தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, டிசம்பர் 11, 2021

கோஹினூர், கோதண்டம் Weds கோகிலம்

 

மாமன் மகனும், அத்தை மகளும்...

பெண்

கோணக்காலை இழுத்து போகும்

கோதண்டம் கருத்த மச்சான்

கோவிலூரு சந்தைக்கா போறீக

கோவிக்காமல் கேளு கொஞ்சம்

ஆண்

கோகிலமே சொல்லேன்டி

கோஹினூர் வைரமே

கோவிக்க என்ன இருக்கு

கோமுட்டி மூத்த மகளே

பெண்

கோபால் பல்பொடி தீர்ந்துருச்சு

கோலப்பொடியும் வாங்கி வாயா

கோமதி மகளுனக்கு வேணாமா

கோடாங்கி மாமா எளைய மகனே

ஆண்

கோவிந்தன் மகன் என்னை

கோழைப்பயலா ஆக்கிடாதே

கோபம் உனக்கு வேண்டாமடி 

கோமயிலே எளங்குயிலே

பெண்

கோளாறு வேலையை காட்டாதே

கோணங்கித்தனமாக செய்யாதே

கோடித்துணி எடுத்து வாயேன்

கோடீஸ்வரனாகும் மச்சானே

ஆண்

கோனார் உரையும் உன் தங்கச்சி

கோமளந்தான் வாங்கி கேட்டா

கோக்குமாக்கு செஞ்சு வாங்கியாறேன்

கோபப்படாதே நீயும் எனக்கு வேணும்.

இருவரும்

தன்னானே தன்னானே தனனானே

தன்னானே தன்னானே தனனானே

தன்னானே தன்னானே தனனானே

தன்னானே தன்னானே தனனானே

 

கோதண்டமும், கோகிலமும் ஆடிப்பாடி வாழ்க பல்லாண்டு.

28 கருத்துகள்:

  1. என்னது "நீயும் எனக்கு வேண்டுமா...?'

    இதான் கோக்குமாக்கு...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ،வாங்க ஜி எனக்கும் அப்படித்தான் தோணுது...

      நீக்கு
  2. வித்தியாசமா நீங்க முயற்சி பண்ணறீங்க. பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. ஹாஹாஹா, பாடல் மட்டும் இல்லை, கடைசியில் சொல்லும் "நீயும்" கூட வித்தியாசமாத் தான் இருக்கு. எப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  4. சப்பாணி மனக்கண்முன் வந்து நிற்கிறார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி யாரு... உலக்கை நாயகனா ?

      நீக்கு
  5. எமக்குத்தான் பாடவும் ஆடவும்.. வராது என்பதால் பெருமையோடு வாழ்த்துகிறேன்.கோதண்டமும் கோகிலாவும் ஆடிப்பாடி வாழ்க! பல்லாண்டு!!

    பதிலளிநீக்கு
  6. அங்கே தடை செய்யப்பட்டிருந்த தங்களது தளம் இங்கே கிடைக்கின்றது..

    வாழ்க நலம்..

    கோதண்டம் வாழ்க..
    கோகிலம் வாழ்க..
    கோமளமும் வாழ்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி

      தொடர்ந்தால்... மப்ஜூத் ஸ்யாதா...

      நீக்கு
  7. கிராமத்து மக்கள் பேசுவது போல எழுதியிருக்கின்றீர்கள். இப்போதெல்லாம் கிராமத்து மக்களும் இப்படித்தான் என்று படம் சொல்கின்றதோ?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பாட்டோடு படமும் பொருந்த வேண்டுமே...

      நீக்கு
  8. கில்லர்ஜி! நீயும் ன்னு சொல்லி ...இத விடமாட்டீங்க போல!!

    முன்னரே நீங்க இப்படியாக எழுதிய நாட்டுப்புற ஸ்டைல் பாடல்களுடன் ஒப்பிடும் போது இன்னும் அது போல எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது

    என்றாலும் உங்கள் பாடல் எழுதும் திறமை அசாத்தியம் தான் கில்லர்ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  9. படத்தில் தாத்தா கில்லர்ஜி!!! அப்ப இது பழைய நினைவோ!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  10. உங்கள் புதிய சிந்தனைகளும், படைப்புகளும் ஆச்சர்யம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும், கருத்திற்கும் நன்றி மேடம்.

      நீக்கு
  11. வணக்கம் சகோதரரே

    கோ எழுத்தில் ஆரபித்து பாடல் முடியும் வரை ஆரம்ப எழுத்து கோ என்ற எழுத்துடனே தொடரும்படி பாடலை அமைத்திருப்பது அருமையாக உள்ளது ரசித்தேன். பாட்டுப் படத்திற்கு பொருத்தமாய் உள்ளது பதிவும.
    உங்களின் எழுத்து திறனை எண்ணி வியக்காத பதிவில்லை/நாளில்லை. பாட்டு எழுதுவது உங்களுக்கு கைவந்த கலையாகி விட்டது தொடருங்கள்.வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி. தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  12. ஆஹா... என்னவொரு பாட்டு! கலக்கல் தான் கில்லர்ஜி!

    பதிலளிநீக்கு
  13. கோதண்டமும், கோகிலமும் வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு