தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஆகஸ்ட் 30, 2014

மௌனமொழி


என்னவளே...
நாம் இருக்கும்போது... ’’அப்படி’’ இருந்ததில்லை,
நீ இறந்த போதும்... நான் ’’அப்படி’’ இருந்ததில்லை,
நான் இறந்திட்டாலும் ’’அப்படி’’ இருக்க சாத்தியமில்லை,
இருக்கும்போது... நாமேன் இணையவில்லை இனியவளே...

புதன், ஆகஸ்ட் 20, 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

எனக்கும் ஆசை கவிப்போட்டிக்கு அனுப்பினேன்,
கவியிரண்டு சென்று வா ! மகளே
வென்றும் வா ! அழகாய்....
வழியில் நான் விழியில் நீ வர....
 
அன்புடன்.
KILLERGEE
Abu Dhabi.
 
To, துபாய், துணைவன் துரைச்சாமி.
 
கனவாய், வந்தாய் கணவா ! நினைவால், நின்றேன் சிலையாய்
தனலாய், கொதிக்கும் கதியில் என்னை, தவிக்க விடுவது சதியே !
 
பங்குனிமாத, தங்கவந்த கனியே ! என்னைபங்கு, கொள்ளும் மணியே !
தங்கமும், தந்தாய் கனிவாய் ! ஏங்கவும், செய்தாய் பனிவாய் !
 
வீரமுள்ள, என்னவரே வீறுகொண்டு எழுந்திருந்தாய்
விசாமுடியும், காரணத்தால் விரைந்து, விட்டாய் என்னைவிட்டு
 
தேசம்விட்டு, சென்ற கணவா ! என்தேகத்தை, என்றும் மறவா !
பணமா வாழ்க்கை பதியே வாட்டுது என்னை விதியே
 
உயிராய், நினைப்பேன் உனையே உழைத்தது, போதும் துணையே
திரும்பிவிடு, திணைக்கரும்பே ! திகட்டவில்லை, உன்குறும்பே !
 
என்னருகே, நீ இழைந்து குடித்த, கூழும் குளிர்ந்ததய்யா !
பிரிந்திருந்து, நீ உழைத்ததினால் பிரியாணியும், பித்தமய்யா !
 
குடிசையிலே, குதூகளித்தோம் மார்கழியில், நான் மாசமய்யா !
ஏசி வீட்டினிலும், குடியிருக்கோம் எல்லா, மாசமும் தோஷமய்யா !
 
வந்துவிடு, வசந்தகாற்றே நாம் வளமுடனே, வாழ்ந்திடவே
போய்விடுவோம், குடிசைக்கே குதூகளிப்போம், குடும்பத்துடன்.....
 
குலவிளக்கை, ஏற்றிடவே வம்சவிளக்கை, வளர்த்திடவே
மனவிலக்கை, உடைத்துவிடு மலர்க்கனையை, விதைத்துவிடு
 
என்விழியை, உனக்காக நீ வரும் வழியில், நிறுத்தி வைத்து
கடைசி வரை, காத்திருக்கும் கடையநல்லூர், காஞ்சனா.
 
* * * * * * * * * * * * *
 
 
வாழ்ந்தேன் 25 வகை.
 
உங்களிடம், எனது கதையளக்க வந்தேன்...
ஒருகாலத்தில், நானும் காதலித்து இருந்தேன்...
முதலில், நான்தான் அவளை பார்த்தேன்...
அவளிடம், காதலை சொல்ல நினைத்தேன்...
அதற்கு, நான் எனது வாயை திறந்தேன்...
சட்டென, எனது நாவை கடித்தேன்...
வேண்டாமென, வயலினால் இசைத்தேன்...
நாதத்தால், வார்த்தையை உரைத்தேன்...
அவளின், எண்ணங்களை படித்தேன்...
இடை''யே, அவளையும் ரசித்தேன்...
அவளது, பார்வையால் மலைத்தேன்...
இருப்பினும், பார்வையை வளைத்தேன்...
கண்களால், மென்மையாக சிரித்தேன்...
மனதுக்குள், அவளை புசித்தேன்...
திடீரென, கொடூரமானாள் அதிர்ந்தேன்...
அவள், உதிர்த்த வார்த்தையால் மடிந்தேன்...
தினம் நினைத்து, நினைத்து நொந்தேன்...
மனதுக்குள், வலியால் துடித்தேன்...
உணர்வு, மரத்து என்னைநானே அசைத்தேன்...
மனச்சுமையால், மலைத்து களைத்தேன்...
அவள், நினைவுகளால், சருகாய் உதிர்ந்தேன்...
நடந்ததை, வெளியே சொல்லாமல் மறைத்தேன்...
இப்போது, குடியால் அவளை மறந்தேன்...
குடிக்காக, எனது வீட்டையும் தொலைத்தேன்...
அவளால், குடியாகி ஒருநாள் இறந்தேன்...
 
Video
(Please ask Audio Voice)


வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014

வெட்கப்படுவோம்.


சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ? ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 1917லிலே இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய்க்கு அமெரிக்க டாலர் $ 13 கிடைத்தது ஆனால் இன்று அதே அமெரிக்க $ 1 டாலரை வாங்குவதற்கு நாம் 63 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது.. இது நமக்கு வெற்றியா ? 

சுதந்திரமான வாழ்க்கையில் கஷ்டப்படுவதைவிட கொத்தடிமை வாழ்வாயினும் சந்தோஷமான வாழ்வு பெரிதென்றே தோன்றுகிறது. அதற்க்காக சுதந்திரம் பெற்றது தவறென்ற கருத்தை நான்முன் வைப்பதாக அர்த்தமல்ல ! வெளியூர் திருடனிடமிருந்து உள்ளூர் திருடன் வசம் ஒப்படைத்து விட்டோம் இதனால் மக்களுக்கு பலன் உண்டோ ? தேர்தல் வரும்போது இலவசங்கள் கிடைக்கிறது இதுதானே... நம் கண்ணை குத்தி விட்டு அதன் குருதியில் மருந்தெடுத்து நமது கண்வலிக்கு மருந்து கொடுக்கிறார்கள் அப்படித்தானே... கண்ணை குத்தி விட்டது யார் ? குத்த விட்டது யார் ? பாமரப்பயல்களான நாம்தானே... அரசியல்வாதிகள் நம்மிடம் வாக்கு கேட்க வரும்பொழுது வணங்கி வாக்கு கேட்கிறார்கள்... அதே அரசியல்வாதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன் நமது பொதுப்பிரச்சனை என்றே வைத்துக் கொள்வோம், அவர் வீடு தேடிபோய் கேட்க முடியுமா ? முதலில் வீட்டுக்குள் SORRY பங்களாவுக்குள் நுழையத்தான் முடியுமா ? 

நாமெல்லாம் கருத்து சுதந்திரம் பெற்றவர்கள் என பீற்றிக் கொள்கிறோம் இதனால் பலன் ? பத்திரிக்கைகளில், ஊடகங்களில், வலைப்பதிவுகளில் வர்ணித்து, கார்டூன் போட்டு கிழிக்கிறோம், இதனால் அவர்கள் வெட்கப்படுகிறார்களா ? வேறென்ன  கிழித்து விட்டோம் ? ஆகவே இனியெனும் வெட்கப்படுவோம்.

திங்கள், ஆகஸ்ட் 11, 2014

France Part – 2

You Want See Big size ? Just Click One Time Photo Inside.

கீழிருந்து, மேல்.
கல்லிலே, கலைவண்ணம்.

தாய்லாந்து மாணவ, மாணவிகள்.

பாமரன் KILLERGEE

அவளும், நோக்கினாள்.

மேலிருந்து கீழ்.

மண் சுவரில்.

வழிகாட்டி.

கோபுரத்தின்மேல், ராட்சத இயந்திரம்.

உயிருடன், நிற்கும் மனிதன்.

மேலும் புகைப்படங்கள் & காணொளி FANTASTIC FRANCE. காண சொடுக்குக.
 
 
F.P- 24 Nov 2012