பக்கத்து வீட்டுக்காரிக்கு
இருபது லட்ச ரூபாய்
தனலட்சுமி நினைத்தாள்
தன் மகனுக்கு அன்று
காய்ச்சல் வந்து கெடுத்து
விட்டதே என்று...
இருபது லட்சம் கிடைத்த
இளமதி நினைத்தாள்
அடுத்த மாநாட்டுக்குள்
அடுத்த ஒரு பிள்ளையை
பெற்றுவிட இயலுமா என்று...
என் மகன் இறந்தால் என்ன
கொன்றவர் என் மகனைப்
போலவே இருக்கிறார்
ஆகவே இவரே என் மகன்
இல்லையில்லை என் மகர்
கணக்கு கேட்டாள் கண்ணகி
ஒரு பிள்ளைக்கு இருபது லட்சம்
என்றால் இரண்டு பிள்ளைக்கு
நாற்பது லட்சம் தானே என்று...
வீட்டில் இறந்தால்
இருபதாயிரம் செலவு
ரோட்டில் இறந்தால்
இருபது லட்சம் வரவு.
இருபதாயிரம் செலவு
ரோட்டில் இறந்தால்
இருபது லட்சம் வரவு.
எம்புள்ள ஆத்மா சாந்தியடையணும்
அவரு அமெரிக்க அதிபர் ஆகணும்
எதிரிகளோட மனசு வேகணும்
மக்கள் வெந்து சாகணும்.
பக்கத்தில் நின்று காணும்
பாக்கியத்தை பெற்ற மகன்
எனக்கு பெற்றுத் தந்தான்.
அதனால் எமன் அவனை
பெற்றுக் கொண்டான்
அதன் கூலியாய் இருபது
லட்சம் பணமும் பற்று
வைத்துக் கொண்டேன்
இதன் சூத்திரதாரி கூத்தாடன்
வாழ்க நீர் பல்லாண்டு....
எனது அறியாமை
சமூகத்தின் அளவுகோல்
நான் அறிந்து கொள்ள
நாற்பத்தியொன்று
உயிர்களை பலி கொடுத்த
பிறகே அறிய முடிகிறது.
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்

உங்கள் கவிதை மனதை பிசைகிறது. இப்படி அறியாமையின் உச்சத்தில் இருக்கும் மக்கள்.
பதிலளிநீக்குஇப்படி ஒரு நடிகனின் மேல் பற்று வைத்து இருப்பது நல்லதா? இதை பயன்படுத்திக் கொள்ளும் தலைவன் செய்வது சரியா?
நீங்கள் சமூக அவலத்தை கவிதையாக எழுதி இருப்பது நன்று.