தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 15, 2026

தற்குறி வெட்டிக் கலகம்

ணக்கம் நட்பூக்களே… 

வெகுகாலமாக வலையுலகம் வர இயலவில்லை மன்னிக்கவும், இன்றைய சூழலில்

அரசியல் பதிவுகள் எழுதும் வகையில் நிறைய விடயங்கள் இருக்கின்றன.

காரணம் தமிழக அரசியல்வாதிகள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள். 

திங்கள், ஜூலை 01, 2024

அரசியல் கிலோ எவ்வளவு ?

ணக்கம் கீழேயுள்ள இரண்டாவது புகைப்படத்தை பார்த்தீர்களா ? இது அவசியமில்லாத வேலைதானே ? இந்த வகையான கூதரைகளால்தான் நாட்டில் மதப்பிரச்சனை வருகிறது. இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கலாம். அவர்கள்தானே தங்களது பிழைப்புக்காக... மக்களின் மூளையை இப்படி செலுத்தி விட்டு மக்களிடையே பிரச்சனைகளை கிளப்பி பிறகு சமாதானம் செய்வதுபோல் பேசி ஆகமொத்தம் அடித்தட்டு மக்கள்தான் பலியாவான். எந்தவொரு அரசியல்வாதியும் சாகமாட்டான்.

செவ்வாய், ஏப்ரல் 23, 2024

தண்ணீர்ப்பந்தல்

 

திராவிடக்கட்சிகள் இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது உலகறிந்த விடயமே... ஆனாலும் இரண்டில் அதிமுகவில் திரைப்படக் கூத்தாடன் திரு. எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் இருந்தவரை தன்மானத்தோடு தொண்டர்கள் இருந்தார்கள் என்பது உண்மை. அவரது மறைவுக்குப் பிறகு திரைப்படக் கூத்தாடி செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமையை ஏற்ற தொண்டர்களுக்கு முதுகெலும்பு இல்லாதவர்கள் என்பது மட்டுமல்ல, நன்றி கெட்டவர்கள் என்பது வெளிச்சமாகியது.

சனி, ஜனவரி 13, 2024

எள்ளுப்பெயரன் ஆளட்டும்

த்திய அரசும் சரி, மாநில அரசும் சரி மக்களுக்காக சேவை செய்யிறோம்னு சொல்லி விட்டு தனது மக்களுக்கு சொத்து சேர்ப்பதே குறிக்கோளாக இருக்கின்றார்களே இந்த பெட்ரோலுக்கான வரிகளை நீக்கினால்தான் என்ன ? மற்ற அனைத்து விலைவாசிகளும் ஏறுவதற்கு இதுதானே மூலகாரணம். உலக அளவில் எல்லா நாடுகளுமே கச்சா எண்ணை விலை குறைவால் பெட்ரோலின் விலையை குறைத்து விட்டது.

ஞாயிறு, ஜூலை 30, 2023

அரசியல் உத்தமர்கள்

கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து உடைத்த தேங்காயை கொண்டு சட்னி வைக்கும் மக்கள், அதே தேங்காயை சிதறுகாய் உடைத்தால் எடுத்து வருவது தவறு என்ற கட்டமைப்பை அமைத்தது சுகாதார நலன் கருதியா ?
அப்படியானால், தரையில் போட்டு சாப்பிடும் மண்சோற்றில் சுகாதாரத்தை மறந்தது ஏன் ?
* * * * * * * 01 * * * *

புதன், ஜூன் 07, 2023

தலைவர் தண்டல்பாடே

தையரதக்காபுரம் பண்ணை பங்களா கொ.இ.க தலைவர் தண்டல்பாடே தொண்டர்களை தேர்தல் தோல்விக்குப் பிறகு தன்னை சந்திக்க அனுமதி வழங்கி இருந்த காரணத்தால் அல்லக்கைகள் முதல், அடிவருடிகள் வரை அலைமோதிய கூட்டத்தை அடியாட்கள் கூட்டம் வசப்படுத்தி வடக்கு பக்கமாக போட்டிருந்த நிரந்தர கொட்டகை பந்தலில் ஒதுக்கியது.

வியாழன், பிப்ரவரி 23, 2023

உண்மையான விசுவாசிகள்

ணக்கம் நட்பூக்களே... அதிமுக அரசியல் தொண்டர்கள் ஈபிஎஸ் அவர்களை துரோகி என்றும், மற்றொரு புறம் ஓபிஎஸ் அவர்களை அயோக்கியர் என்றும் பேசிக்கொண்டு வருகின்றனர். இவரை அவர் கட்சியை விட்டு நீக்குவதாகவும், அவரை இவர் கட்சியை விட்டு நீக்குவதாகவும், இதனோடு மட்டுமில்லை இருவரையும் சசிகலா அவர்கள் கட்சியை விட்டு நீக்குவதாகவும் அறிக்கை விடுகின்றார்கள். யார் தலைமை என்பது தொண்டர்களுக்கு குழப்பமே...

திங்கள், ஜனவரி 04, 2021

அரிமளம், அரசியல்வாதி அரியநாயகம்


ணக்கம்ணே நல்லா இருக்கீங்களா ?  சில சந்தேகங்கள் இருக்கு உங்கள்ட கேட்கலாம்னு வந்தேன்ணே...
வாடா தம்பி வருசைமுத்து நல்லா இருக்கேண்டா... கேளுடா அண்ணேஞ் சொல்றேன்.

செவ்வாய், ஏப்ரல் 09, 2019

பொய்யாமொழியர்கள்


நாற்பதுக்கு நாற்பது திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறும்.
மு.க.ஸ்டாலின்

இந்தக் கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும்.
பிரேமலதா விஜயகாந்த்

நாட்டு மக்களின் நலனுக்காகவே கூட்டணி அமைக்கிறோம்.
அன்புமணி ராமதாஸ்

நண்பர் ரஜினிகாந்த் ஆதரவு கொடுப்பார் என்று நம்புகிறேன்.
கமல்ஹாசன்

வியாழன், ஏப்ரல் 04, 2019

கே. ஊ. கி. நாட்டாமை


தவிக்காக எவனும், எவனோடும் கூட்டணி அமைத்துக் கொள்வான் என்பது இந்த தேர்தலில் நமக்கு மிகவும் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. இதை மக்களாகிய நாம் சற்றேனும் நமது எதிர்கால சந்ததிகளுக்காக ஆலோசித்து வாக்களிக்கப் போகிறோமா ? இல்லை வழக்கம் போலவே கிடைத்தவரை லாபம் என்று இரண்டு பக்கமும் பணத்தை வாங்கி கொண்டு வாக்களிக்கிறேன் என்ற  பெயரில் நமக்கு நாமே வாக்கரிசி போடுகிறோம்.

புதன், நவம்பர் 21, 2018

சுமார் 847 ½ அடி



பதிவின் முந்தைய தொடர்ச்சியை படிக்க கீழே சொடுக்குக...

தைப் பார்த்து விட்டு அங்கிட்டுப் போனதும் கைத்தடிகள் கூடவே போவார்களே அவர்களிடம் கேட்பார்கள்.
இவன் யாரு ?
நம்ம மீசைக்காரர் இருக்காருல அவரு மகன் இவன் ஒரு வீணாப் போனவங்க.... வெத்து வேட்டு.

சனி, நவம்பர் 17, 2018

ஜனநாயக கடமை



ரசியல்வாதிகளை, நாட்டை ஆளுபவர்களை நியாயமற்றவர்கள் என்றும், பணம் கோடி கோடியாக கொள்ளையடிக்கின்றார்கள் என்றும் குற்றம் சொல்வோரே... உங்களிடம் சில கேள்விகள்.

வெள்ளி, அக்டோபர் 26, 2018

ஆ(ட்)சீர் வாதம் 2


தொடக்கப்பகுதியை படிக்க.... ஆ(ட்)சீர் வாதம்1

விழாவுக்கு வந்தவர்கள் பேச வேண்டுமே காரணம் இனி அடுத்த தேர்தல் வரும்வரை பேசுவதற்கு மேடை கிடைக்க சாத்தியமில்லை மேலும் பேசுவதை நிறுத்திக்கொண்டால் பேசுவது எப்படி ? என்பது மறந்து போகவும் கூடும் பேச்சுத்திணறினால் சில நிருபர்கள் அவசியமற்ற கேள்விகளை தொடுத்து மூஞ்சியில் தூ என்று துப்பும் அளவுக்கு கோபத்தைக் கிளறி விடுபவர்களும் உண்டு சிலர் கடைசி காலம்வரை கல்யாணமே செய்யாமல் வாழும் கண்ணகிகளாககூட இருப்பார்கள் சரி விடயத்துக்கு போவோம். பிறகு விழா மேடைக்கு வருவார்கள் சிலர் மேடைக்கு வராமலேயே பேசுபவர்களும் உண்டு

செவ்வாய், அக்டோபர் 23, 2018

ஆ(ட்)சீர் வாதம் 1



ட்பூக்களே... எனக்கு நீண்ட காலமாகவே மனதில் ஒரு சந்தேகம் இருக்கின்றது அது அரசியல் தலைமைகள் கலந்து கொள்ளும் திருமண விழாவில் சராசரி திருமண சடங்குகள் எப்படி நடக்குமோ ? அது அங்கு மாற்றி அமைக்கப்படுகின்றது அங்கு மேடை போட்டு இருக்கும் பேசுவதற்கு ஒலி பெருக்கி இருக்கும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை உண்மை மனதுடன் வாழ்த்துச் சொல்ல வந்திருக்கும் சொந்த பந்தங்கள் மூன்றாம் நிலைப்பாட்டில் காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டு நிறுத்தப்படுவார்கள் சூழ்நிலையின் காரணமாக மணக்கோலத்தில் இருக்கும் மணமக்களை ஆசீர்வாதம் செய்ய அவர்களுக்கு அனுமதி இருக்காது மறுநாள் வீட்டில் செய்யலாம் என்பது வேறு விடயம்.

ஞாயிறு, மே 27, 2018

கமல்ஹாசன் அவர்களுக்கு...

மகளும், தந்தையும்.

 எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு உங்களுக்கு நினைவு இருக்காது 1983 இல் தாங்கள் டெல்லியிலிருந்து மூன்றாம் பிறைக்கு அவார்டு வாங்கி விட்டு சென்னை விமான நிலையத்தில் விமானத்திலிருந்து உள்ளே வரும்போது கண்ணாடி தடுப்புச்சுவர் அறைக்குள் நானும், இராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு சகோதரி இருவர் மட்டும் தவறுதலாக சிக்கி விட்டோம். உங்களைக் கண்டவுடன் அந்தச் சகோதரி ஓடிவந்து கையைப் பிடித்து குலுக்கி விட்டு மகிழ்ச்சியாக குதிக்க, நான் நின்று கொண்டு இருந்தேன். என்னிடம் சிரித்துக் கொண்டே கை கொடுக்கும்போது நான் தயக்கத்துடன் ஸார் நான் உங்கள் ரசிகர் கிடையாது என்று உண்மையை சொன்னேன். உடன் ரஜினி ரசிகரா ? என்று கேட்டீர்கள். நான் யாருக்குமே ரசிகர் கிடையாது என்றதும் இன்னும் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது என்னிடம் ஆங்கிலத்தில் சொன்ன வார்த்தை. கீப் இட் அப் என்று எனது கன்னத்தை தட்டி விட்டு கடந்தீர்கள்.

வியாழன், மே 24, 2018

ரஜினிகாந்த் அவர்களுக்கு...


எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா ? எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் தமிழன் என்று சொல்லிக் கொள்வதால்தான். இது இனத்துரோகம் இல்லையா ? உம்மை கன்னடர் என்று சொல்லிக் கொண்டே அரசியலுக்கு வருவதில் என்ன தயக்கம் ? பதவி சுகத்துக்காக தனது இனப்பற்றை களைந்த நீர் பிற இனமான தமிழரின் பற்றை காப்பீரா ? உம்மை நம்பி தமிழக மக்கள் எப்படி வாக்கரிசி மன்னிக்கவும் விரலின் தவறு எப்படி வாக்கு அளிப்பார்கள் ?

சனி, மே 19, 2018

பாரதிராஜா ரஜினியை திட்டாதீர்


நட்பூக்களே திரு. ரஜினிகாந்த் அவர்களை விமர்சிக்க திரு பாரதிராஜாவுக்கு தகுதி உண்டா ? இன்றைக்கு மார்கெட்டு போனதும் வேறு பொழுது போகாமல் தமிழ்நாட்டை தமிழன்தான் ஆளவேண்டும் என்று கூவுவதற்கு வெட்கமாக இல்லை ? எந்த தமிழனை இவன் அறிமுகப்படுத்தினான் ? எந்த தமிழச்சியை இவன் அறிமுகப்படுத்தினான் ? வெளிநாட்டு, வெளிமாநிலப் பெண்களை இளமைக் காலத்தில் வாழ்ந்து அனுபவித்து அறிமுகப்படுத்தி விட்டு இப்போது கூவுகின்றான்.

புதன், மே 25, 2016

நோட்டாவால் நொட்டப்பட்டவர்கள்

எலியால் சொடுக்கி பெரிதாக்கி காண்க
 தமிழகத்தை இப்படி ஆக்குவேன் - அம்புமாணி
எம் புள்ளை இப்படி சொன்னது குற்றமா ?
 
 கடைசி சந்தர்ப்பம் கொடுத்திருக்க கூடாதா ?
நீ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் நீதான் கும்பிடணும்.
 நான் பச்சைத் தமிழன்டா.....
நான்தான் ஊதா எம்ஜிஆர்.
அட இங்கே பாருங்க கூத்தை...
ஹூம் இதெல்லாம் ஒரு பொழப்பு.
 உன்னால, என்னை மாதிரி ‘’பீப் ஸாங்’’ பாடமுடியுமா ?
ஸூப்பர் கேள்வி மச்சி.
 தம்பி நான் குடிச்சேன் கஞ்சியைத்தான் நேற்று.
சரிங்கண்ணா....
 தலைவா உன் பெயர் ‘’எடு’’ப்பேன்.
அட இவன் எப்போ...
 1025 நோட்டாவுல, நமக்கு 87 பேரு போட்டு இருக்ககூடாதா ?
இதுக்குத்தானே கடைசி நேரத்துல பல்டி அடிச்சேன்.
 அடுத்து நாம லிட்டில் ஸூப்பர் ஸ்டார் ஆவோம்.
பேசியடியே தேர்தலை முடிச்சுட்டு ஷேவிங் பண்ணிட்டேன் சினிமாவுல ஹீரோ சான்ஸ் வாங்கி கொடுங்க... கமல், ரஜினியை ஓரம் கட்டுறேன்.
 கேப்டன் பிடிங்க எங்களோட ராஜிநாமாவை...
மஞ்சமாக்கான் நீ கூட திருவாடானையில் ஜெயிச்சுட்டியடா...
 தேவிபட்டணத்தில் மூழ்கி கர்மம் தொலைச்சாச்சு அடுத்த வேலை... ?
இங்கிலாந்து நாட்டு தேர்தலுக்கு முன் நேற்று ஒப்பந்தம் இட்டபோது...
 நான் ஒண்ணுமே சொல்லலீங்க சாமி கில்லர்ஜி
நம்பிக்கைதான் வாழ்க்கை.
நான் BJP காரனும் அல்ல ! இருப்பினும் இதை ஏற்கிறேன்.
தம்பி கில்லர்ஜி அங்கே என்னதான் நடக்குது ?

நோட்டா அவசியமே ஆனால் ? அதில் இன்னும் வலிமையான மாற்றம் வேண்டும்.- கில்லர்ஜி

புதன், மே 11, 2016

அண்ணந்தம்பீஈஈஈ...


நட்பூக்களே... திரு. அண்ணாதுரை அவர்களுடன் இந்தப் பையனை இணைத்து புகைப்படம் இட்டது எதற்கு ? என்பதுதானே தங்களது கேள்வி இவன்தான் எதிர்கால தமிழ்நாட்டின் பிரபல சூப்பர் ஸ்டார் பிறகு கட்சி ஆரம்பித்து இவனும் அண்ணாவின் புகைப்படத்தைப் போட்டு ஓட்டு கேட்பான் மன்னிக்கவும் கேட்பார் அப்பவும் மக்கள் ஓட்டுப் போட்டு அமோக வெற்றி பெறுவார் இப்பொழுது எனக்கு குழப்பம் என்னவென்றால் அண்ணாதுரை எல்லா கட்சிகளிலும் காணப்படுகிறார் இது எப்படி ?

செவ்வாய், மே 10, 2016

தாய்மார்கள் ஓட்டு தாலிக்கே...


கோந்தமடை தொகுதி வேட்பாளர் கோவிந்தன் வீட்டில் உறங்கி கொண்டு இருந்தார் பக்கத்தில் மனைவி மரகதவள்ளி கடந்த ஒரு மாதமாகவே ம.வ.க்கு (மரகதவள்ளியின் சுருக்கம் ம.வ. என்று எண்ணிக் கொள்ளவும்) உறக்கமே இல்லை காரணம் தேர்தலில் நிற்கும் கணவன் கோவிந்தன் தூக்கத்திலும் அரசியல் பேசுவதால் மேலும் அவர்களது வீடு பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்து வரும் பாரம்பரியமான பழைய காலத்து ஓட்டு வீடு எவ்வளவோ சொத்துகள் இருந்தாலும் இது ராசியான வீடு இந்த வீட்டில்தான் இவனது கொள்ளுத் தாத்தா கொள்ளி வேந்தன் மிராசுதாராக வாழ்ந்தார், பின்பு தாத்தா தாண்டவமூர்த்தி நாட்டாமையாக வாழ்ந்தார், பிறகு அப்பா அப்புச்சாமி பஞ்சாயத்து தலைவராக வாழ்ந்தார், அடுத்து நாம் சட்டமன்ற உறுப்பினராக ஆகலாம் என்ற கனவுகளோடு வாழந்து வருகின்றார்.