தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், செப்டம்பர் 24, 2024

வம்பு உருவாகுமே...

 

ணக்கம் நண்பர்களே... ‘’அன்பு நடமாடும் கலைக்கூடமே’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல். எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாகும். இதன் சிறப்பு கவிஞர் இறுதியில் மே... மே... மே.. என்று முடித்து இருப்பார். எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
பெண்
வம்பு உருவாகும் பிழை மாடமே பூசை விலை பேசுமே
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே
 
வம்பு உருவாகும் பிழை மாடமே பூசை விலை பேசுமே
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே
 
ஆண்
பதவிச் சூடி நாவின் காதோரமே ஏய்க்கும் புதுச் சோரமே
பதவிச் சூடி நாவின் காதோரமே ஏய்க்கும் புதுச் சோரமே
கொஞ்சல் குயில் மேலும் பலர் தின்ன அகமே
கண்ணர் நிலப் பங்கமே இச்சை பிழைக் கோட்டம் பணியாரமே
தேடும் மது மோகமே வம்பு உருவாகும் பிழை மாடமே
பூசை விலை பேசுமே
 
பெண்
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே
துள்ளலை மடலோடும் மண்ணோடுமே இலக்கின் வழி உள்ளமே....
துள்ளலை மடலோடும் மண்ணோடுமே இலக்கின் வழி உள்ளமே....
சொல்லும் மடம் மாறும் இகழ் தூர்க்கும் கவமே
கண்ணர் நில கண்ணனே
 
ஆண்
அன்று புவி தேடும் உன் கள்வமே இன்றும் உன் பொய்வமே
காநிலம் கொல்லமும் எம் உள்ளமே சிக்கல் உம் பந்தமே
 
பெண்
தானும் வளமெங்கும் உமிழ் தேடும் தினமே
கலகம் எமதாகுமே
 
ஆண்
இன்று புவி கந்தன் உள் கன்னமே தாவும் உருவாகுமே
வம்பு உருவாகும் பிழை மாடமே பூசை விலை பேசுமே
 
பெண்
மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே
பின்னித் தொழில் தோன்றுமே
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1975
படம்: அவன்தான் மனிதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா
 
இதோ கவிஞரின் பாடல் வரிகள்
 
பெண்
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
 
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
 
ஆண்
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச் சாரமே
மாதவிக் கொடிப் பூவின் இதழோரமே மயக்கும் மதுச் சாரமே
மஞ்சள் வெயில் போலும் மலர் வண்ண முகமே
மன்னர் குலத் தங்கமே பச்சை மலைத் தோட்டம் மணியாரமே
பாடும் புது ராகமே அன்பு நடமாடும் கலைக் கூடமே
ஆசை மழை மேகமே
பெண்
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னித் தமிழ் மன்றமே
வெள்ளலை கடலோடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே
வெள்ளலை கடலோடும் பொன்னோடமே விளக்கின் ஒளி வெள்ளமே
செல்லும் இடம் தோறும் புகழ் சேர்க்கும் தவமே
தென்னர் குல மன்னனே
 
ஆண்
இன்று கவி பாடும் என் செல்வமே என்றும் என் தெய்வமே
மாநிலம் எல்லாமும் நம் இல்லமே மக்கள் நம் சொந்தமே
 
பெண்
காணும் நிலமெங்கும் தமிழ் பாடும் மனமே
உலகம் நமதாகுமே
 
ஆண்
அன்று கவி வேந்தன் சொல் வண்ணமே யாவும் உறவாகுமே
அன்பு நடமாடும் கலைக் கூடமே ஆசை மழை மேகமே
பெண் 
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னித் தமிழ் மன்றமே
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=YsDde_RJdfA
 
நன்றி கில்லர்ஜி புதாபி

14 கருத்துகள்:

  1. ஜி அவர்களது கை வண்ணம்..

    ஆகா!..

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இந்தப் பாடல் அருமையாக இருக்கும். அடிக்கடி கேட்டிருக்கிறேன். தங்களின் மாற்றுப் பாடல் வரிகளும் நன்றாக உள்ளது.

    /வம்பு உருவாகும் பிழை மாடமே பூசை விலை பேசுமே
    மண்ணில் வினைதேடும் பழி எண்ணமே பின்னித் தொழில் தோன்றுமே/

    இந்த முதல் வரிகளே நன்றாக உள்ளது. நானும் தாங்கள் இயற்றிய பாடலை ராகத்துடன் பாடி (மனதுக்குள்) ரசித்தேன். தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பாடலை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.

      நீக்கு
  3. பாடல் அருமையான பாடல் கில்லர்ஜி!

    வழக்கம் போல உங்க கைவரிசை!!! ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. அருமையான பாடல் அதை உங்கள் பாணியில் மாற்றி அமைத்து விட்டீர்கள்.
    பாடலை கேட்டேன்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான பாடல். உங்கள் வரிகளும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு