தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மார்ச் 26, 2022

உதையல்

ணக்கம் நண்பர்களே... ‘’விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’’ என்ற கவிஞர் ஆத்மநாதனின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 
 
இதோ எனது பாடல்...
 
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே 
உன்னோடு நஞ்சும் விலை அழுக்கே
வசை இழுக்கே வசை இழுக்கே
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே 
 
புழை சாயும் கரையோரம்
பல மீன்கள் கீழே
வினை தேடி
வசை பாடி
பழியாலே களவாடி
துன்பம் பேணலாம்
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே
 
உன்னோடு நஞ்சும் விலை அழுக்கே
வசை இழுக்கே வசை இழுக்கே
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே ...
 
பாடாத கள்வ தாகம்
தேனாக தந்தது போல்
தேடோடி தந்த நரக பாகமே...
தேடோடி தந்த நரக பாகமே...
 
பேணாத துன்ப வலை
திண்டாடும் நஞ்சினிலே...
மானிந்த பேதையூட்டும்
துரோகமே சாவிலே...
 
வினை தேடி
வசை பாடி 
பழியாலே களவாடி
துன்பம் பேணலாம்
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே
 
சந்தேக வட்டத்திலே
கதியோடும் பூச்செடியே
சங்கீதம் பேண உள்ளம் தேடுதே
சங்கீதம் பேண உள்ளம் தேடுதே
 
மக்காத பங்கமிது
தேறாத பாரமிது
நன்றாகி துன்ப சோகம்
வாடுதே சாவிலே
 
வினை தேடி
வசை பாடி
பழியாலே களவாடி
துன்பம் பேணலாம்
ஹா... ஆ.. ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...
 
மண்ணோடும் என்னோடும்
வினை தேடும் வெண்மதியே 
உன்னோடு நஞ்சும் விலை அழுக்கே
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1957
படம்: புதையல்
பாடலாசிரியர்: கவிஞர் ஆத்மநாதன்
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடியவர்கள்: சி. எஸ். ஜெயராமன் - பி. சுசீலா
 
இதோ கவிஞர் ஆத்மநாதனின் பாடல் வரிகள்

விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே..
இசை அமுதே..
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே

அலை பாயும் கடலோரம்
இள மான்கள் போலே
விளையாடி
இசை பாடி
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே

கண்ணோடு கொஞ்சும்
கலை அழகே இசை அமுதே
இசை அமுதே..
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே

தேடாத செல்வ சுகம்
தானாக வந்தது போல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே
ஓடோடி வந்த சொர்க்க போகமே
 
காணாத இன்ப நிலை
கண்டாடும் நெஞ்சினிலே
ஆனந்த போதையூட்டும்
யோகமே வாழ்விலே

விளையாடி
இசை பாடி
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே

சங்கீத தென்றலிலே
சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே

மங்காத தங்கமிது
மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம்
பாடுதே வாழ்விலே

விளையாடி
இசை பாடி
விழியாலே உறவாடி
இன்பம் காணலாம்
ஹா... ஆ.. ஆ... ஆ... ஆ.. ஆ... ஆ...

விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்கலை அழகே 
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=cgDEzKVtKHI
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

22 கருத்துகள்:

  1. இன்றைய பொழுது நல்ல பொழுதாக விளங்கட்டும்...

    பதிலளிநீக்கு
  2. ஹா.. ஹா.. ஹா... பொருந்தி வருகிறது.

    பதிலளிநீக்கு
  3. ஹாஹாஹா "ஆச்சி" ரியர் கில்லர்ஜிக்கு வாழ்த்துகள். என்ன ஒரு திறமை! அருமை! பாராட்ட வார்த்தைகளே இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      நீக்கு
  4. நல்ல பாடலில் உங்கள் கைவரிசையைக் காட்டிவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே வார்த்தைகள் கோர்வையாக இல்லையா ?

      நீக்கு
  5. பாடல் எழுதிய ஆச்சி.ரியர் - கில்லர்ஜி
    நன்றாக எழுதி இருக்கிறார்.

    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  6. வார்த்தைகள் நன்றாகப் பொருந்தி வந்திருக்கிறது. நல்ல பாடல் கில்லர்ஜி!!விண்ணொடும் மண்ணொடும்..

    கில்லர்ஜி முன்னமே சொன்னது போல அர்த்தமே இல்லாத பாடல்களை அர்த்தமாக்குங்களேன் உங்களுக்கு இருக்கும் திறமையைப் பயன்படுத்தி!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி

      ஏற்கனவே நீங்கள் சொன்னபோது புதிய பாடல்களை தேடினேன் அனைத்துமே ஆங்கில வார்த்தைகளாகவே இருக்கிறது.

      "ஒய் திஸ் கொலவெறி" இதையும் கூட ஆலோசித்தேன் "மூடியல" இருப்பினும் முயல்கிறேன் மீண்டும் நன்றி

      நீக்கு
  7. விண்ணோடும் முகிலோடும் மிக இனிமையான
    பழம்பாடல்.

    உங்கள் கற்பனை வளத்துக்கும் தமிழ் வளத்துக்கும்
    ஆச்சரிய வணக்கங்கள்.

    அன்பின் தேவகோட்டைஜி,
    வாழ்த்துகள்.
    தங்கப் பதுமைப் பாடல் 'சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
    சம்சாரம் ஏதுக்கடி' கேட்டிருக்கிறீர்களா:)
    அதை மகிழ்ச்சிப் பாடலாக மாற்றுங்கள்.
    ஆசிகளுடன்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா தங்களது வாழ்த்துகளுக்கு நன்றி.

      தங்கப்பதுமை சிறப்பான பாடலே முயல்கிறேன் அம்மா.

      நேற்றுதான் "இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான்" என்ற எஸ்.ஏ.அசோகன் பாடிய சோகப் பாடலை மகிழ்ச்சியாக மாற்றி எழுதினேன்.

      நீக்கு
  8. தொடரட்டும் தங்களின் புலமை ......

    பதிலளிநீக்கு
  9. ஹாஹாஹா. யாரங்கே
    நல்ல விதமாய் "Remaking" செய்யும் நண்பருக்கு "Remake King" என்று பட்டம் கொடுங்கள் உடனே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே பட்டம் காற்றில் பறந்து விடாமல்...

      நீக்கு
  10. விண்ணோடும் முகிலோடும் மிகவும் இனிமையான பாடல்.... அதே பாடலை உங்கள் வார்த்தைகளில் மாற்றி எழுதியது நன்று. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு