மேலேயுள்ள
புகைப்படத்தில் இருக்கும் குடும்பம் யாருடையது என்று உங்கள் அனைவருக்கும்
தெரியும். வாழ்க வளத்துடன் இதிலுள்ள நான்கு பெண்மணிகளில் ஒருவர் மட்டும் தலைவிரி
கோலமாக இருப்பதின் காரணமென்ன ? அதுதான் குடும்பப் பெண்களுக்கும்
திரைப்படக் கூத்தாடிகளுக்கும் உள்ள வேறுபாடு. இது நடைமுறைகளுக்கு சரிப்பட்டு வராது
ஆகவேதான் மும்பை வாலாவாகி விட்டது.
தெருக்குரல்
இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு
புதன், பிப்ரவரி 05, 2025
புதன், ஜனவரி 29, 2025
கோமாவில்18 மாதங்கள்
தமிழ்
திரைப்படங்களில் எவ்வளவோ கோமாளித்தனமான காட்சிகளைப் பார்த்து வெறுத்து இருப்போம்,
நூறு நபர்கள் மிஷின்கன் கொண்டு சுட்டாலும் கசாநாயகனின்
காலில்கூட குண்டு படாது காரணம் அவ்வளவு கனகச்சிதமாக ஓடுவார். அதிலும் ஒடிக்கொண்டே
தனது கையிலிருக்கும் சாதாரண ஆறு குண்டுகள் உள்ள துப்பாக்கியால் அத்தனை பேரையும்
சுட்டு விடுவது, பிறகு எத்தி விடும்போது அவ்வளவு பேர்களும் வானத்தில் பறந்து போய்
விழுவது. அப்படியே சிலர் ஈட்டியை நெஞ்சில் குத்தினாலும் பிடுங்கி எறிந்து விட்டு
மீண்டும் சண்டை போடுவது, இப்படி நிறைய சொல்லலாம்.
புதன், ஜனவரி 22, 2025
காவி மயில்
வணக்கம் நண்பர்களே...
‘’சின்ன கண்ணன் அழைக்கிறான்’’ என்ற பஞ்சு அருணாசலம் அவர்களின் பாடல். எமக்கு
மிகவும் பிடித்த பாடல் எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே
யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.
புதன், ஜனவரி 15, 2025
மாங்கொட்டையன் தெரு
மேலேயுள்ள புகைப்படத்தை
பார்த்தீர்களா ? இந்த
மாங்கொட்டையன் தெருவின் நுழைவாயிலில் பெயர்ப்பலகை உள்ள இடத்தில் இப்படி அதன் பெயரே
தெரியாத அளவுக்கு மாற்றி, மாற்றி சுவரொட்டிகள் ஒட்டுகின்றனரே.. இது நாங்கள்
முட்டாள்கள் நிறைந்து இருக்கிறோம் என்பதை காட்டுகிறதோ... காவல்துறை உங்கள் நண்பன்
என்று சொல்லும் காவலர்கள் 30 கி.மீ
வேகத்தில் போகும் இரண்டு சக்கர வாகனங்களை வழி மறைத்து, இடையில் சக்கரங்களில்
லத்தியை விட்டு நிறுத்துகின்றார்களே...
புதன், ஜனவரி 08, 2025
இருளை விட்டு வெளியேறு...
வணக்கம்
நட்பூக்களே... வாழையடி வாழையாக இவர்கள்தான் இந்த நாட்டை ஆளவேண்டுமா ? மண்ணின்
மைந்தர்களான நாமெல்லாம் ஆளக்கூடாதா ? நாமேன் இன்னும் இந்த வாரிசு
அரசியலுக்குள் சிக்கி நம்மை மட்டுமல்ல நமது சந்ததிகளையும் சீரழித்து வாழ்கிறோம் ? இது
மன்னர்கள் ஆட்சி இல்லையே.. பிறகு ஏன் நாம் சிந்தித்து வெளியேற முயலவில்லை ? நாம்
இன்னும் தாமதித்தால் விரைவில் வடகொரியாவைப் போல் கொத்தடிமைகளாக வாழவேண்டிய நிலை
வரலாம்.
புதன், ஜனவரி 01, 2025
அன்னவாசல், அன்னக்கூடை அன்னலட்சுமி
அன்னலட்சுமி
அம்மா இந்த வார்த்தையை நகரின் காய்கறி மார்க்கெட்டில் உச்சரிக்காதவர்களே இல்லை.
சரியாக
12.00 மணிக்கு வந்து விடுவார் அன்னக்கூடையுடன்... மிகவும்
குறைந்த விலையில் மூன்று வகை கூட்டுகளுடன் தட்டில் வைத்து தருவார் இதை சாப்பிட்டு
காலம் ஓட்டுபவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள். இதில் குடும்பம்
இல்லாதவர்களும் உண்டு.