தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, நவம்பர் 19, 2016

காமுகியின் இரவு


விலைமாதரின் விசும்பல்
இரவே நீ விடிந்து விடு
இல்லையேல் நான் மடிந்திடுவேன்.
காமுகியின் களிப்பு
இரவே இரவே விடியாதே
இன்பத்தின் நிலையை கலையாதே.

பறவையின் பதற்றம்
இரவே நீ விடிந்து விடு
குஞ்சுக்கு பசிக்குது புரிந்துகொடு.
ஆந்தையின் அலறல்
இரவே நீ விடியாதே
பகலில் உணவு கிடைக்காதே.

நாய்களின் நாதம்
இரவே இரவே விடிந்து விடு
ஊளையிட ஜீவனில்லை புரிந்துவிடு.
பேய்களின் பேற்றல்
இரவே இரவே விடியாதே
பகலில் நடமாட முடியாதே.
  
காவலாளியின் கவலை
இரவே சீக்கிரம் விடிந்து விடு
ATM வரிசையில் நிற்கணும் புரிந்துகொடு.
முதலாளியின் முனங்கள்
இரவே சீக்கிரம் விடியாதே
காவலுக்கு ஆட்களுண்டு கலையாதே.
  
எமனின் ஏக்கம்
இரவே சீக்கிரம் விடிந்து விடு
05.48 க்கு கவிய தூக்கணும் புரிந்துகொடு.
கைதி கவியின் கலக்கம்
இரவே சீக்கிரம் விடியாதே
இனிமேல் இரவெனக்கு கிடைக்காதே.
  
பயணிகளின் பயம்
இரவே சீக்கிரம் விடிந்து விடு
வழிப்பறி கொள்ளையுண்டு புரிந்துவிடு.
திருடனின் திட்டம்
இரவே சீக்கிரம் விடியாதே
வந்த வேலை முடியலை மறவாதே.

சந்திரனின் சலிப்பு
இரவே நீ விடிந்து விடு
தூக்கம் வருது புரிந்துகொடு.
சூரியனின் சோம்பல்
இரவே நீ இப்ப விடியாதே,
Five Minutes Balance உண்டு மறவாதே.  

சாம்பசிவம்-
மரமண்டைன்னு சொல்றாங்களே... இதுதானோ ?

46 கருத்துகள்:

  1. ஒரு நிலை, இருவேறு பார்வை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே சரியான புரிதலுக்கு நன்றி

      நீக்கு
  2. விடியலில் இத்தனை உண்டா..?? அருமை ஐயா.இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இன்னும் இருக்கின்றது வருகைக்கு நன்றி

      நீக்கு
  3. காவலாளியின் கவலை தற்கால நிலைமயை எடுத்துக் காட்டுவதை இரசித்தேன்! அது சரி. எவ்வளோ பேர் கவலைப்படும்போது காமுகியின் கவலையை மட்டும் ஏன் தலைப்பாக வைத்தீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே முதல் வரிசையில் வந்ததால் வைத்தேந் வருகைக்கு நன்றி

      நீக்கு
  4. இரவும் வரும் பகலும்வரும் பாட்டு அவைகள் கேட்டிருக்க முடியாது ,அவர்களுக்குமா தெரியாது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் மயக்கதில் மறந்திருக்கலாம் ஜி வருகைக்கு நன்றி

      நீக்கு
  5. விடியல்கள் தேவைதான்
    தம +

    பதிலளிநீக்கு
  6. ஒரு சூழலில் இருவேறுபட்டவரின் மனநிலையை படம்பிடித்த பதிவு அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  7. மாறுபட்டு நினைப்பவர்களின் மன நிலையைப் பகிர்ந்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக முனைவரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  8. ஆஹா..! அற்புதம்..!!
    த ம 6

    பதிலளிநீக்கு
  9. எல்லோருக்கும் நல்லதாக விடியட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ நன்றி தங்களது தளம் படிக்க முடியவில்லையே.... ஓடிக்கொண்டே இருக்கின்றது

      நீக்கு
  10. ஒரு இரவு பலருக்கு விடியல் மீது விருப்பம் சிலருக்கு வேண்டாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ இதுதான் இறைநியதி கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  11. சூழல் ஒன்று...
    மனமோ இரண்டு...
    மாறுபட்ட சிந்தனை...
    அருமை அண்ணா...

    த.ம. +1.... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் பாராட்டுகளுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  12. ‘பசி’பரமசிவத்தின் பரிதவிப்பு:

    இரவே சீக்கிரம் விடிந்துவிடு
    இனிக்க இனிக்கக் கில்லர்ஜியை எழுதவிடு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா வருக நண்பரே எனக்கு எழுதுவதற்கு நேரம்-காலம் கிடையாது நினைத்தவுடன் எழுதி விடுவேன் இருப்பினும் நான் இரவைவிட பகலை நேசிப்பவனே...

      நீக்கு
  13. நல்லா யோசிச்சுருக்கீங்க சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ வாழ்க்கை முழுவதுமே வாசிப்பும், யோசிப்பும்தான் எனது பொழுதுபோக்கு வருகைக்கு நன்றி

      நீக்கு
  14. அருமை அருமை
    ஒரே நிலையின்
    வெவ்வேறு பார்வைகள்
    அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  15. குடிகாரனின்(!) புலம்பல்:
    கலகலப்பான பஞ்சணை.. மதுவின் மயக்கம் கலையாமல் கிடக்க வேண்டும்.. இரவே.. இரவே.. சீக்கிரம் விடிந்து விடாதே!..

    குடிமகனின் புலம்பல்:
    பேருந்து நிறுத்தத்தில் சாக்கடைச் சகதியில் விழுந்து கிடக்கிறான்..
    சுள்ளென்ற வெயிலில் போதை கலைந்து தொலைய வேண்டும்..
    இரவே சீக்கிரம் விடிந்து விடு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா அற்புதம் ஜி இவர்களை நான் நினைக்கவில்லைதான் வருகைக்கு நன்றி

      நீக்கு
  16. இரண்டு வரிகளில்
    திரண்ட சிந்தனை
    மரமண்டை எனக்கு
    தரமானதெனப் பட்டதோ
    நெடு நேரம் கழித்தே!

    பதிலளிநீக்கு
  17. சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
    https://plus.google.com/u/0/communities/110989462720435185590

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நண்பரே இதோ இணைத்து விடுகிறேன் நன்றி

      நீக்கு
  18. 'நல்லாருக்கு. ஒருவனின் உணவு அடுத்தவனின் விஷம் (One man's food is another man's poison) என்பதை நினைவுபடுத்தியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நன்றி சில பதிவுகளை விட்டு விட்டீர்களே..

      நீக்கு
  19. இதற்குத்தான் இரண்டு கண்களோ...??????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருக்கலாம் நண்பரே இதுவும் உண்மைதானோ ?

      நீக்கு
  20. பலருக்கும் இரவு என்றால் பயம்தான் ஆனால் பலரும் வெளிச்சமிருந்தும் காண்பதில்லையே நல்ல விடியலுக்காகக் காத்திருப்பவருள் நானும் ஒருவன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா நல்லதொரு கருத்தை முன் வைத்தீர்கள் நன்றி

      நீக்கு
  21. வித்தியாசமான பதிவு, நன்றாக உள்ளது நண்பரே!
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே!

    பதிலளிநீக்கு
  22. மனதைத் தொட்டது கைதி கவியின் எண்ணம்! :(

    பதிலளிநீக்கு
  23. சிலருக்கு இரவுதான் வேலையே.....சிலருக்கு விடியல்தான் வேலையே.

    சிலருக்கு நிச்சயமாக விடியல் மிகவும் அவசியமாகிப் போகிறது! பூமியின் இரு துருவங்களும் என்ன சொல்லும்?!!!!! நமக்கும்தான் விடியல் தேவை...மனத் தெளிவு அதனால் ஏற்படும் இருட்டு விலகலும் விடியலும் நல்ல சிந்தனை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக உண்மையை அழகாய் விளக்கியமைக்கு நன்றி.

      நீக்கு