தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், மே 01, 2025

பிள்ளையார்பட்டி, பிள்ளையார் பிள்ளையப்பன்

மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? ஒரு மோட்டார் சைக்கிளில் யாரோ ஒரு கோமாளி விநாயகர் சதுர்த்தி அன்றாக இருக்கலாம். மக்களை கவர்வதற்காக இப்படியான கோமாளித்தனங்களை செய்யும் மனிதர்கள் உலகில் எங்கும் உண்டு இதுவொரு நகைச்சுவையாக எடுத்து பொழுதை கடத்தி விடவேண்டும். ஆனால் பக்கத்தில் நிற்கும் ஒரு மனிதர் அவனை பிள்ளையாரே வந்ததாக நினைத்து சாலையில் கும்பிடுவது முறையா ?

பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் கமல்ஹாசன் சிவன் வேடமணிந்து படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு இருந்தவர் மாட்டை விரட்டிக் கொண்டு நீதி மன்றத்தின் உள்ளேயே வந்து விடுவார். அதைக்கண்ட நீதிபதி எழுந்து கும்பிடுவார் இப்படி மக்களை கோமாளிகளாக்கும் காட்சிகள் நிஜவாழ்விலும் நடக்கத்தான் செய்கிறது. பக்தி தேவைதான் இப்படி தேவையற்ற பக்தி மூடத்தனம்.

தியேட்டர்களில் பார்த்து இருப்பீர்கள் அம்மனாக நடித்தவர் நிஜவாழ்வில் ஒழுக்கமற்றவர் என்பது உலகறிந்த விடயம். அந்த கூத்தாடியைப் பார்த்து சில பெண்களுக்கு சாமி வரும். காரணம் அவள் அருளோடு தீ மிதித்து நடந்து வருகிறாளாம். அட கூதரைகளா... அவள் சீரியல் செட்டின் மீது நடந்து வருவதுகூட தெரியாத பாமர்கள் வாழும் நாட்டை டிஜிடல் இந்தியா என்று நமது பிரதமர் சொல்லலாமா ? இது மோடி இல்லையா ?

போதாற்குறைக்கு மாநில அரசும் மக்களை குடிக்க வைத்து நிரந்தரமாக முட்டாளாக்குவதற்கு முயற்சி எடுக்கிறது. ஒரு அமைச்சர் பேசுகிறார். காலையில் குடிப்பவர்கள் குடிகாரர்கள் இல்லையாம். என்னே கண்டுபிடிப்பு இந்த மாமேதையை கண்டு பிடித்து வாக்களித்த மக்கள்தான் டிஜிடல் இந்தியர்களா ? அரசியல்வாதிகளே கொள்ளையடியுங்கள்... ஆனால் கொஞ்சமாவது மக்களையும் வாழ விடுங்களய்யா....

கில்லர்ஜி துபாய்

சிவாதாமஸ்அலி -

இறுதி மூச்சுவரையில் மக்கள் எந்திரிக்க கூடாது இதுவே அரசியல்வாதிகளின் இலக்கு.

Chivas Regal சிவசம்போ-

இந்த ஆளுக நம்ம வாயில மண்ணை அள்ளி போட்ருவாங்க போலயே...

 
காணொளி

9 கருத்துகள்:

  1. அருகில் நிற்கும் அவர் "கடவுளே..  இந்த பைத்தியக்காரர்களைக் காப்ப்பாற்று" என்று வேண்டிக் கொள்கிறாரோ என்னவோ...

    பதிலளிநீக்கு
  2. தியேட்டரில் பெண்கள் அருள் வந்து ஆடுவது எல்லாம் தயாரிப்பாளர்களும், தியேட்டர்காரர்களும் செய்யும் ஏற்பாடு..  படம் ஓடவேண்டுமே...

    பதிலளிநீக்கு
  3. முத்து முத்தாக பேசுவதால்தான் அவர் முத்துசாமி!

    முத்துசாமி.. இது ரொம்ப தப்பு சாமி!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    நீங்கள் சொல்வது உண்மைதான். இறைவன் வேஷமிட்டு விட்டால் அவர் இறைவனாகி விடுவாரா? இந்த மாதிரி மக்களிடமிருந்து தப்பிக்கத்தான் அந்த இறைவனும் உண்மையான தன்னுருவை இன்னமும் வெளிக்காட்டாமல் இருக்கிறான்.

    மது அருந்துபவர்களுக்கு ஒவ்வொரு பொழுதுக்கும் ஒவ்வொரு பெயர் இருக்கிறது போலும். சொல்வது வினோதமாக உள்ளது. மக்களே பார்த்து திருந்தினால்தான் உண்டு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. பிள்ளையார் வேடமிட்டவரை வணங்கியவர் மெய்தொண்டு நாயனார் வழியில் வந்தவர் போலும்.

    இறுதி மூச்சு வரை விழிப்புண்ர்வு இருக்க கூடாது என்பது அரசியல்வாதிகளின் நினைப்பு.

    கழிவுநீர் தொட்டிக்குள் இறங்குபவர்கள் மதுவை மேலே ஊற்றி கொள்வார்கள் என்றும், அதிக உடலை வருத்தி (வண்டி இழுப்பவர்கள், பாரம் சுமப்பவர்கள்) வேலை செய்பவர்கள் வீடு திரும்பும் போது குடித்து வருவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறேன்.

    அவர்களை போன்ற சாமானியர்களுக்காக கடை திறந்து வைத்து இருக்கிறார்கள் என்றால் அதையும் இலவசமாக அல்லவா கொடுக்கவேண்டும்
    உடல் உழைப்புக்கு ஏற்றவாறு.

    அவர்கள் காசையும் பறித்து கொண்டு, அவர்கள் உடல் நலத்தையும் சீரழிக்கிறது மது. இப்படி வேறு விளக்கம் கொடுத்தால் எப்படி?

    பதிலளிநீக்கு
  6. இதுக்கு நம் மனசுதானே காரணம். உருவத்தில் தெய்வத்தைப் பார்க்கிறார், நாம் அந்த ஆளையும் அவன் வேஷத்தையும் கவனிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. கடைசில அந்தக் காணொளில பேசுபவர் யார்? கில்லர்ஜி! அதி புத்திசாலியாக இருக்கிறாரேன்னு வியந்து போனேன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. எங்கு இறைவனின் உருவத்தைப் பார்த்தாலும், தன்னறியாமலேயே கை வணங்கும் அல்லது நெஞ்சைச் தொடும், சில விஷயங்கள் மனதில் ஆழமாகப் பதிந்தவை. அந்த உணர்ச்சி பூர்வமான அறிவும், லாஜிக்கல் அறிவும் அல்லது அறிவார்ந்த சிந்தனை அறிவும் (Intellectual Intelligence) ஒன்றிணைந்து செயல்படுவது என்பது சிலருக்கு இருக்க வாய்ப்பில்லை. உணர்வுபூர்வமான அறிவு அங்கு மேலோங்கும் சமயத்தில் அதுவும் நம் மனதில் இந்த இறைவன் பற்றிய விஷயங்கள் அதனோடு இயைந்த சில சென்டிமென்ட்ஸ், செயல்கள் இவை ஆழமாகப் பதிந்திருக்கும். எனவே கண்ணில் நீர் வரும் பரவச நிலை, கன்னத்தில் போட்டுக் கொள்வது தன்னை அறியாமலேயே கை கூப்புவது, போன்றவை நிகழ்கின்றன.

    இந்த உணர்ச்சிபூர்வமான அறிவைத்தான் அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்! மக்கள் இரண்டிற்கும் வித்தியாசப்படுத்தும் அறிவைப் பெற்றுவிட்டால் சிந்திக்கும் திறன் பெற்றால் நல்லதுதான்.

    கீதா

    பதிலளிநீக்கு
  9. என் சிறு வயதில் ராமர், லக்ஷ்மணர்,ஹனுமார் வேடமிட்டுக் கொண்டு வருவார்கள், பார்த்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு