தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜனவரி 23, 2018

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்


புதாபியில் இருக்கும் பொழுது ஒருமுறை என்னுடன் வேலை செய்யும் சைனா நாட்டு நண்பன் திரு. லீங் ஸுவாங் டுஸ்பு விடுமுறைக்கு சென்றவன் அவனுடைய கொழுந்தியாளுக்கு சடங்கு என்று பத்திரிக்கை அனுப்பி இருந்தான் கூடவே விசிட் விசாவும் வைத்திருந்தான் சரி டிக்கெட் செலவு மட்டும்தானே மேலும் விஷேசம் வெள்ளிக்கிழமை வைத்து இருந்ததால் அரசு வெள்ளி. சனி விடுமுறைதானே என்று பைஜூங் ரிட்டன் டிக்கெட் போட்டு பயணித்தேன் விஷேசம் கோலாகலமாக நடந்து முடிந்தது

நண்பனின் மூத்த சகலையின் மகள் லீ ஸிங் பீஜூவுடன் கில்லர்ஜி

மறுநாள் சனிக்கிழமை ஹூவாங் ஸௌட் வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தோம் வழியில் ஒரு பெண் பல பொருட்களை விரித்து வைத்து சைனா மொழியில் நம்மூரில் எதை எடுத்தாலும் பத்து ரூவா என்பது போல கூவிக்கொண்டு இருந்தாள். நண்பன் சொன்னான் நான் இப்ப செய்யிறதை காணொளி எடு முகநூலில் போடுவோம் என்றான். நானும் நமக்கென்ன பிரச்சனை வந்தால் அவன் பார்த்துக் கொள்வான் மேலும் நண்பனின் மூத்த சகலை ஊர் நாட்டாமையாக இருப்பதாக ஏற்கனவே சொல்லி இருந்தான் நேற்றுகூட சடங்கில் சந்தித்து பேசினோமே என்ற தைரியத்தில் எனது செல்லில் காணொளி எடுக்க தயாரானேன்.



தனது பர்ஸில் இருந்து பத்து யென் எடுத்துக்கொண்டான் நேராக அவளிடம் சென்றவன் காசை கீழே விரிப்பில் போட்டு விட்டு என்ன செய்தான் தெரியுமா ? அவனது செயலைக் கண்டு நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் மேலும் அப்படியே பக்கத்தில் இருந்த மூத்திரச்சந்தில் ஓடினான் இதற்கு மேல் இங்கிருந்தால் நமது உயிருக்கு ஆபத்து என்று அப்படியே விமான நிலையத்துக்கு நடையைக் கட்டி அபுதாபிக்கு சென்று விட்டேன். அதன் பிறகு மறுமாதம் அவன் அபுதாபிக்கு வந்ததும் இனிமேல் உனது சங்காத்தம் எனக்கு ஆகாது என்று அவனுடன் க்கா விட்டு விட்டேன் என்ன நண்பர்களே நான் செய்தது சரிதானே ? இதோ அவன் செய்த செயலை நான் எடுத்த காணொளியில் நீங்களே பாருங்களேன் அப்படியே ஷாக் ஆகிடுவீங்க..
 
காணொளி.
நஹ் யான், நஹ் யான், ஸெம்பூ நஹ் யான்
Nah yen, nah yen, shempoo nah yen
日元 日元 洗发水 日元
 (தமிழாக்கம் பத்து ரூபா, பத்து ரூபா, எல்லாமே பத்து ரூபா)

ஞாயிறு, ஜனவரி 21, 2018

A to Z

This is Writing Place in Germany–Stuttgart, Biergarten Park 04:30 pm 2012 Oct 16

முதலில் முன்னுரை
கீழ்காணும் ஆங்கிலம் நிச்சயமாக தவறாக இருக்கலாம் ? சிறு வயதிலிருந்தே ஆங்கிலம் என் உடம்புக்கு ஒத்துவராது நான் தாமரை இலையைப் போல் எவ்வளவுதான் விரிந்து கொடுத்தாலும் ஆங்கிலம், தண்ணீரைப் போல் என்னுடன் ஒட்டுவதில்லை. ஏதோமுன் ஜென்மப்பகை போல, தமிழில்தானே எழுதுகிறோம் ஒரு மாற்றத்திற்காக ஆங்கிலத்தில் எழுதுவோமே... என நினைத்து எழுதினேன் வார்த்தைகள் ஒழுக்கமான ஆங்கிலத்தில் இல்லை என்பது எனக்கும் தெரியும் But ஆங்கில எழுத்தான A, B, C, D யை வரிசையாக அமைக்க ஆசைப்பட்டேன் அதன் விளைவே இது தவறுகளுக்கு எனது முதற்கண் SORRY & THANKS for Adjustment.

Advance is not yet sanctioned.

Bad, very bad.  I am seriously

Contemplating on quitting my job, Mr. Sambasivam told

Dalen, the accountant.

Emergency? Or any crisis?

First sanction my advance.

Gaelle’s father, Mr.Zeig is in

Hospital. Please contact me after some time.

I will detail you all the matter.

Jabriga …where is she now?

Kaiser replied, she is on

Leave, Sir.

Manager is here right?

No. Not here. He is in the next room.

One minute, I will comeback. Finish all the

Pending works 

Quickly and then contact me.

Relegate all your

Social works.

Then get your money.

Urgent works are waiting, Mr. Sambasivam,

Valdemar told him.

Wait Sir please…

X-rays and scan reports have come. Any problem?

Yes, not positive.

Zeig  is no more. Got the message just now.


இதில் இடம் பெற்ற திரு சாம்பசிவத்தைத் தவிர Mr. Dalen,  Miss. Gaelle, Miss. Jabriga, Mr. Kaiser, Mr. Valdemar and Mr. Zelig அனைவரும் ஜெர்மனி நாட்டவர்கள்.


தமிழாக்கம்.

முன் பணத்திற்கான ஒப்புதல் இன்னும் அளிக்கப்படவில்லை. பாதகம் மிகவும் பாதகம். நான் ராஜினாமா செய்வதைப் பற்றி தீவிரமாக யோசிக்கின்றேன் என்று கணக்கர் டேலியனிடம் திரு சாம்பசிவம் சொன்னார்.

அவசரத் தேவையா ? ஏதாவது நெருக்கடியா ?

முதலில் முன் பணத்திற்கு ஒப்புதல் அளிக்கவும்.

கேய்ல்லியின் அப்பா, திரு ஜேய்க் மருத்துவமனையில் இருக்கிறார். தயவாய் சற்று நேரம் கழித்துத் தொடர்பு கொள்ளவும். நான் உங்களுக்கு எல்லா விஷயத்தையும் விளக்கமாகச் சொல்கிறேன்

கப்ரிகா…. இப்போது அவர்(ள்) எங்கே இருக்கிறார்(ள்) ?

அவர்(ள்) விடுமுறையில் இருக்கிறார்(ள்) என்று கேய்சர் சொன்னார்.

மேலாளர் இங்குதானே இருக்கிறார் இல்லையா ?

இல்லை. அவர் இங்கு இல்லை. அடுத்த அறையில் இருக்கிறார்

ஒரு நிமிடம், நான் மீண்டும் வருவேன். நிலுவையில் அல்லது முடிக்கப்படாமல் இருக்கும் வேலைகளை எல்லாம் சீக்கிரமாக முடித்துவிட்டு, அதன்பின் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் சமூகசேவைகள் எல்லாவற்றையும் புறக்கணியுங்கள். அதன் பின் உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளவும். திரு சாம்பசிவம், அவசரமாக முடிக்க வேண்டிய வேலைகள் காத்திருக்கின்றன.

தயவாய் காத்திருங்கள் ஐயா என்று வால்டேமார் அவனிடம் சொன்னார்.

எக்ஸ்ரே, ஸ்கான் முடிவுகள் வந்து விட்டன. ஏதேனும் பிரச்சனையா ?

ஆம்! எதுவும் நேர்மறையாக இல்லை.

ஜெய்க் இறந்து விட்டார். இப்போதுதான் செய்தி வந்தது.


மரணம், சில நேரங்களில்...
நெருங்குபவனை விலக்கி விடும்,
விலகுபவனை நெருங்கித் தொடும்.

இதில் திருத்தம் செய்து கொடுத்த வில்லங்கத்தாருக்கு நன்றி.

காணொளி

வெள்ளி, ஜனவரி 19, 2018

தி கிரேட் இந்தியன்


பல நேரங்களில் நான் எனது அலுவலகத்தில் அரபு மொழி பேசும் அனைத்து நாட்டவர்களிடமும் வாக்கு வாதம் செய்திருக்கிறேன் அது பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்தி முக் மாபி (இந்தியன் மூளை இல்லாதவன்) எனச்சொல்லி விடுவார்கள் எனக்கு கோபம் வந்து விடும் அது யாராக இருந்தாலும் சரி (Including U.A.E People) சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுப்பேன் இந்தியனை அயோக்கியன் எனச்சொல் ஒத்துக்கொள்கிறேன் ஏன்... என்னைக்கூட அயோக்கியன் என்றோ, மூளையில்லாதவன் என்றோ நீ நிரூபித்து விட்டால் ? சம்மதமே ஆனால் ஒட்டு மொத்தமாக இந்தியன் மூளையில்லாதவன் என்பதை ஒருக்காலும் ஏற்கமுடியாது இந்தியன் சிந்தித்து தவறுகளை செய்து விட்டு வழிகளை கடந்து தப்பித்து விடுவான் ஆனால் உன்னால் முடியாது காரணம் உனக்கு சிந்திக்கும் திறன் இல்லை ஏனெனில் மிஷான் இந்தே முக் மாபி (உனக்கு மூளை இல்லை) ஆனால் உன்னில் 90% பேர் நல்லவனாக இருக்கலாம் நானறிவேன் ஆனால் இந்தியன் 90% பேர் புத்திசாலி என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது இந்தியனை சொல்லும் நீ எனது கேள்விக்கு பதில்சொல். 

பிலாத் மால் இந்தே கம் நபர் மவுஜூத் ஆலி ?

உனது நாட்டில் விஞ்ஞானிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? 

நீ என்ன கண்டு பிடித்தாய்  ? குப்பூஸை (சப்பாத்தி போன்ற ரொட்டி) வேண்டுமானால் சொல்லலாம் அதுகூட மஷ்ரி (Egyptian) கொண்டு வந்த உணவு. பலரும் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்கள் அதில் சிலர் ஏன்... அப்துல் கலாம் இல்லையா ? என்பர் எனக்கு கோபம் உச்சிக்கு ஏறி விடும் அப்துல் கலாம் யாரு ? உனது நாடா ? எனது தி கிரேட் இந்தியன் எனது தமிழன் என்பேன், அதற்கு எங்க ஆளு என்பான் நீ பேசுவது மதவாதம் நான் பேசுவது கணக்கெடுப்பு இதிலிருந்தே தெரிகிறதா ? உனக்கு மூளை இல்லை என்பது. இதற்கு ஆதாரமாக வேலையிலிருந்தே பல விசயங்களை எடுத்து வைத்திருக்கிறேன் அதைப்பற்றி தனிப்பதிவாக போடவேண்டும் பொறுங்கள் இப்படிப் பேசியதால் நான் பலரிடம் கெட்டவன் என்ற பெயரை சம்பாரித்து இருக்கிறேன் ஆனால் இதற்காக நான் துளியளவும் கவலைப்படவோ, வெட்கப்படவோ இல்லை ஏனெனில் நான் பேசியது முழுக்க முழுக்க எனது மனசாட்சிக்கு தெரிய உண்மை, நியாயம்.


வெகுகாலமாக அரேபியர்கள் இந்த வார்த்தையை சொல்வதை கடைப் பிடித்தார்கள். தற்போது குறைந்து உள்ளது உண்மையே காரணம் இப்பொழுது அதிகமான இந்தியர்கள் பட்டதாரிகள்.

செவ்வாய், ஜனவரி 16, 2018

இரை தேடி உழைத்ததில் இறை தந்த பரிசு



ணக்கம் நட்பூக்களே... இவ்வருடம் ஜனவரி ஒன்று அதிகாலை கோயமுத்தூர் ஆதி மோட்டார்சில் MURUTI SUZUKI WagonR என்ற மகிழ்வுந்து ஒன்றை என்னைச் நேசிக்கும் நல்ல உள்ளங்களின் ஆசியால் வாங்கினேன். குடும்பத்தோடு முதலில் அம்மாவின் ஆசைப்படி பிள்ளையார் கோவிலுக்கு சென்று மகிழ்வுந்துக்கு பூஜை போட்டு பிறகு எனது ஆசைப்படி Coimbatore The United Physically Handicapped School சென்றோம் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக முதல்நாளே இனிப்பு (லட்டு) வாங்கி வைத்து விட்டேன். லட்சங்கள் செலவு செய்து மகிழ்ச்சிக்காக மகிழ்வுந்து வாங்குகின்றோம். 

ஞாயிறு, ஜனவரி 14, 2018

பாசிபட்டணம், பசி பஷீர்


Just two days back I received an E-mail to my devakottaiyan@yahoo.co.in id. Sender is a small baby from Malaysia. This baby asked me Uncle I read your blog. Why don’t you write children stories, Comics or humorous stories for children ?
This is for that baby… வாழ்க தமிழ் மலேசியாவிலும்.

பாட்டி பட்டம்மாவும், பேத்தி ப்ரீத்தியும்


பாட்டி எனக்கு ஒரு கதை சொல்லு...
சரி உட்காரு பசி கதை சொல்றேன் பாசிபட்டணம்ங்கிற ஊர்ல பசி பஷீர்னு ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு ஏழை வறுமை, அவன் வயிற்றுக்கு பட்டினியாய் கிடப்பது எப்படி ? என்று சொல்லிக் கொடுத்தது. அதைக் கற்றுக் கொண்ட வயிறு இப்படியே கிடந்து பணம் சேர்ப்பது எப்படி ? என்று அவனது மனதுக்கு சொல்லிக் கொடுத்தது இப்படியே....

பணமும் கொழித்தது
மனமும் செழித்தது
வளமும் நிறைந்தது

மனம் சொன்னது ஒருநாள் வயிற்றிடம் நீ பட்டினியாய் கிடந்தது போதும் என்று... உடன் வயிறு கேட்டது மனதிடம்...
பட்டினியா ? அப்படினா... என்ன ?
வேதனைப்பட்ட அவன் மருத்துவரிடம் போய் வயிற்றுக்கு பசித்து புசிக்க வழிவகை கேட்டான் மீண்டும்...

வளமும் நிறைந்தது
மனமும் செழித்தது
பணமும் கொழித்தது

யாருக்கு ? மருத்துவருக்கு. (ராமதாசுக்கு அல்ல)
மீண்டும் வறுமை அவன் வயிற்றுக்கு பட்டினியாய் கிடப்....
ஓஹோ அதனாலதான் நீ என்னை டாக்டருக்கு படிக்கச் சொல்றியா ?


சாம்பசிவம்-
பேத்தி ப்ரீத்தி வெவரமான ஆளுதான்.

Chivas Regal சிவசம்போ-
பேத்தி நீடாமங்கலம் நீட் நீலாம்பரி மாதிரி இருக்குதே....

காணொளி
கில்லர்ஜியின் பொங்கல் நல்வாழ்த்துகள்