இது ஆஸ்ட்ரேலியா இந்த மாதிரியான விசயங்களைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுகிறோம், நமது நாட்டிலும் தலைக்குமேல் இந்த மாதிரி தொங்கு ரயில்கள் ஓடாதா ? என, நிச்சயம் முடியும்....
இதற்கு நம்மிடம் பொருளாதாரமும் இருக்கிறது, திறமையும் இருக்கிறது, நமது பொருளாதாரம் 60 % வெளிதேசங்களில் முடங்கி கிடக்கிறது, அதேநேரம்
அது அவர்களுக்கே உபயோகமாக இருக்கிறது, அதேபோல நமது திறமைசாலிகள் வெளிதேசங்களில்
இருந்து தமது வாழ்வாதாரத்துக்காக, வேறு வழியின்றி அடகு வைக்கப்பட்ட ஆபரணங்களைப் போல்
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், இதே போலத்தான் கடுமையான உழைப்பாளிகளின் நிலையும்
இதை எல்லாம் ஒன்று திரட்டி, நமது பொருளாதாரங்களையும், திறமைசாலிகளையும்,
உழைப்பாளிகளையும் மீட்டு இந்தியாவில் செயல்படுத்தினால் ?
தலைக்கு மேல் ஓடும் ரயில் என்ன ? தரைக்கு கீழ் பறக்கும் ரயில்களைக்கூட நாம்
உருவாக்க முடியும், நாளை நமது சந்ததிகளாவது வாழட்டுமே !
அதற்கு முதலில் வேண்டியது மனம், இது சரியாக
இருந்தால் நாமும்கூட நமது இந்தியாவில் வானுயர்ந்த கட்டடங்கள் கட்டலாம்,
அயல் தேசங்களில் கட்டிக் கொடுக்கத் தெரிந்த நமக்கு நமது தேசத்தில் கட்டத் தெரியாதா ?
மனம் இருந்தால் மார்க்கமுண்டு
என நம்முன்னோர்கள்
சொல்லி வைத்தது நமக்காகத்தான், ஆனால் இதன் அர்த்தம் புரியாமல் நாம் நம்மை
அழித்துக் கொண்டு வாழ்கிறோம், நாம் யாருக்காக வாழ்கிறோம் நமது சந்ததிகளுக்காகத்தானே... அவர்களுக்காகத்தானே
வாயைகட்டி, வயித்தைகட்டி வாழ்ந்தார்கள், வாழ்கிறோம், வாழப்போகிறார்கள்
ஆகவே நாளைய சரித்திரம் படைக்க, நமது அரசாங்கம் இன்றே
முயற்சியை துவங்கட்டும்.... சரி இந்த அரசாங்கம் என்ற பூனைக்கு மணியை கட்டுவது யார் ?
நாம்தான்
MONEYயை வாங்கி கொண்டு ஓட்டு போடுகிறோமே ! பின்னேயாரு கட்டுவது..........?
CHIVAS REGAL சிவசம்போ-
யேன், நாங்க கட்ட மாட்டோமா ? கொஞ்சம் MONEY யோட, ஒரு மணியை வாங்கித்தாங்க நான் போயி,
கத்த்த்த்துர்ர்ர்ரேன்.....
Video
(Please
ask Audio Voice)