தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஏப்ரல் 28, 2018

திருமலை நாயக்கர் மஹால்


2014
இடம் - மதுரை திருமலை நாயக்கர் மஹால்

பலமுறை அவ்வழியே போயிருந்தாலும் வாழ்வில் முதல் முறையாக உள்ளே நுழைகின்றேன் கழுத்தில் எனது கைக்குழந்தை நுழைவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்த பலகையை கண்டவுடன் எனக்கு கோபம்தான் வந்தது இது எப்படி சரியானதாகும் ? அதாவது நுழைவுச்சீட்டின் கட்டணம் உள் நாட்டுக்காரர்களுக்கு பத்து ரூபாய், வெளி நாட்டுக்காரர்களுக்கு ஐம்பது ரூபாய் இருவருமே இரு கண்கள் கொண்டுதான் பார்க்கின்றார்கள் இதிலென்ன ? ஏற்றத்தாழ்வு உண்மையில் அவர்களுக்குதான் குறைவாக இருக்க வேண்டும் இதைவிடப் பெருமை என்னவென்றால் ? அவர்களுக்கு இலவசம் என்பதே சரி புகைப்பட கருவிக்கு மட்டும் கட்டணம் இருவருக்குமே முப்பது ரூபாய் இது மட்டும் சாத்தியமா ? புகைப்படக்கருவியே இல்லாமல்கூட இன்றைய கைப்பேசிகளில் பிரமாண்டமாக எடுக்க முடிகிறதே அதற்கு கட்டணம் வேண்டாமா ? நம்ம நாட்டான் இதைத்தானே செய்வான்
.
நமது நாட்டு வரலாற்றுச் சின்னங்களை பார்வையிட வருபவர்களை வரவேற்பது நமது கடமையில்லையா ? அவர்கள் நம்மைப்போல் பார்த்து விட்டு சாதாரணமாக மறந்து போய் விடுவதில்லை புகைப்படங்கள் எடுத்து அதனைக்குறித்து அவர்கள் நாட்டு பத்திரிக்கைகளில் எழுதுவார்கள் இது நமக்கு பெருமைக்குறிய விடயமில்லையா ? இந்த ரூபாய் அவர்களுக்கு இதொரு செலவே இல்லை என்று சுற்றுலா வாரியம் நினைக்கிறதா ? இதையும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கின்றார்கள் அவர்கள் இதென்ன ? நாட்டுக்கு ஒரு நீதி என நினைக்க மாட்டார்களா ? சரி, சிலர் வெளிநாட்டான் போலவே இருப்பான் அவன் நுழைவுச்சீட்டு கேட்டால் ? அவனுக்கும் இதே கட்டணமா ? ஆனால் இதனைக்குறித்து ஆராய்வதற்கு அன்று நேரமில்லை எனக்கு, சில உள்ளூர்க்காரர்களே ஸ்ரீலங்கா மாதிரி இருப்பார்கள் அவர்களிடம் ஐம்பது ரூபாய் கட்டணம் கேட்டால் நியாயமா ?


உள்ளே நுழைந்தேன் எவ்வளவு சரித்திரப்புகழ் பெற்றது இப்படி தரித்திணியம் பிடித்தது போலிருக்கிறதே மனம் வருந்தினேன் ஆம் நண்பர்களே எங்கு நோக்கினும் கிறுக்கர்களின், கரிக்கிறுக்கல்கள் தவறான செய்கை காட்சிகள் கரிகளால், சாக்பீஸ்களால் கோடுகள், காதலியின் பெயர்கள் ஏண்டா ? பேதியில ஓயிருவியலா.... சொந்தச் செலவில் தாஜ்மஹால் கட்டி எழுதுங்களேண்டா... இதில் மலையாளப் பெயர்களும் இருந்தது மூலை முடுக்குகளில் டெம்ப்ரவரி காதலர்கள் இவர்கள் சரித்திரம் படிக்கவா ? வருகிறார்கள் இவர்களுக்குத்தான் பத்து ரூபாயா ? ஐம்பது ரூபாய் கொடுத்தானே... அவன் நிச்சயமாக இப்படிச் செய்யமாட்டான் காரணம் அவன் கலையை ரசிக்கத் தெரிந்த கலைஞன். இதில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம், பராமரிப்பு செலவுகள் இருக்கிறது என்கிறீர்களா ? அந்தப் பாராமரிப்பு லெட்சணத்தைத்தான் இப்பொழுது காணப் போகிறோம் ஆம் நண்பர்களே எங்கு பார்த்தாலும் குப்பைகளும், பறவைகளின் அசுத்தங்களும், ஆறறிவுகளின் பான்பராக் எச்சில்களும், ஒரு இடத்தில் மக்கள் நடந்து போகும் நடைபாதைதான் எவ்வளவு சாதாரணமாக மின்சார வயர்களை கீழே போட்டு வைத்திருந்தார்கள் தெரியுமா ? குழந்தைகளுக்கு எட்டும் உயரத்தில் ட்ரான்ஸ் பார்மர்கள் இதையெல்லாம் யார் கேட்பது ? கேட்டால் மக்களாட்சி என்கிறார்கள் இதில் குப்பை போடுவதற்கு தொட்டிகள் வேறு நான் குறிப்புகள் எழுதியபோது தவறுதலாக எழுதிய பேப்பரைக் கிழித்து அதில் போட்டு விட்டு பார்த்துக்கொண்டே நின்றேன் காரணம் யாராவது இதில் குப்பையை போடுகிறார்களா ? ¼ மணி நேரமாக 28 + 3 நபர்கள் போட்டார்கள்



குப்பைத் தொட்டியில் அல்ல குப்பைத் தொட்டி மீது... ஆம் தொட்டியை திறந்து போட்டவர்கள் மூன்று வெளிநாட்டினர் இதில் என்னைச் சேர்க்கவில்லை தொட்டிமீது எறிந்தவர்கள் இந்தியர்கள் இருபத்து எட்டு பேர். நான்தான் திறந்து போட்ட பிறகுதானே கணக்குப்பிள்ளையானேன் இதில் பத்து ரூபாய் கட்டணம் யாருக்கு ? யாருக்குமே சமூக அக்கரை இல்லை ஆகவேதான் நாம் பின்தங்கிப் போய்க் கொண்டே இருக்கிறோம் இதன் எல்லை எதுவரையோ....


இதில் சுவாரஸ்யமான விடயமும் உண்டு சுமார் நான்கு மணி நேரம் உள்ளேயே உலாவி இருப்பேன் ஆம் ஐந்து கல்லூரிப் பெண்கள் இவர்கள் நான் வளைத்து, வலைந்து புகைப்படம் எடுப்பதை கவனித்துக் கொண்டே வந்தார்கள் அவர்களும் தங்களது கைப்பேசியையும், புகைப்படக் கருவியையும் கொண்டு எடுத்தார்கள் எனது தோற்றம் அவர்களுக்கு வினோதமாகப் பட்டதோ என்னவோ என்னைப்பற்றி பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன் எனக்கென்ன, பயமா ? முகம் தெரியாத அரபிப் பெண்களிடமே பேசி விடுவேன் இவர்கள் எனக்கு ஜூஜூபிதான் இருப்பினும் நான் போகும் இடமெல்லாம் அவர்களும் வந்தார்கள் குறிப்பாக என்னை அவர்கள் வேறு எதையோ படம் எடுப்பதுபோல் என்னையும் எடுத்தார்கள் (நான் அபுதாபியில் எடுக்க கூடாத போலீஸ் அலுவலகத்திலேயே கைப்பேசியில் ஒலியை அணைத்து விட்டு பேசுவதுபோல் நடித்து சுற்றுப்புறத்தை புகைப்படம் எடுத்தவன் இவர்கள் நம்மிடம் விளையாடுகிறார்கள் போகும்வரை போகட்டும்)

எல்லாப் பெண்களுமே இதைச் செய்தார்கள் எனக்கு நன்றாக புரிந்து விட்டது நானும் விதவிதமாக படமெடுப்பதுபோல் பல கோணங்களில் நடித்தேன் குறைந்த பட்சம் என்னை இருபது புகைப்படமாவது எடுத்திருக்க வேண்டும் இதுவரை நான் கைப்பேசிகூட பேசவில்லை முடிவுக்கு வந்து புறப்படும் தருணம் வரும்போது அந்தப் பெண்களை பொதுவாகப் பார்த்து சாதாரணமாக கேட்டேன் இந்தப் படங்களை எல்லாம் முகநூலில் போடுவீங்களா ? அனைவரும் திடுக்கிட்டு திருத்திருவென முழித்தார்கள் அதாங்க புரியலை ஃபேஷ்புக் அதில் போடுவீங்களானு கேட்டேன்.
ஏன்... அது எங்க இஷ்டம் ?  
என்றாள் ஒருபெண் உங்கள் இஷ்டம்தான் அது எனக்கும் தெரியும் என்னை வளைச்சு வளைச்சு எடுத்தீங்களே அதுனாலேதான் கேட்டேன் இப்போ நீங்க என்னை எடுத்தீங்க, அதேநேரம் உங்களை நான் எடுத்தால் விட்டுக் கொடுப்பீங்களா ? என்னோட ஃபோட்டோவை போடுறதுல எனக்கு ஆட்சேபனை கிடையாது காரணம் இண்டர்நெட்டில எங்கு பார்த்தாலும், எந்த சைட்டுக்குப் போனாலும் என்னோட ஃபோட்டோ விதவிதமாய் இருக்கும் சரி இவ்வளவு ஃபோட்டோ எடுத்தீங்க எதுலயுமே நான் நேருக்கு நேரா போஸ் கொடுக்கலையே...
உடனே பட்டென இரண்டு பேர் சிரித்து விட ஒருத்தி சொன்னாள்
Sorry Sir
சாரி எதுக்கு ? இவ்வளவு தைரியமா ஃபோட்டோ எடுத்தீங்க நாம ஐந்து பேர் இருக்கோம் இவன் ஒருஆளுதான் அப்படினா ? நீங்க நூறு பேர் வந்திருந்தாலும் நான் இப்படித்தான் கேட்டிருப்பேன், நானே பேசிக்கிட்டு இருக்கேன் யாராவது பதில் சொல்லுங்க...
இல்லை சார் நீங்க வித்தியாசமா இருந்தீங்க யாருமே எடுக்காத இடங்களை வித்தியாசமாக உங்களை நீங்களே ஃபோட்டோ எடுத்தீங்க அதனாலதான் உங்களை எடுத்தோம் சாரி ஸார்
சரி பரவாயில்லை உங்க டைம்பாஸூக்கு இன்றைக்கு நான் கிடைச்சுருக்கேன்
ஸார் உங்க சொந்த ஊர் ?
தி கிரேட் தேவகோட்டை
அதென்ன... தி கிரேட் ?  
ஏன்... தி கிரேட் ப்ரிட்டன் அப்படினா... நம்புவீங்களோ.... ?  
சிரித்துக்கொண்டே தாங்க்யூ சார் என்றாள்
ஓகே பை என கை காண்பிக்கும்போது ஒருத்தி தைரியமாக கிளிக்’’கினாள் முகத்துக்கு நேராக நான் சிரித்துக்கொண்டே வந்து விட்டேன்.


நான் எடுத்த புகைப்படங்கள் ஏதோவொரு ஃபைலில் சிக்கி விட்டது தேடிக்கொண்டு இருக்கிறேன் மேலேயுள்ள படங்கள் என் செல்லில் எடுத்தது

புதன், ஏப்ரல் 25, 2018

ஆரணி ஊரணியில் பரணி


ஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார்.
ஏப்பா ஆரு நீ ?
* * * * * 01 * * * * *

என்னய்யா சொல்றீங்க பழத்தை தின்னதாலே ஆஸ்பெட்டல்ல சேர்த்து இருகீங்களா ?
ஆமாய்யா ஏடிஎம் மிஷின்ல எடுத்த வந்த பதிமூவாயிரம் சம்பளத்தையும் தின்னுடான்யா.  
* * * * * 02 * * * * *

கனகா ரெடியா ?
யோவ் யாரை கேக்கிறே பூக்காரின்னா உனக்கு இளக்காரமா போச்சா ?
உன்னை இல்லேமா கனகாம்பரம் ரெடியான்னு கேட்டேன்.
* * * * * 03 * * * * *

மதுரை பஸ் ஸ்டாண்ட்டில்...
ஐயா தர்மம் பண்ணுங்க துரை
என்ன மச்சான்... பிச்சைக்காரனுக்கு கூட உங்க பேரு தர்மதுரைன்னு தெரியுதே ?
* * * * * 04 * * * * *

மேனகா ஆபீஸூக்கு நேரமாச்சு டிபன் ரெடியா ?
அவ யாருங்க மேனகா ? என் பேரு மோகனாங்கிறதை மறக்குற அளவுக்கு செஞ்சது ?
* * * * * 05 * * * * *

ஏலே அண்ணாச்சி மீனாட்சி அத்தாட்சிக்கு என்னாச்சு ?
அட யேண்டா நீ வேற அவ அன்னாசி பழத்தை கடிச்சு வாயெல்லாம் புண்ணாச்சு.
* * * * * 06 * * * * *

என்ன சினிமா பார்த்துட்டு வர்றீங்க ?
செருப்பு பிஞ்சுடும்.
அதுக்கு யேண்டா இப்படிச் சொல்றே ?
அண்ணே படத்தோட பேரே அதுதாண்ணே...
* * * * * 07 * * * * *

செல்லம்மா வந்தாச்சு எல்லாரும் வாங்க, வாங்க...
யோவ் எம் பொண்டாட்டி வரும்போது, என்னய்யா பேசுறே ?
நான் செல்லம்மா ரோடுவேய்ஸ் பஸ் வந்துருச்சுன்னு சொன்னா நீ சம்மந்தமில்லாம சம்மந்தப்படுத்துறே.
* * * * * 08 * * * * *

ஏண்ணே அப்பாவை பெத்தவரை ஏன் தாத்தான்னு சொல்றாங்க ?
இருக்குற சொத்தை சீக்கிரம் எழுதி, தா தா கேட்டு கடைசியில் தாத்தான்னு ஆகிடுச்சு.
* * * * * 09 * * * * *

ஏண்ணே "பெற்ற மகனை விற்ற அன்னை"னு சொல்றாங்களே அப்படி எல்லாம் நடக்குமா ?
ஏண்டா உன் அம்மாகூடத்தான் போன வருஷம் உன்னை வித்துச்சு.
என்ணண்ணே சொல்றே ?
ஆமாடா கல்யாணத்தன்னைக்கு பொண்டாட்டி கையில புடிச்சு கொடுக்கிறாங்கள்ல அதத்தான் சொல்றாங்கே.
* * * * * 10 * * * * *

காணொளி
நான் நீச்சல் கற்ற ஊரணி

ஞாயிறு, ஏப்ரல் 22, 2018

ஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு...


நாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்தங்களோ, மனஸ்தாபம் வந்தால் ஒதுங்கி விடலாம் ஆனால் சாஸ்திரம் பார்த்து சொந்த பந்தங்கள் கூடி நின்று வாழ்த்தி ஊர் அறிய திருமணம் செய்த கணவனோ, அல்லது மனைவியோ விருப்பமில்லை என்றால் ஒதுங்கி விடமுடியுமா ? கடைசிவரை இருவரும் வாழ்க்கையை இழுத்துக் கொண்டுதானே போக வேண்டியதிருக்கின்றது இந்த சமூகத்தில் வெளியில் சொல்ல முடியாமல் மனதுக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு வாழும் நண்பர்கள் எத்தனையோ ?

வெள்ளி, ஏப்ரல் 20, 2018

அவள் நடந்து போனாளே...


அவள் நடந்து போனாளே
என்னை கடந்து போனாளே
நான் பார்க்கும் போது
அவள் பார்க்காமல் போனாளே

செவ்வாய், ஏப்ரல் 17, 2018

கொன்றால் பாவம் தின்றால் போகுமா ?


பலரும் நான் சைவம் அசைவம் சாப்பிட மாட்டேன் என்பதை பெருமைப்பட பேசுவதோடு அசைவம் சாப்பிடுபவர்களை ஏதோ இரக்கமற்றவன் என்பது போல் நினைக்கின்றார்கள் இறைவன் படைப்பில் ஒன்றை ஒன்று உண்டு வாழவேண்டும் என்பதே நியதி யார் ? உயிரினங்களை உண்ணவில்லை சைவம் சாப்பிடுபவர்கள் செடி கொடிகளை உண்ணவில்லையா ? அதில் உயிர் இருப்பதால்தானே வளர்கிறது உதாரணம் கடலில் உள்ள மீன், நண்டு மற்றும் மற்ற உயிரினங்களை நாம் சாப்பிடக்கூடாது என்று வைத்துக் கொள்வோம் என்னாகும் ? கடலில் உயிரினங்கள் பெருகி பெருகி இடப்பற்றாக்குறை காரணமாக கடலின் நீர் எங்கு வரும் வெளியேதானே அதாவது நாம் வாழும் பூமிக்கு வரும் இல்லையா ? பிறகு நாம் எங்கு போவது கடலுக்கா ? இறைவன் இப்படியெல்லாம் வரக்கூடாது என்பதற்காகத்தான் அன்றே ஏதோ ஒரு மனிதனை அதைப்பிடித்து சுட்டுத்திண்ணும் யோசனையை கொடுத்து இருக்கிறான் அதைப் படித்துக் கொண்ட நாமும் அவ்வழியே வாழ்ந்து கொண்டு போகிறோம் அதைப்போல ஆடு மாடுகளை மனிதன் உண்ணவில்லை என்றால் ? பூமியில் மனிதர்கள் நடக்க இடம் கிடைக்காது அதைவிட முக்கியம் அவைகளுக்கு உணவு ? ? ? மனிதன் தனக்கு நாளை உணவு வேண்டுமே என்ற சிந்தையில்லாமல் விவசாய நிலங்களை விற்று மாளிகைகள் கட்டிக்கொண்டு இருக்கும்போது கால்நடைகளைப்பற்றி நினைப்பானா ? சைனா நாட்டுக்காரன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான் என்று கேவலமாக பேசுகிறோம் இதன் பின்னணி என்ன ?

உதாரணம் எங்களது வீட்டில் இதுவரை மாட்டுக்கறி சமைத்ததில்லை அதன் காரணமாக நானும் உண்ணவில்லை ஒருவேளை எனது வீட்டில் ஆரம்பத்திலிருந்தே அதை சமைத்துக் கொடுத்து பழக்கியிருந்தால் நானும் அதை உண்பதை பெரிதாக நினைக்காமல் உண்டு கொண்டுதான் இருப்பேன் இதுதான் சூழல் சைனாக்காரன் அனைத்தையும் தின்று பழக்கி கொடுத்தான் அவனது சந்ததியினரும் அதைத் தொடர்கிறார்கள் மேலும் ஒரு உதாரணம் நமது குழந்தையை கைக்குழந்தையாக இருக்கும்போது ஏதோவொரு சைனாக்காரனுக்கு தாரை வார்த்து கொடுத்து விடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம் அந்தக்குழந்தை அங்கு எப்படி வாழும் தேவகோட்டை குழந்தைபோல் வாழுமா ? இதுதான் சூழல் //பாம்பு திங்கிற ஊருக்குப் போனால் நடுத்துண்டு எனக்கு வேணும்// இந்தப் பழமொழியை சொல்லித் தந்தது யாரு ? தமிழனா ? சைனாக்காரனா ? இந்தியாவில் இன்றும்கூட மனிதனின் சுட்ட சடலங்களை திங்கின்றானே மனிதன் இது அருவருப்பு இல்லையா ? சைனாக்காரன் கரப்பான் பூச்சியை தின்பதை தவறாக சொல்கிறோம் நாம் கணவாய் சாப்பிடுவதில்லையா ? நண்டு சாப்பிடுவதில்லையா ? இது அருவருப்பு இல்லையா ? நமக்கு சாதகமானால் மட்டும் சரியானதா ? அவன் புழுவைத் தின்பதை சொல்கிறோம் நாம் திங்கவில்லையா ? ஆம் மீனை பிடிப்பதற்கு புழுவை உணவாக கொடுத்து மீனைப்பிடித்து அதனோடு புழுவையும் சேர்த்துதானே தின்கிறோம் உணவு வகைகள் மட்டுமல்ல வாழ்க்கை முறையும் இடத்தை பொருத்தே அமைகிறது. அசைவம் சாப்பிடாமல் வாழ்ந்த சிலர் மிகவும் புத்திசாலிகளாகத்தான் இருந்திருக்கின்றார்கள் அதேநேரம் அசைவம் சாப்பிட்டவர்கள் கத்தியையும், அருவாளையும் எடுத்துக்கொண்டு குத்திக்கொண்டு வாழந்தவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டியது உண்மைதானே...


நண்டு எனக்கு மிகவும் பிடித்த உணவு சிறுவயதில் பள்ளி விடுமுறையில் பாம்பன் சின்னம்மா வீட்டுக்கு போய் விடுவேன் எனது சின்னம்மா எனக்காக பெரிய தூக்குச்சட்டி நிறைய நண்டு பொரித்து தருவார்கள் அதை எடுத்துக் கொண்டு பாம்பன் ரயில் பாலத்துக்கு போவேன் அதன் மத்திய பகுதிக்கு வந்து கூடுபோல் இருக்கும் தலைக்கு மேலே ரயில் போய்க் கொண்டு இருக்கும் அதில் உட்கார்ந்து தின்பேன். எவ்வளவு நேரம் தெரியுமா ? குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் அப்படியானால் எவ்வளவு நண்டு நீங்களே கணித்துக் கொள்ளுங்கள் அது ஒரு நிலாக்காலம் தோணியில் போயி பிடித்து வருபவர்களிடம்தான் சின்னம்மா வாங்குவார்கள் ஐஸ் அந்த வேளையே கிடையாது இவ்வளவு நண்டுக்கு பணம் எவ்வளவு கொடுப்பார்கள் தெரியுமா ? கூடுதல் போனால் ஐந்து ரூபாய் இன்று அந்த நண்டுகளின் விலை ? நினைத்துப் பார்த்தால் தண்டுவடம் சிலிர்க்கிறது.


சிவாதாமஸ்அலி-
இப்ப என்னதான்யா  சொல்றே... இன்னைக்கு வீட்ல பொண்டாட்டி நாட்டுக் கோழியடிச்சு குழம்பு வச்சு இருக்கா திங்கவா வேண்டாமா ?

Chivas Regal சிவசம்போ-
அட ஏய்யா நீ வேறே... கொன்றால் பாவம் தின்றால் போச்சு இஷ்டம் இல்லைனா கஷ்டப்படாதே தூக்குச் சட்டியில அள்ளிப் போட்டு நம்மள்ட்ட கொண்டு வா.

 காணொளி

சனி, ஏப்ரல் 14, 2018

மா(ற்)றவேண்டும்


நட்பூக்களே.... மேலேயுள்ள புகைப்படத்தையும், அந்த வார்த்தைகளையும் படித்தீர்களா ? இதனால் நமக்கு பெருமையா ? சிறுமையா ? நாட்டில் அறியாமைவாதிகள் நிறைந்திருக்கின்றார்கள் என்பது புரிகின்றதா ? இந்த நிலையை உருவாக்கிய அந்த ஜடங்கள் நம் நாட்டிற்கு தேவைதானா ? அவன் எமது குடும்ப அங்கத்தினராயினும் அவசியமில்லை என்பதே எமது கருத்து இந்த ராணுவ வீரர்களுக்கு போகின்றதே சம்பளம் யாருடைய பணம் எங்கிருந்து போகிறது இவரென்ன நாட்டுக்கு உழைத்து ஓய்ந்த தியாகியா ?

புதன், ஏப்ரல் 11, 2018

திங்கள், ஏப்ரல் 09, 2018

One Day in Oman

2010 ஒமான் நாடு மஸ்கட் நகரம்.


நானும், நண்பருடைய குடும்பத்தினரும் நண்பருடைய சகலை அங்கு குடும்பத்துடன் இருக்கிறார் அவர்களைக் காண்பதற்காக போனோம் U.A.E எல்லையில் நுழைவாயிலில் பாஸ்போர்ட்டில் விசா அடித்து காருக்கும் இன்சூரண்ஸ் அடித்துக்கொண்டு கிளம்பினோம்.

சனி, ஏப்ரல் 07, 2018

மீண்டு(ம்) வருமா ?


நான் சிரிக்கத் தெரியாதவன் அல்ல சிரிப்பை ரசிப்பவன் ரசித்து சிரித்தவன் ஆனால் சிரிப்பை இழந்து மறந்தவன், ஒரு காலத்தில் நான் இருக்குமிடம் எந்த மொழி நண்பர்களானாலும் எப்பொழுதுமே என்னால் பிறருக்கு சந்தோஷமாக இருக்கும். (Not Now) அந்தக் காலத்தின் இடைவெளி அளவு தூரம் எனது தற்போதைய ஆயுளின் நான்கில் இரு பகுதியை ஆக்கிரமித்து கொண்டது. 

புதன், ஏப்ரல் 04, 2018

முதிர்ந்த கன்னி


திரைப்பட நடிகர்களின் கிரிக்கெட் பலமுறை நடந்து இருக்கின்றது தாங்கள் அனைவரும் அறிந்ததே அபுதாபியில் ஒருநாள் கணினியில் மூழ்கியிருந்த நான் ஒருமுறை இணையம் பிரச்சனை செய்ததால் தொலைக்காட்சியில் இதைக்காணும் துர்பாக்கியம் எனக்கு நேர்ந்தது சாதாரணமாக இந்த கொடுமைகளை எல்லாம் நான் பார்ப்பது கிடையாது காரணம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் நேர்மை, நாட்டுப்பற்று சம்பாரிப்பது போதாதென்று விளம்பரங்களில் நச்சுப்பொருள் எனத்தெரிந்தும் குளிர்பானங்களை நம்மை குடிக்கச் சொல்லும் நல்ல எண்ணமுள்ளவர்கள் அவர்களும் என்ன செய்வார்கள் ? காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் என்பதை அறிந்த அறிவாளிகள் இதனால் எவனும் நான் உனது ரசிகனாக இருக்க மாட்டேன் எனச் சொல்லப் போகிறானா ? இல்லையே... கிரிக்கெட் நடக்குமிடத்தில் ஆபாச உடையணிந்து அழகிகள் ஆடவேண்டிய அவசியம் என்ன ? இதைக் காணும்போது எனக்கு கோபம் வரும் தேவையில்லாமல் ஃப்ரஷர் ஏறும் ஆகவே இவைகளை தவிர்ப்பேன் அப்படியானால் நீ பெண்களை விரும்பியதில்லையா ? எனக் கேட்பவர்களுக்கு அதைக்காண நமக்கு சில தருணங்களும், அதற்கென சில தளங்களும் இருக்கிறது அதில் போய் இதைவிட மோசமான விசயத்தைப் பார்ப்பேன் என்பதை சொல்லிக் கொள்வதில் எமக்கு துளியளவும் பயமோ, வெட்கமோ கிடையாது எப்பேர்ப்பட்ட மச்சான் விஸ்வாமித்திரரே மயங்கியபோது இந்தப்பாமரன் கில்லர்ஜி எம்மாத்திரம் என்னைப் பொருத்தவரை சொல்வதையும் செயலில் காட்டவேண்டும் என்பது எனக்கு உலகம் அறியத் தொடங்கிய இரண்டேகால் வயதிலிருந்தே.... நான் வகுத்துக் கொண்ட கொள்கை.

இப்பொழுது நான் சொல்லவரும் விடயம் என்னவென்றால் ? கிரிக்கெட் நடைபெறும் தருணத்தில் ஒரு நடிக(ர்)ன் வந்தா(ர்)ன் உடனே முதிர்ந்த கன்னியொருத்தி கன்னியென்றே சொல்லவேண்டும் காரணம் ஆறு பதிகளை சதி செய்து விட்டு தற்காலம் ஏழாவது பதியோடு வாழ்பவளை வேறு எப்படி சொல்லமுடியும் ? உட்கார்ந்திருந்த இவள் உடனே அவனிடம் போய் பேசுகிறாள் காரணம் அவன் தற்சமயம் ரசிகன் என்ற ஏமாளிப் பயல்களால் உச்சாணிக் கொம்பில் இருக்கிறா(ர்)ன் அவனின் விரல் அசைவுக்கு எதுவும் நடக்கும் உடனே இந்த ஊடகங்கள் முழுவதும் அவர்களை மொய்க்கின்றனர் இளம் வளரும் ? ? ?  நடிகையொருத்தி அங்கு வருகிறாள் பெண்களை சகோதரிகளாவே நினைக்கும் ஒரு நடிகரின் மகள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். உடன் இந்த முதிர்கன்னி அவளை அழைத்து அவளின் கையை பிடித்து இழுத்து இந்த நடிகனின் பக்கத்தில் நிறுத்துகிறாள் ஊடகங்கள் உடனே ‘’கிளிக்’’ ‘’கிளிக்’’ ‘’கிளிக்’’ அவைகளை ப்ளாஸ்டிக் பிரிண்ட் போட்டு விற்க பாமரர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்க... இந்த சமூகம் எப்போதுதான் விழிக்கும் ? இன்று படிப்பறிவு எவ்வளவோ சதவீதம் உயர்ந்திருக்கிறது என்று பெருமையாக சொல்கிறோமே அப்படியானால் இவைகள் எப்படி ?

சரி அடுத்த விடயத்துக்கு வருகிறேன் நிற்கும்போதும் விஸ்தாரமான இடம் இருக்க முதிர்ந்தகன்னி இளம் நடிகையை நெருக்குகிறாள் காரணம் அவனுடன் உரச வைக்க, பிறகு அங்கிருக்கும் இருக்கைகளில் அமர இவள் நல்ல குடும்பத்தில் பிறந்தவளாக இருந்தால் அந்த நடிகையை தனக்கு பக்கத்தில்தானே உட்கார வைக்கவேண்டும் அவனுக்கு பக்கத்தில் உட்கார வைத்த முதிர்கன்னி வேண்டுமென்றே இளம் நடிகைமீது சாய்ந்து சாய்ந்து அவனுடன் மோத வைக்கின்றாள் கூட்டிக் கொடுப்பதற்கும் இதற்கும் வித்தியாசம் என்ன ? பொது இடத்தில் இப்படிச் செய்யும் இவளும்கூட தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறாள் அதைக்கேட்க, அவளைக்காண அவளுக்கு கோஷம்போட ஒருகூட்டம் அட மானங்கெட்ட சமுதாயமே அரிசி விலை பின்னே எப்படி குறையும் ?  

இவள் தேர்தல் பிரச்சாரம் செய்யவரும் நேரத்தில் நான் விடுமுறையில் எனது இனிய இந்தியா தி கிரேட் தேவகோட்டை வந்திருந்தேன் கூட்டத்திற்கு என்னை அழைக்க வந்தான் நண்பன் நான் சொன்னேன் இவள் சொல்லி நான் நாட்டு அரசியல் படிக்கவேண்டும் என்றால் நான் இந்தப் பூமியில் பிறந்ததே வீண் நீ வேண்டுமெனில் போ என்றேன் அவன் பதில் சொல்வது அறியாது எனது வீட்டிலேயே அந்த இடத்திலேயே படுத்து விட்டான் காலையில் எழுப்பி காஃபி கோப்பையை கொடுத்து விட்டு சொன்னேன் நீ என் நண்பேன்டா

உனக்கும் ஆறறிவு எனச்சொல்லப்படும் மானிடா கூத்தாடிகளுக்கு நீ இவ்வளவு மரியாதை கொடுப்பதால்தான் இன்று உண்மையான உத்தமிகள்கூட கூத்தாடிகள் பிழைப்பை நோக்கி படையெடுக்கின்றார்கள் இதனாலும்கூட இழப்புகள் நமக்கு மட்டுமல்ல, நாளைய நமது சந்ததிகளுக்கும்தான் என்பதை நினைவிள் கொள். ஒரு வேதத்தில் சொல்லப்பட்டதை இந்த தருணத்தில் சொல்லிக் கொள்கிறேன் //நடக்கும் அக்கிரமங்களை துணிச்சலுடன் எதிர். முடியாத பட்டசத்தில் மனதளவில் வெறுத்து ஒதுங்கு// இதைத்தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன் காரணம் என்னிடம் அவர்களை எதிர்க்கும் பலம் இல்லை ஆனால் அவர்களை புழுவைப்போல் உதாசீனப்படுத்தும் நெஞ்சுரம் எமக்கு இறுதி வரை உண்டு இதை எமக்குத் தந்த இறைவனுக்கு நன்றி.

காணொளி

ஞாயிறு, ஏப்ரல் 01, 2018

இவர் அவரல்ல !


நட்பூக்களே... கடந்த வருட பதிவு நான் அவரில்லை... இதற்கு கருத்துரை சொன்ன பல பதிவர்கள் மற்றவர்களையும் கண்டு பிடியுங்கள் என்று சொன்னார்கள் உடனே நானும் தேடுதல் வேட்டையை கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து இதோ கீழ்காணும் புகைப்படத்தில் ஒரே மாதிரி இருக்கும் இரண்டு நபர்களை கண்டு பிடித்து விட்டேன் எப்பூடி ?

10


9


8


7


6


5


4


3


2


1


0


கில்லர்ஜி-
உலகம் எப்படி கைக்குள்ளே வந்துடுச்சுன்னு பார்த்தியா ?
KILLERGEE-
அப்படினா... இதுல நீங்க எந்த இடத்துல நிற்கிறீங்க ஃப்ரதர் ?
கில்லர்ஜி-
? ? ?

தமிழ்வாணன் கில்லர்ஜி
Tamilvanan Killergee

சாம்பசிவம்-
அர்த்த ராத்திரியில குடை பிடிக்கிற ஆளுகளை பார்த்திருக்கேன்.

Chivas Regal சிவசம்போ-
இது வீட்டுக்குள்ளே குடை பிடிக்கிற பரம்பரையோ ?

சிவாதாமஸ்அலி-
வீடு ஒழுகினால் இப்படித்தான்யா....

உங்களுக்கு ஏப்ரலுக்காக.... ஹி... ஹி... ஹி...