்கி நல்ல நிலையில் இருக்கும் இந்தியர்கள் வாழட்டும் வளமுடன் இவளும் ஒரு பெண்தானே என்றெல்லாம் மற்ற சராசரி மனிதர்களைப்போல் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது காரணம் எனது குடும்பத்திலும் பெண்கள் உண்டு அவர்களுக்கும் இவர்களுக்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டு ஆகவே மனதளவில் இவளை அவர்களுடன் ஒப்பிட மாட்டேன் இதனைப்படிக்கும் தாங்களும் எனது வகையே என்பதில் எமக்கு துளியளவும் ஐயமில்லை இவளுக்குப் பின்னால் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதற்காக எவ்வளவு பேர் அவர்கள் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் பின்புறம் நிற்கும் அந்த ஊதாக்கலர் சுடிதார், பக்கத்தில் நிற்கும் சிவப்பு கலர் சேலை இவர்களின் முகத்தின் ரேகையை சிறிது படியுங்கள்.

இவளைப் பார்த்ததும் ஏதோ உலகில் காணாததை கண்டதுபோல் நாட்டில் சினிமா நடிகைகள் கூடிக்கொண்டே போவதின் அடிப்படை காரணம் தொடங்குவது இந்த இடத்தில்தான் இவர்களை புழுவெனப் பார்க்கும் சிந்தனை நம் அனைவர் மனதிலும் தோன்றினால் நாட்டில் கண்ணகிகளின் எண்ணிக்கை மீண்டும் உயரும் என்பது எமது திண்ணமான எண்ணம் இவளைவிட நீங்கள் எவ்வளவு உயர்ந்தவர் இது ஏன் ? உங்களுக்கு புரிவதில்லை இவளுடைய வாழ்வு முறையைப்பற்றி நான் விரிவாக எழுதித்தான் தங்களுக்கு தெரிய வேண்டுமா ? நான் எழுதுவேன் ஆனால் இலக்கணம் மீறிவிடும் ஆயினும் இதிலொரு சந்தோஷமும் எமக்குண்டு இதில் என் இன தமிழச்சிகள் இல்லை என்பதே... வாருங்கள் மானிடரே... சுயநலம் மறந்து பொதுநலம் யோசிப்போம்.  நமக்காக அல்ல நமது நாளைய சந்ததிகளுக்காக... அவர்கள் வாழ்வதற்காக இல்லாவிடினும் வீழாமல் இருப்பதற்காக...

எமது பேனா கோபமானது இருப்பினும் எந்நிலையிலும் கண்ணியம் தவறாது

64 கருத்துகள்:

  1. ஆஆஆஆஆஆவ் இன்று மீயேதான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:))

    http://1.bp.blogspot.com/-D1acXtd8yIM/TjZtdzGkuWI/AAAAAAAAAT0/_GxeU63GCLg/s1600/Funny+animations+Cat+Dance+gif.gif

    பதிலளிநீக்கு
  2. எனக்கு சத்தியமா ஒண்ணுமே பிரியல்லியே கில்லர்ஜி:(... தலைப்புப் பார்த்து ஏதோ நகைச்சுவை என ஓடி வந்தேன்.. இது அரசியல் கலப்படம் போல இருக்கு:).. தெரியல்ல.. :).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவ்வோவ்வ்வ்வ்வ்.... நீளம் பேசுற உங்களுக்கு அரசியல் தெரியாதானு நான் கேட்கலை மற்ற பதிவர்கள் நினைக்கலாமேனு.... ஜொள்ள வந்தேன்.

      நீக்கு
    2. பதிவுலக அரசியலை நன்றாக தெரிந்து புகுந்துவிளையாடும் அதிராவிற்கு இந்த அரசியல் புரியலையா???

      நீக்கு
    3. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நான் எதுவாயினும் நேரடியாகச் சொல்லிடுவேனே.. சத்தியமா படத்தில் இருப்பது ஆர் என்றே தெரியாது. இந்த நியூஸ் ஏதும் என் கண்ணில் படவில்லை.

      நீக்கு
    4. படத்தில் இருப்பது யார் தெரியுமா ?
      மோடிஜியின் அம்மாவோட, சின்ன நாத்தனாரின் மச்சானோட சகலையின் மகள்.

      நீக்கு
    5. ஓ அப்படியா? அதுதானா இந்த பொயிங்கல்:) ஹா ஹா ஹா:))..

      நீக்கு
    6. ஆமாம் டொக்டோர்...

      நீக்கு
    7. ஹாஹாஆ :) இல்லை கில்லர்ஜி
      பூனைக்கு மல்லிகா ஷெராவத்தை தெரிந்திருக்க சான்ஸ் இல்லை நேற்று நானும் பிசி இல்லைன்னா யார்னு எக்ஸ்பிளேயின் செஞ்சிருப்பேன் மியாவுக்கு .பொதுவா பூஸார் அவங்க நாட்டு பொலிடிஸ்க்கே போக மாட்டார் இதில் இந்தியா பாலிடிக்ஸ் தெரிய நியாயமில்லை .

      நீக்கு
    8. வாங்க சகோ நல்லவேளை நீங்க வந்து விளக்கம் கொடுத்து பூஸாரை காப்பாற்றி விட்டீர்கள்.

      நீக்கு
    9. தொண்டை வரை வந்துது இருப்பினும் ஓவர் விளக்கம் எதுக்கு என அடக்கிட்டேன்:)... என் செக் இல்லாததாலதான் இவ்ளோ புறொப்ளம் என்பதை ஜொள்ள வந்தேன்:)...

      //ஆமாம் டொக்டோர்...///
      கில்லர்ஜி அது டோர் இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் டர் ஆக்கும்... எங்க ஜொள்ளுங்கோ டொ..... க்க்க்க்க் ... டர்..... ஹா ஹா ஹா

      நீக்கு
    10. உங்களை பதிவுலக டைரக்டர் என்றே சொல்லலாம் الدكتور (தொக்தோர்)

      நீக்கு
    11. ஹா ஹா ஹா கர்ர்:))இதில அரபி வேறையோ?:) அஞ்சு பீஸ்ஸ்ஸ்ஸ் ஜெல்ப் மீஈஈஈஈ தேம்ஸ்ல ஒருவரைத் தள்ள வேண்டி இருக்கு:))

      நீக்கு
    12. எனக்கு தண்ணீரைக் கண்டால் அலர்ஜி நான் வரமாட்டேன்.

      நீக்கு
  3. சினிமாவும் அழகுமே நிலையானது என்று கூடும் கூட்டத்தை நாம் அறிந்தவர்கள்
    தானே. விட்டுத்தள்ளுங்கள்.ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இன்று வில்லங்கத்தார் அனுப்பிய சிறிய காணொளி கண்டேன்.
      அதில் திரைப்பட நடிகனையும் சராசரி மனிதனாக காணும் மலையாளிகளின் உயர்ந்த அறிவைக் கண்டேன்.

      இதற்கு தமிழக மக்கள் மட்டும் இன்னும் விதிவிலக்காக இருக்கின்றார்களே...

      நீக்கு
  4. ரொம்பக் கோபமா இருக்கீங்க போல.... அப்புறம் வரேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோபம் இல்லை ஸ்ரீராம்ஜி ஆத்திரம்தான்.

      நீக்கு
  5. தங்களின் கோபமும் ஆதங்கமும் நியாயமானது நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துரைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  6. இதில் தமிழ்ச்சிக்கள் இல்லை என்ற சந்தோஷம் இருப்பதாக சொல்லி இருக்கீங்க நல்ல வேளை நடுவில் இருக்கும அந்த பெண்ணை நீயூஜெர்ஸியில் இருக்கும் தமிழ் சங்கத்தில் இருந்து அழைக்கவில்லை ஒரு வேளை அழைத்து இருந்தால் இங்குள்ள தமிழச்சிக்கல் அனைத்து உடன் இருந்து போட்டோ எடுத்து இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே அபுதாபியில் ஒருமுறை தமிழ்ப் பெண்கள் இணைந்து நடத்தும் விழாவில் அனைவரும் ஒரே மாதிரி பட்டுப்புடவையில் வலம் வந்ததோடு கலாச்சாரம், பண்பாடு என்று ஏதேதோ பேசினார்கள்.

      மறுமாதம் யதார்த்தமாக அதில் மூன்று பெண்களை ஒரு மாலில் அடையாளம் கண்டு கேட்டு விட்டேன்.
      அதற்கு...

      நீங்க மட்டும் பேண்ட்-சர்ட் போடலாமோ ?

      இங்கு வேட்டி, கைலி உடுத்த அனுமதியில்லை ஆனால் சேலை உடுத்த தடையில்லையே...?

      அதற்கு ஒருத்தி சொன்னாள்...
      "மைண்ட் யுவர் வேர்ட்ஸ்"
      உடன் நகர்ந்து விட்டனர்.

      அவர்கள் உடுத்தி இருந்தது தொடையில் கிழி(த்)ந்த ஜீன்ஸ் பேண்ட்.

      காலக்கொடுமையடி கருமாரினு நினைச்சுக்கிட்டு போனேன்.

      நீக்கு
    2. உங்களுக்கு ரொம்பத் தைரியம்தான், அவங்களை நிறுத்திக் கேட்டதுக்கு. நீங்கள் சொன்னதுபோல் காலக் கொடுமைதான்.

      நீக்கு
    3. அவர்கள் வீட்டுக்காரர்களுடன் வராமல் வந்த தைரியம்தான் காரணம் நண்பரே

      நீக்கு
  7. எதுக்கு ஜி... இதெல்லாம்!...

    உரிச்ச கோழி மாதிரி ஒருத்தி நடிக்கிறா...
    ஆத்தா (சமயத்தில அப்பனும்)பார்த்து ரசிக்கிறா!...

    கோடி கோடியா பணம் இருந்தாலும்
    கோடித் துணி போடுற வரைக்கும்
    இவளுங்க கொள்கையில இருந்து மாறவே மாட்டாளுங்க!..

    நமக்கு எதுக்கு இந்த கருமம் எல்லாம்..
    காலக் கொடுமையடா கந்தசாமி..ன்னு கடந்து போய்டுவோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி நீங்க சொல்வது உலக்கை நாயகனை என்று நான் நினைக்கே இல்லை.

      இவர் வந்தாவது இந்த கருமத்தை ஒழித்து
      நமது பண்பாடு, கலாச்சாரம் காப்பார் என்று நம்பலாமா ?

      நீக்கு
    2. ஓட்டைக் குடைக்குக் கீழே ஒதுங்கப் பார்க்கிறீர்களே!...

      ஆட்டிறைச்சி வியாபாரியும் அஹிம்சை பேசும் காலமாகிப் போனது...

      நீக்கு
    3. ஆமாம் ஜி ஆட்டை அறுத்து விற்பவன்கூட சாமிக்கு ஊதுபத்தி காண்பிக்கின்றான் என்ன செய்வது ?

      நீக்கு
  8. கோபத்தில் ஆரம்பித்து, அரசியலில் நுழைந்து, ஆதங்கத்தில் முடிவு செய்துள்ளீர்கள். வேதனையே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  9. உங்களின் கோபம் சரி தான் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தொடர் வருகை கண்டு மகிழ்ச்சி நன்றி

      நீக்கு
  10. தங்களின் ஆத்திரம் அல்லது ஆதங்கம் நியாயமானதே.

    நடிகைகளின் மீதான 'மயக்கம்' கொஞ்சமேனும் தெளிய, சித்தர்களின் 'குறிப்பிட்ட' சில பாடல்களையேனும் மக்களிடையே பரப்புரை செய்தல் வேண்டும் என்பது என் எண்ணம்.

    சரிதானா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீண்ட இடைவெளிக்குப் பிறகு "எமது" தளம் வருகை கண்டு மகிழ்ச்சி.

      சித்தர் பாடல்கள் நல்ல கருத்துதான் ஆனால் திருக்குறளுக்கே இன்றைய மாணவர்களுக்கு முழுமையான விளக்கம் போதிக்கப் படவில்லையே...

      இன்றைய தலைமுறை செவியை சேதமாக்கும் இ(ம்)சையை விரும்புகின்றனரே...

      தங்களது தளத்தில் கருத்துரை பெட்டியை அடிக்கடி தி.மு.க. ஆட்சிகால மின்சாரம் போல துண்டித்து விடுகின்றீர்களே...

      நீக்கு
  11. இதைப் பார்த்து வேதனை தான் பட முடியும்! வேறென்ன செய்வது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றம் மக்கள் மனதில் வராதவரை மாற்றமில்லை வாழ்வில் ஏற்றமில்லை.

      நீக்கு
  12. இடுகையைப் படித்தேன். நீங்கள் சொல்லியிருப்பது சரி. இப்போ கொஞ்சம் பிஸி. இந்த ஊருக்கு ரிடையரான நடிகை வந்திருக்காராம். பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே புதன்கிழமை விடுமுறை எடுத்து பார்க்கின்றீர்கள் போலயே... மறக்காமல் ஆட்டோகிராப் வாங்கிட்டு வாங்க!

      நீக்கு
  13. சொல்லி இருப்பது சரிதான், ஆனால் கோபம் வேண்டாம் என்று அதிரா பதிவு போட்டு இருக்கிறார், படித்தீர்கள் தானே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ படித்தேன் அதிரா சொன்னது சரிதான் ஆனால் வேண்டுமென்றே எனது பதிவை போட்ட பிறகு வெளியிட்டு இருப்பது ஏதோ வஞ்சம் தீர்க்கும் வேலையோ என்று ஐயமாகவும் இருக்கிறது.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)... ஒரு நல்ல டொக்டருக்கு வஞ்சம் இருக்குமோ ஜொள்ளுங்கோ கில்லர்ஜி:)..

      நீக்கு
    3. "நல்ல டொக்டர்" இது யாராவது உங்களிடம் வைத்தியம் பார்த்து உயிர் பிழைத்த பிறர் சொல்லணும்.

      நீக்கு
  14. நல்ல நியாயமான பதிவு தான் ஜி! .நல்ல அறிவு அது எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும் சரி, அன்பு இந்த இரண்டிற்கும் நம் மரியாதை வணக்கம் என்றென்றும் இருக்கட்டும்...இருக்க வேண்டும்
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.

      நீக்கு
  15. ஹா..ஹா... அதிரா அப்படியெல்லாம் செய்யமாட்டா அண்ணா ஜீ.. ஏனென்றா அவா ஸ்வீட் ஸிக்டீன் அதிரா...வஞ்சம்,எரிச்சல்,பொறாமை எதுவுமே தெரியா....ஹா..ஹா..

    இன்னும் என்னவெல்லாம் வரபோகுதோ.... இப்படியானதெல்லாம் பார்த்துட்டு போகவேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ புலம்பி விட்டு செல்வோம் வேறு வழி ?

      நீக்கு
    2. ஆஆஆஆவ்வ்வ்வ் கில்லர்ஜி பார்த்தீங்களோ மீக்கு ஆச்டிரமத்திலேயே சப்போர்ட்டேர்ஸ் இருக்கினம்...:)
      பீஈஈஈ கெயாபுல்:).... ஹையொ இது எனக்குச் சொன்னேன்:)

      நீக்கு
  16. தமிழ்ப்பெண்கள் இல்லைன்னு சந்தோஷப்படாதிங்க ..கொஞ்சம் லண்டன் பக்கம் வந்தா தெரியும்..
    கலைவிழாக்களில் டிக்கெட்டே 50 பவுண்ட் /75 பவுண்ட் வரும் ஆனாலும் அரங்கம் நிறைய கூட்டம் இருக்கும் .
    நம்ம மக்கள் சினிமாவில் நடிக்கறவங்களை அதிசய அவதாரங்களா பார்ப்பது வேதனை .நாம் அன்றாடம் வேலைக்குப்போறோம் சம்பாதிக்கிறோம்
    நடிகர்கள் நடித்து சம்பாதிக்கிறாங்க அவ்ளோதான் இதை இட்டு அவங்களோட சேர்ந்து செல்பி படம் எடுப்பது பெருமைக்குரிய விஷயமில்லை .இதை நம் மக்கள் எப்போ உணரப்போறாங்களோ




    சமீபத்தில் கேள்விப்பட்டது .காலா படத்தில் சித்தப்பா கூட நடிச்ச அந்த நாலுகால் மணியை மலேஷியாவில் இருந்து 1 1/2 கோடிக்கு ஆக்க்ஷனில் எடுக்க கேட்டார்களாம் ..

    இவர்களின் மாய சினிமா மோகத்தை என்னன்னு சொல்றது :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ விரிவான விடயம் தந்தமைக்கு நன்றி.

      நீங்கள் சொல்வது போல் அவர்களும் சராசரி மனிதர்களே அவர்களை மேலோகத்திலிருந்து இறங்கிய தேவதூதர்களோ, தேவகன்னியர்களோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் மானங்கெட்ட ஜென்மங்கள்.

      நாமெல்லாம் அந்த வகையில் உயர்வான பிறவிகளே...

      இருப்பினும் உங்க சித்தப்பாவுக்கு கடைசி காலத்துல ஏனிந்த ஆசை.

      நகராட்சி கடை வாடகை பாக்கியை கொடுக்காதவன் நாட்டை காப்பாற்றுவேன்னு சொல்றானே... ?

      இவன் ஏமாற்றுக்காரன்னு இதுலயே தெரியுதே...

      நீக்கு
    2. ஆஆஆஆஆவ்வ்வ்வ் கில்லர்ஜி பொயிங்காதீங்கோ உங்க ஹார்ட் பத்திரம் ஹா ஹா ஹா:)

      நீக்கு
    3. உங்க அங்கிள் கமல்ஹாசன் மட்டும் எப்படியாம் ???

      சொந்த மகளை கௌரவமாக வளர்க்க வக்கு இல்லை இவரு வந்து தமிழ்நாட்டு பெண்களின் கலாச்சாரத்தை காப்பாற்றி விடுவாரா ???

      நீக்கு
    4. கில்லர்ஜி.... உங்கள் கருத்துக்கள் எல்லாம் நியாயமானவையே. நம்ம ஊர்ல எல்லோரும் (அறிவுரை சொல்ற, அரசியல்ல இருக்கற) 'கூரை ஏறி கோழி பிடிக்க முடியாது. ஆனால் வானம் ஏறி வைகுந்தம் காண்பிப்பேன் என்று சொல்வாங்க.

      நீக்கு
    5. ஆம் நண்பரே இதை நம்பும் கூட்டம் உள்ளவரை இப்படித்தான்.

      நீக்கு
  17. //மோடிஜியின் அம்மாவோட சின்ன நாத்தானாரின் மச்சானோட சகலையின் மகள்!// விளையாட்டுக்காகச் சொல்லி இருந்தாலும் உண்மையில் அவங்க குடும்பம் இன்றளவும் நடுத்தரக் குடும்ப வாழ்க்கையே வாழ்கின்றனர். மோதியின் அம்மா ஓர் பத்துக்குப் பத்து அறையில் வசிக்கிறார். ஆட்டோவில் தான் போய் வருகிறார். ஒரே ஒரு சகோதரருக்கு மட்டும் சொந்தமாய் ஃப்ளாட் இருக்கு. மற்றவர்கள் சாதாரண வாழ்க்கையே வாழ்கின்றனர். இது பற்றி எல்லா ஊடகங்களிலும் விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மோடியின் குடும்பம் எளிமையாய் வாழ்வது உண்மையே... இவரு மொத்த ஆடம்பரத்தையும் குத்தகைக்கு எடுத்துட்டாரே...

      மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது வெளிநாடு சென்று வந்த செலவு முப்பது கோடி ரூபாய். இது அன்று சர்ச்சையை கிளப்பியது.

      அப்படினா.... இவரோட செலவு எவ்வளவு இருக்கும் ?

      Shivas Regal சிவசம்போ-
      ஜேம்ஸ் ஊரணியவே விலைக்கு வாங்கிடலாமோ...

      நீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    தங்கள் பதிவிலும், கருத்துரை பதில்களிலும் ஜனநாயக சீர்கேடுகளின் முறைகளை குறித்து கோபமும், அதன் விளைவாய் எழுந்த ஆத்திரமும், வருத்தமும், ஒன்று கலந்து தெரிகிறது. என்ன செய்வது? இதே போல் என்றோ அரசியலும், சினிமாவும், ஆன்மீகமும் ஒன்று கலந்து விட்டனவே! ஜீரணித்துதான்ஆக வேண்டும். வேறு வழியில்லை!

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ சமூகத்தை நாமே கெடுத்து விட்டு காலம் மாறிப்போச்சு என்று பொய் சொல்லி தப்பிக்கின்றோம்.

      நீக்கு
  19. தார்மீக கோபம் தங்கள் பதிவுகளில் பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் கருத்துரை கண்டு மகிழ்ச்சி.

      நீக்கு
  20. தமிழ்நாட்டில் நிலைமை இன்னும் மோசம் இல்லையா? கடை திறந்துவைக்க வந்த நடிகையை பார்பதற்கு கூடிய கூட்டத்தை தடியடி நடத்தி கலைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    சினிமா மோகத்தில் இருந்து நம் மக்கள் விடுபட்டால் ஒழிய இங்கு சமூக கேடுகளும் அரசியல் கேடுகளும் ஒழியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே உண்மையை அழகாக சொன்னீர்கள் இதில் தமிழகம் முதலிடத்தை பிடித்து முன்னிலையில் இருப்பது அவமானம்.

      நீக்கு
  21. நியாயமான ஆதங்கம். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு