தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2015

திரு (மண்) நாள்

30.08.2015

வயல் வெளியோரம் போகும் காற்றே...
என் வேதனையை கொஞ்சம் ஆற்றே...

பாதையோரம் விளையும் புல்லே...
என் பாவமென்ன நீயும் சொல்லே...

கண்ணுக்குள்ளே கண்ணாய் வந்தாள்
நெஞ்சுக்குள்ளே கனலைத் தந்தாள்

மீளாத் துயரில் என்னைத் தள்ளி
தூரப் போய் விட்டாயடி கள்ளி

எந்தன் நிலையை நீயும் கண்டோ
எனக்கும் ஒரு மாற்றம் உண்டோ

சதி செய்தது இறைவன் தானே
கதியற்று இப்படி நிற்பது நானே

காணவேண்டும் உன்னைக் கனியே
வாடுகின்றேன் நானும் தனியே

சதி என்று என்னிடம் வந்தாய்
பதியை விட்டு தீயில் வெந்தாய்

மீண்டும் நான் மட்டுமே உனக்கு
தவறுமோ என் மனக் கணக்கு

எனை அழைக்க வருவாய் என்றே
நானும் இங்கே தயாராய் இன்றே.
(30.08.1991)
இன்று எங்களது திருமண நாள் என்னவளுக்காக எமது வழக்கமான காணிக்கையாக இந்தக் கவிதையை அர்ப்பணிக்கின்றேன்.
கடைசிவரை.... உண்னவன்.


என்னவளுக்கு நான் எழுதிய கவிதையை படிக்காத நண்பர் – நண்பிகள் கீழே சொடுக்குக....

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015

திண்டுக்கோட்டை

தேவகல்லும், திண்டுக்கோட்டையும்.

அன்பு நண்பர்களே வணக்கம்...
திண்டுக்கோட்டை Sorry திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கி கைப்பேசியில் அழைத்தேன் யாரை என்று சொல்லவும் வேண்டுமா ? வேண்டாமே.... ஸ்கூட்டரில் வந்தார் அவரது வீட்டுக்கு அழைத்துப் போனார் அவரது கணினியில் எனது தளத்தை நான் சொல்லச் சொல்ல அழகாக செதுக்கினார் நிறைய சந்தேகங்களும், பல விடயங்களும் கேட்டுத் தீர்த்துக் கொண்டேன் மனிதர் ஒவ்வொன்றுக்கும் ஒரு ஃபைல் வைத்து இருக்கிறார் உடனடியாக அதை திறந்து இணைப்புக்கு கொண்டு வருகிறார் நான் தும்மினால்கூட அதற்கும் ஒரு ஃபைல் போட்டு வைத்திருப்பேன் இவர் என்னைவிடக் கூடுதலாக வைத்திருக்கின்றார் எல்லாவற்றையும் பொருமையாக சொல்லித் தந்தார் பல விசயங்களும் (பொறணி) பேசினோம்.


இடையில் புதுக்கோட்டை கலக்கல் மன்னன் கவிஞர் திரு. நா. முத்து நிலவன் அவர்களிடமிருந்து வலைச்சித்தருக்கு கைப்பேசி வந்தது பேசிவிட்டு என்னிடம் கொடுத்தார் கவிஞர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி
கில்லரே தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணமா ? 
உடன் நினைத்தேன் ஆஹா இந்த முறை இத்துடன் நிறுத்திக் கொள்வோம் இல்லையெனில் இவரது கண்ணே பட்டுவிடும் போல் தோன்றியது ஆகவே டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, குஜராத், ஹரியானா, மாண்டியா, பாலக்காடு (வில்லங்கத்தார்) ஊர்களில் உள்ள பதிவர்களை சந்திப்பதை நிறுத்தி விட்டு இவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் வெளிநாட்டில் வாழும் பதிவர்களை சந்திப்போம் யாரை சந்திக்கலாம் ? சரி வீட்டுக்குப் போய் ஆலோசிப்போம்.



பிறகு நண்பர் பகவான்ஜியை செல்லில் அழைத்தேன் டி.டி நான் பேசுகிறேன் என்று வாங்கி நான்தான் கில்லர்ஜி பேசுறேன் எனச்சொல்லி சுமார்  ¾ மணிநேரம் பேசிவிட்டு செல்லை அணைத்து என்னிடம் கொடுத்து விட்டார் இவ்வளவு நேரமும் என்னிடம் பேசியதாக பகவான்ஜியும் நினைத்துக் கொண்டார் பிறகு தில்லை அகத்தார் சகோ திருமதி. கீதா அவர்களிடம் பேசினோம் நண்பர் டி.டி ஒரு வேளையாக கீழே போய் விட்டு வந்தார் அவர் வருவதற்குள் அவரது கணினியில் எனது மகளிர் ஓட்டுனரில் (Pen Drive ர்) வைத்திருந்த காணொளியை வைத்து உடன்
என்ற சிறிய நகைச்சுவை பதிவை எழுதி வெளியிட்டேன் அதற்க்குள் மதிய உணவு தயார் அன்பின் மிகுதியால் வழக்கமான எனது அளவுக்கு மீறி சாப்பிட்டு...




மீண்டும் பேசிக்கொண்டு இருந்தோம் மாலை குடும்பத்தார்களிடம் விடை பெற்றேன் பிறகு நண்பர் டி.டி ஸ்கூட்டரில் ஏற்றி அங்கு விமான நிலையம் இல்லாத காரணத்தால் பேருந்து நிலையம் கொண்டு வந்து விட்டார் சந்தோஷமான இன்றைய தினம் திண்டுக்கலை விட்டு தி கிரேட் தேவகோட்டை நோக்கி புறப்பட்டேன்.

காண் - ஒளி

எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.

வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...

புதன், ஆகஸ்ட் 26, 2015

பேபி - பர்ஹானா



ஒருமுறை அபுதாபியில் எனது நண்பரின் மகள் பெயர் பர்ஹானா அது பிறந்து விபரம் தெரிந்த நாளிலிருந்து குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது என்னுடனேயே இருக்கும் தினம் வேலை முடிந்து வந்ததும் நான் நேரப்படி அவர்கள் இருக்கும் பில்டிங்குக்கு கீழே வந்து விடுவேன் நண்பரோ, சகோதரியோ குழந்தையை கொண்டு வந்து காரில் உட்கார வைத்து ஷீட் பெல்ட்டை மாட்டி விட்டு போய் விடுவார்கள்... பிறகு இரவு வந்துதான் குழந்தையை கொடுப்பேன் பலநேரங்களில் விடுறை நாட்களில் எனது ஆபீஸ் மீட்டிங்குகள் வெளிப்புற ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் அங்கும் கொண்டு போவேன், சில நேரங்களில் துபாய்கூட போய் வந்து விடுவேன் அந்த அளவுக்கு என்னுடன் பழகி விட்டது இதற்கு இன்னொரு காரணமும் உண்டு எனது மகனையோ, மகளையோ நான் தூக்கி வளர்க்கும் சந்தர்ப்பத்தை இறைவன் எனக்கு கொடுக்கவில்லை அந்த ஏக்கத்தின் பிரபலிப்பே இந்த மருமகளோடு இறைவன் என்னை பழக விட்டு விட்டான், என் அன்பு மகள் பலமுறை புகைப்படங்களை பார்த்து கேட்ட கேள்வி. 

இந்தக் குழந்தை எப்படிப்பா... உங்களைப் பார்த்து பயப்படாமல் உங்களோடு எல்லா இடத்திற்கும் வருகிறது ?



பேசப்பழகிய பொழுது என்னை மாமா என்று சொல்லத் தொடங்கி பிறகு ஒசாமா என்றாகி இன்று மீசை மாமா என்று தெளிவாகி விட்டேன் இப்பொழுது ஸ்கூல் போய்க்கொண்டு இருக்கிறது நன்றாக வாய்பேசும்.

ஒருமுறை பப்ளிக் கார்டனில் உட்கார்ந்து ஒளிந்து விளையாடிக் கொண்டு இருந்தேன் பேசத் தொடங்கிய பருவம் நான் புதரில் ஒளிந்து கொள்ள என்னைக் காணாமல் மாமா மாமா என்று அழத்தொடங்கி விட்டது அந்த பக்கமாக பாக்கிஸ்தானியர்கள் இதை கவனித்து விட்டார்கள் குழந்தை நல்ல சிவப்பு நிறமாக இருக்கும் அவர்கள் நினைத்தது இது யாரோ அரபி வீட்டுக் குழந்தையென... இதற்கு 4 காரணங்கள் உண்டு ஒன்று உடை அரபிக்குழந்தைகள் அணியும் ஜிகினா உடை, மற்றொன்று நல்ல சிவப்பு, அடுத்தது அரபு மொழியில் ‘’மாமா’’ என்றால் ‘’அம்மா’’ என்று அர்த்தம் கூடுதலாக எனது தோற்றம்  போதாதா குழப்பம் ?



அந்த இருவரும் குழந்தையை நெருங்க நான் சட்டென புதரை விட்டு வெளியே வந்து குழந்தையை தூக்கி விட்டேன் அந்த பாக்கிஸ்தானியரைக் கண்ட குழந்தை மேலும் அழ ஆரம்பித்தது காரணம் இருவருமே முகம் முழுவதும் நெஞ்சு வரை வளர்(த்)ந்த தாடி என்பது எனக்கு புரிந்தது ஆனால் அவர்கள் புரிந்து கொண்டது நானொரு பிள்ளை புடிக்கும் ‘’பூச்சாண்டி’’ அவர்கள் இந்தக் குழந்தை யாருடையது ? எனக்கேட்க, நான் உனக்கென்ன ? எனக்கேட்க, எனக்கும், பாக்கிஸ்தானியர்களுக்கும் வாக்கு வாதமாக, நான் எனது சகோதரியின் மகள் எனச்சொல்ல, கூட்டம் கூடி விட, கூட்டத்தை கண்ட குழந்தை மேலும் கதற ஆரம்பித்துவிட, குழந்தை ஏன் மாமா என அழுகிறது ? டேய் மாமா என்றால் எனது தமிழ் மொழியில் மாமாடா எந்த மாமா அம்மாதானே... ? டேய் மாமானா, மாமாடா அதாவது, அங்கிள்டா அவர்கள் வேறு ஆங்கிலில் பார்த்தார்கள் கூட்டத்தில் ஒரு பெண் வந்து குழந்தையை கேட்க, குழந்தை போகாததால், பாக்கிஸ்தானியர்கள் சொல்லி விட்டார்கள் இவன் ‘’பூச்சாண்டி’’ அல்ல ‘’மந்திரவாதி’’

அடப்பாவிகளா அப்பாவியை பூச்சாண்டினு சொன்னது மட்டுமில்லாமல், மந்திரவாதியா ? என்ன உலகமடா ? புரியா மடந்தைகள் நிறைந்த உலகம். ஒருவன் சொன்னான் போலீஸுக்கு கால் பண்ணு.

பெரிதாக காண ஒருமுறை சொடுக்கவும்



ஒருவன் சட்டென 999 அடிக்க, மறுநொடியில் ஸுருத்தா (POLICE) அவர் வந்ததும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்.

இத்தனை வருஷமாக எத்தனை ? ஸுருத்தாவை பார்த்திருப்போம், பார்த்திருக்காங்க, பாக்கிஸ்தானியர்கள் போலீஸிடம் அரபு மொழியில் அவர்கள் தரப்பு விபரம் சொல்ல, நான் கடகடவென அரபு மொழியில் எனது தரப்பு வாதத்தை வைத்ததோடு நான் வேலை செய்யும் அலுவலகத்தையும், குறிப்பாக எனது வேலையையும் சொன்னேன் விரிவாக... 
(காரணம் எனக்கு அதன் மூலம் சிறிய அளவில் மரியாதை கிடைத்து விடும் நாளை இவரும் இங்குதானே வரவேண்டும் ஓய்வூதியம் பெற இவணுடைய ஃபைலும்கூட எனது கையில்) 
சரி உனது நண்பனை உடன் இங்கே வரவை நான் நண்பரை அழைக்க அவர் வரவும் உண்மை தெரிந்து விட்டது அவர் வந்ததும் குழந்தை சிரித்து விட்டு என்னிடமே இருந்ததை கண்ட ஸுருத்தா சிரித்து விட்டு.
(போகும்போது எனது கைப்பேசி எண்ணை வாங்கிக்கொண்டு போனதும் மறுமாதம் என்னை அழைத்து அவரது பைலில் ஒரு விபரம் கேட்டுக் கொண்டதும் ராணுவ ரகசியங்கள்) 
போய் விட்டார் நான் பாக்கிஸ்தானியர்களை கர்ண கொடூரமாய் ஒரு பார்வை பார்த்தேன்.

சாரி, நீ மீசையை இப்படி வச்சிருந்ததால நாங்க தப்பா நினைச்சிட்டோம்.
நீங்க கூடத்தான் மொத்தமாக தாடியோட இருக்கீங்க, நான் உங்களை தப்பா நினைச்சேனா ? போங்கடா, வீட்டுக்குப் போயி பாரதிராஜாவோட கல்லுக்குள் ஈரம் படம் பாருங்கடா...

எனத்திட்டி விட்டு வீட்டுக்கு புறப்பட்டோம் வரும்போது நண்பர் சொன்னார் முதல்ல மீசையை மாத்துங்கங்க... ஏங்க, வந்ததும் பாக்கிஸ்தானிகளை மாத்துல விடாம, என்னை மீசையை மாத்தச் சொல்றீங்க ? சரி நண்பர் சொல்லி விட்டாரே உடன் மாற்றினேன்.



 
இப்படி, எப்பூடி ?
மீண்டும் நண்பர் சொன்னார்.
ஹும், இதுக்கு அதுவே தேவலை.

 




காணொளி
நண்பர்களே இத்தனை வருடமாக அபுதாபியில் இருந்து இந்த வருடம் 2015 ஜூலை மாதம் முதல் மதுரையில் தமிழ்க்கல்வி பயிலும் மருமகள் பர்ஹானாவுக்கு இன்று 7 வது பிறந்தநாள் தாங்களும் வாழ்த்தலாமே...

திங்கள், ஆகஸ்ட் 24, 2015

அழகு


மகள்-
அத்தா, எனக்கு மாப்பிள்ளை பார்க்க போனீங்களே முகம்மது அழகா... அகமது அழகா ?

தந்தை-
மகளே முகம் அது அழகாக வேண்டும்  என்பது முக்கியமில்லை, ஏனெனில் அது நிரந்தரமற்றது. ஆனால்  அகம் அது அழகாக இருக்க வேண்டும். அகம் அழகாய் இருந்தால் உனக்கு கடைசி வரை வாழ்வில் சந்தோஷம் இருக்கும்.

மகள்-
சரி அத்தா நீங்க சொல்ற மாப்பிள்ளையை நான் சந்தோஷமா நிக்ஹா செய்துக்கிறேன். 

சாம்பசிவம்-
என்னய்யா இது, நான் வேற மா3யில நெனைச்சேன், அப்படின்னா அகமதின் அழகு முகமதில் தெரியும்னு பழமொழி சொல்லலாம் போலயே...


ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

மதுரை சுந்தரபாண்டியர்களுடன்...

திரு. தமிழ்வாசி பிரகாஷ், திரு. கில்லர்ஜி, மற்றும் அன்பின் ஐயா திரு. சீனா அவர்கள்.
அன்பு நண்பர்களே வணக்கம்...
மதுரை அம்பிகா திரையரங்கம் அருகில் நின்று அரசியல் பதாகைகளின் வாசகங்களை வாசித்துக்கொண்டு நின்றேன் நம் தமிழன் வார்த்தைகளை செதுக்குவதில் அறிவாளியாக இருக்கின்றானே ஆனால்  அறிவிழந்து கிடக்கின்றானே... வேதனையாக இருந்தது நம் தமிழனுக்கு இன்னும் உறக்கம் கலையவில்லையே என்ன செய்யலாமென ஆலோசிக்கும் பொழுது...

// அறிவுலகம் உன்னை அழைக்கின்றது ஏதும் அறியாதவன் என்றே நினைக்கின்றது // என்ற தமிழ்ப்பாடல் வேறொன்றுமில்லை எனது கைப்பேசியிலிருந்து வந்த அழைபொலியால் நினைவலைகள் கலைந்து யாரென பார்த்தேன் அன்பு நண்பர் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் அழைப்பு கைப்பேசியை எடுத்து தொடுதிரையை வடக்கு திசையை நோக்கி தள்ளி விட்டு சம்பிரதாயமாக கிரஹாம் பெல்லின் சகோதரியின் பெயரைச் சொல்லி சொல்லுங்கள் நண்பரே என்றேன் இதோ வந்து கொண்டே இருக்கிறேன்.... வாருங்கள், I’m Waiting 4 you என்பதை தமிழில் சொன்னேன் சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தமிழ்வாசி வந்தார் நலம் விசாரித்து விட்டு அன்பின் ஐயா திரு. சீனா அவர்களின் வீட்டுக்குப் போனோம்.

அடுக்குமாடி கட்டடத்தின் நுழைவாயில் காவலாளிகளிடம் விபரங்கள் கொடுத்தவுடன் உள்ளே விட்டார்கள் தொங்கு பெட்டியில் மூன்றாவது தளத்துக்குப் போனோம் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த கதவைத் திறந்தது ஐயா திரு. சீனா அவர்கள் மற்றும் அவருடைய மனைவி பதிவர் திருமதி. செல்வி அவர்கள் வரவேற்று உபசரித்தார்கள் சுமார் 2 ½  மணிநேரம் வலைப்பூவைப் பற்றியும், வலைச்சரத்தைப் பற்றியும், பல பதிவர்களையும் நினைவு கூர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம் புகைப்படங்களும் எடுத்து விட்டு விடை பெற்று மீண்டும் நானும், நண்பர் தமிழ் வாசியும் அப்பல்லோ மருத்துவமனையை நோக்கி விரைந்தோம் நண்பர்களே ஏன் தெரியுமா ?

 திரு. கில்லர்ஜி, திரு. வலிப்போக்கன், திரு. தமிழ்வாசி பிரகாஷ்
.


அந்த இடத்தைதானே அடையாளம் சொல்லி நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களை வரச்சொன்னோம் அவரும் வர மூவரும் அருகில் இருந்த ஸஃபா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டே பேசினோமா ? பேசிக்கொண்டே சாப்பிட்டோமா ? தெரியவில்லை பிறகு நண்பர் திரு. தமிழ்வாசி அவர்கள் விடை பெற்றார் நானும் நண்பர் திரு. வலிப்போக்கனும், வழிநெடுக பேசிக்கொண்டே வந்தோம் சாலையோரத்தில் ஒரு சிறிய கோயில் இருந்தது அது காளியாத்தாளா ? மாரியாத்தாளா ? என்பதை தினமும் வணங்கும் நண்பர் திரு. வலிப்போக்கன் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் அதன் அருகில் ஒரு ஐந்தறிவு பைரவர் கிடந்தார் மாலையில் நான் இதே வழியில் போகும்பொழுது அதே இடத்தில் வைரம் பாய்ந்த ஆறறிவு டாஸ்மாக் கிடந்தது இப்பொழுது அதே கோணத்தில்  ஐந்தறிவு... நின்று கொண்டே பேசினோம்... பேசினோம்... பேசினோம்... திடீரென பைரவர் ஆங்கிலத்தில் WEEL என்று கத்திக்கொண்டு ஓடும்போது கவனித்தேன் காதிலிருந்து குருதி ஒழுகியதை காரணம் என்ன ? பிறகுதான் தெரிந்தது நானும் நண்பரும் சுமார் 3 ½ மணிநேரம் அதே இடத்தில் நின்று கொண்டு பிளேடு போட்டதே என்று பிறகுதான் வீட்டுக்குப்போக வேண்டுமென தோன்ற விடை பெற்றோம்.


 

இனிய நண்பர் திரு. பகவான்ஜியை அழைத்தேன் அவர் கன்னியாகுமரிக்கு குமரியம்மனுக்கு வைரமூக்குத்தி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக குடும்பத்துடன் சென்று இருப்பதாக சொன்னார் பதிவுகளில்தான் அப்படியோ ?

மற்றொருநாள்...
மதுரை மீனாம்பாள்புரத்தில் நண்பரொருவர் மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து இறக்கி விட்டுச்செல்ல நண்பர் திரு. பகவான்ஜியை அழைத்தேன் வந்து வீட்டுக்கு கூட்டிச் சென்றார் அவரது கணினி திறந்திருக்க சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நானும் இரண்டொரு பதிவுக்கு பின்னூட்டமிட்டேன் அவரின் துணைவியார் தேனீர் கொடுக்க அருந்திக்கொண்டு இருக்கும் பொழுதே கவிஞர் திரு. ரமணி ஐயா அவர்கள் பகவான்ஜியிடம் கைப்பேசியில் என்னை அவரது வீட்டுக்கு அழைத்து வரச்சொல்ல இருவரும் புறப்பட்டோம் வில்லாபுரம் நோக்கி...

திரு. பகவான்ஜி மற்றும் கவிஞர் திரு. ரமணி S அவர்கள்.

எனது ஹெல்மெட் தலையில் நண்பர் கொடுத்த ஹெல்மெட்டையும் மாட்டிக்கொண்டது நல்லதாய்ப்போய் விட்டது காரணம் சொந்த பந்தங்கள் நிறையப்பேர் வில்லாபுரத்தில் இருக்கின்றார்கள் அவர்களை பார்த்தால் என்னாகும் ? வேறென்ன பதிவுகள் மேலும் நீளும் அந்தப்பதிவுகள் வேறு மாதிரியிருக்கும் வீட்டில் கவிஞர் மட்டுமே இருந்தார் எங்களை வரவேற்று எனக்கு நினைவுப்பரிசோடு பொன்னாடை போர்த்தி மனம் நெகிழச் செய்து விட்டார் மலேசிய பயண விபரங்கள், நண்பர் திரு. ரூபன் சந்திப்பு, புதுக்கோட்டை பதிவர் மாநாடு மற்றும் ....த்திகம் பற்றிய விபரங்களை பேசிக்கொண்டு இருந்தோம் பிறகு மூவரும் மோட்டார் சைக்கிளில் உணவகம் வந்து உணவருந்திய பிறகு கவிஞர் விடைபெற நண்பர் பகவான்ஜியும், நானும் பேரூந்து நிலையம் வந்தோம் அவர் அலுவலுக்குச் செல்ல (இரவுப்பணி) நான் பேரூந்தில் தேவகோட்டை நோக்கி புறப்பட்டேன் எமது வாழ்வில் மறக்க முடியாத நாட்களில் இதுவும் One

 கவிஞர் தந்த பரிசு.
 
இதுதான் தி கிரேட் தேவகோட்டை செல்லும் பேரூந்து
எமது சந்திப்பு பதிவுகளைக் காண கீழே இணைப்புகளை சொடுக்கவும்.
வாழ்க வளமுடன்.
சந்திப்புகள் தொடரும்...