தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, டிசம்பர் 26, 2021

இறுதியில் சுபம்

 

01. பல்லாவரம் வீட்டுக்கு பட்டா போடுவதற்கு பல்லாயிரம் லஞ்சம் கேட்டவரைக் குறித்து புகார் கொடுக்க சென்ற செங்குன்றனிடம் லஞ்சம் கேட்டார் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி லட்சுமணன்.

செவ்வாய், டிசம்பர் 21, 2021

பெயர்த்தி ஷிவாண்யா

ணக்கம் நட்பூக்களே... எனது இரண்டாவது பெயர்த்தி ஷிவாண்யாவுக்கு இன்று முதலாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்திகள் என்னை நாடி வருவாள்ர்கள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன்.

சனி, டிசம்பர் 11, 2021

கோஹினூர், கோதண்டம் Weds கோகிலம்

 

மாமன் மகனும், அத்தை மகளும்...

பெண்

கோணக்காலை இழுத்து போகும்

கோதண்டம் கருத்த மச்சான்

கோவிலூரு சந்தைக்கா போறீக

கோவிக்காமல் கேளு கொஞ்சம்

திங்கள், டிசம்பர் 06, 2021

விதியோரம்...

ணக்கம் நண்பர்களே... ‘’நதியோரம் நாணல் ஒன்று நாணம் கண்டு’’ என்ற கவிஞர் வாலியின் எனக்கு பிடித்த சுத்ததன்யாசி ராகத்தில் பாடிய அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 

புதன், டிசம்பர் 01, 2021

தொலைநோக்கு பார்வை

மேலேயுள்ள புகைப்படத்தில்  திரைப்படக் கூத்தாடியின் பதாகைக்கு பாலூற்றும் பெண்ணை பார்த்தீர்களா ? இப்பெண் வீட்டுக்கு விளக்கு ஏற்றுவதற்கு தகுதியானவளா ? இதற்குத்தான் செல்லம்மா புருசன் பெண்களுக்கு கல்வி புகட்ட வேண்டும் என்று கொதித்து எழுந்தானா ? நாகரீக வளர்ச்சி, விஞ்ஞானத்தின் வளர்ச்சி பெண்களை எங்கு கொண்டு போய் நிறுத்தி இருக்கிறது பார்த்தீர்களா ?

வியாழன், நவம்பர் 25, 2021

சூராணம், சூப்பர்வைசர் சூர்யா

 

புதாபி வேலை செய்யுமிடத்தில் உணவருந்தும் இடைவேளையில்.... அன்றைய சூழலின் காரணமாக சூப்பர்வைசர் சூர்யா தனது இரண்டு பணியாளர்களோடு ஒன்றாக சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றார்-கள்.

ஞாயிறு, நவம்பர் 21, 2021

ஆறடி நிலம்

 

நல்லவனாய் மாண்டவனுக்கும்,

கெட்டவனாய் ஆண்டவனுக்கும்,

மகிழ்வாய் வாழ்ந்தவனுக்கும்,

கவலையில் வீழ்ந்தவனுக்கும்,

செவ்வாய், நவம்பர் 16, 2021

ஏழூர், ஏழரை ஏழுமலை

 

அதோ போறாரே அவரு ரொம்ப காஸ்ட்லியா செலவு செய்வாரு...
எப்படி ?
வீடு கட்டும்போது மினரல் வாட்டரில்தான் கலவை போடச் சொல்லுவாரு...
? ? ?
0********************1

வியாழன், நவம்பர் 11, 2021

லொள்ளு வேட்டி நைனார்

ணக்கம் நண்பர்களே... ‘’சத்தியத்தின் சோதனைக்கு எத்தனை பேர்’’ போட்டி என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடலை லொள்ளு மன்னன் பாணியில் மாற்றி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

சனி, நவம்பர் 06, 2021

பெயர்த்தி க்ரிஷண்யா

 

ணக்கம் நட்பூக்களே... எனது மூத்த பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு இன்று இரண்டாவது பிறந்தநாள் அவளது வாழ்வு என்றென்றும் வளம் பெற அனைவரது வாழ்த்துகளையும் வேண்டுகிறேன். என்றாவது ஓர்தினம் என் பெயர்த்தி என்னை நாடி வருவாள் என்று நம்பி காலத்தை கடத்துகிறேன்.

சனி, அக்டோபர் 30, 2021

கலைஞர்களின் நிலைப்பாடு

 

கலைவாணர் NSK (Nagarkovil Sudalaimuthu Krishnan) என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது தமிழ் திரைப்படங்களின் முன்னோடிகளில் முக்கியமானவர் இவர் மனிதநேயமுள்ள மாமனிதர் என்பதும் இங்கு குறிப்பிட வேண்டியது அவசியம். அவரைத் தொடர்ந்து பல நகைச்சுவை நடிகர்கள் வந்தார்கள் பலர் நின்றார்கள், சிலர் வென்றார்கள், சென்றார்கள்.

ஞாயிறு, அக்டோபர் 24, 2021

கலைகளின் நிலைப்பாடு

வணக்கம் நட்பூக்களே... திரைப்படத்தைப் பற்றி எழுதுவோம் என்று நினைத்தபோது... நடிகரைப்பற்றி எழுதினால் என்ன ? என்று மனதில் தோன்றியதின் விளைவே இப்பதிவு. திரு. சிவாஜி கணேசன் அவர்களும், திரு. எம். ஜி. இராமச்சந்திரன் அவர்களும் தங்களை அண்ணன்-தம்பி என்றும், குழந்தைகள் சித்தப்பா, பெரியப்பா என்று அழைத்தார்கள் என்றும் நாம் பத்திரிக்கை வாயிலாக அறிந்த விடயங்கள். 

திங்கள், அக்டோபர் 18, 2021

நீடாமங்கலம், நீட் நீலாம்பரி


 கொரோனா காலத்தில் கணவனும், மனைவியும் வீட்டுக்குள் சிறை வாழ்க்கை வாழும்போது பொழுது போகாத அர்சனா தனது கணவன் அர்ச்சுனனை அர்ச்சணை செய்ய ஆரம்பித்தாள்.

புதன், அக்டோபர் 13, 2021

தமிழ்ச்சூடி

 

துரையிலிருந்து அலைபேசி அழைப்பு (நண்பரின்) தங்கையிடமிருந்து...
 
அண்ணா மகளோட பள்ளி ஆண்டு விழாவுக்கு தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதை எழுதி வரச்சொல்லி இருக்கின்றார்கள். நான் ஆங்கிலத்தில் எழுதி விட்டேன் தமிழைக் குறித்து தமிழில் கவிதை வேண்டும். உங்கள் ஞாபகம் வந்தது நீங்கள் எழுதி தாருங்கள் அவசரம் அண்ணா.

வெள்ளி, அக்டோபர் 08, 2021

எனது விழியில் பூத்தது (5)

 

  ணக்கம் நட்பூக்களே.... இது எனது விழியில் பூத்த ஐந்தாவது பதிவு இவைகள் இணையத்திலோ, அல்லது பிறருடைய தளங்களிலோ எடுத்து நான் தரவில்லை இதில் வழக்கம்போல எனது மாற்றங்களையோ, திருத்தங்களையோ (Edit) செய்யவும் இல்லை எமது திருநாமத்தை மட்டும் இதயம் நல்லெண்ணையில் பொறித்து இருப்பேன் காரணம் வரலாறு முக்கியம். இவைகளை ரசித்தால் ? ? ? கருத்து மழை பொழியலாம் அன்பன் - கில்லர்ஜி
 
வாருங்கள் ரசிப்போம்...

ஞாயிறு, அக்டோபர் 03, 2021

பிஞ்சிருக்கும் பிறை

ணக்கம் நண்பர்களே... ‘’முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன். 
 
இதோ எனது பாடல்...

செவ்வாய், செப்டம்பர் 28, 2021

தேன்காய்


      01. ஃபேன் ஓடும்
பேன் ஓடுமா ?
 
02. மீன் நீந்தும்
மான் நீந்துமா ?
 
03. பூனை தாவும்
யானை தாவுமா ?

04. கிளி பேசும்
எலி பேசுமா ?

வியாழன், செப்டம்பர் 23, 2021

எண்ணிக்கை ஒன்று

ட்பூக்களே... மேலேயுள்ள சுவரொட்டியை பார்த்தீர்களா ? ஏதோ நாட்டைக் காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கொடுத்தது போல எண்ணிக்கை ஒன்று என்று வீரா வசனத்துடன் சுவரொட்டி ஒட்டி இருக்கின்றார்கள் கூமுட்டைகள். இவர்களை பெற்று, வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோருக்கு இவர்கள் கொடுக்கும் பரிசு இதுதானா ?

வெள்ளி, செப்டம்பர் 17, 2021

யாருக்கும் வெட்கமில்லை...

 

ணக்கம் நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? நாட்டை ஆள ஆசைப்படுபவனின் உள்ளத்தின் வெளிப்பாடு. இவனுக்கு என்ன கொல்லைக்கழிச்சல் ? இவனது மனைவிக்கு நகராட்சி கட்டிடத்தின் வாடகை பாக்கியை கொடுக்க மனமில்லை, இவன் தனது திருமண மண்டபத்தின் சொத்து வரிக்கு விலக்கு கொடுக்க வேண்டுமாம்.

ஞாயிறு, செப்டம்பர் 12, 2021

இருளோடு கில்லர்ஜி

 

புதாபி வெங்கலக்கடைத்தெரு பஜாரில் நடந்து போனபோது எதிரும் புதிருமாக சந்தித்து கொண்டது முன்பொரு காலத்தில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த நண்பர்கள் இருவரும் ஒரே நொடியில் பார்த்துக் கொண்டனர். வதனத்தில் மகிழ்ச்சி ரேகைகள் மூன்று திசைகளிலும் ஓடியது.

திங்கள், செப்டம்பர் 06, 2021

நஞ்சில் ஓர் பாளையம்

 

ணக்கம் நண்பர்களே... நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

திங்கள், ஆகஸ்ட் 30, 2021

நிஜத்துடன் யுத்தம், நிழலுக்கு முத்தம்

 

Kalaiselvi Killergee
30.08.1991 – 30.08.2021
 
சேனா உனக்கு நிஜத்தில் தந்தவைகளை விட இன்று நிழல் படத்துக்கு நான் தருபவை அதிகமாகி விட்டதே... அது முத்தம் மட்டுமல்ல... உனக்கு பிடித்தமான மல்லிகைப்பூவும்தான். அன்று வெறும் இரண்டு ரூபாய்க்கு வாங்கி கொடுக்க முடியாத வாழ்வு இன்று எவ்வளவுக்கும் வாங்கி கொடுக்கலாம் ஆனால் உனது படத்துக்குதானே கொடுக்க முடிகிறது. என்னவொன்று இதில் பெண்கள் மல்லிகைப்பூ சூடிக்கொள்வதற்கான அடிப்படைக் காரணத்தை நீ மறந்து, மறுத்து விடுவாய்.

வியாழன், ஆகஸ்ட் 26, 2021

வரலாற்றின் அழகு

கோயமுத்தூரின் முக்கிய சாலையில் சிங்காநல்லூர் பேருந்து நிலைத்தின் அருகில் ஒரு தியாகியின் சிலையொன்றை வைத்து இருப்பதை கண்டேன். அவரது பெயர் திரு. N. G. ராமசாமி தோற்றம் 11.03.1912 மறைவு 12.02.1943 அதாவது இவரது அகவை 31 சரியா ? ஆனால் இவரது சிலையின் தோற்றத்தை சுமார் ஐம்பது அகவைக்கும் மேலானவர் போல் வடித்து இருக்கின்றார்கள். இது எப்படி சாத்தியமாகும் ?

வெள்ளி, ஆகஸ்ட் 20, 2021

கொள்ளிவாயன் மாதஇதழ்

ணக்கம் ஐயா ஒற்றைவரி கொன்றை வேந்தன் அவர்களே.. யாருடைய கேள்விகளுக்கும் வெகு சாதுர்யமாக ஒற்றை வரியில் பதில்கள் சொல்லி அவர்களது வாயில் களி மண்ணை வைத்து அடைத்து விடுவதாக சொல்கிறார்கள். இருப்பினும் அந்த ஒற்றை வரியில் ஆழமான கருந்துகள் பொதிந்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். தாங்கள் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லையாம், இதன் காரணமாக தங்களுக்கு ஊமைநாதம் என்ற பட்டம் கொடுத்து இருக்கின்றார்கள். அப்பேர்ப்பட்ட அறிவு மேதையை நாங்கள் பேட்டி காண்பதில் எங்களது கொள்ளிவாயன் பத்திரிக்கை பெருமிதம் கொள்கிறது. பேட்டியை தொடங்கலாமா ?
நன்று

சனி, ஆகஸ்ட் 14, 2021

அப்பாச்சிமேடு, அப்பா அப்பாதுரை

 

01. மகனுக்கு மணம் முடித்து மருமகளுக்கு தந்தையாக தயாரானார் தயாநிதி. சூழ்ச்சியில் மகனுக்கு தந்தையானான் சம்மந்தி விதியால் தயாநிதி வீதியில்...

வியாழன், ஆகஸ்ட் 12, 2021

ஏழு நாட்களும்...


திங்கட்கிழமை திவ்யாவுக்கும்,
செவ்வாய்க்கிழமை செல்விக்கும்,
புதன்கிழமை புனிதாவுக்கும்,
வியாழக்கிழமை விமலாவுக்கும்,
வெள்ளிக்கிழமை வெண்ணிலாவுக்கும்,
னிக்கிழமை சங்கவிக்கும்,
ஞாயிற்றுக்கிழமை ஞானவள்ளிக்கும்,

வெள்ளி, ஆகஸ்ட் 06, 2021

பில்லாக்கரை, பில் பில்லா

 பில்லாக்கரை இந்த ஊரில் பில்லா என்று ஒருவன் இருந்தான். இவனை பில், பில்லா என்றே அனைவரும் சொல்வார்கள் காரணம் எதற்கெடுத்தாலும் பில் போட்டு வசூலித்து விடுவான். இவ்வுலகில் உள்ள அனைத்து நல்ல செயல்களுக்கும் எதிர்ப்பதமானவன் அவ்வளவு தூரம் அயோக்கியத்தனம் செய்வான்.

சனி, ஜூலை 31, 2021

இந்தியா வல்லரசா ?


ணக்கம் நட்பூக்களே... இந்தியா வல்லரசாகி விட்டது என்று காலையில் எழுந்தவுடன் தொலைக்காட்சியை பார்த்தால் சேவல்களுக்கு இணையாக கூவுகின்றார்களே... கூமுட்டைகள் இதோ பாருங்கள்... இந்திய வங்கிகளில் சுமார் ஒன்பதாயிரம் கோடியை கடனாக பெற்றுக் கொண்டு இங்கிலாந்தில் போய் வாழும் திருவாளர். விஜய் மல்லையாவை சட்டரீதியாக கைது செய்து கொண்டு வரமுடியாத இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வல்லரசாகி மக்களுக்கு லாபமென்ன ?

செவ்வாய், ஜூலை 27, 2021

பல்லும், பலமும்

 

வணக்கம் நட்பூக்களே... பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற கவியரசரின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே உண்மையான பாடல் வரிகளும் இருக்கிறது. அதன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்.

வெள்ளி, ஜூலை 23, 2021

இறையுணர்வு

 

வணக்கம் நட்பூக்களே...

சற்றே இடைவெளியுடன் மீண்டும் உங்கள் கில்லர்ஜி காரணம் நானும், எனது இனிய இயந்திர உறவான கணினியும் கொரோனா கொழுந்தியாளின் போக்குவரத்து தடையால் நானொரு ஊரிலும், அவளொரு ஊரிலுமாக... பிரிந்து விட்டோம் வழக்கம் போல் அலைபேசியில் பதிவிடலாமே என்று திண்டுக்கல் ஜி அவர்கள் நினைக்கலாம்.

சனி, ஜூன் 19, 2021

அதிராம்பட்டிணம், அதிரடி அதிரா


‘’அதிரா’’

இந்த பெயரைக் கேட்டாலே... அதிராம்பட்டிணம் மட்டுமல்ல சுற்று வட்டார பதினாறு கிராமங்களின் காவல் நிலைய சுவற்றின் செங்கல்கள் இரண்டு தானாகவே பெயர்ந்து கீழே விழும். என்றால் அப்பாவி பொதுமக்கள் எப்படி பயப்படுவார்கள் ? வைஜயந்தி ஐபிஎஸ் சையே ஓர் தினம் தூக்கிப்போட்டு மிதித்ததில் உடனடியாக மாற்றலாகி வேறு ஊருக்கு பறந்து போனவர் அப்படியே வடக்கு பக்கமாகவே போய் செட்டிலாகி விட்டாராம்.

சனி, ஜூன் 12, 2021

மதுரை கடலோரத்தில்...

ஏண்டா மங்குனி உங்க தலைவர் நேற்று விட்ட அறிக்கையில அப்படியென்ன சொல்லி இருக்காரு ?

நாங்க ஆட்சியை பிடித்தால் தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு கடலைக் கொண்டு வருவோம்னு சொல்லி இருக்காருணே...

திங்கள், ஜூன் 07, 2021

வாழ்க நீவீர் எம்மான்...

புதாபி நண்பரது வீட்டுக்கு வழக்கம் போல் ஓர்தினம் சென்றேன். நண்பர் கணினியில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டு இருந்தார். தங்கை கொடுத்த காஃபியை அருந்தி விட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த நான்...

செவ்வாய், ஜூன் 01, 2021

சுள்ளுவாடி, சுள்ளான் சுனில்தத்


 சுள்ளுவாடி என்ற ஊரில் சுள்ளான் ஒருவன் இருந்தான் அவனது பெயர் சுனில்தத் இவனை பெயரைச் சொல்லி அழைக்கவே மக்கள் பயப்படுவார்கள் காரணம் இவன் வாயிலிருந்து வேறு மாதிரியான எடக்கு மடக்கான பதில்கள் கேள்விகள் போன்றே வரும். சரியான உச்சரிப்பில் கேட்டாலும் இவன் திறித்து விடுவான் எமகாதகன் இந்த வார்த்தையை படித்ததோடு மறந்து விடுங்கள் அவனிடம் கேட்டால் உங்களுக்குத்தான் பிரச்சனை.

வியாழன், மே 27, 2021

பதினாறாய் மூன்றும்...

01-16

மாலையில் மலர்ந்து விடும் நிலவே

காலையில் மறைந்து போவது எங்கே

சாலையில் நடந்து செல்லும் மலரே

சோலையில் பாடிச்செல்லும் குயிலே

சனி, மே 22, 2021

மகிழுந்து गाड़ी سيارة CAR కారు കാർ

கோவை பிரமாண்டமான மகிழுந்து விற்பன்னர் நிறுவனம்.

இங்கு மகிழுந்து வாங்கும் உறுதியான எண்ணங்களோடு உள்ளே நுழைந்தேன். காரணம் ஏற்கனவே ஊரிலுள்ள எல்லா நிறுவனங்களிலும் ஏறி, இறங்கியாகி விட்டது. இனி மிதிவண்டி நிறுவனமே பாக்கி.

திங்கள், மே 17, 2021

சம்பல், சாம்பல் சாம்பசிவம்

ட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படச் செய்தியை பார்த்தீர்களா ? இதெல்லாம் காலக்கொடுமைதானே... நண்டு கொழுத்தால் வலையில் நிற்காது என்பார்களே... அதைப்போல் நாட்டுல எத்தனையோ பெண்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இவளுக்கு கணவன் சண்டை போடமாட்றானாம். 

ஞாயிறு, மே 09, 2021

வருங்கால முதல்வரே...

வணக்கம் நட்பூக்களே... ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெறுகிறது என்றால் அதன் வெற்றிக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உழைத்து இருக்கின்றார்கள். அவர்கள் யார்... யார் ? பிரம்மன் என்று சொல்லப்படும் தயாரிப்பாளர் அதாவது அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் முதலாளி இவர்கள் இல்லையெனில் திரையுலகமே இல்லை.