இந்தப்பதிவுக்கு
முதன் முதலாக வருபவர்கள் இதன் தொடர்பான கீழ்காணும் பதிவுகளை படித்த பிறகு தொடர்ந்தால்
பதிவின் காரணங்கள் விளங்கும் இதில் கொக்கி போட்டு தொடர் பதிவாக்கிய அன்பின் ஜி
குவைத் மன்னர் திரு.
துரை செல்வராஜூ அவர்களுக்கு
நன்றி
பக்கத்தில் வந்து நின்ற திருமுருகன் டிரான்ஸ் போர்ட்டில் மொக்கைராசுவை
மந்தக்கட்டியும் சடையாண்டியும் மெதுவாக ஏற்றினார்கள் இவர்களின் சூழலை கண்ட நல்ல
மனம் படைத்த இருவர் இருக்கையை காலி செய்து கொடுத்தார்கள் நடத்துனர் வரவும் சங்ககிரி மூணு என்று டிக்கெட்
எடுத்தான் சடையாண்டி.
தூரத்தில் தன் கணவன் மொக்கைராசுவை கைத்தாங்களாக கொண்டு வரவும் பதறியடித்து ஓடி
வந்தாள் மொக்கையின் மனைவி மொடிச்சியம்மாள்.
அட நாசமாப் போறவங்களா... எம் புருஷனை தெனம் தண்ணியடிக்க வச்சு இப்படி
குடும்பத்தைக் கெடுக்குறீங்களே... அறிவு இருக்கா ? நீங்க
நல்லாயிருப்பியளா...
கீழே குனிந்து மண்ணை வாரி இறைத்தாள் மண் மூவர் முகத்திலும் அடிக்க...
மந்தக்கட்டியும், சடையும் மொக்கையை விட்டு விட்டு விஜயகாந்த் மாதிரி ப்தூ...
ப்தூ.. என்றனர் சட்டென கீழே விழுந்தான் மொக்கை.
இஞ்சே பாருத்தா.. ஒம் புருஷனை நாங்க ஒண்ணுஞ் செய்யலை..
ஒண்ணுஞ் செய்யாமே... எங்கே கூட்டிப்போயி இப்படி தூக்கிட்டு வாறீயே...
சொன்னவள் புருஷன் எங்கோ பார்த்துக்கொண்டு கிடக்க... வீட்டுக்குள் ஓடி சருவப்
பானையை தூக்கி வந்து தண்ணீரை தலையில் ஊற்றினாள்... அப்பொழுதும் சவளைப் புள்ளையைப்
போலவே கிடந்தான்....
பாவி பரப்பாங்கே... தெனம் வந்து உயிரை எடுக்குறாங்கே...
இஞ்சே பாருத்தா மரியாதையா... பேசு.
ஒனக்கு என்ன ? மரியாதை வேண்டிக்கிடக்கு..
நாங்க சடையங்காடு வரைக்கும் போனோம் அங்கே மயங்கி விழுந்துட்டான்.
அங்கே எதுக்கு ? புடுங்குறதுக்கா போனீங்கே.... எம் புருஷனை
எதுக்கு ? கூட்டிப் போறீங்கே... இனிமே இந்த
வீட்டுப்பக்கம் வந்தீங்க.. வெளக்கமாத்தாளை அடிப்பேன். தூ....... (பீப் போட்டுக்கொள்ளவும்) மயங்களா...
ஏதோ வாயெடுத்த மந்தக்கட்டியை கையைப்பிடித்து அழுத்தி கண்ணால் சாடை காட்டிய சடை
இழுத்து வந்து...
என்னபா
நீ அவதான் பேசுறானா... நீயும் பதில் சொல்லிக்கிட்டு இருக்கே...
அதுக்காக... மரியாதையில்லாமே.. பேசுறா.. அறிவு இருக்கானு கேட்கிறா... இளையராஜா
மாதிரி....
விடப்பா
நமக்கு எவன்தான் மரியாதை கொடுத்தான்... இவ மட்டும் கொடுத்துடப்போறா... எல்லாம் (கில்லர்ஜி) நம்ம தலையில எழுதுனது போலதான் நடக்கும் எதையும் வெளியே சொல்ல
முடியுமா ? திருடனுக்கு
தேள் கொட்டுன கதையா போச்சுப்பா... வா... வா... ஒரு வாரத்துக்கு யேஞ் சகலை
வீட்டுக்கு தேவகோட்டை நாடி போயிட்டு பெரச்சனை ஓஞ்சதும் வருவோம்பா...
வந்ததிலிருந்து... தனது கணவன் மொக்கைராசு அப்படியே வெறித்த பார்வையுடன்
இருப்பதால் சந்தேகித்த மொடிச்சியம்மாள் அடுத்த தெரு பூசாரி புல்லாலங்கடியிடம்
விபூதி வாங்கி வந்து பூசி விட்டாள் நாட்கள் 2 கடந்தும் இதே நிலை நீடிக்க... பக்கத்து தெரு நல்லவர் ஒருவர் வந்து தனக்குத்
தெரிந்த பூசாரி உலகநாதன் இருக்கின்றார் என்று சொல்லியனுப்ப.... டாக்ஸி ஒன்றை
அமர்த்தி மொக்கையை கிடத்தி துணைக்கு தனது தம்பி வடுகமுத்துவை கூட்டிக்கொண்டு
உசிலம்பட்டி போனாள் மொடிச்சியம்மாள்.
உசிலம்பட்டியில் பூசாரி உலகநாதன் உடுக்கையுடன் தெய்வீகமாக காணப்பட்டார் அவரின்
காலைத் தொட்டு வணங்கிய மொடிச்சிய.ம்மாளும், வடுகமுத்துவும் 2 பேர் சடையங்காடு கூட்டிப்போனதும், அங்கு
மயங்கி விழுந்து விட்டதாகவும் எல்லாம் விபரமாக சொன்னாள்.
நிதானமாக கேட்ட பூசாரி கொலைதெய்வத்தை SORRY குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு கண்களை மூடி
சோவியை குலுக்கிப் போட்டார்...
கீழே மல்லாந்து விழுந்த சோவிகள் எத்தனை என்று கேட்டார் கோபமாக... வடுகமுத்து பயந்து
நடுங்கி உடனே எண்ணி 7 சாமி என்றான்.
ஹா...ஹா..ஹ்..ஹா... அவரது சிரிப்பைக் கேட்டதும் சிறிது தூரத்தில் Waiting List டில் உட்கார்ந்து இருந்த 13 பேரும் கண்ணத்தில் போட்டுக் கொண்டார்கள்.
திடீரென கத்தினார் பூசாரி...
அடியே... சடையங்காட்டு சண்டாளி எதுக்காக... என்னோட குழந்தை மேலே பாஞ்சே.. ? சொல்லு உனக்கு வேண்டியது... என்ன ?
...........................................
முடியாது உனக்கு காவு தர முடியாது... இப்போ போறியா... ? இல்லை சவுக்காலே...
அடிக்கவா ?
.....................
என்ன ? போகமாட்டியா ?
சொன்னவர் சட்டென பக்கத்தில் கிடந்த சாட்டையை எடுத்து மொக்கைராசுவின்
தொடைப்பாகத்தில் விட்டு விளாச... ஏழெட்டு அடி விழுந்ததும் மொக்கைக்கு லேசாக உடல்
அசைந்தது....
போ... போ... போ.... சண்டாளி...
விபூதியை எடுத்து மொக்கையின் முகத்தில் ஊதினார்... தலையும் முகமும் விபூதியால்
மூடிய மொக்கையைப் பார்த்த மொடிச்சியம்மாளுக்கு தனது கணவன் சைத்தானைப்போல தோன்ற
சிறிது நடுங்கினாள்...
ம்.. கூட்டிட்டுப் போங்க... இந்த எழுமிச்சம் பழத்தை வீட்டு வாசல்ல கட்டு எந்த
தீயசக்திகளும் அண்டாது...
மீண்டும் பூசாரியின் காலில் விழுந்து வடுகமுத்தும், மொடிச்சியம்மாளும் விபூசி
பூசிக்கொண்டு தட்சிணையாக 501 ரூபாய் தட்டில் வெற்றிலை
பாக்குடன் வைத்துக் கொடுத்து விட்டு டாக்ஸில் மொக்கையை உட்கார வைத்து சங்ககிரிக்கு
திரும்பினார்கள்.
மறுநாள் மிரண்டு கால் நீட்டி உட்கார்ந்திருந்த மொக்கையின் சவுக்கடி வாங்கி
சிவந்து போன தொடையில் வெண்ணீரால் ஒற்றி எடுத்துக்கொண்டு கூரையில் தொங்கி நின்று
கொண்டு ‘’யாமிருக்க பயமேன்’’ என்று சொன்ன முருகனை
மனதுக்குள் இந்த வருசம் உன் வாசலுக்கு பாதயாத்திரை வர்றேன் என்று வேண்டிக் கொண்டாள்
மொடிச்சியம்மாள்.
நட்புகளே நமது நல்லரசு ஆட்சியின் மகிமையால் குடியால் இந்த நிலைக்கு வந்த
மொக்கைராசு விரைவில் பூரண நலம் பெற்று குடியை மறந்து இதுவரை குழந்தைச் செல்வம்
இல்லாத மொடிச்சியம்மாளுடன் 6 குழந்தைகளாவது நலமுடன் பெற்று சந்தோஷமாய் பல்லாண்டு வாழ வேண்டி நானும் எனது நண்பர்கள்
திரு,
பகவான்ஜி அவர்களும் திரு.
வலிப்போக்கன் அவர்களும் குன்னக்குடிக்கு அன்னக்காவடி எடுப்பதாக நேர்த்திக்கடன் வைத்துள்ள
எங்களை வாழ்த்துவீராக...
குறிப்பு – எனது மினரல் வாட்டர் பதிவுக்கு வந்து கருத்துரையில் கொக்கி போட்டு அதன்
காரணமாய் தொடராக 9 பதிவுகள் எழுதக் காரணமாய் இருந்த அன்பின் ஜி குவைத் மன்னர்
திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி சொல்ல உமக்கு வார்த்தை
எமக்கு என்று கூறி விடை பெறுகிறேன்.
அன்புடன் – கில்லர்ஜி.
முற்றியது (மொக்கைராசுக்கு பைத்தியம் அல்ல) பதிவு.
காணொளி