தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மார்ச் 07, 2025

கொடுமலூர், கொடுமைக்காரி கொடிமுல்லை

கொடிமுல்லை பெயரைப்போல ஆளும் அழகுதான் ஆனால் குணம் ? அதுதான் இந்த ஏரியாவுல எங்கே தேடினாலும் கிடைக்காத அபூர்வ குணம். கணவனை பணம், பணம் என்று நச்சரித்துக் கொண்டே இருப்பாள். பக்கத்து வீட்டுக்காரி பாயாசம் செய்தால்கூட நாமும் செய்ய வேண்டும் என்று நினைப்பவள். வேலை செய்து விட்டு வந்து நிம்மதியாக சாப்பிடக்கூட விடமாட்டாள். இதனால் சாப்பிட்டவுடன் வெளியேறி விடுவான்.

புதன், ஜனவரி 01, 2025

அன்னவாசல், அன்னக்கூடை அன்னலட்சுமி

 

ன்னலட்சுமி அம்மா இந்த வார்த்தையை நகரின் காய்கறி மார்க்கெட்டில் உச்சரிக்காதவர்களே இல்லை. சரியாக 12.00 மணிக்கு வந்து விடுவார் அன்னக்கூடையுடன்... மிகவும் குறைந்த விலையில் மூன்று வகை கூட்டுகளுடன் தட்டில் வைத்து தருவார் இதை சாப்பிட்டு காலம் ஓட்டுபவர்கள் நிறைய நபர்கள் இருக்கின்றார்கள். இதில் குடும்பம் இல்லாதவர்களும் உண்டு.

வியாழன், அக்டோபர் 17, 2024

ஊட்டி, ஊதாரி ஊமைத்துரை


ஊமைத்துரை
இவன் பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போலிருப்பான். ஆனால் எமகாதகன் வீட்டில் கடைக்குட்டி ஊமைத்துரை என்று பெயர் வைத்ததனாலோ என்னவோ வாய் பேசாத ஊமையாகிப் போனான். அய்யா அய்யாத்துரை இரண்டு பெரிய தேயிலை தோட்டங்களை நடத்தி, அப்பா அப்பாத்துரையிடம் விட்டு சென்று விட்டார்.

வியாழன், பிப்ரவரி 02, 2023

புதன், மே 06, 2020

கீர்த்தனாவுக்கு பிரார்த்தனைகள்



ந்த திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நிகழ்ந்து முடிந்தது மதிய உணவு முடிந்து மண்டபத்தின் திறந்த வெளியில் இருந்த வேப்ப மரத்தடியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து இருந்தன் தனது கண்களை மூடி பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தபோது...

வியாழன், ஏப்ரல் 16, 2020

குரும்பூர், குட்டிக்கதை குருசாமி



01. மேடையில் பேசிக்கொண்டு இருந்தார் அரசியல்வாதி அரியநாயகம் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது கலாச்சாரம் நமக்கு கற்றுக் கொடுத்த அருட்கொடை இது எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை என்று சொன்னதைக் கேட்டு மக்கள் பலமாக கை தட்டினார்கள் கூடவே மேடையில் வீற்றிருந்த அரியநாயகத்தின் இரண்டாவது மனைவி மாதவியும் கை தட்டினாள்.

புதன், செப்டம்பர் 18, 2019

மேலூர், மேலாளர் மேகநாதன்



வணக்கம் நட்பூக்களே கடந்த வருடம் இதேநாளில் இக்கதை எங்கள் ப்ளாக்கில் வெளியாகியது சரியாக ஓராண்டு கடந்தும் இன்றைய தேதிவரை கதைக்கு பேசி தீர்மானித்த எழுபத்தி மூன்று லட்சத்து, பதினாறு ஆயிரத்து, நானூற்றி எண்பத்து இரண்டு ரூபாய், ஐம்பது காசுகள் (73,16,482.50) இதுவரை தரப்படவில்லை என்பதை இதன் மூலம் அறிவிக்கிறேன். இதைப்படிப்பவர்கள் நல்ல தீர்மானமாக எடுத்துச் ஜொள்ள’’வும்.

மேகலா ஓர் தீர்மானத்துடன் நடந்தாள் இன்று அலுவலக மேலாளர் மேகநாதனிடம் சொல்லி விடுவதுதான் சரி இனியும் பொறுமையாக இருப்பது சரியாக வராது நாமும் எவ்வளவு காலம்தான் கஷ்டப்படுவது ? பாவனா போன வருடம் வேலைக்கு சேர்ந்தவள் எத்தனை வேகமாக பதவி உயர்வு பெற்று இன்று வங்கியில் கடன் பெற்று வீடு கட்டிக்கொண்டு இருக்கின்றாள் நான் இங்கு சேர்ந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. வாடகை வீட்டைக்கூட கூடுதலான வாடகையில் பிடிப்பதற்கு வழியில்லை நமது பொருளாதாரம் உயர்வுக்கு வழியில்லை கணவன் முகுந்தனை நம்பி இனி பயனில்லை,

திங்கள், ஜனவரி 14, 2019

மொக்காசியா To மெல்லேந்தியா



இதன் முந்தைய பகுதியை படிக்க கீழே சொடுக்குக... I like Indian People

ஃபுல்ஸி என்ன இது ?
ரண்ஸிட் இப்போ உன்னோட உடம்பிலிருந்து ரத்தத்தை எனது உடம்புக்கு டிரான்ஸ்பர் பண்ணப்போறாங்க முழுவதும் இல்லை பாதிதான் அதன் பிறகு நீ இங்கேயே ஒரு மாதம் தங்கி ரெஸ்ட் எடுத்து உடம்பைத் தேற்றிக் கொள்ளலாம் எல்லாம் நான் பார்த்துக்கிருவேன் பயப்படாதே..

நான் எதுக்கு ரத்தம் கொடுக்கணும் சம்மதிக்க மாட்டேன் உனக்கு ரத்தம் மாற்றும் அளவுக்கு என்ன பிரச்சனை ?
இதோ பார் எனக்கு இருக்கின்ற பவருக்கு உன்னிடமிருந்து சுலபமாக ரத்தம் எடுக்க முடியும் அதை முதலில் புரிந்துகொள்.

வியாழன், ஜனவரி 10, 2019

I like Indian People


ஞ்சித் இன்னும் திருமணம் ஆகாதவன் காரணம் திருமணம் செய்வதில் உடன்பாடு இல்லாதவன் இரண்டு அக்காள் மூன்று அண்ணன்களோடு பிறந்தவன் எல்லோருக்கும் திருமணம் முடிந்து விட்டது வீட்டில் எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் கோயிலுக்கு நேர்ந்து விட்டு விட்டார்கள் நல்ல ஜாலியான பேர்வழி அப்பா இறந்து விட்டார் அம்மா பாரம்பரிய திருநெல்வேலி வீட்டில் இருக்கின்றார் அம்மாவுக்கு தேவையான பணத்தை செலவுக்கு அனுப்பி விடுவான் வருடத்துக்கு ஒருமுறை மே மாதம் சரியாக பள்ளி விடுமுறையில் நாட்டுக்கு வந்து விடுவான் குடும்பத்து அனைத்து பிள்ளைகளும் வந்து விடவும் வீடு ரணகளப்படும் அவனது அம்மா சத்தம் போட்டு அடக்கி வைத்தாலும் உள்ளுக்குள் பெயரன்-பெயர்த்திகளின் சேட்டைகளை ரசிப்பார் ரசிப்பதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே... எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் இதோ கணவருக்கு கிடைக்க வில்லையே

சனி, ஜூன் 02, 2018

சந்தேகச்செடி


ஹாரன் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தாள் பார்வதி தனது கணவன் பரதன் வாசலில் டி.வி.எஸ். 50யில் உட்கார்ந்திருக்க, பின்புறம் கணவனது நண்பனின் மனைவி மஞ்சுளா உட்கார்ந்திருந்தாள் மனைவியிடம் அவசரமாய்
பார்வதி சீக்கிரம் தயாரா.. இரு இப்போ வந்துருவேன்
சொன்ன அடுத்த நொடி பறந்து விட்டான். சிலையாய் நின்றாள் பார்வதி என்ன நெஞ்சழுத்தம் இருந்தால் ? நமக்கு முன்னாடியே அடுத்தவன் பொண்டாட்டியை ஏத்திக்கிட்டு வந்து நிற்பாரு.. வரட்டும்.. வரட்டும்....