தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 11, 2019

ஆன்மீகமும், நாத்திகமும்

 வீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார்
எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம்.
கலிகாலம் இப்படியும் முளைக்கும்
ஆறே வாரங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை
நாமலும் ஹிந்தி படிச்சுருந்தா இந்திலை வருமா ?
 யாரு வந்தாலும் பாலூத்துவோம்
ஆன்மீகமும், நாத்திகமும் ஒரே கோட்டில்...
அஞ்சு வயசுலதான் அண்ணன் தம்பி
செல்ஃபி மன்னன் செல்லத்துரை
அடடே ஸூப்பருங்கோ...
 ஸ்ரீராம்ஜி தமிழர்னு தெரியாதோ...
தேர்தல் இல்லாதபோது என்ன சொல்வீங்க ?
நாளைக்கு இது ஒரே நேரத்தில் இரண்டு ஓட்டு போடும்
கில்கிஸ்தானில் தேர்தலாம் போயிட்டு வாங்கப்பு...
டயரை ஆட்டையப் போட்டாய்ங்களோ...
 சீதையை கேவலப்படுத்தாதீங்கடா...
ஏரியா பார்த்து வரக்கூடாதாம்மா...
இதத்தானே அன்றைக்கு நேதாஜி சொன்னாரு...
 நாங்களாவது மாறுவதாவது...
எங்கள் பிளாக் வாசகர்கள் டீ சாப்பிடலாமே...

76 கருத்துகள்:

  1. உள்ளதை உள்ளபடி சொல்லியாச்சு.
    மிக அருமை தேவகோட்டை ஜி.

    பதிலளிநீக்கு
  2. தீக்குச்சி வீடு அழகு எப்படி மனசு வருது அதை கொளுத்த?

    6 வாரங்களில் நிரூபிக்கபட்ட உண்மை சிரிக்க வைத்து விட்டது.
    தற்பொழுது தேவை இதுதான் வேதனை தரும் விஷயம்.

    மாற்றம் நம்மிடமிருந்து தான் வர வேண்டும்.
    அஞ்சு வயதில்தான் அண்ணன் தம்பி
    பத்து குழந்தைகளை ஒரு தாய் பேணி பாதுகாப்பாள், ஆனால் ஒரு தாயை பேணி பாதுகாக்க முடியாத நிலை
    உண்மை சுடுகிறது.

    அன்னையர் தின வாழ்த்துக்கள்
    அன்னைக்கு அன்னையாக குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    தாயுமானவருக்கு வாழ்த்துக்கள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //பத்து குழந்தைகளை ஒரு தாய் பேணி பாதுகாப்பாள், ஆனால் ஒரு தாயை பேணி பாதுகாக்க முடியாத நிலை//

      அருமையாக சொன்னீர்கள் சகோ.
      உங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்.

      நீக்கு
  3. எல்லாமே அருமை ஜி. வழக்கம்போல ரசனையான கலெக்ஷன்.

    பதிலளிநீக்கு
  4. முதல் படம் காணொளியாக இருந்திருக்கலாம்!
    ஒரே மரத்தில் இப்படிப் பழுத்தால் வசதிதான்.
    ஐந்து வயதிலும் ஐம்பது வயதிலும் மகன்களின் மாறுதல்- வேதனை.
    தமன்னாவா? யாரது கில்லர்ஜி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் காணொளியிலிருந்து புகைப்படம் எடுத்தேன்.

      தமன்னா யாரென்பதை திரு நெல்லையார் அவர்கள் வந்து விள(ல)க்குவார்...

      நீக்கு
  5. ஆமாம், தேர்தல் இல்லாதபோது என்ன செய்வார்கள்? ரேஷன் கார்ட் திருப்பிக் கொடுத்து விடுவதாகப் போராடலாம்.
    ம்ம்ம்... ஸ்ரீராம் பேக்கரியில் என்னையே உள்ளே விடுகிறார்களோ இல்லையோ! பாக்கெட்ல காசிருக்கா பாரு என்பார்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மவர்கள் எப்போதுமே கொம்பை விட்டு வாலைப்பிடிப்பவர்களே...

      நீக்கு
  6. இனிய காலை வணக்கம் கில்லர்ஜி!

    ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி எல்லாமே நல்லாருந்துச்சு...

    தமனாக்கா.......ஸ்ரீராமா?!! கில்லர்ஜி ஸ்ரீராம் பயந்து போய் எங்கேயோ ஓடி ஒளிஞ்சுக்கிட்டார்...பாவம்...(கட்டிலுக்கடியில்னா எல்லாரும் கண்டுபிடிச்சுருவோம்னு!!)

    இப்படி நெல்லைய கண்டுக்காம விடலாமோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தமனாவுக்கு பிடித்தது நெல்லையா ? ஸ்ரீராமா ? என்று கேட்டு சொல்லுங்கள்.

      நீக்கு
    2. பதிலுக்கு அவங்க 'ஏராளப் பணம், ஏடிஎம் கார்டு, கேள்வி கேட்காமல் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்கக்கூடிய கெப்பாசிட்டி உள்ளவன்' என்று கேட்டால்?

      நீக்கு
    3. விலை மதிப்புள்ள இதயம் இருக்கிறது என்று சொல்லலாமே...

      நீக்கு
    4. இந்தத் தளத்தில் திரிஷா, கோயமுத்தூர் தொழிலதிபர் பையனுக்குச் செய்ததை எழுதமுடியாது. 'இதயமாவது... அதற்கு விலையாவது'..ஹாஹா

      நீக்கு
    5. நடிகைகள் எப்பொழுதுமே தொழிலதிபர் மகன்களோடு காதல் வயப்படுகின்றார்களே...

      யாராவது கைவண்டி தொழிலாளியோடு காதல் கொள்வதில்லையே ஏன் ?

      நீக்கு
    6. கில்லர்ஜியின் தமனாக்காவின் படமும் ஸ்ரீராமும் பார்த்து நெல்லைத்தமிழன் இப்போ காவேரியில் குதிக்க ஓடுகிறார் என நியூஸ் ல வந்துதே:))..

      இருந்தாலும் சினிமாவைத்திட்டித்திட்டியே, சினிமா நியூஸ் எல்லாம் ஒழுங்காப் படிக்கும் கில்லர்ஜியை முதலில் ஜமுனை ஆற்றில தள்ளோணும்:))

      நீக்கு
    7. நான் எப்ப திரைப்படத்தை திட்டினேன் ?
      திட்டினாலாவது திருந்துவார்களே... என்ற நப்பாசையில் ரெண்டு வார்த்தை அப்படி, இப்படி ஏதோ உளறியிருக்கலாம்...
      (மே பி or மே நாட் பி)

      நீக்கு
  7. அத்தனையும் ரசித்தேன் நண்பரே,அஞ்சு வயசுலதான் அண்ணன்
    தம்பி, இதுதான் வேதனை இன்றைய தலைமுறைகளின் ரோதனை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  8. கில்லர்ஜி முதல் இது கொஞ்சம் நெகட்டிவாக இருக்கிறதே அது முதலாவதாக வேண்டாமே...என்று தோன்றுகிறது...தப்பா எடுத்துக்காதீங்க...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல்படம் காந்தியை வைத்து இருக்கலாமோ ?

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அத்தனைப்பட கலெக்ஷ்ன்களும் அருமை. அதற்கு பொருத்தமாக தாங்கள் எழுதிய வாசகங்கள் மிகவும் அருமையாக இருக்கிறது.

    "வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் பண்ணிப்பார்" என்பார்கள். இந்த கருத்து இவ்விரண்டும் சிரமமான செயல்கள் என்பதை குறிக்கும். இவ்வளவு அழகாக அரும்பாடுபட்டு ஒரு வீட்டைக்கட்டி அதை தீயிட்டு கொளுத்துவதென்றால், நினைத்துப் பார்க்கவே விளையாட்டுக்கென்றாலும் சற்று கஸ்டமாகத்தான் உள்ளது.

    " பாம்பென்றால் படையும் நடுங்கும்" இவர் கையும் நடுங்காது, கையிலிருக்கும் "செல்லும்" நடுங்காமல் படமெடுக்கிறார். ஏனென்றால் அதுவும் படமெடுத்து இவரையும் எடுக்கச்சொல்லி உற்சாகப்படுத்துகிறது என்பதாலா? ஹா ஹா.

    அனைத்துமே நன்றாக உள்ளது. மிகவும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து விரிவாக கருத்துரை தந்தமைக்கு நன்றி

      நீக்கு
  10. சிலது ரொம்பவே சிரிக்க வைத்தது கில்லர்ஜி!

    ஸ்ரீராம் பேக்கரியும் தொடங்கிட்டாரா சொல்லவே இல்லை!! சரிசரி டீ மட்டும் தானா....

    ஸ்ரீராம் பேக்கிங்க் மாஸ்டர் வேலை இருந்தா எனக்குக் கொடுங்க ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதானே இன்னும் எந்த ஊருல என்ன வச்சு இருக்காரோ...

      நீக்கு
  11. உண்மை
    தமிழ்நாட்டுக்குத் தேவை
    நேர்மையான வாக்காளர்கள்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே வாக்காளர்கள் சரியெனில் அரசியல்வாதிகளும் சரியே..

      நீக்கு
  12. I love Tamil Music. இது திரு நடன சபாபதி அவர்களின் மொழிபெயர்ப்பு கொலைக்கு உதாரணமா?
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. வாங்க ஐயா இப்படியா ஒப்பிடுவது ?

      நீக்கு
  13. அனைத்தும் அருமை ஜி...

    சிலது சிந்திக்க வேண்டியவை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஜி

      நீக்கு
    2. செல்ஃபி பைத்தியங்களைத் திருத்த முடியாது. பொட் என்று போட்டு பரலோகம் சென்றால்தான் புரிந்துகொள்வர்.

      நீக்கு
    3. பொட் என்று போட்டவுடன் பரலோகம் சென்றவன் எப்படி புரிந்து கொள்வான் ?

      நான்கு தினங்களாவது ஐசியூவில் இருந்து வேதனையை அனுபவித்து, செய்தது தவறென்று உணர்ந்து சென்றால் வ(தி)ருந்துவான் நண்பரே

      நீக்கு
  14. //இதைத்தான் அன்றே நேதாஜி சொன்னார்// - கில்லர்ஜி... காந்தி சொன்னதாக நான் படித்தது, 'ஒருவன் பலாத்காரம் செய்ய முயன்றால் முடிந்த வரை எதிர்ப்பு காட்டு. அப்படி எதிர்ப்பு காட்ட முடியவில்லை என்றால்........'. நீங்க என்னடான்னா அவர் கைல துப்பாக்கி கொடுக்கறீங்க.

    //நேர்மையான வாக்காளர்கள்தாம்// - இதை எப்போதும் மக்கள் புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க எதிர்பார்ப்பது நேர்மையான அரசியல்வாதிகள், ஆனா மக்கள் எப்போதும் நேர்மையற்று சட்டத்தை மதிக்காமல் இருக்க அனுமதி தரணும்னு.

    //அரசியலுக்கு வந்தால் பெரியார் வழி செல்வேன்// - நல்ல நகைச்சுவை... அவருக்கு யார் 'பெரியார்' என்று யார் சொல்லிக்கொடுப்பது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நல்ல அரசியல்வாதிகள் மட்டும் வேண்டுமோ... அதற்கு நாம் நல்ல பிள்ளைகளாக வளர்க்க வேண்டுமே...

      பெரியார் யாரென்று கி.வீரமணி சொல்லிக் கொடுக்க மாட்டாரா ?

      நீக்கு
    2. //கி.வீரமணி சொல்லிக்கொடுக்கமாட்டாரா?// - அது சரி... கி.வீரமணிக்கு யார் முதலில் சொல்லிக்கொடுப்பது? ஹாஹா

      நீக்கு
    3. ஹா.. ஹா.. அவருக்கே தெரியாதோ...?

      நீக்கு
  15. பதிவை ரசித்தேன் தலைப்பு ஏன் அப்படி என்று விளாங்க வில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா பதிவில் ஏழாவது படத்தை பாருங்கள் ஐயா.

      ஆன்மீக அரசியல் என்ற குழப்பவாதி இப்பொழுது பெரியார் பாதை என்கிறான்.

      நீக்கு
    2. இப்படிப் போட்டுக் கொழப்புனாத் தானே குட்டையில மீன் புடிக்கலாம்...

      நீக்கு
    3. ஆமா வரும் மே 23-ஆம் தேதி முடிவு சொல்லுறாங்களாமே...

      நீக்கு
  16. கில்லர் ஜி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து, பொற்கிழி கொடுக்கலாம்..ந்னு பார்த்தா

    கையில் இருந்த காசு கணக்குல வராத காசு..ந்னு ஆகிப் போச்சு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தினார் திர்ஹாம்ஸ் ஆகி விட்டதோ...

      நீக்கு
    2. அப்படி ஆனாத்தான் பரவாயில்லையே!...

      தேர்தல் நேரம்..ந்னு சொல்லிட்டாங்கே!....

      நீக்கு
    3. ஆமாம் ஜி நான்கு தொகுதி பாக்கி இருக்கிறதோ...

      நீக்கு
  17. பெரியாரோ அவரது கச்சியினரோ எந்தத் தேர்தலிலேயும் போட்டியிட்டதில்லை...

    அதனால தான் ரசினி பெரியாரு வழின்னு சொல்லியிருக்கார்...

    அவரு சிவனே..ந்னு இருந்தாலும் இந்த ரஜிகர்கள் அவரை சும்மா இருக்க விடுவதில்லை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருவேளை திகவின் வாக்குகளை பெறுவதற்காண குறுக்கு வழியோ...?

      நீக்கு
  18. ஆறு வாரங்களில் நிரூபிக்கப்பட்ட உண்மை முதலில் கொஞ்சம் புரியலை! படத்தைப் பெரிது பண்ணிப் பார்த்ததும் புரிஞ்சது! உண்மைதான். சிரிப்பு வந்தாலும் அது வயிற்றெரிச்சலோடு கூடிய சிரிப்பு! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரிக்கும்போது மனம் விட்டு சிரிக்கணும், இப்படி வயிறெரியக்கூடாது.

      நீக்கு
  19. மொழி பெயர்ப்பு நீங்க சொன்னாப்போல் தான். "முழி"பெயர்ப்பாகத் தான் இருக்கு! எங்கே! தமிழே தடவல்! இங்கிலீஷ் இழுவை! ஹிந்தி இம்சை! குழந்தையின் பால் பாட்டிலைக் கால்களால் பிடித்திருப்பது வேதனை தருகிறது. ராமாயணம் அநேகமா எல்லா மொழிகளிலும் படமாக வந்தாச்சு. இனி என்ன செய்யப் போறாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் முழி பெயர்ப்பாகத்தான் இருக்கிறது.

      நீக்கு
  20. அனுஷ்கா அக்கா கல்யாணம்னா ஶ்ரீராம் கவலைப்படுவார்! தமன்னா கல்யாணத்துக்குமா? ஶ்ரீராம் தேநீர்க்கடையில் இன்னிக்குத் தேநீர் குடிச்சுப் பார்த்துடலாம். ரஜினியை நடிப்பதில் மட்டும் ரசித்தால் போதும் என்னும் கட்சி நான். ஆனால் நான் அதைக் கூடச் செய்வதில்லை. ரஜினி படமெல்லாம் பார்த்ததே ரொம்பக் குறைவு!ஆரம்ப காலப் படங்கள் சில

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம்ஜி கடையில் தேநீர் அருந்த கள்ளிமந்தையம் போகணுமே...

      நீக்கு
  21. பல சிந்தனைகளைத் தூண்டுகின்ற, அரிய செய்திகளை நச்சென்று உரிய புகைப்படங்களோடு பகிர்ந்த விதம் அருமை. உங்களுடைய பாணியில் அசத்துகின்றீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் கருத்துரை கண்டு மகிழ்ச்சியும், நன்றியும்.

      நீக்கு
  22. சிரிப்பாகவும் சிந்திப்பைத் தருவதாகவும் இருந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமதி.கூகுளம்மன் அவர்களின் முதல் வருகைக்கு பூங்கொத்து.

      நீக்கு
  23. வாக்களிப்புக்கு முந்பின்.. கார்ட்டுன் ஜூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஹா ஹா ஹா.. அதேபோல் நாகபாம்பு செல்வி:) யும் ஜூப்பர்ர்:))

    பதிலளிநீக்கு
  24. ஹா ஹா ஹா கில்லர்ஜி பார்க்குமிடமெல்லாம்.. நீக்கமறத் தெரிகிறார் ஸ்ரீ ராம்:))..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் எங்கு பார்த்தாலும் ஸ்ரீராம்ஜி காட்சி

      நீக்கு
  25. அனைத்தும் நன்றாகவே ரசித்தேன். ஆனாலும் ஐந்தாவது படம் சிரிக்க வைத்தது. எட்டாவது படமோ நிகழ்காலத்தை பிரதிபலித்து வேதனைப்படுத்தியது. பதிமூன்றாவது படமும் க்ருத்தும் எதிர்காலம் இனி இப்படித்தான் என்று சொல்லுகிற்து!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  26. அனைத்தும் அருமை! ஒவ்வொன்றும் ஒரு விதம். பார்த்தேன்.இரசித்தேன்! சுவையாய் தொகுத்தமைக்கு பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  27. நடந்ததை.நடப்பதை சொல்லியாச்சு......அடுத்து ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்து... யாரையாவது கிழிப்போம் நண்பரே...

      நீக்கு
  28. அருமையான தொகுப்பு. ஆனால், அத்தனை அழகான தீக்குச்சி வீட்டை கொளுத்த துணிவதைத்தான் ஏற்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மேடம் தங்களது கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

      நீக்கு
  29. முக்கனியும் ஒரே மரத்திலா? நல்ல கற்பனை. மற்ற படங்களும் வசனங்களும் கில்லர்ஜி டச்சில் மிளிர்கின்றன.

    பதிலளிநீக்கு
  30. ''இவன் தமிழிசையை லவ் பண்ணுறான்'' - ஹ..ஹஹா... அய்யோ ராமா..இவங்க ஜொள்ள.. சாரி தொல்ல தாங்கமுடியல...

    பதிலளிநீக்கு
  31. எது எப்படியோ .. வழக்கம்போல வைகோ காங்கிரசின் சோலிய முடிச்சி தன் கூட்டணி தர்மத்தினை காப்பாற்றி விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே அவரது பணி மண் அள்ளி போடுவதே...

      நீக்கு