தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஜூன் 18, 2020

அரசியல்வாதி For 2020


நானொரு அரசியல்வாதி ஆதலால்...

எனது எண்ணங்களுக்கு வண்ணம் பூசுகிறார்கள்
ரத்தக்காயம் பட்டால்கூட காவிச்சாயம் பூசுகிறார்கள்.

மேடையில் பேசினால் கட்சியினர் சாமரம் வீசுகிறார்கள்
மறந்து, மறுத்துப் பேசினால் கற்களை வீசுகிறார்கள்
.
நான் தியாகம் செய்தேன் என்னை ஏசு என்றார்கள்
பிறர் சொத்தை தில்லுமுல்லு செய்தால் ஏசுகிறார்கள்.

மகளிர் அணியில் பெண்களின் காவலன் என்றார்கள்
செயலாளரை நோக்கினேன் கோவலன் என்றார்கள்.

நான் ஆளத்தகுந்தவனா என்றால் ஆமா மன்னா என்றார்கள்
மறுபுறத்து எதிர்க்கட்சியினர் மாமா மன்னா என்கிறார்கள்.

விசுவாசிகள் என்னை இதயச்சிறையில் அடைப்போம் என்கிறார்கள்
விசக்கிருமிகள் என்னை உதய்ப்பூர் சிறையில் அடைப்போம் என்கிறார்கள்.

வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கு போனேன் நடிக்கிறேன் என்றார்கள்
மஸூதியில் கஞ்சி குடித்தேன் ஓட்டுக்கு காக்கா பிடிக்கிறான் என்றார்கள்.

நான் எனது அன்னை வீட்டிலிருந்தேன் பண்ணை வீடு என்றார்கள்
மாறாக சிறிய வீட்டிலிருந்தேன் அதை சின்னவீடு என்கிறார்கள்.

பெஸ்ட் அவார்டு வாங்கினேன் இதுவும் வேஷ்ட் என்றார்கள்
எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்தால் ஹவுஸ் அரெஸ்ட் என்கிறார்கள்.

நடிகையோடு வந்து தங்களைப் பற்றிய குறும்படம் என்றார்கள்
நடிகையோ எம்மிடம் குசும்பான பாடம் நடத்திச் சென்றார்கள்.

கொழுந்தியாளிடம் இனிமை தேடுகிறார் என்றார்கள்
மறுபுறம் கொரோனாவால் தனிமை என்றார்கள்.

தேர்தலில் வெற்றி பெற சொத்து முழுவதும் காலி செய்தேன்
நான் கட்டிய டெபாஸிட்டையே மக்கள் காலி செய்தார்கள்.
இவண்
செம்படையான் ஆதிகேசவ குலசேகர பாண்டிய நாதமுனி தேவநாடு

Chivas Regal சிவசம்போ-
ச்சே அரசியல்வாதியாவது பாவச்செயல் போலயே...

சிவாதாமஸ்அலி-
ஃபோட்டோவுல ஃபோர் ட்வெண்டினு போட்டு இருக்குதே....

58 கருத்துகள்:

  1. அரசியலுக்கு தகுதியான ஆள் ஆயிட்டீங்க ஜி... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது ஆசீர்வாதம் எமது சித்தம்

      நீக்கு
  2. ஹா ஹா ஹா உங்கட போஸ்ட்டருக்கு முன்னால நிஜ அரசியல்வாதியே தோத்துப் போயிடுவார்:))

    பதிலளிநீக்கு
  3. ஹா ஹா ஹா ஹா ஹா கில்லர்ஜி உங்க பின்னாடி ஏதோ தெரியுதே!!! கட்டவுட்டு?! ஓட்டுப் பெட்டி இல்லை இல்லைனா ஒரு ஓட்டு போட்டுட்டுப் போலாம்னு பார்த்தா..

    2, 3 நாள் முன்னதான் சினிமாவுக்குப் பாட்டு எழுதினீங்க அதுக்குள்ள அரசியல்லயும் கால் வைச்சுட்டீங்களே!!

    ரசித்தேன் கில்லர்ஜி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் நான் இந்திய குடி'மகன் இல்லையா ? நானும் வரிக்கட்டுறேன் அரசியலில் குதித்து வாறிக்கிட்டு போவேன்.

      நீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    ஆகா. அற்புதம்..எதுகை மோனையாய், அரசியல் வசனங்கள் அருமை. தேவ கோட்டை அரசியலால் தேவநாடு ஆனதையும் ரசித்தேன். உங்கள் கற்பனையே அலாதிதான். அதனால் ஆட்சிக்கு வந்த இந்த நா(ர)தமுனிக்கு வாழ்த்துக்கள். ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ
      பதிவைப் பாராட்டியமைக்கும், இணைப்புக்கு சென்றமைக்கும் நன்றி.

      நீக்கு
  5. ரசித்தேன்.

    ஒவ்வொரு அரசியல்வாதியும் காலியாகிக்கொண்டிருப்பதால், புது அரசியல்வாதிக்கான தேவை இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நீங்களாவது புரிந்து கொண்டீர்களே... நன்றி.

      நீக்கு
  6. கொரோனா காலத்துப் புதிய அரசியல்வாதியை வருக வருக என வரவேற்கிறோம்

    பதிலளிநீக்கு
  7. அநியாயம் அக்கிரமம். தேவநாடு எங்கள் (கேரளீயர்) நாடு. இதுக்கு பேட்டண்ட் காப்பிரைட் எல்லாம் உண்டு.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா தேவநாடு கேரளமா ? எனக்கு புதிய தகவல்.

      நீக்கு
    2. God's own country என்று கூகிள் செய்து பாருங்கள்!
      Jayakumar

      நீக்கு
    3. அவர்கள்தான் "தெய்வத்தின்டே சொந்தம் பூமி கேரளம்" என்று சொல்லிக் கொண்டுதானே வாழ்கிறார்கள். மீள் வருகைக்கு நன்றி ஐயா.

      நீக்கு
  8. நாடு நல்லா இருக்க செம்படையான் ஆதி கேசவ குலசேகர பாண்டியன் நாதமுனி வர வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. நினைத்த காரியம் இனிதே நிறைவேற நல்வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    ஜி
    படிப்படியாக ஒவ்வொரு தடைகளையும் கடக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம் தங்களின் செயலும் சிறப்பு தான் அருமையாகச் சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      நீக்கு
  11. மிகவும் அருமையாக எழுதியிருக்கிறீங்க அண்ணா ஜீ. அரசியல்வாதியாகலாம் நீங்கள்.
    தேவநாடு பதிவை விட கருத்துக்கள் பெரீசு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது பாராட்டுகளுக்கு நன்றி.

      நீக்கு
  12. அரசியல்(வியா)வாதி கெட்டப் அச்சு அசலாக பொருந்துகிறது, சட்டை பாக்கெட்டில் யார் படம்?

    அருமை அருமை.பிரமாதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சட்டைப் பாக்கெட்டில் யாருடைய படமும் இல்லை.

      ஆனால் அப்படி காண்பிக்க உள்ளே பணம் வைத்து இருந்தேன்.

      "செய்வினை வருந்தச் செய்" மருத்துவக் கல்லூரியில் படித்த நினைவுகள்.

      நீக்கு
  13. அரசியல்வாதியின் அடிப்படை அம்சங்கள்!!!

    பதிலளிநீக்கு
  14. அரசியல்வாதிக்குத் தேவையான அம்சங்கள் நிறைந்த பதிவு. இதை பாலபாடமாகக் கொண்டால் அரசியல்வாதிகள் பிழைத்துப் போவார்கள். :)))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  15. உடனே கட்சி ஆரம்பிச்சுடுங்க கில்லர்ஜி. நாமக்கல் மாவட்டக் கிளை தொடங்குறதுக்கு நான் தயாராயிட்டிருக்கேன்.

    ‘கல்லா’ கட்டிடுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.. முதல் ஆதரவுக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  16. அரசியலில் குதிக்க இன்னுமொரு ஆள் தயார்! நீங்க வாங்க தல! ஒரு ரவுண்ட் வரலாம் நீங்க!

    பதிலளிநீக்கு
  17. முன்னுக்கு பின் முரணா பேசனும்..
    எதாவது திட்டம் அறிவிச்சுட்டு மறுநாளே இல்லன்னு அறிவிக்கனும்..
    எதற்கெடுத்தாலும் எதிர்கட்சிகள்தான் காரணம்ன்னு சொல்லனும்..
    ஊரே பற்றி எரிஞ்சாலும் எனக்கு தெரியாது டிவில பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்னு சொல்லனும்.
    இதுலாம் கத்துக்கிட்டா 100% அரசியலுக்கு தகுதியானவர்ன்னு சர்டிஃபிகேட் கிடைக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ
      நான் புதிய அரசியல்வியாதி தங்களது ஆலோசனைகளை ஏற்கிறேன் நன்றி.

      நீக்கு
    2. அன்பு தேவகோட்டைஜி,
      எத்தனை சிந்தனை ஓட்டம் உங்கள் கவிதையில்.
      படமோ சூப்பர்.
      அரசியலுக்கு வந்தவரின் புலம்பலாகத் தான் பார்க்கிறேன்.
      இவர் நல்லவராக இருக்க முடியும்.
      மனம் நிறை வாழ்த்துகள் ஜி.

      நீக்கு
    3. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  18. ‘வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ‘என்று கவி கா. மு .ஷெரீஃப் ‘நான் பெற்ற செல்வம்’ என்ற திரைப்படத்திற்காக பாடல் எழுதியிருப்பார். சாதாரணமான மனிதனுக்கு இப்படியென்றால் அரசியல்வாதிகளுக்கு கேட்கவா வேண்டும்?

    நிற்கும் தோரணையும் கைதூக்கி கும்பிடும் பாணியும் அரசியல்வாதிக்குரிய தகுதியை அடைந்துவிட்டீர்கள் எனக் காட்டுகிறது. எனக்குத் தெரியும் நீங்கள் அரசியல் பக்கம் போகமாட்டீர்கள் என்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது விரிவான கருத்துரைக்கும் என் மீதான ஆணித்தரமான நம்பிக்கைக்கும் நன்றி.

      நீக்கு
  19. அரசியல் வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் . Blog என்னாவது ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நலமா ?
      வலைப்பூ இறுதி மூச்சுவரை எழுதுவேன்.

      நீக்கு
  20. முனைவர் அவர்களின் ஆதரவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. அரசியல் வாதிகளைப் பற்றிய உங்கள்கருத்து தெரிந்ததே இதில்தோலுரித்துக் காட்டுகிறீர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயாவின் வருகைக்கும், புரிதலுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  22. ஹலோ அரசியல் தலைவராக வந்தால் ப்ளாக்ர்களுக்கு வயதான் காலத்தில் பென்ஷன் கிடைக்க ஒரு வழி செய்யுங்கள் தலைவரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நிச்சய்ம் இப்படி செய்துகூ தமிழை வாழவைக்க முடியும் போலயே...

      நீக்கு
  23. சுவாரசியமான பதிவு. என் பெரியப்பாவிற்கு உங்க பெயரைச் சொல்லி அனுப்பிவிடுகிறேன். அவரும் dmk நீங்க அவருக்காக மட்டும் சிறப்பா எழுதியிருக்கீங்கன்னு சொல்லிடுறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அபிநயாவின் முதல் வருகைக்கு வந்தனம். வருகைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  24. ஒரு வாக்கிற்கு 5000 குடுத்தா தான் உங்களுக்கு வோட்டு போடுவேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே விலைவாசி ஏறிடுச்சு உண்மைதான் அதுக்காக நீங்களும் விலையை ஏற்றணுமா ?

      நீக்கு