தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, மே 30, 2015

அந்த நாள்.

 30.05.2001
என்னவளே...
என்னை விட்டும், இந்த மண்ணை விட்டும் நமது பொக்கிஷங்களை விட்டும், விண்ணுக்கு போகிறேன் என்று மண்ணுக்குள் போய் பதிநான்கை கடந்து பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவளே... பதினாறாம் ஆண்டைக்காண இந்த பதியுமுண்டோ ? யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் ? சம்மதமே... விதியின் சதியால் நீ விண்ணிலும், நான் மண்ணிலும், ஆயினும் நீ என்னுள், நமது பொக்கிஷங்கள் எனது கண்ணுள் நானும் உன்னைப்போல் இந்த மண்ணை விட்டு விண்ணுக்கு வரும் நாள்வரை... அந்நாள் நிச்சயம் எமக்கு பொன்நாளே, பொன்மகளே...
 
என் நெஞ்சமெல்லாம் நீயிருக்க,
உன் நெஞ்சுக்குள்ளும் நானிருப்பேன்
கண்ணுக்குள்ளே வாழ்ந்திருப்போம்
என்றாயே... என்னழகே...

பக்கத்திலே, நீ இருந்தால்
துக்கம் இல்லை துன்பமில்லை
துணையாக தூணாக நீயிருக்க
என்றாயே... எளியவளே...

மீசையென்னை குத்துதென்றே
மீட்டி விடுவாயடி மீசைதன்னை
மீளாத்துயரில் என்னை தள்ளிவிட்ட
மீசையின்று தாடியாகி போனதடி

பசுமையான நினைவுகளை பகிர்ந்து
பேசிக் களித்திருப்போம் கள்ளழகா
குசும்புக்கார குறுகுறுத்த மச்சானே
என குறள் கொடுத்தாய் குரலாளே...

துபாய்க்கு பொருள்தேடி வந்தவனை
தூரமாக போய் விட்டாய் என்றவளே
திரும்பாத தூரத்துக்கு நீ மட்டுமே
போனதேன்டி பொன்மயிலே...

தூக்கத்திலே நீ இருந்து... துக்கத்திலே
என்னை ஆழ்த்தி நீங்காத துயரத்துக்கு
தூங்காத நினைவுகளை கண்ணுக்கு
கொடுத்தாயே... கொம்புத்தேனே...

பத்து மாதம் சுமந்தெடுத்த பனிமலர்
பொக்கிஷத்தை கொடுத்துச் சென்றாய்
நீ எனக்கு பார்த்துக் கொள்ளச்சொல்லி
என்னை பதற விட்டாய்... பாதகத்தி...

நான் வரும் நேரம் எது நானறியேன்
நன்மகளே கெட்டகாலம் என்றுரைப்பர்
கேடுகெட்ட மானிடரே நல்லகாலமென
நானுரைப்பேன் எமக்கும் வரும் அந்த நாளை.
காணொளி.
அன்பு நெஞ்சங்களே என்னவளுக்கு நான் எழுதிய மௌனமொழி கவிதையை படிக்காதவர்கள் மேற்கண்ட இணைப்பை சொடுக்கி படிக்க வேண்டுகிறேன்.
கில்லர்ஜி.

புதன், மே 27, 2015

விதி எண் 358/2 கீழ்101 பிரிவு.

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். என்கிறார்களே.... இன்றைய காலத்திற்கு இது சாத்தியமா ? இல்லை என்பதே எமது வாதம், அரசியல் தலைவன் இறந்து விட்டார், என்பதற்காக தொண்டர்கள் கடையை அடித்து நொறுக்குகிறார்கள், பேரூந்துகளுக்கு தீ வைக்கிறார்கள், பொது சொத்துகளை சேதம் செய்கிறார்கள். 
(ஒருநிமிஷம், இந்த இடத்தில்தான் எனக்கொரு சந்தேகம் அரசியல்வாதி அப்பல்லோ போன்ற ஹாஸ்பிட்டல்களில் உயரிய மருத்துவர்களால் உயர்தர சிகிச்சை கொடுக்கப்பட்டு வாழ்ந்த 96 வயது வாழ்க்கையில் 120 கோடி ரூபாய் அசையும் சொத்தும், 1350 கோடி ரூபாய் அசையா சொத்தும் சேர்த்து ''அனைத்தும்'' அனுபவித்து1008 வியாதிகளையும் பெற்றதால், இறைவன் அவரது ACCOUNTசை முடித்து அழைத்துக் கொள்கிறார், ஆக விதி எண் 358/2 கீழ்101 பிரிவின்படி இதற்கும் பொது மக்களுக்கும் தொடர்பு இல்லை என்பது ஊர்ஜிதமாகிறது ஆனால் இந்த அரசியல் தொண்டர்கள் இறைவன் இருக்கும் இடத்தை தாக்காமல் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த வகையில் நியாயம் ? எனக்கு இது விபரம் தெரிந்த நாளிலிருந்து குழப்பமாகவே இருக்கிறது)
சரி, இந்த வகையான பிரச்சனைகளை நீதியரசர்கள் எந்த வகையில் தீர்த்தார்கள் ? இதுவரை தீர்த்திருக்கிறார்களா ? அல்லது தீர்க்கத்தான் முடியுமா ? தன்னை தீர்த்து விடுவார்கள், என்பது தெரியாதா ? தீர்ப்பெழுதும் நீதிமான்களுக்கு..... சாதாரண குடிமகன் இந்த அநியாயங்களில் ஈடுபட்டவர்களை நீதிமன்றங்களில் சுட்டிக்காட்ட முடியுமா ? இல்லை நடுத்தரவர்க்கம்தான் செய்ய முடியுமா ? முடியாது, முடியாது, கௌரவமாக வாழமுடியாது காரணம் என்ன ?
இது மக்களாட்சியாம், அப்படின்னு அரசியல்வாதிகள் சொல்லக்கேள்வி.

இந்த வழக்குகள் நாளடைவில் கிடப்பில் கிடந்து இந்திய அரசு வழக்குகளின் PENDING கணக்குகளில் போய்சேர்ந்து விடுகிறது, இதையெல்லாம் நிரூபிக்க முடியாதாம் காரணம் ஆதாரம் இல்லையாம். என்னங்கையா இது ? 
வயித்துல அடிச்சேன் கண்ணு போச்சுனு சொன்ன கதையா, இருக்கு. 
MEDIA காரங்க எடுக்கிறாங்களே... சுடச்சுட காணொளி இதையெல்லாம் என்ன, EXPIATION லவைக்க போறாங்களா ? எந்த சேனலில் போனாலும் கட்சியில் கோஷ்டி மோதல், ஆளுங்கட்சி தொண்டர்களும், எதிர்க்கட்சி தொண்டர்களும் மோதல், பஸ்களுக்கு தீவைப்பு, கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன, என செய்திகளில் சொல்வது கிடக்கட்டும், அழகாக காணொளி எடுத்து காண்பிக்கிறார்கள், அதில் வரும் நபர்கள் அழகாகவும் இருக்கிறார்கள் ஏன் இதெல்லாம் ஆதாரம் கிடையாதா ? நாக்கு உள்ள மனுஷன் பொய் சொல்வான் காணொளி பொய் சொல்லுமா ? காணொளியில்  பொய் இருக்கிறதா ? என்பதைக்கூட கண்டு பிடித்திடலாமே.. நீதித்துறையே உங்களைச் சொல்லி குற்றம் இல்லை, உங்களை யாரு கேட்க முடியும் நீங்கள் நினைத்தால் ? வழக்குகளை உடனே முடிக்கலாம் நீங்கள் நினைத்தால் வழக்குகளை மூடி வைக்கலாம், எல்லாம் Yours Choice Because you are POWER Full man without me.(Me, Meaning of MAKKAL)

CHIVAS REGAL சிவசம்போ-
சும்மாவே, கோயில் குளம்னு எங்கே பார்த்தாலும்.... குண்டு வெடிக்குது இதுல இந்த ஆளுவேற இறைவனைப்போயி தாக்கச் சொல்றாரு, கலிகாலமாப் போச்சு, நம்ம சொன்னா குடிகாரப்பயன்னு சொல்லுவாங்கே..

திங்கள், மே 25, 2015

நகை(you)ங்கள்.


மன்னர் ஏன் கோபமாக இருக்கிறார் ?
போருக்கு வரமுடியாத சூழ்நிலையை விளக்கி தூது அனுப்பிய புறா தனது ஜோடிப்புறாவுடன் ஓடிவிட்டதாம்.

மன்னர் வெளியில் கிளம்பும்போது மாறுவேஷத்தில் செல்கிறாரே... கள்வர்களை பிடிக்கவா ?
அட நீ வேற சின்ன வீட்டுக்கு போகும் போது யாரும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான்.

மன்னர் ஏன் புலவரை சிறையில் அடைத்து விட்டார் ?
மன்னரை புகழ்ந்து கவி எழுதிய புலவர் வெற்றி வீரன் என்பதற்க்கு பதில் வெட்டி வீரன் அப்படினு எழுதிட்டாராம்.

மன்னர் ஏன் கவலையில் இருக்கிறார் ?
மன்னருக்கு வெளியில் ஒரு சின்னவீடு இருப்பது தெரிந்த மகாராணியார் தனக்கும் அதுபோல் ஒரு வீடு வேண்டுமென்றாராம்.

மன்னர் காவல் வீரனை ஏன் தூக்கில் போடச் சொன்னார் ?
மன்னர் வரும்போது ’’மன்னாதி மன்னரே’’ எனச்சொல்லாமல், ’’மண்ணாதி மண்ணரே’’னு அழுத்தி சொல்லிட்டானாம்.

மன்னர் போருக்கு சென்று வெற்றியோடு வரும்போது மகாராணி சந்தோஷமாக வரவேற்க வில்லையே ஏன் ?
மகாராணியார் நினைத்தபடி நடக்க வில்லையாம்.

மன்னர் ஏன் வேற்று நாட்டு ஒற்றனின் வாயில் அமிலத்தை ஊற்றச்சொன்னார் ?
’’அறப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லாமல் ’’அக்கப்போருக்கு வாருங்கள்’’னு சொல்லிட்டானாம்.

மன்னர் அவைப்புலவரின் நாக்கை வெட்டச் சொல்லி விட்டாராமே ?
கவி பாடும்போது, ’’மண்ணை ஆளும் மன்னா’’னு சொல்லாமல் ’’மண்ணில் வீழும் மன்னா’’னு பாடிட்டாராம்.

மன்னர் ஏன் ஓவியரின் கையை வெட்டச் சொன்னார் ?
மகாராணிக்கு வைத்த வரவேற்பு பலகையில் மகாராணி கோமளவள்ளியே வருகனு எழுதாமல் மகாராணி கோமணவள்ளியே வருகனு எழுதிட்டானாம்.

மன்னர் ஏன் அந்தப்புரத்தை, ’’அந்த’’ப்புறம்னு சொல்றார் ?
அந்தப்புரம் என்றால் அரண்மனைக்கு உள்புறம் ’’அந்த’’ப்புறம் என்றால் வெளிப்புறம் அதாவது சின்னவீடு.

சனி, மே 23, 2015

Case & Cash

கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம், கழுதை, குதிரைனு கத்தரிக்காய்னு சொல்றீங்களே ஏண்டா இப்படி இந்தியாவின் மானத்தை வாங்குறீங்க ? நாளைய தலைமுறையினருக்கு நீங்கள் செய்யும் கைமாறு என்னடா ? உங்களை வெளக்கமாத்தாளை அடிச்சாத்தான் என்னடா ? ஏண்டா பேதியிலே போயிருவியலா... எத்தனை பெரிய மனுஷசங்கே இருக்கீங்க... உங்கள்ல ஒருத்தனுக்குகூட இந்தியக் கலாச்சார உணர்வு இல்லையாடா ? 

ஒரு பக்கம் முத்தம் கொடுக்குறான், இன்னொரு பக்கம் மணமேடைக்கு போகுமுன் குத்தாட்டம், சினிமாக்காரன் சமூகத்தை சீரழிக்கிறான்னு சொல்றியலடா... இதுக்கு பேரென்னடா ? அமெரிக்க கலாச்சாரத்தை குறை சொல்ல உங்களுக்கு அருகதை இருக்காடா ? எவனாவது ஒருத்தனுக்காவது இதை தடுக்கனும்னு தோணலையாடா ? கைதட்டி ஆரவாரம் செய்யிறியலடா... உங்க கையிலே கட்டை முளைக்க, வெட்கமே இல்லையாடா ? மிருகங்கள் திறந்த வெளியில் புணைவதற்கும் இதற்கும் என்னடா வித்தியாசம் போங்கடா துணிமணியை அவித்துப் போட்டுப்புட்டு ஆதிகால மனுஷன்போல வாழுங்கடா  வெட்டிச்செலவு எதுக்குடா ?

மனுஷனுக்கு ஆறறிவுனு சொன்ன முட்டாப்பய யாருடா ? கேவலத்துக்கு பொறந்தவங்களா எங்கோவத்தை கெளப்பி பாவத்தை சேர்க்காதீங்கடா ? அரசாங்கம்கூட பண்பாட்டுக்கழகம் அப்படினு வச்சு இருக்கீங்களே... இவங்கெளை கலாச்சாரக் குற்றவாளி அப்படினு கேஸ் போட்டு உள்ளே தள்ளக் கூடாதாடா ? இல்லை நீங்களும் கேஷ் வாங்கிட்டீங்களாடா ?

நண்பர்களே... இதைப் படிக்கும்போது திரைப்பட நடிகர் திரு. விவேக் அவர்கள் பாணியில் படிப்பதுபோல படிக்கவும் நேற்று அவர்தான் போன் செய்து இந்தப்பதிவைப் போடுங்க கில்லர்ஜி என்று சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு – என் மனதில் என் அறிவுக்கு நியாயமாக பட்டதை ஒளிவு மறைவின்றி எழுதுவேன், அதேநேரம் தனிப்பட்ட மனிதர்களின் மனதை துளியளவும் காயப்படுத்த மாட்டேன் என்பதும் உறுதி இதில் யாருக்கும் பயப்படமாட்டேன் எனது கடைசி மூச்சுவரை.... எனது மன உணர்வுகளை மிகச்சரியாக புரிந்து கொண்ட முனைவர் திரு. B. ஜம்புலிங்கம் அவர்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கத்துடன் நன்றியை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன்.

காணொளி

வியாழன், மே 21, 2015

அறிவுக்கண்.

 
நமஸ்காரம் அம்மா.
நமஸ்காரம் ஐயா பொண்ணு என்ன ? சொல்றா...
நீங்களே கேளுங்க அம்மா.
மேடம் ரெண்டாவது பெயிலாயிட்டேன் ஒண்ணுமே புரியலை வாழ்க்கை இருட்டாயிடுமோனு பயமாக இருக்கு.
பயப்பட இதுல என்னம்மா ? இருக்கு பெயிலானால் என்ன ? தேவகோட்டை மீனாம்பாள் பையன் கில்லர்ஜி இல்லை இவணும் ஒண்ணாவதுலேயே மூணு வருஷம் பெயிலுதான் ஆனாலும் புண்ணை நல்லூர் அமிலம் இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் போர்ஜரி மேனேஜ்மெண்ட்ல சேர்ந்து M.Ba. RSW. OPS Tec. KSRTC. Spam. படிச்சான் இங்கேதான் பெயிலாப்போன மண்ணுகளைக்கூட பொன்னாக மாற்றும் திறமையான ஆசிரியர்கள் இருக்காங்க கோட்டு ஸூட்டுப் போட்டு புண்ணை நல்லூர் அமிலம் இவணை எப்படி ? மாத்திருச்சு பார்த்தியா ? இங்கு படிக்கிறதுக்காக விழுந்து விழுந்து படிக்க வேண்டாம் சும்மா வந்துட்டுப்போனால் போதும் எக்ஸாமெல்லாம் எழுத வேண்டிய அவசியமே இல்லை இவண் புண்ணை நல்லூர் அமிலத்திலிருந்து வெளியே வந்து1 ½ மாசந்தான் ஆச்சு இப்பவே அபுதாபியிலே காலையிலே எந்திருச்சு 8 மணிக்கு டூட்டிக்குப் போறதுக்குள்ளே குழந்தைகளை கடத்தி பார்ட்-டைமா மட்டும் மாசத்துக்கு13 ஆயிரம் அமெரிக்கன் டோலர் சம்பாரிக்கிறான் அதுக்குப்பிறகு இவணை வேலைக்கு கூட்டிட்டுப்போக ஃப்ளாட்டு வாசலிலேயே ஒருநாளைக்கு கப்பல் மறுநாளைக்கு ஃப்ளைட் எப்படி ? வாழ்க்கை பார்த்தியா ? அதுபோல ஸ்விச்சர்லாண்ட் பேங்க் அக்கவுண்ட்ல சம்பளம் விழுந்துடும் கையில காசும், வாயில தோசையும் கொடுக்குது.
என் அறிவுக்கண்ணை திறந்திட்டீங்கம்மா ரொம்ப நன்றி.
இதைப்படிக்கிற உங்களுக்கும் சொல்றேன் இப்பவே உங்க குழந்தைகளையும் வீட்டை வித்தாவது பணத்தைக்கட்டி புண்ணை நல்லூர் அமிலத்துல சேர்த்து விடுங்க அதுக்குப் பிறகு உங்களோட தலையெழுத்தை பகவான்ஜி பார்த்துக்கிருவார்.

சாம்பசிவம்-
ஏண்டி, குசலாம்பா வீட்டுப்பத்திரத்தை எடுத்தாடி நம்ம சேட்டு கடைக்குப் போயிட்டு வாறேன்.
சிவாதாமஸ்அலி-
மொட்டையடிச்சவனைப் பார்த்தா வீட்டை அடகு வச்சவனுக்கு கடைசியிலே அடிக்கிறது மா3 இருக்கே.
CHIVAS REGAL சிவசம்போ-
கேட்கிறவன் கேனயனா இருந்தா ? எலி ஹெலிகாப்ட்டர் ஓட்டும்னு சொல்லுவாளுக... இந்த எழவுக்குத்தான் நான் புள்ளையே பெத்துக்கிறலே காலக்கெரகம் வேறென்ன ?

காண்-ஒளி.

குறிப்பு – ஐயா திரு. ஜியெம்பி அவர்களுக்கு விளம்பரங்களைப்பற்றி பதிவு போட்டதற்காக மன்னிக்கவும்.

செவ்வாய், மே 19, 2015

வாழ்க்கை

எனக்கு, நல்ல வாழ்க்கை கொடுத்த இறைவா ! உனக்கு நன்றி.

நல்ல இதயம் படைத்த வலைப்பூ நண்பர்களை கொடுத்தாய் நன்றி, நல்ல மனைவியை கொடுத்தாய் நன்றி, மாமியார் வீட்டில் நான்கு கொளுந்தியாள்களை கொடுத்திருந்தாய் நன்றி, நல்ல படிப்பறிவை கொடுத்திருந்தாய் நன்றி, அதனால் நல்ல வேலை கிடைக்க வைத்தாய் நன்றி, நல்ல வருமானத்தை கொடுத்தாய் நன்றி, நல்லவீடு கட்ட வைத்தாய் நன்றி, வீடு நிறைய ஆறு குழந்தைகளை கொடுத்தாய் நன்றி, வீடு முழுவதும் ஆடம்பரப் பொருட்கள் உன் அருளால் நன்றி, நல்ல CAR வாங்கும் நிலையை கொடுத்தாய் நன்றி, வேலை காரணமாய் வாரத்தில் மூன்று முறை விமானத்தில் பறக்க வைத்தாய் நன்றி, அமெரிக்கர்களுடன் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் சந்தர்பத்தை கொடுத்தாய் நன்றி, SWISS ஸில் ACCOUNT தொடங்கும் அளவுக்கு உயர்த்தி விட்டாய் நன்றி, This Year INDIA TOP 10 னில் ஒருவராய் வர வைத்தாய் நன்றி, பத்திரிக்கைகளில், சேனல்களில் தினமும் எனது புகைப்படம் அதற்கும் நன்றி, அரசியல் பிரமுகர்களை சுலபமாக காணும் அதிகாரத்தை கொடுத்தாய் நன்றி, எனக்கு நீண்ட ஆயுளை கொடுத்து கடைசி காலம்வரை இப்படியே சந்தோஷமாய் வாழவைப்பாய் என்ற நம்பிக்கையில் அதற்கும் ஒரு நன்றி. ஆனால் இப்படியே போய்க் கொண்டிருக்கும்போது... 04.45 am க்கு மூஞ்சியில் மாடு மூத்திரத்தை அடிக்க வைத்து அய்யய்யோ என பதறியடித்து, நேரமாகி விட்டதோ ? என சொம்பை எடுத்து வந்து பால் கறக்கும் போதுதான் ச்சே... இத்தனை நேரம் கண்டதெல்லாம் கனவா ! என வெறுப்பேற்றி விட்டாயடா ! சண்டாளா ! எனக்கு நல்ல படிப்பை கொடுத்திருந்தால் என் வாழ்க்கை இப்படியாகி இருக்குமா ? தினம் இப்படி மாட்டோட, மாரடிக்க வைத்து விட்டாயே !

உனக்கு எப்படியடா நான் நன்றி சொல்ல முடியும் ? 

காணொளி

சனி, மே 16, 2015

தெருவினையாடல்

டொங்கு நாட்டு மன்னன் கங்குதேவனை வாழ்த்தி பாடி பரிசுகள் பெற்று செல்வோமென கருதி புலவர் கருமி முத்தன் வந்தான், இளவயது புலவனென்றாலும், வார்த்தைகளில் முதுமையே ஓங்கி நிற்கும் இதனால் இவணுக்கு ’’முதுவாங்கி புலவன்’’ என்ற பெயரும் உண்டு.

மன்னரே... தங்களை புகழ்ந்து கவியொன்று கொண்டு வந்திருக்கிறேன்.
புத்துணர்ச்சி தரும்... புரட்சி புலவரே, புதுமை புத்தனே, புலம்புங்கள் புதுக்கவியை புலங்கட்டும், புதிராய், புரளட்டும் இந்த புவியெங்கும்....
நீர் வாழ்க ! மன்னா  
நீரே எம் அண்ணா  
எதிரியை வஞ்சம்
தீர்க்காமல் லஞ்சம்
கொடுத்து தஞ்சம்
அடைந்தாய்...
மக்கள் நெஞ்சம்
அடைத்தாய்...
நீர் வாழ்க ! மன்னா  
நீரே எம் அண்ணா  
ஆஹா, அற்புதம் முதுவாங்கி புலவா ! வா ! வாங்கிகொள் உமது பரிசை.
மன்னரே, சற்றுப்பொருங்கள்.
யாரது ஓ... பக்கீரரோ தாங்களும் இங்குதான் இருக்கின்றீர்களா ? கவியில் மயங்கி விட்டேன், ஆதலால் தங்களை காண மறந்து விட்டேன் சொல்லுங்கள் பக்கியாரே...
மன்னிக்க வேண்டும் மன்னா, இந்த கருமியிடம் நான் சற்று உரையாடிய பிறகு பரிசை கொடுக்கலாமே...
காரணம் என்னவோ பக்கி ?
இந்தக் கவியில் பிழை இருக்கிறது.
அப்படியா ? ஹும் தானும் படுப்பதில்லை, தள்ளியும் படுப்பதில்லை... நல்லது தொடங்கட்டும் உமது உரையாடல்கள்.
கருமியே, இந்தக்கவியை எழுதியது....
பால்பாயிண்டு பேனா கொண்டு.
அது எமக்கும் தெரியும், யார் எழுதியது ?
எமது புதல்வன் தமிழ்வாணன்.
எழுதிய தங்களது புதல்வன் தமிழ்வாணன் வராமல் தாங்கள் வருவது ஏன் ?
அவனுக்கு காலில் முள் குத்தி விட்டது நடக்க முடியவில்லை, ஆகவே யாம் வந்தோம்.
கவியின் பொருளை நான் எப்படி  தெரிந்து கொள்வது ?
எமக்குத்தான் தெரியுமே...
எழுதிய உமது மகன் தமிழ்வாணனுக்கல்லவா ! பொருள் தெரியும்.
புலவரே, எழுதியதுதான் புதல்வன், கவிதை என்னுடையது.
நீர் எழுதாமல், உமது புதல்வன் எழுதக்காரணம் ?
எமக்கு கை விரலில் நெகச்சுத்தி ஆகவே எமது புதல்வனை எழுதச் சொன்னோம்.
மகனுக்கு காலில் முள்குத்தி, தந்தைக்கு கையில் நெகச்சுத்தி, ஹும் நன்றாக இருக்கிறது உமது வேஷம்.
யார் வேஷமிடுவது ? அறுபது வயதான நீர், பணிப்பெண்கள் அருகில் நின்று சாமரம் வீசவேண்டும் என்பதற்காக ! வெண்தாடிக்கு கருப்பு டை அடிக்கும் நீரே வேஷதாரி.
புலவர்களே... Don’t talk about personal life கவிதைக்கு வேண்டிய விசயங்களை குறித்து மட்டும் உரையாடுங்கள்.
மன்னியுங்கள் மன்னா, என்னை வேஷமிட்டாய் என்றதால் கோஷமிட்டேன்.
புலவரே, உமது கவியின் ‘’அடைத்தாய்’’ என்பதின் பொருள் என்ன ?
மக்களை தாயைப்போல் அடை + காத் = தாய் என்று பொருள், நம்மை ஆண்டாள் நமது ஆத்தாள், நம்மை காத்தாள் அதாவது... கில்லர்ஜியை போன்ற பாமரர்கள்கூட சொல்வார்களே ’’அம்மா’’ என்று அதைப்போல்.
இல்லவே இல்லை நீர் மன்னரை பெட்டைக்கோழி எனபொருள்பட எழுதியுள்ளீர்... அதாவது மன்னரை பொட்டைப்பயல் என்கிறாய்.
சிவ சிவா என்ன, கொடுமை இது எனது பொருளில் இருளா ?
பக்கீரா, புலவரை வேதனை படவிடாதீர்...  Mr.சிவா எனக்கு சோதனை கொடுத்து விடப்போகிறார்.
நல்லது மண்ணே, புலவரே, எமது மூன்று வினாக்களுக்கும் விடையளித்து விட்டு நீர் பரிசை பெறலாம்.
நானும் தயார்.
சுவைக்க முடியாத காரம் எதுவோ ?
உம்மைப் போன்றவர்களின் அகங்காரம்.
கொள்கை இல்லாத மதம் எது ?
சோம்பேறிகளின், தாமதம்.
ஓட்ட முடியாத கார் ?
உம்மைப்பற்றி நான் மன்னரிடம் கொடுக்கப்போகும் புகார்.
எம்மைப்பற்றி பெட்டிஷனா ? உம்மை பொட்டிப்பாம்பாய் அடக்கி விடுவேன்.
(திடீரென மன்னரின் SAMSUNG செல்லுக்கு அந்தப்புரத்திலிருந்து NOKIA வில் ‘’அந்த’’ அழைப்புக்கு அர்த்தமாய் செல்லிருந்து MISSED CALL வர)
யாரங்கே ? சந்தடி சாக்கில் என்னை மண்ணு என்றும், பொட்டைக்கோழி என்றும் இழிவாக சொல்லி என்னை பழி வாங்கியவர்களை பலி கொடுக்கும் நேரம் வந்து விட்டது, பெட்டியென்றும், பொட்டியென்றும், வெட்டியாக பேசி அவையின் பொன்னான நேரத்தை கட்டிப்போட்ட பக்கீரர், கருமி முத்தன் இருவரையும் ஜட்டியோடு முட்டியில் தட்டிக்கொண்டே... ஆபரேஷன் தியேட்டருக்கு இழுத்துப்போய் தலையை வெட்டி விடுமாறு உத்தரவிடுகிறேன். (உடன் புறப்பட்டார் ’’அந்த’’புரத்தை நோக்கி)

சாம்பசிவம்-
பக்கீரர், கருமி முத்தனைவிட மன்னர் கங்கு தேவன் புலவர் போலவே பேசுகிறாரே... மண்ணே என்று சொன்னதை கப்புனு புரிஞ்சுக்கிட்டாரே... கற்பூரப்புத்தியோ...

சிவாதாமஸ்அலி-
சினிமா காண முடியாத தியேட்டர் எது ?

CHIVAS REGAL சிவசம்போ-
ஆபரேஷன் தியேட்டர்.