தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், அக்டோபர் 03, 2024

எனது அமைதிப்பூங்கா

றைவா துரோகங்களை மறக்கும் மனம் கொடு
கூடவே துரோகிகளை மறக்கவும் தினம் கொடு
இனி நாளும் எனக்கு உறங்கும் நிலை கொடு
வாழும் வரையில் எனக்கு நிம்மதியை கொடு
 
எனக்கும்கூட வரும் கெட்ட எண்ணங்களை தடு
எதிரிகளால் வரும் இடையூறுகளையும் தடு
மனக்குழப்பங்கள் வளர்ந்து விடாமல் தடு
குரங்கு போல தாவித்திரியாத மனதை தடு
 
அன்று எனது பணத்தால் நிறைந்திருந்தது வீடு
இன்று அதை இழந்ததால் வெறிச்சோடியது வீடு
எனக்கு பிறகாவது மக்கள் நிறைய வரட்டும் வீடு
நான் இறுதி வரையில் நிலைக்கணும் இந்த வீடு
 
பாழும் மனிதர்களிடமிருந்து எனை விலக்கி விடு
இல்லை துரோகிகளை செல்வந்தனாக்கி விடு
அதன் மூலம் எனக்கு விடுதலை அளித்து விடு
இல்லையெனில் என்னை உடனே அழைத்து விடு
 
எங்கு கிடைக்கும் எனது நிரந்தர உறக்கத்தின் காடு
என்னவள் உறங்குகின்றாள் கோபாலபட்டணம் காடு
எனக்கு நிரந்தரமாய் ஆகுமா தேவகோட்டை காடு
எவ்வளவு அழகாக இருக்கிறது அபுதாபியிலும் காடு
 
கில்லர்ஜி புதாபி

7 கருத்துகள்:

  1. மனம் சற்று சலனப்பட்டிருக்கிறது போல...   குழம்பும் குளம் சீக்கிரமே தெளிவடையும்.  கவலை வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  2. இரண்டாவது வரியில் தினம் என்பதற்கு பதில் குணம் என்றிருக்கலாமோ...  அல்லது மனோதிடம் கொடு என்றிருக்கலாம்.

    இனி எனக்கு நாளும் உறங்கும் நிலை கொடு என்று வந்தால் அர்த்தம் பூரணமாகும்,  நிலைக்கு  வரம் கூட சொல்லலாம்!

    குரங்குபோல தாவித்திரியாத அல்ல, திரியும் மனதைத்தான் தடுக்க வேண்டும்!

    மூன்றாவது கண்ணியின் கடைசி இரண்டு வரிகளில் மாற்றம் தேவை!

    பதிலளிநீக்கு
  3. பொதுவாக இதை ஒரு படைப்பாகப் பார்த்து ரசித்து, கருத்து, திருத்தம் சொன்னாலும் என் பிரார்த்தனை, உங்கள் மனமே மாற வேண்டும் என்பதுதான். 

    உற்சாகமாக இருங்கள் ஜி.

    பதிலளிநீக்கு
  4. உங்கள் மனதில் அமைதி திரும்ப எனது பிரார்த்தனைகள். நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம் ஜி.

    பதிலளிநீக்கு
  5. பழசை ஏன் மீண்டும் மீண்டும் நினைக்கணும் கில்லர்ஜி? நானெல்லாம் அதை என் நினைவிலிருந்து அகற்றிவிடுவேன் (ஆனால் மறக்கமாட்டேன்). நினைத்துக்கொண்டிருந்தால் மன அமைதி கெடும்.

    இன்னொன்று கில்லர்ஜி... நமக்கு பணம், பதவி, அந்தஸ்து ஏற்படுத்துவதும், அதைக் கழற்றிவிடுவதும் இறைச்செயலே. இதில் நம்முடையது என்று ஒன்றுமே இல்லை.

    பதிலளிநீக்கு
  6. நீங்கள் புதைக்கும் பழக்கம் உள்ளவர்களா இல்லை எரிக்கும் பழக்கம் உள்ளவர்களா?

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    உங்களது பதிவை படித்ததும் மனதிற்கு வருத்தமாக இருந்தது. கவலைகள் வரும் போது உடலுடன் மனமும் சோர்ந்து போகிறது. இது என் அனுபவமும் கூட. அப்போது மன ஆறுதலை தேட, நம் நட்புகளிடம் பகிரலாமே எனவும் தோன்றுகிறது. உங்கள் மனவலி எனக்கும் புரிகிறது. சமீபத்தில் தங்கள் மனதில் ஏதோ காயம் பட்டு இருக்கிறது எனவும் புரிந்து கொண்டேன்.

    எல்லாவற்றையும் ஆண்டவனிடம் விட்டு விட்டு தைரியமாக இருங்கள். அவன் நல்லவர்களுக்கு நல்லதை தான் செய்வான். கவலையை விட்டு மனதை சந்தோஷமாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்களுக்காக நானும் இறைவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொள்கிறேன். நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு