தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஆகஸ்ட் 30, 2017

சந்தோஷப்பட முடியுமா ?

30.08.2017

கலைச்செல்வி கில்லர்ஜி

சேனா இன்று நமது திருமணநாள் இந்நாளில் நான் சந்தோஷப்பட முடியுமா ?
நீ இல்லாததால் எவ்வளவு இழப்புகள் வேதனைகள் விடை அறியாத வாழ்வு.

ஞாயிறு, ஆகஸ்ட் 27, 2017

எல்லாம் மண்ணாச்சு...


எல்லோருமே பழைய பாடலை காப்பியடித்து பாடல் எழுதுகிறார்கள்... அதுவும் சிலபேர் பழைய பாடலை அப்படியே எழுதி அதே இசையை புதுமெட்டு எனச்சொல்லி ஏமாளிகள் இருக்கும்வரை நமக்கு ஏறுமுகம் என்ற தைரியம் எழுதுகிறார்கள் நான் அவசரமாக உகாண்டாவுக்கு புறப்பட்டு கொண்டிருந்தேன் எமது இனிய நண்பர் தயாரிப்பாளர் திரு.சாம்பசிவம் தன்னோட படத்துக்கு நீங்க ஒரு காதல் தோல்வி பாடல் எழுதணும்னு சொல்லி நிறுத்திட்டாரு வேறவழி  போற வழியில... காரிலேயே எனக்கு பிடித்த பாடலான நான் உன்னை நினைச்சேன் பாடலை அப்படியே மாற்றி எழுதி கொடுத்த பிறகுதான் விமான நிலையத்துக்குள் விட்டார் இதோ பாடலை S.P.பாலசுப்ரமணியம் வாணி ஜெயராம் பாடிய மெட்டில் பாடவும்.

வெள்ளி, ஆகஸ்ட் 25, 2017

இது நியாயமா ?


கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கல்லிலான கடவுளுக்கு பாலாபிஷேகம் செய்யும் பலரும் ஏழையின் சிரிப்பிலும் இருப்பார் என்பதை நம்பி அவர்களுக்கு தர்மம் கொடுக்காமல் உதாசீனப்படுத்தி பேசுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்று அவர்கள் வீட்டில் தண்ணீர் வாங்கி அருந்துவதைக்கூட நாம் ஒதுக்கி வைப்பவர்கள் அதேநேரம் உயர்ந்த ஜாதியில் பிறந்தவர்கள் தாழ்ந்த ஜாதியில் பிறந்த மருத்துவர் தன்னை பரிசோதிக்கும் பொழுது விட்டுக் கொடுக்கின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

தனது இளவயது மனைவி இறந்து விட்டதால் அவள் உடுத்தியிருந்த உடைகளை சொந்த பந்தங்களுக்கு கொடுத்தால் வாங்க மறுப்பவர்கள் அவள் போட்டிருந்த தங்க நகைகளை மட்டும் மறுக்காமல் வாங்கி கொள்கிகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

தான் தமிழ்நாட்டை ஆளும் மந்திரிகளில் ஒருவராக இருந்தும் பொது இடத்தில் வயதின் தன்மையைக்கூட மறந்து ஊடகங்கள் புகைப்படம் எடுப்பது தெரிந்தும் காலில் விழுபவர்கள் தனது தலைமையில் நடக்கும் விழாக்களுக்கு வரும் பொழுது மேடையில் பந்தாவாக உட்கார்ந்து பேசுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் கணவர்களின் நல்வாழ்வுக்கு வேண்டி என்ற பெயரில் பெண்கள் ஆண்களை ஒதுக்கி ஏமாற வைத்து செவ்வாய்க் கொழுக்கட்டை அவித்து தனியாக அவர்கள் மட்டும் சாப்பிடுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

தமிழ் நாட்டில் பெரும்பாலான அரசியல்வாதிகள் தமிழைக் கையில் எடுத்துக்கொண்டு அரசியல் நடத்தும் அனைவருமே வேற்று மொழிக்காரர்களாக இருக்கின்றார்களே இது தெரிந்திருந்தும் உண்மையான தமிழர்கள் அவர்களுக்காக வாழ்க கோஷம் போடுவதோடு உயிரையும் கொடுக்கின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 06 * * * * * * * * * *

தெருவுக்குள் வறுமையின் காரணமாய் தனது குழந்தைகளை காப்பாற்ற தன்னைக் கொடுத்தவளை விபச்சாரி என்று ஒதுக்கி வைக்கும் சமூகம் திரைப்படத்தில் நடித்தால் மட்டும் கோவில் கட்டுவதோடு காலில் விழுந்து வணங்குகின்றார்களே இது நியாயமா ?
* * * * * * * * * * 07 * * * * * * * * * *

தமிழ் நாட்டில் பல தாய்மார்கள் தனது மகனை தமிழ் பேசும் பக்கத்தில் இருக்கும் சென்னைக்கு தனியாக அனுப்புவதற்கு எம்புள்ளை அப்பாவி என்று மறுப்பவர்கள் வேற்று மொழி, வேற்று மதம், வேற்று உணவு உள்ள வெகுதூரத்தில் இருக்கும் துபாய்க்கு மட்டும் தைரியமாக அனுப்புகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 08 * * * * * * * * * *

தமிழ் மொழிக்காக எனது உயிரையும் கொடுப்பேன் என்று சொன்ன அரசியல் தலைவர்கள் பலரும் ஒரு முறையாவது தூக்குப்போட்டு காண்பிக்காமல் மீண்டும், மீண்டும் அதே வார்த்தையை சொல்லி பாமர மக்களை ஏமாற்றுகின்றார்களே... இது நியாயமா ?
* * * * * * * * * * 09 * * * * * * * * * *

நமது கழிவுகளை உண்பதால் பன்றிகளை ஈனப்பிறவிகளாக நினைத்து ஒதுக்குகின்றோம் அதேநேரம் தேனீக்கள் தனது கழிவுகளை ஒதுக்கும் பொழுது அதை தேன் என்றும், அமிர்தம் என்றும் நினைத்து வழித்து நக்குகின்றோமே... இது நியாயமா ?
* * * * * * * * * * 10 * * * * * * * * * *

Chivas Regal சிவசம்போ-
…. ? ? ?
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் – கில்லர்ஜி

புகைப்படங்கள் எதிர்வரும் 99 வருடங்களுக்கு ஓசி கொடுத்த சகோ திருமதி. ராஜி அவர்களுக்கு நன்றி

புதன், ஆகஸ்ட் 23, 2017

சிந்திய வெண்மணி

I'm in Blood Bank Bus.

சிந்திய வெண்மணி சிப்பியில்தான் முத்தாக வில்லை

குப்பியிலாவது வித்தாகட்டுமே...

இவ்வுலகில் இறந்தும் இருந்திட கண்தானம் செய்வீர்.


சாம்பசிவம்-
மொதலே நீ செய்யுலே...

 

Lions Eye Bank in T. Nagar, Chennai - 600017 Phone: 044-24344144, 044-24343532

Frontline Satellite Eye Hospital in Ambattur, Chennai - 600053 Phone: 044-26582666

Sankara Eye Care, Coimbatore - 641035 Phone: 0422-2666418

Sankara Nethralaya Eye Hospital in Greams Road, Chennai - 600006 Phone: 044-28271616

Aravind Eye Hospital, Madurai - 625020 Phone: 0452-2532653
Udhi Eye Hospital in Alwarpet, Chennai - 600018 Phone: 044-43471111, 044-42188845

Uma Eye Clinic in Anna Nagar, Chennai - 600040 Phone: 044-66247751, 044-26213670

விழி அகம்

(Open Heart)

திங்கள், ஆகஸ்ட் 21, 2017

சொல் தமிழா...

யாருய்யா.... இதுல சீமான் புகைப்படத்தை சொருகியது ?


* * * 01 * * *
நான் ஆத்திகமோ, நாத்திகமோ பேசவரவில்லை தெய்வம் என்றால் உலகம் முழுவதும் உள்ள மனிதர்கள் தெரிந்திருக்க வேண்டும், ஆனால் தமிழ் நாட்டில் சில தெய்வங்களை சில திரைப்பட நடிகர்கள் அறிமுகப்படுத்தி இருகிறார்களே ! இது கேளிகூத்தாக இல்லை. தாய் மூகாம்பிகை, ஸ்ரீராகவேந்திரர், ஐயப்பன் இவர்களெல்லாம் தமிழ் நாட்டில் பிரபலமடைந்தது... சில திரைப்பட நடிகர்களால் என்பதை யாரும் மறுக்க முடியுமா ? இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் ? இந்த நடிகர்கள் தமிழர்களும் அல்ல சுயகாரணங்களுக்காக அவர்கள் வணங்கினார்கள் சரி ஆனால் அதே வழியை ரசிகன் என்பதால் தானும் பின்பற்றுவது முறையா ? இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?

* * * 02 * * *
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பொழுது தீக்குளித்து இறந்தவர்கள் 8 பேர் இவர்கள் இந்திரா காந்தி மகன்களோ, இந்திரா காந்தி பிறந்த மாநிலத்தையோ வேறு எந்த மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் அல்லர் 8 பேருமே தமிழர்கள் இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?

* * * 03 * * *
ஒரு திரைப்படத்தில் கசாநாயகனை (தமிழன் அல்ல) அனாதைப்பயலே என்று வசனம் பேசிய காரணத்தால் சென்னையில் ஒரு நடிகையின் (தமிழச்சி) வீடு கல்வீசி தாக்கப்பட்டது அதில் போலீஸாரால் பிடித்து போனவனின் வாழ்க்கை திசைமாறி போய் விட்டது குடும்பம் சின்னா பின்னமாகி விட்டது எனது நண்பனுக்கு வேண்டப்பட்ட குடும்பம் இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?

* * * 04 * * *
நண்பனுக்கு திருமணம் என்றால் வாழ்த்தி சுவரொட்டி ஒட்டுகின்றான் நல்ல செயல்தான் அதிலும் தனது நடிகனை புகழ் பாடுகிறான் எப்படி ? மணமக்கள் இருவரும் எங்கள் அண்ணன்-அண்ணியைப்போல வாழ்க ! என்று அவன் சொல்லும் அண்ணனும் அண்ணியும் விவாகரத்து வரை போய் விட்டு திரும்பியவர்கள் இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?

* * * 05 * * *
திருமண விழா ஒன்றில் மணமக்களை M.L.A வாழ்த்திப் பேசுகிறார் எப்படி ? மணமக்கள் இருவரும் எங்கள் தலைவனைப் போலவும் (ஒரு குறிப்பிட்ட நடிகையையும் இணைத்து அவர்கள் இருவருமே இறந்து விட்டார்கள் என்று நான் சொன்னால்தான் புரியுமா ?) அவர்களைப் போல வாழ்க ! என்று திருமணத்திற்கு வந்தவர்கள் முகம் சுழிக்கிறார்கள் காரணம் அவர்கள் இருவரும் திருமணம் செய்யாமலே வாழ்ந்தவர்கள் அவருக்கு மனைவி உண்டு என்பது வேறு விசயம் எப்படி என்று நான் விளக்க முடியுமா ? இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா ?

* * * 06 * * *
பத்திரிக்கையை புரட்டினால் நடிகருக்கு 60 அடி உயர கட்டவுட் கட்டும்போது கீழே விழுந்து ரசிகர் பரிதாப மரணம் கட்டவுட்டிற்கு பாலாபிஷேகம் ரோட்டில் ஓடிய பாலால் மோட்டார் சைக்கிள்கள் வழுக்கி விழுந்து சாலைகளில் அபகடம் தலைவன் படம் வெளியிடாததால் நடுரோட்டில் ரசிகர் தீக்குளிப்பு இப்படிப்பட்ட செய்தி இந்த அறியாமைகள் சமூகத்தால் பெருமைப்பட முடியுமா

சொல் தமிழா... சொல் ?

சனி, ஆகஸ்ட் 19, 2017

குடியாட்சியாம்...


மக்கள் நலத்திற்காக மக்களே மக்களை ஆள்வது குடியாட்சி.

சமீபத்தில் நாட்காட்டியில் தமிழனுக்காக உள்ள இந்த பொன் மொழியை கண்டேன் அதில் சிறிது திருத்தம் கொண்டேன் ஏனெனில் தற்கால இந்தியன் அனைவருக்கும் இது பொருத்தமே...

தன்மக்கள் நலத்திற்காக தன்மக்களே மக்களை ஆள்வது குடியாட்சி.
இதுவே சரி.

வியாழன், ஆகஸ்ட் 17, 2017

பல் மூன்று



ஒரு விசும்பல்...
எனக்கென பிறந்தாய்...
என்னுடன் வளர்ந்தாய்...
எனக்காக மலர்ந்தாய்...
அழகாய் இருந்தாய்...
கண்ணுக்கு விருந்தாய்...
தோட்டக்காரன் வந்தான்,
பறித்து கொண்டு சென்றான்,
பறி கொடுத்து நின்றேன்,
என் மனதையும் கொன்றான்.
வாடாமல்லி நீ வாடிச்சென்றாய்...
வாடாமல் நீ என்மனதில் நின்றாய்...
- ஒரு வாடாமல்லிச்செடி.

ஒரு புலம்பல்...
அவள் என்னைப்பார்த்து...
சிரிக்காமல் போயிருந்தால் ?
நான் ஐ லவ் யூ சொல்லியிருப்பேனா ?
அவளை காணாமல் இருந்திருப்பேனா ?
அவளைப்பற்றியே நினைத்திருப்பேனா ?
ஒரு நாளாவது அவளை மறந்திருப்பேனா ?
அவள் வீட்டை கடக்காமல் போயிருப்பேனா ?
அவளும் நேசித்தால், விட்டுக்கொடுப்பேனா ?
அவளை அவனுக்கு, தாரை வார்த்திருப்பேனா ?
அவளால் நான் குடிகாரன் ஆகியிருப்பேனா ?
அவளது சரித்திரம் எழுதப்போகிறது... என் பேனா.
- எழுத்தாளன் எழில்.

ஒரு அலம்பல்...
யாருடா அங்கே  டாஸ்மாக் எங்கே ?
டேபிள்போடு பிரன்ட்ல வருவான் ஃபிரண்டு
நான்தான் குமாரு... அடிப்பேன் டமாரு..
கெனிக்கன் பீரு... குடிப்பேன் பாரு...
முட்டை ஆம்லெட்டு வர யேண்டா லேட்டு ?
சிக்கன் கொண்டா சொக்கன் வருவான்.
ரம்’’மும் எடுத்து வா ! ரம்பாவும் வருவாள்.
சிவசம்போ வந்துட்டான் Chivas Regal எங்கே ?
ஊறுகாய் கொண்டு வா ! ஊறுதே வாயி.
ஸ்நாக்குக்கு பூந்தி எடுப்பேன் வாந்தி.
வருவோம் முந்தி போவோம் பிந்தி.
- குடிமகன் குமார்.

செவ்வாய், ஆகஸ்ட் 15, 2017

முழுசும் எதற்கு ?

வணக்கம் மேடம் சுதந்திர தினத்துக்காக பேட்டி கொடுக்க வந்திருக்கும் உங்களுக்கு எங்கள் மோடோ தொலைக்காட்சி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
வன்க்காம் எண்ணுடொயா ரசிகாருக்கு சொதந்திரா வாத்துகால்

சனி, ஆகஸ்ட் 12, 2017

என் நினைவுக்கூண்டு (5)


இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்...


நீ உறங்கும் இடத்துக்கு வந்தேன் உள்ளே நுழைந்தவுடன் உன்னை அடக்கம் செய்திருந்த இடத்தில் கண்ட காட்சியால் அதிர்ச்சி. ஆனாலும் ஆச்சர்யமான சந்தோஷமே...

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

செவ்வாய், ஆகஸ்ட் 08, 2017

மீசை मूछ మీసం മീശ ಮೀಸೆ Bigote ரவுலே Mustache شنـــب

திரு. நக்கீரன் கோபால் அவர்கள்
இதன் தொடர்பான முந்தைய பதிவு போவோமா... ஊர்கோலம்...

ந்த பாக்கிஸ்தான் பெரியவர் என்னை ஏன் முறைத்தார் ? எனது மீசைதான் எனது மீசை அவரை என்ன செய்தது ? மீசை பெரிதாக வைத்தவன் அராமி அதாவது அயோக்கியன், கெட்டவன் என்பது அரேபியர்கள், லெபனானியர்கள், எஜிப்தியர்கள், சிரியர்கள், குவைத்தியர்கள், சவூதியர்கள், பஹ்ரைனியர்கள், கத்தாரியர்கள், சூடானியர்கள், ஒமானியர்கள், யெமனியர்கள் மொத்தத்தில் அரபு மொழி பேசும் தேசத்தினரின் எண்ணம். அந்த வரிசையில் பாக்கிஸ்தான் வாலாக்களும் உண்டு. பதிலுக்கு வழக்கம் போலவே நானும் முறைத்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டே வந்தேன். மனங்களையும், அவர்களின் குணங்களையும் ஊடுறுவிப் பார்க்கும் அறிவுத்திறன் இவர்களுக்கு கிடையாது என்னைப்பற்றி இவர்களுக்கு க்யா மாலுமே ?

என் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்
கண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்
Thanks to Kaviyarasu Kannadasan (1978)

நான் வருடத்திற்கு ஒருமுறை மீசையின் வடிவமைப்பை மாற்றி விடவேண்டும் என்பது ஸ்காட்லாண்டிலிருந்து வந்த இரகசிய தகவல் இதை இதுவரை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறேன் என்பது நான் மட்டுமே அறிந்த உண்மை எனது அலுவலகத்தில் அரேபியர்கள் கேட்பார்கள்.

அதா ஸினப் மாஃபி ஜெயின் சவி தர்த்திப் ஸஹீர்
இந்த மீசை சரியில்லை சிறியதாக சரி செய்

இன்ஷா அல்லாஹ் புக்கரா சவி தர்த்திப்
இறைவன் நினைத்தால் நாளை சரி செய்கிறேன்

மறுநாள் கேட்பார்கள்

லேஷ் இந்தே மாஃபி சவி தர்த்திப் ?
ஏன் நீ சரி செய்யவில்லை ?

இன்ஷா அல்லாஹ் புக்கரா
இறைவன் நினைத்தால் நாளை

அம்ஸு இந்தே கூல் அதா ஸகில்
நேற்றும் இதேதான் சொன்னாய்

ஐவா, அம்ஸு கூல் புக்கரா மாஃபி அல்யூம்
ஆமா, நேற்று சொன்னது நாளை இன்றல்ல

இந்தே முஸீபத் கலம்த் மாஃபி ஜெயின்
நீ வில்லங்கம் புடிச்சவன் பேசுறது சரியில்லை

கடைசிவரை இன்று போய் நாளை வா கதைதான். அவர்கள் விட்டு விடுவார்கள் சைத்தான் தொலையட்டும் என்று ஒரு நாளா ? இரண்டு நாளா ? இருபது வருடங்கள் உருண்டோடி விட்டது எனது சமாளிப்பு அன்பின் ஜி குவைத் மன்னர் திரு.துரை செல்வராஜூ அவர்களுக்கு தெரியும் நான் மீசையை வெள்ளாமை போட்டு களை எடுத்து பாத்தி கட்டுவதற்கு பட்ட கஷ்டங்கள் அடுத்து நான் சொல்லப் போகும் ஒரே விசயம் பலமுறை சந்தித்து இருக்கிறேன் பில்டிங்கில் ஃப்ளாட்டுக்கு போவதற்கு லிப்டுக்காக கீழே நின்றிருப்பேன் அப்பொழுது என்னைப் போலவே மேலே போவதற்கு பலரும் வருவார்கள் குறிப்பாக எஜிப்தியர்கள் என்னைக் கண்டதும் ஏதோ நான் அவனது கொழுந்தியாள் கையைப் பிடித்து இழுத்து விட்டவனைப்போல் என்னை முறைப்பார்கள் லிப்ட் புறப்படும் பொழுது நான் தயாராகி விடுவேன் அடுத்து என்ன கேட்பான் ? இதற்கு பதில் என்ன சொல்ல ?

லேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே ?

இதற்கு என்ன சொல்வது ? உனக்கென்ன என்று கேட்பதா ? இல்லை நான் ஆசைப்படுகிறேன் என்று விளக்கம் சொல்வதா ? இல்லை மறைந்து விட்ட என்னவள் ஆசைப்பட்டாள் என்று சொல்வதா ? எனக்கு அரபு பேசத்தெரியாமல் இல்லை மணிக்கணக்காய், நாட்கணக்காய் பேசுவேன் வாய் வலித்தாலும் பெயின் கில்லர் போட்டு விட்டு பேசுவேன் முதலில் இவன் யாரோ வழிப்போக்கன் (வலைப்பதிவர் திரு.வலிப்போக்கன் அல்ல) சந்திப்பே இரண்டு, அல்லது மூன்று நிமிடமே எதற்காக வாதம் ? பிறகு அவன் மதவாதம் பேசுவான் நம்ம வாயும் சும்மா இருக்காது ஏற்கனவே எனது வாய் காதுவரை இருக்கிறது என்று கலீஜ் டைம்ஸ் நாளிதழில் போட்டவங்கே.... பேசினால் சண்டை வரும் பிறகு அந்த சண்டையைப்பற்றி விரல் வலிக்க டைப்பி பதிவு எழுத வேண்டும் எதற்கு வம்பு நாமும் சமாதானப்புறாவாக பறப்போமே... முடிவு ? அவன் தனது வாழ்நாளில் இனி யாரையும் இந்தக்கேள்வி கேட்ககூடாது அப்படியொரு பதில் சொல்ல வேண்டும் அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து மாஃபி என்ற வார்த்தை சேர்த்து சொன்னேன் இல்லை கேட்டேன் என்று சொல்லல் நன்று ஆம்...

அவர்கள் கேட்டது...
லேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே ?

நான் சொன்னது...
லேஷ் இந்தே மாஃபி ரெக்கப் ஸினப் அதா ஸகில் ?
ஏன் நீ இந்த மாதிரி மீசை வைக்கவில்லை ?

அவர்களுக்கு எப்படியிருக்கும் ? இந்த மாதிரி மீசை வைப்பது இறைகுற்றம் என ஆத்மார்த்தமாய் நம்புபவன், பிறரையும் இப்படி வைக்ககூடாது என்று சொல்பவனை நீயும் இந்த மாதிரி மீசை வை என்று சொன்னால் ? மறுமொழி இல்லாமல் அதிர்ந்து இருக்கின்றார்கள் பலர். பல தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்டு இருக்கின்றார்கள் சாதாரண மயிர் அதற்காக பிரச்சனையை வளர்க்கிறாய் ? அது மயிர்தான் என்னை விட்டு போகும் பொழுது அதுவரை அதற்கும் இறுக்கிறது உயிர் நான் மீசையை வளர்த்து பராமரிப்பதைவிட கேள்விக்கணை மனிதர்களை சமாளிப்பதில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இதே எனது இந்தியாவில் எவனாவது கேட்க முடியுமா ?

மீசையை வைத்து பராமரிப்பது ஒரு கலையே இது எல்லோருக்கும் புரியாது ஏன் இந்தியாவில் வடநாட்டில் வாழ்பவனுக்கே புரியாதே... அது பரம்பரையில் ஏற்படும் இரத்தஉணர்வு எனது தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா அதாவது புரியும்படி ஜொள்ளு’’கிறேன்.

எனது சேயோனார் தெய்வத்திரு. உமையன் ஆச்சாரியார்
எனது ஓட்டனார் தெய்வத்திரு. உ. வெள்ளையன் ஆச்சாரியார்
எனது பூட்டனார் தெய்வத்திரு. வெ. முத்து மரையான் ஆச்சாரி
எனது பாட்டனார் தெய்வத்திரு. மு. தென்கரை முத்து ஆச்சாரி
எனது தாத்தனார் தெய்வத்திரு. தெ. பூவலிங்கம் ஆசாரி
எனது தகப்பனார் தெய்வத்திரு. பூ. கணபதி ஆசாரி

இவர்கள் எல்லோரும் மீசை கட்டி வாழ்ந்தவர்கள் அவர்கள் வழியில் வந்த நாந்தேன் கில்லர்ஜி எனக்கு மட்டும் அந்த ஆசைகளும், மீசை உணர்வுகளும் வராதா ? எனது மகன் தமிழ்வாணனுக்கே வந்து விட்டதே மீசைக்கு எதிராக யூ.ஏ.ஈ படையென்ன ? யூ.எஸ்.ஏ. படைகளே வந்தாலும் எதிர்ப்பேன்.

ஜாதியை சுட்டிக்காட்டி இருப்பதாக நினைக்க வேண்டாம் வாழ்ந்து முடிந்த எமது முன்னோர்களை பெயரோடு மட்டும் நிறுத்தினால் அவர்களை நான் அவமதித்ததாக ஆகிவிடும் என்று நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எமக்கு தந்தை போன்றவர்களின் கருத்துகளை ஏற்று எழுத வேண்டிய சூழ்நிலை நான் அனைவரையும் சமாளிப்பது கடினமான காரியம் காரணம் எனது தந்தையாரோடு பிறந்தவர்கள் பதினாறு நபர்கள். அதாவது எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் வாரிசுகள் இருப்பினும் ஜாதி அழிந்து கொண்டு வந்ததை எனது வார்த்தைகளில் கொண்டு வந்து இருக்கிறேன். எனது தந்தையாரோடு முடித்து விட்டேன் இனிமேல் ஜாதி வரக்கூடாது எம்மைப் பொருத்தவரை ஜாதிகள் இல்லையடி பாப்பா ஆனால் இப்பொழுதும் இருக்குதடி டாப்பா.

ஆகவே முகத்துக்கொரு மீசை வளர்ப்போம். இந்த வாசகம் எமது சந்ததியினருக்கு மற்றவர்களும் ஏற்றுக்கொண்டால் சந்தோஷமே...

திரு. ம. பொ. சிவஞானம் அவர்கள்
திரு. அடோல்ஃப் ஹிட்லர் அவர்கள்
திரு. வீரப்பன் அவர்கள்
திரு. மொக்கைராசு அவர்கள்
திரு. கில்லர்ஜி அவர்கள்
திரு. ரிச்சர்ட் ஸ்டீவன் அவர்கள்

பிற மொழிகளில் மீசையின் பெயர்
 (Tamil) மீசை
मूछ (Hindi) மூஜ்
మీసం (Telugu) மீசம்
മീശ (Malayalam) மீச
ಮೀಸೆ (Kannada) மீசே
(Arabic) ஸினப்شنـــب
(Sri Lanka) ரவுலே
Bigote (Philippine) பிகோட்டி
Mustache (English) முஸ்டாஜ்

தேவகோட்டை கில்லர்ஜி

சிவாதாமஸ்அலி-
என்னங்கையா... இது பழனி சித்த வைத்தியசாலை மாதிரி இருக்கு.

Chivas Regal சிவசம்போ-
பள்ளிக்கூடத்துல சேர்க்கும் பொழுது என்ன ஜாதினு கேட்டுப்புட்டு மறுநாள் ஜாதிகள் இல்லையடி பாப்பானு பாடம் நடத்துன கதைதான்.

சாம்பசிவம்-
குடிகார மட்டையா இருந்தாலும் கேள்வி நல்லாத்தான் கேட்கிறே...