தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2025

இளையான்குடி, இளைஞர் இளையராஜா

ணக்கம் நட்பூக்களே...  மேலே இருக்கும் புகைப்படத்தை பார்த்தீர்களா ? அரசியல் கட்சியின் பேரணிக்கு வாழ்க கோஷம் போடுவதற்கு வடநாட்டு இளைஞர்கள். இவர்களுக்கு கட்சியின் கொள்கை ஏதாவது தெரியுமா ? அல்லது இக்கட்சியின் தலைவர் யாரென்று தெரியுமா ? இன்றைக்கு சம்பளம் கிடைத்தால் போதும் வாழ்க கோஷம், பிறகு மறுதினம் எதிர்க்கட்சி அழைத்தால் அதே நபருக்கு ஒழிக கோஷம்

நாட்டின் வருங்கால தூண்கள் என்று சொல்லும் இளைஞர்களை இந்த அரசு எப்படி வைத்து இருக்கிறது ? இந்த இழிநிலைக்கு பணத்துக்காக வாக்களித்த மக்கள்தானே காரணம் ? இப்படி வாழ்க்கையை சீரழித்துக் கொண்ட இளைஞர் கூட்டம் வடநாட்டில் மட்டுமல்ல, நமது தமிழ் நாட்டிலும்தான். இக்கூட்டத்தை நடத்தும் கட்சிகள் கொஞ்சமும் வெட்கமின்றி இந்த இளைஞர்களை அழைத்து வந்து இருக்கிறது என்றால் மக்களைப்பற்றி இவர்களின் எண்ணம் என்ன ?

இந்த மக்கள் எதையும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்பது நமது அரசியல்வாதிகளிடம் பரிபூரணமாக நிறைந்து விட்டது. எத்தனை விதமாக பொய் பேசுகின்றார்கள், தேர்தலில் வாக்குறுதி கொடுக்கின்றார்கள், பிறகு நான்கு வருடம் ஆனாலும் இதோ செய்கிறோம் என்று வாய் கூசாமல் சொல்கின்றார்கள். இதற்கு ஆமோதித்து பேசுவதற்கு இவர்களின் அடிவருடிகள் கூட்டம், இளைஞர்களை அழைத்து வருவதற்கு ஒரு கூட்டம்.

இந்த மாதிரி நாட்டை ஆள வேண்டிய இளைஞர் கூட்ட ராஜாக்கள் எத்தனை பேர் ? இன்னும் எத்தனை காலம்தாம் நாம் இவைகளை பார்த்துக் கொண்டு கடந்து செல்வது ? அரசியல்வாதிகளிடமும், திரைப்படக் கூத்தாடன்களிடமும், மட்டைப்பந்து மந்தையாளர்களிடமும் மதி மயங்கி வீழ்ந்து கிடந்தால் நாளை நமது சந்ததிகளின் நிலை ? நாம் விழித்தெழ வேண்டும் என்பது நமக்காக அல்ல நாளைய மக்களுக்காக...

கில்லர்ஜி துபாய் 
 

இந்த சுட்டிக்கு சென்று பாருங்கள் –

https://www.facebook.com/reel/3490151094589844

சிவாதாமஸ்அலி-

இதற்கு மக்கள்தான் வெட்கப்படணும். அரசியல்வாதிகளுக்கு வெட்கமில்லை, விபச்சார ஊடகங்கள் இவர்களிடமும் மைக்கை நீட்டுகிறதே... அவர்களுக்கும் வெட்கமில்லை.

1 கருத்து:

  1. வாங்க கில்லர்ஜி... ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பதிவு.

    நம்ம ஊர்ல நூறு நாள் வேலைத்திட்டம், அரசியல் கட்சிகளின் மாநாடு போன்றவைகளுக்கு ஏராளமான மக்கள் வருவாங்க. அதுல வடக்கன்ஸ் என்ன தெற்கன்ஸ் என்ன.. எல்லாப் பயலுவளுக்கும் வேலை செய்யாமல் 300 ரூபாய், இலவச உணவு, பிராந்தி. லக் இருந்தால் மாநாட்டுச் சேர் மற்றும் வாழை மரங்கள், தண்ணீர் கேன் போன்றவைகளை அடித்துக்கொண்டு செல்லலாம். எல்லாக் கட்சிகளுக்கும் இதுதான் நிலைமை.

    பதிலளிநீக்கு