தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், மார்ச் 30, 2016

இரவு 8 க்கு பிறகு 7 ½


அன்பு நெஞ்சங்களே.... கடந்த வருடம் இதே தேதியின் தமிழ்ச்சங்கு என்ற பதிவில் சொல்லி இருந்தேன் இரவு 8 மணிக்கு மேல் 7 ½ என்று அதை சற்று மறந்து விட்டேன் ஆனால் பாருங்கோ... கரீக்டா மறு வருடம் ஞாபகம் வந்துடுத்து... ஹி... ஹி... ஹி...
  
ஆம் மகன் தமிழ்வாணன் பிறந்த சந்தோஷத்தில் பக்கத்தில் இருந்த உணவகத்தில் போய் சாப்பிட்டு விட்டு மருத்துவமனைக்கு வந்தேன் (சாப்பிடும் போதே நினைத்தேன் மகனுக்குப் பிடித்த கோழி 65 வாங்கிக் கொண்டு போவோமா ? நாளைக்கு நேரடியாக கூட்டிக் கொண்டு வருவோமே) ஒரு அம்மாள் மாலை 05.00 மணிக்கு மகளை பிரசவத்திற்க்கு அழைத்து வந்தவர் முகத்தில் கவலையோடு அங்கும் மிங்குமாக நடந்து கொண்டு இருந்தார் நான்தான் ஆறுதல் சொன்னேன் எல்லாம் நல்லபடியாக நடக்கும் கவலைப்படாதீங்க அம்மா, கூடவே ஒரு பெரியவரும் கணவராக இருக்கும் அவரும் ஒரு நிலையில் இல்லாமல் இருந்தார் எனக்கு எம்மெஸ்வி அவர்களின் பாடலொன்று நினைவுக்கு வந்தது.
பெத்தெடுத்த வயிறுதானே பத்திக்கிட்டு எரியூ.....ம்
பிள்ளை குட்டி இல்லாத எவனுக்கென்ன புரியும்...
உண்மையான வரிகள்தானே... உள்ளே நுழைந்தவுடன் கேட்டேன் குழந்தை பிறந்துருச்சாம்மா ? ஆமாப்பா... பின்னேயேன் கவலையா இருக்கீங்க ? இல்லைப்பா பொம்பளைப் புள்ளையா போச்சு.. என்னம்மா நீங்க பிரசவம் நல்லபடியா முடிஞ்சதுக்கு சந்தோஷப்படாமல் நீங்களே இப்படிச் சொல்றீங்களே... அவரு இப்ப வந்துருவாரு நானென்ன சொல்றது ? யாரு ? மாப்பிள்ளை இதுனாலே என்னம்மா இருக்கு சொல்லித்தானே ஆகணும் எல்லாம் நம்ம கையிலேயா இருக்கு ? இல்லை தம்பி ஏற்கனவே ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க, இது மூணாவது இப்பவும்... கவலைப்படாதீங்கம்மா... அவர் வந்ததும் நான் பக்குவமா சொல்றேன். சொன்னால் நம்புவீர்களோ இல்லையோ... ராஜ்கிரனோட ராசாவின் மனசிலே படம் பார்த்திருப்பீங்க அதில் வந்த வடிவேலு எப்படி ? இருந்தார் இப்பக்கூட பார்க்கலாம் அப்படியேதான் ஒருத்தர் வந்தார் இந்த அம்மாள் முந்தானையை எடுத்து ஒரு மாதிரியாக போர்த்திய போதே எனக்கு தெரிந்து விட்டது இவர்தான் அந்த மாப்பிள்ளை அந்த அம்மாவைப் பார்த்து என்னாச்சு என்றார் மிடுக்காக.. அந்த அம்மா சொன்னார் நல்லபடியா பொறந்துடுச்சு தலையை குனிந்து கொண்டே சொன்னார் சிறிது நேரம் மௌனம் நிலவியது கொஞ்சம் அதட்டலாக கேட்டார் மறுபடியும் பொட்டக் கழுதையா(எனக்குள் சுர்ர்ர்ர்ர்ர்ர்ர்) அந்த அம்மாள் மௌனமாக நின்றார்... இவர் வெடுக்கென ஹும் என்று சொல்லி விட்டு வெளியே போய் விட்டார் அந்த அம்மாளின் கன்னங்களில் கண்ணீர் தாரை தாரையாக ஓடியது அம்மா இப்படி உட்காருங்க சுவரோரமாய் கிடந்த பெஞ்ச்சில் உட்கார வைத்து விட்டு இவனென்ன ? வந்ததும் குழந்தையை பார்க்காமல் உடனே வெளியேறி விட்டான் வெளியே வந்து எட்டிப் பார்த்தேன் தெருமுனையில் ஒரு அம்மாளும், இவனும் கையை காலை ஆட்டி பேசிக்கொண்டு நிற்க... நான் போனேன் உடனே அவனிடம் கேட்டேன் என்ன பிரச்சினை ? அந்த அம்மாவும் இவனும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள் மேலிருந்து கீழ் சொல்லுங்க ஏன்குழந்தையை பார்க்காமல் இங்கே நிற்கிறீங்க ? நீங்கயாரு ? அது கிடக்கட்டும் குழந்தை என்ன தப்பு செஞ்சுச்சு ? அந்த அம்மாள் சொன்னார் மூணாவதும் பொட்டைக் கழுதையை பெத்துருக்கா... அதுக்கு அந்தப் பெண்ணு என்ன ? செய்ய முடியும் பொம்பளையான நீங்களே பொட்டக் கழுதைனு சொல்றீங்க... அப்புறம் ஆம்பளை சொல்லாமல் என்ன ? செய்யிவான் ? உங்க மகளுக்கு இப்படி பிறந்தால் என்ன ? செய்வீங்க... யேன் மவ ரெண்டு சிங்க குட்டிகளை பெத்தவ... எதுக்கு இவளைப் போல பெறப்போறா ? சரிம்மா அந்த சிங்க்க் குட்டிகளுக்கும் நாளைக்கு ஒரு பெண் குட்டி வேணுமுள்ள அதுக்கு இந்த குட்டிகள் உதவும்ல... இதுவரை சும்மா நின்ற மாப்பிள்ளை என்னை கேட்டா(ன்)ர் மொதல்ல நீங்க யாரு ? பார்த்தவுடன் கணித்து விட்டேன் இது கஞ்சாக் கிராக்கி கன்னாபிஸ் சாடிவா ஈசியா தட்டி விடலாமென பொம்பளைப்புள்ள பிறந்ததுக்கு யாரு ? மீது யாரு ? கோபப்படுறது ? உங்க மனைவி உங்க மேலே கோபப்பட்டா ? நீங்க என்ன சம்பந்தம் இல்லாமல் பேசுறீங்க ? நான் சம்பந்தம் இல்லாமல் பேசுறேனா ? உங்க குழந்தைதானே... யோவ் மரியாதையா ? பேசு... இப்பக் கோபம் வருது என்ன காரணம் ? எங்க குடும்பத்துல தலையிட நீ யாரு ? நான் யாருமில்லை சரி வா போலீஸ் ஸ்டேஷனுக்கு போவோம் ஏன் ? இப்படிச் சொன்னேன்... எனக்கே குழப்பம். உடனே அந்த அம்மாள் சரிதான் குழந்தையை பார்க்க வந்த மருமகனை ஆளை வச்சு அடிக்க ஏற்பாடா ? ஏன்டி... சிரிக்கி மவளே... எம்புள்ள ஆம்பள சிங்கம்டி இன்னும் மூணு கல்யாணம் பண்ணுவான் உரக்க கத்தினாள் (இவன் சிங்கமா ?நம்ம தலையிட்டது குடும்பத்துல வேற பிரச்சினையை உருவாக்கிடுச்சே அந்தப் பக்கமாக வந்த எனது மாமனார் அந்த சிங்கத்திடம் போய் தம்பி மன்னிச்சுக்கங்க அவரு தேவையில்லாமல் பேசிட்டாரு என அவன் கைகளை பிடித்துக் கொண்டு அசிங்கப்படுத்திக் கொண்டு இருக்க... முந்தைய பதிவில் வந்த அந்த சண்முகம் ஓடி வந்து என்னை பிடித்து உங்களுக்கு ஏன் ? தேவையில்லாத வேலை என்று என்னை மருத்துவமனைக்கு இழுத்துக் கொண்டு வந்து விட்டார். அந்த அம்மாவை பார்த்தேன் அப்படியே உட்கார்ந்து வெளியே நடந்தது எதுவும் தெரியாமல் அழுது கொண்டு இருந்தார் என்னால் வந்த புதிய பிரச்சினை தெரிந்தால் இந்த தாய் மேலும் அழுமோ ? என் மனம் கசியத் தொடங்கியது நான் செய்தது சரியா ? தவறா ?

 இந்த சம்பவத்தை எனது மாமனார் வீட்டில் யாரிடமும் சொல்லவில்லை என்றே நினைக்கின்றேன் (இறந்து விட்டார்) காரணம் எனது மனைவிகூட இதனைப் பற்றி கடைசி வரை கேட்டதில்லை.
அன்புச் சகோதரிகளே.... பெண்களே பெண் குழந்தைகளை ‘’பொட்டக்கழுதை’’ என்று இழிவு படுத்தலாமா ?

Chives Regal சிவசம்போ-
பொம்பளைப் புள்ளைகளை வேண்டாம்னு சொல்றவன் கல்யாணம் செய்துக்கிறதுக்கு மட்டும் ஏன் ? பொம்பளைப் புள்ளே கேட்கிறான்...
சாம்பசிவம்-
இதொரு குடிகார மட்டை எதையாவது குண்டக்க மண்டக்க கேட்கும்.
சிவாதாமஸ்அலி-
மட்டையா இருந்தாலும்... கேள்வி சரிதா’’னே....

திங்கள், மார்ச் 28, 2016

சாணக்கியன்


ஐயா வணக்கம் எங்களது தாமதம் பத்திரிக்கையிலிருந்து ''மதம் தந்த மாதம்"  அப்படின்னு ஒரு கட்டுரை வெளியிடுகிறோம் இதில் தங்களது பேட்டியை சிறப்பு நிகழ்ச்சியாக தொகுத்து வழங்குகிறோம் தங்களது கருத்து தொகுப்புகள் தொடங்கலாமா ? ம்
நல்லது முதல் வணக்கம் நம் தமிழுக்கு தொடங்கலாம்.

ஐயா மதங்களைப்பற்றி உங்களுடைய கருத்து ? 
மதம் என்ற விசயத்தை பிடித்து வாதம் செய்யும் போதே பிடிவாதம் என்ற சொல் இணைந்து விடுகிறது பிடிவாதத்திற்கு மருந்து இல்லை பிடிவாதத்தை நமது மனதால் மட்டுமே அகற்ற முடியும் அதைப்போல இந்த மதம் என்ற பிரச்சினையை தீர்க்க வேண்டுமெனில் மதம் என்ற விசயத்தை நம் மனதிலிருந்தே அகற்றப்பட வேண்டும் மதம் என்ற சொல் நம் வாயிலிருந்து உச்சரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும், மதம் என்ற வார்த்தை நமது கையினால் எழுதப்படுவது மறக்கப்பட வேண்டும்.

ஐயா ஒரு மனிதன் நியாயமாக வாழும் வழி முறைகள் எப்படி ? 
முதலில் அவன் தான் சார்ந்த மதத்தை விட்டு வெளியே வரவேண்டும், அல்லது அவன் சார்ந்த மதத்திற்க்குள் கட்டுப்பட்டு வாழவேண்டும் இவை இரண்டில் எதையுமே கடைப்பிடிக்காதவன் நியாயமானவன் என்ற பெயர் எடுக்க தகுதியில்லாதவன்.

அப்படி என்றால் மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்கள் நியாயமற்றவர்களா ? 
நான் சொன்ன இரண்டில் ஒன்றை கடைப்பிடிக்கும்போது... தானாகவே மனசாட்சி இணைந்து விடும் பொய் சொல்ல மாட்டார்கள் தவறை தவறுதலாக கூட செய்ய மாட்டார்கள் காரணம் நியாயமே மனசாட்சி என்ற கொள்கையாளர்கள் இவர்களே...

ஐயா இதில் தாங்கள் எதை கடைப்பிடிக்கிறீர்கள்...?.
நான் வெளியே வந்து உட்புறத்துக்குள் வாழ்பவன் மதம் வேண்டுமானால் கூடுதலாக இருக்கலாம் ஆனால் அனைத்து மனிதனுமே ஒருநாள் மரணித்து இறைவனிடம் கூடியே ஆகவேண்டும் உலக மக்கள் அனைவருக்குமே இறைவன் ஒருவனே... இதில் எனக்கு விபரம் தெரிந்த நாள்முதல் மாற்றுக்கருத்து இருந்ததில்லை இறைவன் மனிதனை படைத்தான் அந்த சுயநலமனிதன் மதத்தை மட்டுமல்ல மாதத்தையும் வகுத்தான்

அப்படியானால் இறைவனை காணவழி ? 
மரணிக்க வேண்டும் அல்லது மரணகாலம் வரை காத்திருக்க வேண்டும் நான் மட்டுமல்ல, நீங்கள் மட்டுமல்ல, சுப்புவும், சுல்த்தானும், சூசையும் மட்டுமல்ல எமது அருமை நண்பர் சிவாதாமஸ்அலியும் கூட காத்திருந்தே காணமுடியும்.

ஐயா மரணத்திற்குபின் மனிதனின் நிலைப்பாடு எப்படி இருக்கும் ? 
ஒருவேளை நான் முந்தினால் பதில் உங்களுக்கு நான் கொடுப்பேன் அல்லது நீங்கள் முந்தினால் எனக்கு பதில்தர கடன் பட்டிருப்பீர்கள் இந்த பதிலை கொடுக்ககூட ஒருவருக்கொருவ்ர் காத்திருக்க வேண்டும் என்பது இறைநியதி.

இந்த உலகில் உடனுக்குடன் எல்லாம் கிடைக்கிறதே இந்த பதில் மட்டும்....?.
 உடனே வேண்டுமெனில் இந்த நிமிடமே மரணிக்க நான் தயார் அதே நேரம் பதிலைப்பெற நீங்களும் மரணித்து என்னுடன் வரத் தயாரா ? ஒருக்கால் பதிலைப் பெற்றாலும் யாரிடம் கொடுப்பீர்கள் ? எப்படி கொடுப்பீர்கள் ? ள்
ஐயா பதிலை உங்களிடம் பெறத்தான் வந்தேன் நீங்கள் என்னிடமே..?.
கேள்வி கேட்டால் அந்தக் கேள்வியில் பதிலெடுத்து கணை தொடுக்கும் சாமர்த்தியத்தை எதிராளிக்கு கொடுக்ககூடியவன் சாணக்கியன் அல்ல கேள்வி கேட்பது வாழைப்பழத்தில் ஊசி ஏற்றவது போலவும் பதில் சொல்வது பச்சமரத்தில் ஆணியடிப்பது போலவும் இருக்க வேண்டும்.

நல்லது ஐயா மறுமுறை வரும்போது ஊசியோடு வருகிறேன் வணக்கம்.
நன்றி நானும் ஆணியோடு காத்திருக்கிறேன் தமிழ் வாழ ! அந்த தமிழோடு நாமும் வாழ 

வாங்கி விட்டீர்களா ? மாதந்தோரும் வெளிவரும் தாமதம் மதத்தைப்பற்றிய ஓர் அலசல் பொய்மையின் எதிர்புறம். 

காணொளி

சனி, மார்ச் 26, 2016

மனமாற்றம் ஒன்றே வாழ்வில் ஏற்றம் தரும்

குழந்தைகள் – பர்ஹானா & அனஸ் மதுரை.

வணக்கம் நட்பூக்களே வலைப்பதிவர் சகோ திருமிகு. வைஷாலி செல்வம் அவர்கள் இன்றைய கல்வி நிலையின் அவலத்தை மாற்றுவதைக் குறித்து விஜய் தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி ஒளிபரப்பியதாக சொல்லி அதனைக் குறித்து பதிவு எழுதச் சொல்லி இருந்தார் நான் எந்த தொலைக்காட்சியும் பார்ப்பதில்லை இதோ மாற்று இருபது பதிவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் நல்லதொரு முயற்சிக்கு முதலில் எமது பாராட்டுகளும், வாழ்த்துகளும் உரித்தாகுக இதில் அவர் செய்த தவறு படிப்பறிவில்லாத என்னை தேர்வு செய்ததுதான் பாவம் அவரும் பதிவுலகுக்கு புதியவர்தானே வெளுத்ததெல்லாம் MILK என்று நினைத்து ஆவின் பால் வாங்குவது போல் பித்தளை முலாம் பூசிய என்னை சொக்கத்தங்கம் என்று தவறாக கணித்து விட்டார் இருப்பினும் அழைத்தமைக்கு மரியாதை கொடுப்பதுதானே தி கிரேட் தேவகோட்டை தமிழனின் பண்பாடு ஆகவே நானும் எனது மூளையின் மூலையில் கிடந்த விடயங்களை சேகரித்து ஏதோ எழுதி இருக்கின்றேன் அழைப்பிற்கு நன்றி சகோ.

வியாழன், மார்ச் 24, 2016

வெள்ளையபுரம், வெள்ளந்தி வெள்ளையம்மாள்

குறிப்பு - தமிழ்மணம் உடல் நலம் சரியில்லை Dr. D.D யை வலைவீசி தேடிக்கொண்டு இருக்கின்றேன் வழக்கமாக ஓட்டுப் போடும் நண்பர்கள் இணைக்க முயற்சி செய்ய வேண்டாம் நன்றி - கில்லர்ஜி

இவள்தான் வெள்ளையம்மாள் இந்த புகைப்படத்தைக் கண்டதால் எழுதிய பதிவு இப்படத்தை எனக்கு இன்றைய தேதி 24.03.2016 முதல் 99 வருடங்களுக்கு இரவல் கொடுத்த கோவைக்கவி பதிவர் சகோதரி திருமதி. பா. வானதி வேதா. இலங்காதிலகம் டென்மார்க் அவர்களுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றி.

வெள்ளையம்மாள் கிராமத்துக் க(ட்டை)ன்னி மனதில் கள்ளமில்லாத உள்ளம் மூக்கும் முழியுமாக இருப்பாள் கன்னம் உப்பி இருக்கும் இவளைக் கிள்ளாதவர்களே இருக்க முடியாது அவ்வளவு வசீகரமானவள் பள்ளிக்குப் போனால் பார்ப்பவர் கண் பட்டுவிடும் என்றும் படித்து தன்னைவிட அறிவாளியாகி விடுவாளோ ? என பயந்து அவரது தந்தை பண்ணையார் பொன்னையா இவளை முதல் வகுப்பின் பாதியிலேயே நிறுத்தி விபரமாக இவளது சான்றிதழையும் வாங்கி வைத்துக் கொண்ட நல்ல இதயம் படைத்தவர் இவர் இரண்டாம் வகுப்பு பூர்த்தி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த பண்ணையாருக்கு தொந்தியார் என்ற புனைப்பெயரும் ரகசியமாக உள்ளது காரணம் வருடம் முழுவதும் 8 மாத கர்ப்பிணி போல் இருப்பார் அந்த சுற்று வட்டாரம் தேவகோட்டை எல்கையை தொடும் வரையிலான18 பட்டிக்கும் இவர்தான் தலைவர், நீதிபதி எல்லாம் தீர்ப்புகளும் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல்தான் இருக்கும் இவர் முடிவெடுத்தால் மாற்றம் இல்லை யாரும் விரல் நீட்டி எதிர்த்து வாய் பேசமாட்டார்கள் அவரைச்சுற்றி அல்லக்கைகள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் இவர்களுக்கு சம்பளமே இவரின் வீட்டில் வயிறு புடைக்க உண்பதே... எதிர்ப்பவர்கள் புறமுதுகு காட்டி ஓடவேண்டியது வரும் ஆகவே யாரும் நாக்கு மீது பல்லுப்போட்டு பேசமுடியாது ஆனால் ? தேவகோட்டைக்குள் கால் வைக்க முடியாது என்பது வேறு விடயம் ஒருக்கால் வைத்தால் ? கால் இருக்காது கோடரி வெட்டு விழும் என்று அவர் காது படவே பேச்சு வழக்கும் உண்டு ஆகவே இவருக்கு தேவகோட்டையை நினைத்தாலே தொடை நடுங்கும் காரணம் தேவகோட்டை கில்லர்ஜி வகையறாக்கள் சொந்தம் விட்டுப் போகக்கூடாது எனக்கருதி அவரது தங்கை கல்யாணியின் மகனுக்கு 250 பவுன் நகையை போட்டு மாவட்டமே சிறக்க மணம் முடித்துக் கொடுத்தார் ஐ.டி முடித்து விட்டு ஒரு பெரிய்ய்ய்ய கம்பெனியில் ஒரு அமௌண்டை தட்டிச்செல்லும் மாப்பிள்ளையுடன் கூட்டுக் குடும்பமாய் சென்னையில் வெள்ளையம்மாள் வாழும் வாழ்க்கையை இதோ காண்போம் வாருங்கள்.

மச்சான் இன்னைக்கு ஆப்பீசு முடிஞ்சு எப்போ... வருவீங்க ?
ஏண்டி. உங்கிட்டே எத்தனை தடவை சொல்றேன் பட்டிக்காட்டுத்தனமா மச்சான்’’னு சொல்லாதே அத்தான்’’னு கூப்பிடுனு... ?

எனக்கு அது வரமாட்டுது மச்சான்...
எது வரமாட்டுது ?

நீங்க சொன்னீயளே அதான்.
ஏண்டி... அதான் வருது இடையிலே ’’த்’’ போட்டு சொல்ல முடியாதா ?

எங்க ஊருல மச்சான்’’னுதான் சொல்லுவோம்.
அது உங்க ஊரு வெள்ளையபுரத்துல இது சென்னை அழகா அத்தான் அப்படினு கூப்பிட்டாத்தான் மரியாதை ஆஃபீஸ் ஃப்ரண்ட்ஸ் வர்ற நேரம் எல்லாம் நீ மச்சான், மச்சான்’’னு கூவுறதை கேட்டுப்புட்டு ஆஃபீஸுல எல்லோரும் கிண்டல் பண்றாங்க...

வேற எபடடி மச்சான் கூப்பிட.. ?
அதான் சொல்றேன்ல சொல்லு பார்ப்போம் அத்தான்.

அத்... து... தான்
அடியே கூமுட்டை கூப்பிட்டா மூன்றெழுத்து இல்லைனா ஐந்தெழுத்து நான்கு எழுத்துல வராதா ? மறுபடி சொல்லு அத்தான்.

அத்...தே...த்தான்.
ம்ஹும் ஆறெழுத்து... நான் சொல்லுற மாதிரியே சொல்லு.... அ
த்
த்
தா

ஆத்தாடி அத்தா சொல்லக்கூடாது முஸ்லீம் வீட்டுலதான் அப்பாவை அப்படி கூப்புடுவாங்க....
அடி வெள்ளையபுரத்து வெளங்கா மட்டை ஏண்டி அவசரப்படுறே ? சொல்லுவேன்ல... அத்தா இல்லடி அத்தான்டி.

அம்மாடி எனக்கு வராது மச்சான்
சரிடி நீ பேசாமல் என்னை பெயரைச் சொல்லி கூப்பிடு அதான் பிரச்சினையே இல்லை.

அய்யய்யோ... புருஷன் பெயரைச் சொல்லக்கூடாது.
எவன் சொன்னது உங்கழுத்துல போட்டுருக்கியே.. அதுக்குப் பேரென்ன ?

இது நீங்க கட்டுனது மச்சான் தாலி.
அடியே.. இவளே.. அது எனக்குத் தெரியாதா ? மத்ததெல்லாம் நிறைய மாட்டி வச்சுருக்கியே அதக்கேட்டேன்.

எதும் உங்களுக்கு வேணுமா மச்சான் ?
எனக்கு வேண்டாம்டி இந்தா இதுதான் இதுக்குப் பேரென்ன ?

செயினு மச்சான்.
முதல்ல இந்த மச்சான்’’னு சொல்றதை நிறுத்துடி.

சரி மச்சான்.
ஐயோ... உனக்கு இங்கிஷுல சொல்லத் தெரியுது அதையே தமிழ்ல தெரியாதா ?

அது வந்து... மச்சான் இதை தமிழ்ல சொன்னா... மச்சானோட பேரு வரும்னு எங்க அக்காதான் கல்யாணத்துக்கு முன்னேயே இங்கிலீச்செல்லாம் சொல்லிக் கொடுத்துச்சு.
அடேங்கப்பா. ஒங்க அக்கா எம். ஏ. பி. எட் முடிச்சவ.. கழுதை விட்டையிலே முன்விட்டை வேற, பின்விட்டை வேறயா ஏண்டி இப்படி கழுத்தை அறுக்குறீங்க...?

ய்யேன்... மச்சான் கோபப்படுறீங்க ?
பின்னே என்ன... அத்தான்னு சொல்லத் தெரியாதா ?  

அப்ப மாமானு சொல்லவா  மச்சான் ?
எங்க அப்பாவை எப்படிக் கூப்பிடுவே ?

மாமா’’ன்னு..
ஏண்டி நானும் மாமா எங்க அப்பனும் மாமாவா ?

அப்ப அவுங்களை பெரிய மாமானு கூப்பிடுறேன் மச்சான்.
ஆமாடி அவரு பெரிய மாமா, நான் சின்ன மாமா, எங்க அண்ணனை நடு மாமானு கூப்பிடு வெளங்கிடும்.

ய்யேன் மச்சான் இதுக்குப் போயி இவ்வளவு பிரச்சனை பண்ணிறீங்க ?
அய்யோ.. இப்படிக் கொல்றாளே... இங்கே பாருடி கடைசியா சொல்றேன் என்னை பெயரைச் சொல்லி கூப்பிட முடியுமா... முடியாதா ?

சொ...சொல்றேன்.. மச்..சான்...
ம்.. ம் சொல்லு சங்கிலி.

சங்.... அய்யய்யோ குலதெய்வத்துக்கு ஆகாது மச்சான்.
இங்கே பாருடி நீ இப்பச் சொல்லலை உங்க வீட்டுலதானா கொண்டு போயி விட்டுட்டு வந்துடுவேன்.

அய்யய்யோ வேண்டாம் மச்சான் இல்லைனா.. வேற பேரு சொல்லிக் கூப்பிடுறேன் மச்சான்.
அதெப்படி வேற பெயரைச் சொல்லிக் கூப்பிடுவே... அது தப்பில்லையா... சரி சொல்லு பார்ப்போம் ?

இந்த டி.வி பொட்டியிலே கிரிக்கிகிட்டு வெள்ளாடுவாங்கள்ல அந்த பேரு....
என்ன சொல்றே... கிரிக்கிகிட்டு வெள்ளாடு.... மே... மே.. அப்படினு கூப்பிடுவியா ?

இல்லே மச்சான் கையிலே மட்டைய வச்சுக்கிட்டு நடுவாள.. நின்னு வெள்ளாடுவாங்களே... எல்லாரும் சுத்தி ஒக்காந்து பார்ப்பாங்க...
ஓஹோ கிரிக்கெட்டா சரி அது எந்தப் பெயரைக் கூப்பிடுவே ?

மச்சான் பேரு மாதிரியே ஒராளு வெள்ளாடுவாரு..
என்னை மாதிரி எவன்டி மீசை வச்சு கிரிக்கெட்டு விளையாடுறான் ? தாடி வச்சவன் இருக்கான்.

மச்சான் அந்த ஆளுக்கு மீசையே இல்லே மொழுக்கட்டீனு இருப்பாரு... பேருகூட குழி குழினு சொல்வாங்க...
ஏண்டி... கங்குலி’’யை சொல்றீயா ?

ஆமா மச்சான் அந்தப் பேருதான்.
ஏண்டி... விளங்காதவளே... சங்கிலி பொண்டாட்டி’’யை நீ கங்குலி பொண்டாட்டி’’னு சொல்லிக்கிறேனு சொல்றியே வெட்கமா இல்லை.

என்ன மச்சான் இப்படிச் சொன்னாலும் சண்டைக்கு வர்றீங்க ?
இப்படி வெள்ளந்தியா இருக்காளே... என்ன செய்யிறது ச்சே ’’மனசு’’ சே. குமாருக்கு தெரிஞ்சா ’’வெள்ளந்தி மனுசி’’னு தொடர் எழுத ஆரம்பிச்சுடுவாரே... அய்யோ சொக்கா நான் என்ன செய்யிவேன் படிக்காதவளைக் கட்டிக்கிட்டு இவ்வளவு அவதியா இருக்கே...

என்ன மச்சான் உட்கார்ந்துட்டீங்க... ஆப்பீசுக்கு போகலையா ?
ஆமாடி காலையில ஆரம்பிச்சு விளக்கம் சொன்னேன் மணி இப்ப 11.30 ஆச்சு இனி போயி கிழிக்க... போடி உள்ளே போயி உன் வேலையை பாரு இனிமே என்னை மச்சான்’’னே... கூப்பிடு அடுத்தவன் பொண்டாட்டி’’னு சொல்றதுக்கு மச்சானே பெஸ்ட்.

சரி மச்சான் ய்யேன் தலையை புடிச்சுக்கிட்டு இருக்கீங்க ?
உன்னோடப்பேசி தலைவலியே வந்துடுச்சு நான் கொஞ்சம் படுக்கிறேன். 

மச்சான் சுக்கு நச்சுப்போட்டு காப்பித்தண்ணி போட்டுத் தரவா ?
போடி அப்படியே கொஞ்சம் சயனைட்டும் கலந்து கொண்டு வா ! குடிச்சிட்டு சாயிறேன்.

சரி மச்சான் எங்கே வச்சுருக்கீங்க ?
எதை ?

இப்போ ஏதோ சொன்னீங்களே.. செயின்நட்டு... அப்படினு... ?
? ? ?

 காணொளி
 பதிவு பெரிதாக போயிருந்தால் மன்னிக்கவும் கில்லர்ஜி