தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 23, 2014

இன்றைய MONEYதர்கள்


விஞ்ஞானம் மனித வாழ்வுக்கு வளர்ச்சியா ? வீழ்ச்சியா ?

இன்றைய கால மனிதர்கள் 90 % பேர் சர்வ சாதாரணமாக 50 வயதுக்கு உள்ளேயே இயற்கையான மரணம் வந்து இறந்து விடுகிறார்கள், இது போக, செயற்கை மரணங்கள் பல வகைகளில் வருகிறது

பூகம்பம், TSUNAMI, BOMB BLAST, FLIGHTS ACCIDENT, TRAIN ACCIDENT, BUS ACCIDENT, POLITICS MURDERS, WARகளால் MURDERS, ரசிகர் மன்ற வேலைகளால் ACCIDENT, சொத்து காரணமாய் MURDERS, LOVE விவகாரங்களால் MURDERS, கள்ளக்காதலால் MURDERS, தியாகம் என்ற பெயரில் CYANIDE குப்பி உண்ணுதல், தலைவனுக்காக தீக்குளித்து SUICIDE, POLITICS SUICIDE என்ற பெயரில் MURDERS, LOVE FAILUREரால் மரணம், வழிப்பறிகளால் MURDERS, COLLEGEகளில் EV TEASING என்ற பெயரில் குரூரங்கள், CINEMA ACTORரை காணப்போய் கூட்ட நெரிசலில் மரணம், CINEMA ACTORருக்காக SUICIDE, ஜாதிமத சண்டையால் மரணங்கள், மின்சாரத்தால் மரணங்கள், விசவாயு தாக்கி மரணம். 

இன்னும் விதவிதமாய், வினோதமாய், வித்யாசமாய், மரணங்கள். ஒரு ''தேள்'' கடித்தால்கூட தாங்க கூடிய உடல் பலமோ, மனபலமோ தற்கால மனிதர்களிடம் இல்லை, காரணமென்ன ? 

உடல் உழைப்பு இல்லை, கடைசி காலம் வரை காலையில் CHEMICAL கலந்து உப்பு, புளி, மிளகாய் சேர்க்கப்பட்ட TOOTHPASTEடில் பல் துலக்குவது, இதனால் 40 வயதுக்குள் பல் விழுந்து விடுகிறது, HEATERரில் சூடாக்கப்பட்ட SHOWERரில் வரும் CHEMICAL கலந்த நீரில் CHEMICALலிலான SOAP, SHAMPOO போட்டு குளியல், ஆதலால் கூடிய விரைவில் முடி கொட்டுதல், அல்லது முடி வெளுத்துப் போகிறது, MAKE-UP என்ற பெயரில் முகத்திற்கு, POWDER, CREAM இதனால் தோல் வியாதி, MINERAL WATER என்ற பெயரில் கலப்படம் செய்யபட்ட BOTTLE நீரையே குடிக்கிறார்கள், திடமான உணவுகள் இல்லை, ஆறு மாதங்களுக்கு முன்பே கொல்லப்பட்ட மாமிச இறைச்சிகள், FRIDGE ஜில் வைத்து பாதுகாக்கப்பட்டு ELECTRIC அல்லது GAS அடுப்பில் உடனுக்குடன் சுடவைத்த உணவுகள், செயற்கை உரங்கள் போடப்பட்டு துரிதமாக வளர்க்கப்பட்ட காய்கறிகள், PIZZA, SANDWICH என்ற பெயரிலான கௌரவத்திற்காக உண்ணப்படும் ரப்பர் துண்டுகள், AIR COOLER மூலம் செயற்கை குளிரில் உறங்குவது, இதனால் BLOOD உறைந்து போய் OMENYSHTION என்ற நோய் வருகிறது, சிறிய நேரம் கிடைத்தாலும் COMPUTERரையோ, MOBILEலையோ நோண்டிக் கொண்டிருப்பது, அல்லது T.V பார்ப்பது, (இதில் 3D வேறு) இதனால் 25 வயதிலேயே கண் பார்வை இழந்து விடுகிறது, 

சரி வாழ்க்கை எப்படி போகிறது ? OFFICEஸில் வேலை முடிந்து களைத்து வீடு வந்தால், மனைவிக்கு NEW MODEL MIXER வாங்கவில்லை என்பதால் சண்டை, சரி இரவில் சமாதானப்படுத்துவோம் என்றால் L.K.G படிக்கும் மகள் இரவு 09.00 மணிவரை COMPUTERரில் CAMS விளையாடிக் கொண்டு இருக்க, மகனும் இரவு 10.30 மணிவரை LAPTOP YOUTUBEபில் மன்மதராசா... மன்மதராசா... பாட்டு போட்டு கேட்டுக் கொண்டிருக்க, OFF செய்யச் சொன்னால் தங்கச்சியை காரணம் சொல்வான் அவளுக்கும் அண்ணனை கண்டாலே ஆகாது இருவரும் கீறியும்-பாம்பும் போல், பிறகு எப்படி ? மனைவியும் தன் பங்குக்கு இரவு 11.15 மணிக்கு VIZAN T.V யில், வரும்...

''தோ(ல்)ள் கொடுத்த தோழி'' 

SERIALலுகாக, காத்துக் கொண்டிருக்க... மன உலைச்சலில் அப்படியே உறங்கிப்போக.... இப்படியே பல வருடங்களும் உருண்டோட.... 

மகனுக்கு தெரிந்த, M.L.A மூலம் M.B.B.S. APPLICATION னும் கிடைத்து விட்டது DONATION கொடுக்க, BANKகில் FIVE LAKH, LONEனுகாக லோலோன் அலைய வேண்டியதாகிப் போச்சு, உறவுக்கார திருமணத்திற்கு போககூட நேரமில்லாமல் e MAILலில், வாழ்த்து அனுப்ப வேண்டிய நிலை, ஒருவழியாக COLLEGE போக, மகன் PULSAR BIKE இல்லாமல், உள்ளே நுழையவே முடியாதாம் ? ? ?

அதற்காக கீழ்வீட்டை ஒத்திக்கு விட்டு அதற்கு ஒரு லட்சம் அழுது, சரி மகன் படித்து DOCTOR ஆகி, கை நிறைய சம்பாரித்து நம்மகிட்டதானே கொடுக்கப் போறான், என சமாதானமடைய... அடுத்த வீட்டு அருணாசலம் ஒருநாள் சொன்னசேதி கேட்டு முதல் முறையாக HEART ATTACK 06.2 வந்து HOSPITAL லில் சேர்த்து CT SCAN, MEDICINE, ROOM RENT, 43,000 Rs, CREDIT CARD டில் இழுக்க விட்டு, மூன்றுநாள் கழித்து வீடு வந்து மனைவியிடம் தான் கேட்ட சேதியை சொன்னால் ?

உங்களுக்கு வேற, வேலையே இல்லை எப்பப்பாரு எம்புள்ளைய கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருங்க... மனைவி போயே விட்டாள், அவர் கேட்டசேதி 

உன் மகனும், கீழ்வீட்ல ஒத்திக்கு வந்து இருக்கிறவருடைய மகளும் BIKEல, லட்சுமி THEATERக்கு CINEMA பார்க்க வந்தாங்க, நான் பார்த்துட்டு தெரியாதது மாதிரி வந்துட்டேன், பார்த்துக்க அப்புறம் கீழ்வீட்டுக்கு ஒத்திக்கு வந்தவ, மேல்வீட்ல விளக்கு ஏத்திடப்போறா... 

இதன் விளைவுதான், HEART ATTACK 06.2  அடப்பாவி உனக்கு COLLEGE போக BIKE வாங்கி கொடுத்தா நீ அவளோட BIKEல, ஊரைச்சுத்தறியா ? நம்ம, ஜாதியென்ன ? அவ ஜாதியென்ன ? ச்சே... இதைப்பக்குவமா கையாளனும் மகனிடம் இதைப்பற்றி கேட்கவேண்டாம், நாளைக்கே பணத்தைக் கொடுத்து வீட்டைக்காலி செய்யணும் மனைவியிடம் பணத்திற்கு NECKLACEசை கேட்டால் நானே ஒண்ணுதான் வச்சுயிருக்கேன், சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு எதை போட்டுப் போறது ? அவள் தரவில்லை சரி ஏற்கனவே இருந்த யோசனைப்படி OUTDOORரில் தன்பெயரில், வாங்கிப் போட்ட 12 சென்ட் இடத்தை உடனே விற்று ஒரு லட்சம் கொடுத்து வீட்டை காலி செய்துட்டு, நல்ல இடமாப்பார்த்து மகளுக்கு கல்யாணம் செய்திடலாம், கல்யாணமாலை மூலம் மாப்பிள்ளை வீட்டார் வந்தனர் மாப்பிள்ளை DUBAIயில், OIL COMPANYயில் SUPERVISOR ராக, வேலை பார்ப்பதாகவும் அதனால் 65 பவுன் நகையும், BIKEகும், கொடுத்தால் போதுமென பெருந்தன்மையாக சொல்லி விட்டார்கள், நல்ல இடமென்பதால் எல்லாவற்றுக்கும் சம்மதித்து கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தது, இன்னும் ஒருவாரமே இருக்கிறது, நகைகளெல்லாம் செய்து வந்து பீரோவில் பூட்டி வைத்து விட்டு நிம்மதியாக தூங்கினார், காலையில் மனைவி அலறியடித்துக் கொண்டு வந்து உசுப்பிளாள்...

என்னங்க... பீரோவுல இருந்த நகையப்பூராம் காணோமுங்க... கீழ்வீட்டுக்கு குடிவந்த அந்த ஓடுகாலிச் சிறுக்கி நம்ம பயலை கூட்டிக்கிட்டு ஓடிட்டாங்க.... அய்யோ... நான் என்ன செய்வேன் ?

ஒப்பாரி வைத்தவள், எழுந்து உட்கார்ந்த கணவன் ஒன்றும் சொல்லாமல் இருப்பதால்...
''என்னங்க'' 
என தோளில் கை வைத்தாள், அவர் ஏற்கனவே SECOND HEART ATTACK 09.4 வந்து 49 வது, வயதிலேயே முடிந்துபோய் 0.54 SEC ஆகி விட்டது.

கணவன் கேட்டு NECKLACE தரமறுத்தவள், கணவன் கேட்காமலேயே தாலியை கொடுக்கத் தயாரானாள்.

விஞ்ஞானம் அபார வளர்ச்சிதான், மனிதனுக்குமா ?

இது,அன்றைய மனிதர்கள்.in தொடர்ச்சி

இனிய நெஞ்சங்களே.... வலைச்சரத்தில் எனது கடைசி பதிவில் இப்படி எழுதியிருந்தேன்...

நண்பர்களே கில்லர்ஜி க்கு இன்னொரு பெயர் உண்டு அதுதான் கீழே சொடுக்குக....


என்று கூறியிருந்தேன் இதை ‘’கிளிக்’’கி சென்று கருத்துரை அளித்த ....

திரு. துளசிதரன் தில்லை அகத்து
திரு. மெக்னஷ் திருமுருகள்.
திருமதி. இளமதி

அவர்களுக்கு நன்றி.

அறிவிப்பு – நண்பர்களே, டேஷ்போர்டில்.

புதன், புனிதாவுக்கு விரதம் – நாலு பேருக்கு நன்றி (M.R. ராஜாமணி 1983) 

நேற்று முதல் வந்து இருக்கிறது ‘’கிளிக்’’கினால் Blank Page என்று வருகிறது இதற்க்கு நான் பொருப்பு அல்ல என்பதை அறிவிக்கிறேன் நன்றி.


72 கருத்துகள்:

  1. ஆரோக்கியத்தை அறிவுறுத்தும் அருமையான பகிர்வு!
    வாழ்த்துக்கள்!

    மனித வாழ்வில் இத்தனை வகையான மரணங்களா?
    மண்டை காய்கிறது நண்பரே!

    "மரணத்தைப் பற்றி படிப்பதனால் ஏற்படும் மரணம்"
    இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்!

    "வால்மீகி"( பதிவை) விதைக்காவிட்டல்?
    மரணம் (புதைக்கவா°) நிச்சயந்தானோ என்னவோ?

    அச்சத்துடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே, வாழ்த்துக்களுக்கு நன்றி மண்டை காய்ந்து மரணித்தவர்களும் உண்டு நண்பா...
      வால்மீகி க்கு வந்தமைக்கும் நன்றி நண்பா.

      நீக்கு
  2. வணக்கம்!

    "உப்பிட்டவரை உயிர் உள்ள வரை நினை" - இது பழமொழி
    "உணவிட்ட விவசாயிகளுக்கு, வாழ்த்தும், நன்றியும் சொல்வதற்கு
    "குழலின்னிசை"- வலைப் பூ பக்காமாய் வாருங்களேன்!

    "இன்று விவசாயிகள் தினம்" (23/12/2014)

    நன்றி!

    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்தேன் நண்பா விவசாயிக்கு வந்தனம் செய்து வந்தேன் நண்பா.

      நீக்கு
  3. பெரிய வரலாற்றுத் தொடரைப் படித்த மாதிரி இருக்கின்றது!..

    நலம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் ரத்தினச்சுருக்கமான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  4. வழக்கம் போல வித்யாசமான, ஆரோக்கியம் குறித்த பதிவு >>>>வாழ்த்துகள் அண்ணா!,அருமை:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வித்தியாசம் அதுதானே கில்லர்ஜி நன்றி சகோ

      நீக்கு
  5. இன்றைய மனிதர்கள்...அப்பப்பா...அலசல் வித்தியாசம்
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ உண்மைதானே... வாக்களித்தமைக்கு நன்றி

      நீக்கு
  6. இன்றைய மனிதர்கள் பதிவு அட்டகாசம் ! எனக்கும் தங்களைப்போன்றதொரு எண்ணம்தான் ! எழுத்துப்பிழைகளில் ஏதேனும் குறியீடு உள்ளதா அண்ணா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கேள்வி விளங்கவில்லையே.... நண்பரே

      நீக்கு
    2. Bomp Blast க்கு பதில் Blases , Gas க்கு பதில் cas , pulsar க்கு பதில் falser , ct scan என்பதற்கு பதில் scane , modelக்கு பதில் madal போன்று சில ஸ்பெல்லிங் தவறுகள் இருக்கின்றன . அதனால் தான் கேட்டேன் அண்ணா ! தமிழில் ஒரு வார்த்தை விட்டால் கூட அர்த்தம் அறிந்துகொள்ளலாம் . ஆனால் ஆங்கிலத்தில் அவ்வாறு விட்டால் அர்த்தம் மாறிவிடும் . அதனால் தான் கேட்டேன் அண்ணா !

      நீக்கு
    3. நண்பா, நன்றி திருத்தி விட்டேன் எனக்கு ஆங்கிலம் உடம்புக்கு ஒத்துக்கிறாது நம்மலோட படிப்பு லெட்சணம்தான் உங்களுக்கு தெரியுமே....

      என்னைவிட சிறியவராக உள்ள மெக்னேஷ் சொல்வதை கேட்பதா ? என்ற அகம்பாவம் என்னிடம் கிடையாது குறைகளை சுட்டிக்காட்ட 25 மணி நேரமும் தயங்க வேண்டாம் நான் தவறாக நினைக்க மாட்டேன்

      இதுல மானக்கேடு என்ன ? தெரியுமா ? 247 எழுத்தை சரியாக படிச்சு கிட்டேன் கேவலம் 26 எழுத்தை படிக்க முடியலையே,,,, பார்த்தீங்களா ? இதை நினைக்கும்போது இந்தோனிஷியா பழமொழிதான் ஞாபகத்துக்கு வருது....
      நன்றி நண்பா....

      நீக்கு
    4. அண்ணா ! நீங்களாவது அந்நிய மொழியில் தவறுசெய்கிறீர் . ஆனால் நானெல்லாம் தாய்மொழியிலேயே பல தவறுகள் செய்துள்ளேன் . என்னுடையப் பதிவுகளில் எல்லாம் , வல்லினம் மிகும் , மிகா இடங்கள் , சந்தி , சாரியை , வேற்றுமை உருபுகள் , தொகா மற்றும் தொகைநிலைத்தொடர் , அயர்கூற்று , நேர்க்கூற்று என எக்கச்சக்க இலக்கணப்பிழைகள் இருக்கும் ! நன்றி அண்ணா

      நீக்கு
    5. \\என்னுடையப் பதிவுகளில் எல்லாம் , வல்லினம் மிகும் , மிகா இடங்கள் , சந்தி , சாரியை , வேற்றுமை உருபுகள் , தொகா மற்றும் தொகைநிலைத்தொடர் , அயர்கூற்று , நேர்க்கூற்று என எக்கச்சக்க இலக்கணப்பிழைகள் இருக்கும் !\\

      தமிழ் இலக்கணத்தில் இத்தனை பெயர்களைத் தெரிந்து வைத்திருப்பதற்கே உங்களுக்கு ஒரு ஓ போட வேண்டும்!!

      நீக்கு
  7. விஞ்ஞானத்தால் நாம் பெற்றது சில அபாரமானவை, ஆனால் தொலைத்தவை விலை மதிக்க முடியாதவை, சொல்லப் போனால் நம் வாழ்க்கையே தொலைத்து விட்டோம். தாயின் மார்பை அறுத்து பால் குடிக்கிறார்கள், நாமும் அதே செயலை காட்டாயப் படுத்தி செய்ய வைக்கப் படுகிறோம். மொத்தத்தில் இது கண்ணை விற்று ஓவியம் வாங்கும் வேலை. நினைத்தால் பல முறை நெஞ்சம் குமுறும், ஆனால் என்ன செய்ய முடியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பா சவுக்கடி வார்த்தைகள் சுடுகிறது ஆனாலும் உண்மை சுடத்தானே செய்யும் நன்றி

      நீக்கு
  8. மனிதனின் சராசரி வயது உயர்ந்திருப்பதாகச் சொல்கிறார்களே?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன நண்பா புதிய தகவலாக இருக்கிறதே தாங்கள் சொல்வது....

      நீக்கு
  9. பெயரில்லா12/23/2014 8:33 PM

    எவ்வளவு நாள் இருந்தால் என்ன ? இருக்கும் வரை இன்பமுடன் வாழ வேண்டும் ..
    எது இன்பம் . அது அவரவர் மனதை பொருத்தது. சொத்து சுகம் இருப்பவர் இன்பமுடன் உள்ளார் என்று கூற இயலாது.. ஆனால் வரும் சில துன்பங்களை அவரால் சமாளிக்க முடியும்.
    துன்பங்கள் நிறைந்து உள்ள இடத்தில் , விரைவில் இறப்பதும் நல்லதற்கே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கும் வரை இன்பமுடன் வாழ்வதும், துன்பமுடன் வாழ்வதும் மனித வாழ்க்கை முறை பந்தப்பட்டது நண்பரே...
      விஞ்ஞான வளச்சியில் மனிதனின் வாழ்க்கையில் உள்ள வித்தியாசங்களைத்தான் நான் பிரித்து எடுத்து வைத்திருக்கிறேன்
      உலகம் தோன்றிய காலம் தொட்டு பிறப்பும், இறப்பும் இருக்கிறது இருந்தே தீரவேண்டும்
      //வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது//

      என்ற கவிஞனின் வாக்கு பொய்யில்லை

      பிறவிப்பயன் என்ன ? தாம்பத்யம் அன்றைய மனிதர்கள் குறைந்த பட்சம் 10 குழந்தைகள் பெற்று இருக்கிறார்கள் இதற்காக இவர்கள் கூடிக்கழித்த இரவுகள் எத்தனை, எத்தனை, இதுவல்லவோ வாழ்க்கை இதுவல்லவோ பிறவிப்பயன்

      இன்றைய மனிதன் ஒன்றோடு நிறுத்திக்கொள்(ல்)கிறான் தன் உணர்வுகளை…. இதற்க்கு அடிப்படை காரணம் விஞ்ஞான வளர்ச்சிதானே...

      நீக்கு
  10. ஒரு நடுத்தர வர்க்கத்தின் நிகழ்வுகளை படம்பிடித்து காட்டியிருக்கிறிர்கள். வாழ்த்துக்கள்.இருப்பவர்கள் உண்டு கழித்து சாவார்கள்.இல்லாதவர்கள் ஏங்கியே சாவார்கள். நீங்கள் சொல்லியிருப்பதுபோல் நடுத்தரமாக இருப்பவர்களில் சிலர் சாவார்கள் மொத்த்தில் எல்லோரும் ஒரு நாள் சாவார்கள். இதில் மற்றவர்களுக்கு செலவு இல்லாமல். சித்ரவதைகள் படாமல் மற்றவர்களுக்கு இம்சை கொடுக்காமல் சாவதுதான் நல்லச் சாவு என்று நான் நிணைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே இருப்போர்கள் தாங்கள் சொல்வது போல் உடனடி மாற்றத்தை, உடனடி சந்தோஷத்தை எடுத்துக்கொள்வதும் உண்மையே... நல்லசாவு பெரும்பாலும் நல்லவர்களுக்கே வந்து விடுகிறதா ?

      நீக்கு
  11. ஏன் எல்லாவற்றிலும் ஒரு எதிர்மறை சிந்தனை.... மாற்றங்களுக்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டு அருமையாய் வாழலாமே.... எடுத்துக்காட்டாக எப்படியும் பெண்ணை ஒரு ஆணுக்குத்தான் தரப்போகிறார்கள்... அது பெண் இஷ்டப்பட்டவனாய் இருக்கட்டுமே...அவன் ஏழையாய் இருந்தால் உங்கள் பணம் உதவட்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களின் அன்றைய மனிதர்களுக்கு கொடுத்த கருத்துரையும் இன்றைய தர்களுக்கும் கொடுத்தும் கருத்துரை எதிர்மறையாக இருக்கிறதே....

      ஆணுக்கு பெண் 80ம், பெண்ணுக்கு ஆண் 80ம் உலகம் தோன்றிய காலம்தொட்டு ஆறறிவு மனிதனும், ஐந்தறிவு மிருகங்களும் அமைத்து கொண்டனவே...
      இஷ்டப்படுவதில் கஷ்டம் ஏன் 80தே எமது கேள்வி

      ஏழையாய் இருந்தால் உங்கள் பணம் உதவட்டுமே
      தாங்கள் சொல்வது //உலகம் சமநிலை பெறவேண்டும், உயர்வு தாழ்வில்லா நிலைவேண்டும் // என்று நினைக்க கூடிய விடயங்கள் நான் சொல்வது அன்றைய வாழ்விற்க்கும், இன்றையைய வாழ்விற்க்கும் உள்ள வேறுபாடுகள் மட்டுமே மற்ற விபரங்களுக்கு நான் வரவில்லை
      தங்களின் வருகைக்கு நன்றி சகோ.

      நீக்கு
  12. சாகிறவன் சாகட்டும் ,நாம ஜாலியா ஆயிரம் வருடம் இருப்போம் கில்லர் ஜி :)
    த ம 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பகவான்னாலே முடியும்,,, என்னைப்போன்ற அப்பாவிகள் ?
      நன்றி பகவான்ஜி

      நீக்கு
  13. http://www.disabled-world.com/calculators-charts/life-expectancy-statistics.php

    பதிலளிநீக்கு
  14. Average Indian’s life expectancy up 4.6 years

    http://timesofindia.indiatimes.com/india/Average-Indians-life-expectancy-up-4-6-years/articleshow/16633612.cms

    பதிலளிநீக்கு
  15. இம்புட்டு தகவல்களையும் ஒரே பதிவினில் .......... .......... ஒரே மூச்சில் படித்தேன். அப்பாடி! ஓ ... அதற்க்காகத்தான் முன்னாடியே காளிமார்க் சோடாவா? எனக்கு எங்கள் ஏரியா காளிமார்க் பன்னீர் சோடாதான் பிடிக்கும். சிறப்பாக சொன்ன நண்பருக்கு நன்றி.
    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே அடுத்து நாம் சந்திக்கும் பொழுது கண்டிப்பாக வாங்கித்தருகிறேன்.
      வருகைக்கும், கருத்துரைக்கும், வாக்கிற்க்கும் நன்றி

      நீக்கு
  16. பதில்கள்
    1. நன்றி நண்பரே எல்லோருக்கும் உபயோகமான தகவல் கொடுத்து இருக்கிறீர்கள்.

      நீக்கு
  17. கில்லர் ஜி! இதற்கும் முந்தைய பதிவில் கொடுத்த பதிலுக்கு சப்போர்ட் பண்ணும் வகையில் தான்.

    இன்றைய மனிதனின் சராசரி உயிர் வாழும் வயது கூடி யிருக்கின்றது. விஞ்ஞான வளர்ச்சியில் பல நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இல்லையென்றால் இன்று தேவகோட்டையன் அபுதாபியில் இருந்து இப்படிப் படிவிட அதை நாங்கள் எல்லோரும் வாசிக்க, இந்தக் கொடுவா மீசைக்கார நட்பு கிடைத்திருக்குமா? இந்த வளர்ச்சி ஒரு தனிமனிதனின் சுதந்திரத்தை பறிக்கின்றது என்றாலும் - கணவன் தான் எங்கிருக்கின்றேன் என்று மனைவியிடம் பொய் சொல்ல முடியாது அவர்களது மொபைல் ஃபோன் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனுடன் இருந்தால்..- என்றாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படிப்பட்ட எண்ணங்கள் வரத்தான் செய்யும். ஏன் கறுப்பு வெள்ளை படத்தில் கூட, காலம் மாறிப் போச்சு, எங்க காலத்துல எல்லாம் எப்படிச் செழிப்பா இருந்துச்சு, நல்லாஅ இருந்துச்சுனு,,, சொல்லும் வசனம் வரும். அப்படித்தான் அதற்கு முந்தையர் கூறினர். இதோ இப்போது நாம். அடுத்து அடுத்த தலைமுறையினர் எங்க காலம் எல்லாம் போய்டுச்சு என்று பேசுவார்கள்..இதே போல...முடிவு இல்லை ...இந்த வளர்ச்சியை ஏற்ருக் கொண்டு காலத்திற்கேற்றர்போல மாறிக் கொண்டு போக வேண்டியதுதான் ஜி. தீப்பெட்டி சைஸ் ஃப்ளாட்டுல எல்லாம் உரலும், அம்மியும் வைக்க முடியாது ஜி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அறிவியல் வளர்ச்சியால் பிரயோஜனம் ஒன்றுமேயில்லை என்பதல்ல வாதம். அறிவியல் வளர்ச்சியால் பெற்றது என்ன, இழந்தது என்ன என்று கூட்டி கழித்துப் பார்த்தால் பெருத்த நஷ்டம் வருகிறது சார்...........

      நீக்கு
    2. நண்பரே விஞ்ஞான வளர்ச்சியால் நாம் பலனடையாமல் இல்லை இன்றைக்கு நமது நட்புகள் நடப்புகள் ஆகிக்கொண்ருப்பதற்க்கு காரணம் விஞ்ஞானம் 80தில் எள் அளவும் ஐயமில்லை இந்த வளர்ச்சியால் மனிதன் பிறவிப்பயனான தாம்பத்யத்தை இழந்து கொண்டே...... இருக்கிறான் இனி வரும் நாட்களின் இவணுக்கு ஆண்மை இருக்கிறதா ? என சோதனை செய்து செய்துதான் திருமணம் செய்வேன் எனச்சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

      நீங்கள் சொல்வது போல நாளைய சந்ததியினர் எங்க காலம் போல இல்லை என கண்டிப்பாக சொல்வார்கள்

      இன்றைய மனிதன் மூளையை 12 சதவீதமே உபயோகப்படுத்தி இருக்கிறான் 80தையும் கண்டு பிடித்து இருக்கிறார்கள், மீதம் உள்ள 88 சதவீதமும் உபயோகப்படுத்தினால் ? ? ? நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது.

      12 % உபயோகப்படுத்தியவர்கள் மரியாதைக்குறிய ஐயா ஏ.பி.ஜே. அப்துல் கலாம் போன்றவர்கள், அப்டியானால் ? நானெல்லாம் ½ சதவீதம் கூட இருக்காது என்றே கருதுகிறேன்.

      நீண்ட கருத்துரையை தந்து அந்த கேப்பில் வாக்களிக்காமல் மறந்ததற்க்கும் நன்றி.

      நீக்கு
    3. கில்லர்ஜீ, நாம் வெறும் 10% மூளையைத்தான் பயன்படுத்துறோம், 12% மூளையைத்தான் பயன்படுத்துறோம் என்பதெல்லாம் 20 ஆம் நூற்றாண்டின் கட்டுக் கதைகளுள் ஒன்று. மனிதன் மூளை எதுவும் சும்மா இல்லை, தூங்கும்போது கூட இதயம், இரத்த ஓட்டம் என்று செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து பல இணைய பக்கங்களில் விலாவாரியாக எழுதப் பட்டுள்ளன.

      Fact or fiction?

      Experts Fact Check spoke to agree that there is potential to train the human brain to learn new skills and ideas but the idea that we only use 10 per cent of our brain capacity is, like the film Lucy, pure fiction.

      Do We Use Only 10% of Our Brains?

      நீக்கு
    4. நண்பரே 12 சதவீதம் என்று நான் படித்ததைத்தான் எழுதினேன் இருப்பினும் தங்களது கருத்தை ஏற்கிறேன் மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  18. உண்மையிலும் உண்மைசகோ, மரணப்பதிவா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயப்படாமல் முழுமையாக படித்தமைக்கும் நன்றி

      நீக்கு
  19. அன்றைய, இன்றைய
    நம்மாளுகள் சூழலுக்குள் ஊடுருவி
    உளநலம் பற்றிய ஆய்வினை
    மேற்கொண்ட தங்களுக்கு நன்றி.
    இவ்வாறான பதிவுகளை
    தொடர்ந்து தாருங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே தங்களின் கருத்தை ஏற்கிறேன்
      நன்றி

      நீக்கு
  20. மூச்சுத் திணறவைக்கும் வாழ்வியலும், மூச்சுவிடாமற் பதிந்த பதிவும்
    அருமை சகோதரரே!

    கற்கண்டாய் இனிக்கவேண்டிய வாழ்க்கை இப்படிக் கருங்கல்லாகினால்
    என்ன செய்யும் மனிதம் என்னும் இயந்திரம்!
    மனந்தொட்ட பதிவு கசோதரரே!

    தொடருங்கள் இதுபோல் நல்ல சமூக அலசல்களை..! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இந்தப்பதிவு வேகமாக படிக்ககூடியதே ஆகவே அதற்க்கு தகுந்தாற்போல் எழுதினேன் தங்களின் வாழ்த்துக்கு நன்றி

      நீக்கு
  21. இயற்கை மரணம்,செயற்கை மரணம் - அப்பப்பா நல்லாவே ஆபிஸ்ல உட்கார்ந்து யோசிச்சிருக்கீங்கன்னு தெரியுது.

    "//கணவன் கேட்டு நெக்லஸ் தர மறுத்தவள், அவன் கேட்காமலேயே தாலியை கொடுக்கத்தயாரானாள்//" - சூப்பர்,சூப்பர்.

    எனக்கு 31/2 பவுன்ல செயின் வாங்கி அனுப்புகிறேன்னு சொன்னீங்க, உடனே அனுப்ப வேண்டாம், தை மாசம் பொறந்த பிறகு அனுப்புங்க. சரியா..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆபீஸுல உட்கார்ந்து யோசிச்சு இருக்கேனா ? அரபிக்காரங்களோட வேலை பார்த்து இருக்கீகளா ?
      எது ஒருத்தி தாலி அறுக்கிறது ஸூப்பரா ?
      ஹலோ நல்லா படிங்க 3 ½ நன்றிதான் தர்றேன்னு எழுதியிருக்கேன்....

      நீக்கு
    2. 15 வருடங்களுக்கு முன்பு அரபிக்காரர்களோடு வேலை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் தான் சதங்களை கேட்டேன்.
      நான் உங்கள் வலைத்தளத்தை திறந்தவுடனே 3 1/2 பவுன் செயின் தானே மேல வந்தது. இதோ இப்பவும் அப்படித்தான் வருது.

      நீக்கு
    3. தமிழ் இன்னும் தகறாறோ ?

      நீக்கு
  22. அன்றைய மக்கள் பசி பட்டினியாலும் நோய் தாக்குதலாலும் இறந்ததால் அப்போது மக்களின் சராசரி ஆயுட்காலம் 27 ஆக இருந்தது. ஆனால் இப்போது நம் நாட்டில் மக்களின் சராசரி ஆயுட்காலம் 65.71 ஆக அதிகரித்திருக்கிறது என்றாலும் நீங்கள் குறிப்பிட்டது போல் பல்வேறு காரணங்களினால் ஏற்படும் இறப்புக்கு அறிவியலை குற்றம் சொல்லி பயனில்லை. அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாதது தான் காரணம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே கூட்டிக்கழித்துப்பார்த்தால் இழப்புகளே கூடுதல் அதைத்தானே நான் வலியுருத்தி இருக்கிறேன் வருகைக்கு நன்றி

      நீக்கு
  23. என்னமோ போங்க ஜி... ஆனாலும் நன்றி...

    பதிலளிநீக்கு
  24. அதை தவறு என்று நான் சுட்டிக் காட்டவில்லை. அதைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்கள் பார்வைக்கு வைத்தேன் அவ்வளவே. கற்றது கை மண் என்பது எனக்கு மட்டும் பொருந்தாதா என்ன!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தவறாக நினைக்கவில்லை நண்பா, எல்லாம் தெரிந்தவர் எவருமில்லையே.... நான் மட்டும் விதிவிலக்கா ? என்ன ? மீள் வருகைக்கு நன்றி

      நீக்கு
  25. அருமையான அலசல் நண்பரே...

    உங்கள் பாணியில் ! ஆமாம், விஞ்ஞான வளர்ச்சி என்ற பெயரில் மிக வேகமாய் முன்னேறி இங்கு வந்துவிட்டோம். ஆனால் அதன் பின்விளைவுகளை கணிக்காமலேயே விட்டுவிட்டதின் விளைவுதான் நீங்கள் இந்த அருமையான பதிவில் குறிப்பிட்ட அனைத்தும் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  26. இன்றைய மனிதர் அவசர கெதிதான் ஹார்ட் அட்டக் வரும் நிலை.வால்மீகி இப்படியும் மாறுவாரோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வால்மீகியை கண்டு வந்தமைக்கும் நன்றி நண்பா...

      நீக்கு
  27. இன்றைய வீடுகளில் நடக்கிற யதார்த்தங்கள்.நன்றி (ஒரு சின்ன வேண்டுகோள் எழுத்துக்கள் கலர்க்கலராக இல்லாமல் ஒரே கறுப்பு நிறத்தில் இருப்பின் இன்னும் நன்றாக இருக்கும் படிப்பதற்கு விழியும் இடறாது.இது கலர் ப்ளைண்ட்னெஸ் உள்ளவர்களுக்கு இன்னும் சற்று கூடுதல் இடைஞ்சலாக இருக்கும் )நன்றி வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி விமலன் ஸார்...
      அதாவது ஒரே கலராக இருந்தால் படிப்பதற்க்கு மலைப்பாக இருக்க சாத்தியமுண்டு மேலும் நான் இரண்டு அல்லது மூன்று கலர்களிலேயே முடித்து விடுவேன் இதில் வரும் இழப்புகளை வரிசையாக கொடுக்க நினைத்தேன் பதிவு நீளமாக வந்தது ஆகவே மாற்றி மாற்றி இரண்டு கலர்களில் கொடுத்தேன் தங்களது கருத்தை ஏற்று இனியெனும் மாற்ற முயல்கிறேன் நன்றி

      நீக்கு
  28. அன்புள்ள நண்பர் ஜி,

    இயற்கோடு இயைந்து வாழ வேண்டும்....இயற்கை மரணம்... தற்பொழுது வாழ்க்கை முறை பற்றி அலசியது அருமை. மாரடைப்பு பற்றியும் விளக்கியது அருமை.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அறிவியல் வளர்ச்சியும் பிற சூழல்களும் இன்றைய மனிதர்களை இவ்வாறாக ஆக்கிவிடுகின்றது. வேறுவழியில்லை. எதிர்கொண்டே ஆகவேண்டும் என்ற நிலை. சமாளிக்க முயற்சிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவரின் வருகைக்கு நன்றி

      நாம் எதிர்கொண்டு விட்டோம் ஆனால் ? இனி வரும் நமது சந்ததியினர் மேலும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியது வருமே என்ற ஆதங்கமே இந்த பதிவு.

      நீக்கு
  30. இன்றைய மனிதர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை முதலில் வரிசைப்படுத்தியிருக்கிறீர்கள்.

    அப்புறம், துன்பங்களுக்கான அத்தனை காரணங்களையும்[மிகச் சிலவே விடுபட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்] பட்டியலிட்டிருக்கிறீர்கள்,

    தனி ஒருவராக!

    நிறையவே சிந்தித்திருக்கிறீர்கள். கடுமையாக உழைத்திருக்கிறீர்கள்.

    பாராட்டுகள் கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின், வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி

      நீக்கு
  31. உன்மையில் moneyதர்கள்தான்!
    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா அவர்களின் முதல் வரவுக்கு வந்தனம்.

      நீக்கு