இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, மார்ச் 06, 2011

உயிர்த்தீக்கு


ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர் குஸ்தான் வயது 38 கொ.இ.க.வை சேர்ந்த இவர் நேற்று பந்த் என்பதால் தனது சைக்கிள் கடையை மூடிவிட்டு காந்திரோடில் அமர்ந்திருந்தார். பகல் 1.05 மணிக்கு ---- வாழ்க, ---- வாழ்க என கத்தியபடி தனது உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் தீயை அணைத்து அவரை சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இது குறித்து கொ.இ.க தலைமை வெளியிட்ட அறிக்கையில், குஸ்தான். மரணச் செய்தி நம்மை வேதனையில் ஆழ்த்துகிறது அவரது குடும்பத்திற்கு கட்சியின் சார்பில், குடும்ப நல நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் ? என அறிவித்துள்ளது.