தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், மே 24, 2016

ஊத்துக்குளி வெண்ணை


OMAN நாட்டில் வாழும் என்னையறியாத, நானறிந்த இந்த இந்திய ஜோடிகள் ஒரு குழந்தையை பெற்று கொஞ்ச வேண்டிய தருணத்தில் நாயை கொஞ்சுகின்றார்கள் இதன் பின்னணி என்ன தெரியுமா ? இருவருமே வேலைக்கு போகிறவர்கள் பணம் சம்பாரித்து சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து பெறவேண்டும் அதாவது குழந்தை பெற்றால் முதல் காரணம் இளமை குறைந்து விடும், இரண்டாவது வளர்பதற்க்கு வேலைக்கு ஆள் வைக்க வேண்டும் அவர்களுக்கு சம்பளம் கொடுத்தால் ஒருபகுதி வருமானம் அதில் போய் விடும் வீட்டிலுள்ள பெரியவர்களை கொண்டு வந்து வைத்துக் கொண்டால் தமக்கும் இடையூறு மேலும் செலவு பின்னால் பார்த்துக் கொள்ளலாம் பின்"நாள்" இறைவனும் பார்ப்பானா ? என்பதறியா மடந்தைகள்.


மென்மையான மனித மனங்களைவிட SOFTடான CURRENCY நோட்டுகள்தான் மேலானது என்ற கொள்கையாளர்கள் பணம் இவர்களை என்னபாடு படுத்துகிறது நாளை கொள்ளி வைக்க மக்கள் வேண்டாமா ? ஒருவேளை பணம் கட்டினால் எலக்ட்ரிக் சுடுகாட்டில் ஸ்விட்ச் போட்டு விடுவார்கள் என்ற எண்ணமா ? இருப்பினும் கௌண்டரில் பணம் கட்டவாவது மகனோ அல்லது மருமகனோ வேண்டுமே ?      

சாம்பசிவம்-
கையில வெண்ணை இருக்கையிலதான் நெய் கடைய முடியும்னு தெரியாத வெண்ணை.

 காணொளி

திங்கள், மே 23, 2016

மலைத்தமிழன் Weds மாலைத்தமிழன்


யேண்டி, மோகனா உன்னோட காதலரை ஏன் கழட்டி விடணும்னு சொல்றே ?
பின்னேயென்ன... தியேட்டருப் போனால் திரையிலே வணக்கம் போடும்வரை திரையை விட்டு தலையை திசை திருப்ப மாட்றான்...

அப்படினா யூஸ்லெஸ்னு சொல்றே...
ஆமாடி வேற எவனும் மாட்டினால்... சொல்லு ஆமா புதுசா புடிச்சியே உன் ஆளு எப்படி ?

ய்யேன் ஆளைப்பத்தி சொன்னால் வேதனைப்படுவே.... சரி நம்ம வேதமூர்த்தி சும்மாதான் திரியிறானாம் சொர்ணா சொன்னாள்.
அவன் சரியா வரமாட்டான் சினிமாவுக்கு கூப்பிட்டாலும் ராகுகாலம் பார்ப்பானாம் நம்ம கனிமொழி கழட்டி விட்டது அதுனாலேதானே...

அப்ப ஸெகண்ட் இயர் படிக்கிறானே... மலைராசுவைப் பாரேன்..
அவன் மலை முழுங்கியில10 பைசா நகட்ட மாட்டானே...

உனக்கு எப்படித்தெரியும் ?
ஃபர்ஸ்ட் வருசத்துல இதுக்குத்தானே கழட்டி விட்டேன்.

கார்மேகத்தைப்பத்தி என்ன நினைக்கிறே ?
அவன் பேருக்கேத்த மாதிரிதான் இருக்கான் பகல்லயே தெரிய மாட்றான் இருட்டுல எப்படியிருப்பான் நீயே நினைச்சுப்பாரு.. ?

யேண்டி டைம்பாஸுக்குத்தானே....
அவன்தான் டைம்பாஸுக்கு கூட வேஷ்டுனுதானே வேணி கழட்டி விட்டாள்.

என்னடியிது உன்பாடு இப்படியாகிப் போச்சே... ச்சே
சரிடீ... உன் ஆளைப்பற்றி சொல்லவே இல்லை ?

ய்யேன் ஆளைப்பத்தி சொன்னால் வேதனைப்படுவே.... நம்ம ராமமூர்த்தியை ட்ரைப் பண்ணிப்பாரேன்...
அவன் நம்மளையே நாமம் போட்டவனாச்சே...

சரி கோதண்டத்தை புடியேன்.
அவன் தண்டோராக் கிராக்கியாச்சே... நம்ம கோகிலாதான் எல்லாத்தையும் சொன்னாளே...

நம்ம தங்கமணி....
அவன் பேரு மட்டும்தான் அப்படி ஈயம் பூசக்கூட வழியில்லை.

சரி பூதப்பாண்டி நல்லா டிப்-டாப்பா இருக்கானே...
அவன்தானே... பூமிகாவை போண்டியாக்குனவன்.

அரியநாயகம் வெயிட்டான பார்ட்டி அவனைப்புடியேன்.
ஹூம் நல்ல ஆளைச்சொன்னே பாரு அவனே காலையில கண்மாயில.. சுத்திசுத்தி வந்து அரிசி பொறக்குறவன் வெளங்குனாப்பலதான்.

தாமரைக்கண்ணன்...
அவனே ஒரு தரை டிக்கெட்டு அவனைப்போயி.... சரி உன்னோட ஆளைப்பத்திதான் சொல்லேன்.

அடியேன்டி ஃபேஸ்புக்குல மலைத்தமிழன் அப்படினு வெளிநாட்டு பார்ட்டியைப் புடிச்சேன்.
ஃபேஸ்புக்லயா அதுவும் வெளிநாடு பார்ட்டியா ? இதுல உனக்கு வருமானம் எப்படி வரும் டைம் பாஸ்தான் ஆகும்.

ஆமாடி காதும், காதும் வச்சது மாதிரி லம்பா அடிக்கலாம் அப்படினு நினைச்சுத்தான் ஜாய்ண்ட் செய்தேன் அது என்னடானா... பிராடு பிச்சை முத்துவா.. இருக்கு.
சரி என்னதான் ஆச்சு ?

இரண்டு மாசமா வண்டி லைன்ல நல்லாத்தான் ஓடுச்சு டக்குனு கொலுசு தொலைஞ்சு போச்சு அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க உடனே வாங்கனும்னு மெஜேச்ல பிட்டைப் போட்டேன்.
சரி பார்ட்டி ட்ராப்ட் அனுப்புச்சா ?

அதையேன் கேட்கிறே கொலுசுதானே.. உன்னோட கம்மலை அடகு வச்சு வாங்கிக்க... இந்த மாசம் சம்பளம் வந்ததும் உனக்கு வெஸ்டர்ன் யூனியன்ல  20000 ரூபாய் அனுப்புறேன் மறுநொடியே வாங்கிகிறலாம் உடனே கம்மலை திருப்பிக்க அப்படினு சொல்லுச்சு.
அடகு வச்சியா ?

எனக்கு அடகு கடையெல்லாம் போயி பழக்கம் இல்லைனு சொன்னேன், அப்படினா... என்னோட ஆளு ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன் அவன் கிட்டே கொடு அவன் பணம் தருவான் இந்த மாசசம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிட்டேன் அதனால அடுத்த மாசம் சம்பளம் வாங்கவும் 31ம்தேதி 20000 ரூபாய் அனுப்பி வக்கிறேனு சொல்லுச்சு சரி பின் வாங்குனா.. பார்ட்டி தப்பா நினைச்சுடும் நமக்குத்தான் சொளையா 20000 ரூபாய் வருதே அப்படினு என்னோட செல் நம்பரையும் கொடுத்தேன்.
அப்புறம் என்னாச்சு ?

ஒருத்தான் கால் பண்ணுனான் இந்த மாதிரி ஃபேஸ்புக் நண்பர் மலைத்தமிழன் 4000 ரூபாயை கொடுத்துட்டு கம்மலை வாங்கிக்கிற சொன்னாருனு சொன்னான் சரி வா அப்படினு சொன்னேன் மாவுடியான் மாதிரி இருந்தான்.
கம்மல் எவ்வளவு கொடுத்தியா ?

ஆமா... ½ பவுனு மறுவாரமே ஃபேஸ்புக்ல பார்த்தால் அதே ஐ.டியிலே பெயர் மாறியிருக்கு..
எப்படி ?

மாலைத்தமிழன் அப்படினு... ப்ரொப்ஃபைல் போட்டோவும் அட்ரஸும் மாறி ஒரு புறா பறக்குது உடனே எனக்கு போண் செய்தவன் செல்லுக்கு அடிச்சா இந்த நம்பர் நிலுவையில் இல்லைனு சொல்லுது.
அப்புறம் என்னாச்சு ?

அவன் வெளிநாடே இல்லை பொய் சொன்னது போலவே உண்மையாகவே கம்மல் தொலைஞ்சு போச்சுனு அம்மாகிட்டே சொல்லி வாங்கி கட்டிக்கிட்டேன்.
இது எப்போ நடந்துச்சு ? எங்கிட்டே சொல்லவே இல்லை.

ஜனவரி மாசம், இப்பவும் நாலும் மாசம் ஆச்சு.
யேன்டி ஜனவரி மாசம் சொன்னவன் அடுத்த மாசம் 31ம் தேதி பணம் அனுப்புறேன்னு சொல்லியிருக்கான் பிப்ரவரியில ஏதுடி ? 31

? ? ?
சரி அவனோட பழைய ப்ரொப்ஃபைல் போட்டோ இருக்கா ?

ம் செல்லுல முன்னாடியே எடுத்து வச்சேன் இதோ பாரு...


ஹூம்... சரிதான் மொட்டையடிச்சது உனக்கும்தான்.

சனி, மே 21, 2016

அகிலா


நான் சகோவின் வீட்டுக்கு சென்றபோது எனது செல்லில் சுட்டது நன்றி ஷார்ஜா திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள்.

அகிலா எனது அத்தை மகள் அஜந்தா ஓவியம் போல் அழகானவள் அவள் கவிதை எழுதுவதிலும் அழகு எந்த நேரமும் எழுதிக் கொண்டே.. இருப்பாள் எனக்கு சின்ன வயதிலிருந்தே..... அவளை கல்யாணம் செய்து கொள்ள ஆசை மாமாவும் - அத்தையும் சொல்லி விட்டார்கள் அவளது விருப்பமே எங்கள் விருப்பம் எனது விருப்பத்தை அவளிடம் சொன்னேன் என்னை தீர்க்கமான பார்வை ஒன்றை பார்த்தாள் அவளது பார்வையில் ஆசையோ, காமமோ இல்லை ஒரு திடகாத்திரமான ஊடுருவலான பார்வை பிறகு நிதானமாக சொன்னாள்

சரி நாம கல்யாணம் செய்துக்கிறலாம் அதுக்கு முன்னே இந்த சமூகத்தைப்பற்றி... உங்களது கருத்தை கவிதையா எழுதிட்டு வாங்க அதற்கு பிறகுதான் உங்களுக்கும், எனக்கும் ஒத்துப்போகுமான்னு நான் கருத்து வேறுபாடு தெரிஞ்சுக்கிற முடியும் அதிக பட்சமா ஒருநாள் எடுத்துக்கங்க ஆனா, அடுத்தவங்க கவிதையை கொண்டு வரக்கூடாது நான் எல்லா பத்திரிக்கையும் படிக்கிறவள் எனக்குத் தெரியும் சொந்தமா சிந்திச்சு எழுதணும் போயிட்டு நாளைக்கு வாங்க

நான் வீட்டுக்கு வந்து விட்டேன் என்ன இவள் கவிதை கத்திரிக்காய்னு கேட்கிறாள்... கவிதை எனக்கு எப்படி வரும் ? அதுவும் சமூகத்தைபத்தி நமக்கு பக்கத்து வீட்டு சண்முகத்தை பத்தியே தெரியாது போடீ பொடலங்கானு சொல்லிடுவோமா ? வேற எவளாவதுனா... சொல்லிடலாம் நாளை பின்னே பார்த்துதானே ஆகணும் அவளே வாயாடி வேறே எங்கே பார்த்தாலும் கிண்டல் பண்ணுவாள் சரி எதற்கும் எழுதிப் பார்ப்போமே நமக்குத்தான் மூளையிருக்கே திடீரென சந்தேகம் இருக்கா ? என்னை நானே கேட்டுக்கொண்டு எழுதத் தொடங்கினேன் மூன்று நாள் முடிந்து விட்டது ஒரு வழியாக எழுதி அவளை பார்க்கப் போனேன்.

என்ன அத்தான் மூணு நாளா ஆளையே காணோம் ?
வேலை விசயமா தேவகோட்டை போயிருந்தேன் காலையிலதான் வந்தேன் அதான் உடனே எழுதிட்டு வந்தேன் இந்தா...ன்
(தயக்கமாய் கொடுத்தேன்) 
வாங்கிப் பிரித்து சத்தமாக, இனிமையாக படித்தாள்.


அலங்கரித்துப்பார் நீ அழகிய அழகனாகி விடுவாய்
அத்தை மாமா எனசொல்லிப்பார் நீ மருமகனாகி விடுவாய்
அவர்கள் மகளை காதலித்துப்பார் நீ காதலனாகி விடுவாய்
அகிலாவை சுற்றிப்பார் அகிலத்தையே சுற்றியவனாகி விடுவாய்
அவளையே கல்யாணம் செய்துபார் நீ கணவனாகி விடுவாய்
அகிலாவை அம்மாவாக்கிப்பார் நீ அப்பாவாகி விடுவாய்


நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றேன் டீச்சர் முன் மாணவன்போல...
என்ன இது ?

க... கவிதை
கவிதையா... இதென்ன  உங்க ஃப்ரண்டு கில்லர்ஜி எழுதி தந்தது மாதிரி இருக்கு தேவகோட்டை போனது இதுக்குத்தானா ? பள்ளிக்கூடத்துல ரெண்டாவது படிக்கிற புள்ளைங்க வாசிக்கிற வாய்ப்பாடு மாதிரி இருக்கு, உங்களை கட்டிக்கிறதுக்கு நான் இதை எழுதி தந்த கில்லர்ஜியவே கட்டிக்கிறலாமே.... மீசை சும்மா நச்சுனு வச்சுருப்பாரு... இவ்வளவுதானா உங்க லெட்சணம் நமக்கு சரியா வராது இதோட விட்றணும் எங்க அப்பா கிட்டேபோயி அப்படியாக்கும் இப்படியாக்கும்னு சொல்லி ஏதாவது கோல்மால் செஞ்சு கல்யாணம் முடிக்கலாம்னு நினைச்சீங்க இப்பவாவது தனியா கேட்டேன் அப்புறம் மணமேடையில வச்சு கவிதை எழுதச் சொல்லி கேவலப் படுத்திப்புடுவேன் ஜாக்கிரதை 
(ஆட்காட்டி விரலை நிமிர்த்திக் காட்டி)
கவிதையாம் கவிதை ஒரு ''கமா'' கூடபோடத் தெரியலை. ஜா
அவள் உள்ளே போய் கதவை சட்டீரென சாத்தினாள்.

ChivasRegal சிவசம்போ-
இந்த ஆறு வரி எழுதத்தான் மூன்று நாளா ? நமக்கெல்லாம் குவாட்டரை இறக்குனா ஃஆப் அவருல ஃபுல் கவிதை வரும்னு சொன்னா குடிகாரப்பயனு சொல்லுவாளுக....

வியாழன், மே 19, 2016

பக்திமான்


சிலநேரங்களில் சிலமனிதர்கள் புலம்புவதை கேட்டிருப்பீர்கள், கண்டிருப்பீர்கள், நான் தினம் உன்னை கும்பிடுறேனே, என்னையேன் சோதிக்கிறாய் ? உன் வாசலுக்கு வருஷா வருஷம் வர்றேனே, எனக்கு நிம்மதியை தரமாட்டாயா ?எனதெய்வத்திடம் முறையிடுவார்கள், இதில் எனக்குத் தெரிந்தவர்கள் வணங்கும்போது மட்டும் நான் அவர்களை கவனித்து அவர்களின் வாழ்க்கை முறையை கணக்கிடுவேன் இதில் பெரும்பாலும் நடைமுறை வாழ்வில் கெட்ட செயல்களும், அயோக்கியத்தனமும், அநியாயமாக வட்டி வாங்கியவர்களும்  
தாய்-தந்தையை அனாதை விடுதியில் சேர்த்தவர்களும்தான் இருக்கிறார்கள்.
 எனக்கு தெரிந்த ஒருவர் மனஸ்தாபத்தின் காரணமாய் கோயிலின் வாசலில் தெய்வத்திடம் கோரிக்கை வைக்கிறார், இந்த வருஷத்துக்குள்ளே அவனைத் தூக்கிடு இல்லேனே உன் வாசலுக்கு நான் வர்றது இதுதான் கடைசி, என்ன ஆயிற்று ? வருடத்தின் முடிவுக்குள் அங்கு ஒரு இலவு, இங்கு ஒரு இலவு அதாவது குடும்பத்தலைவிகள் இருவரும் மரணம்.
 அந்த தெய்வம்தான் கோரிக்கையை நிறைவேற்றி விட்டது என நான் சொல்லவில்லை, அவர்களின் விதி முடிந்து அவர்கள் போய் விட்டார்கள் இருப்பினும், குருவி உட்கார இளநீர் விழுந்த கதைபோல் ஆகி விட்டதே, அவர் சொன்னது போல் அவரும் கோயிலுக்கு வருவது அன்றே கடைசியாகவும் ஆகி விட்டது. 
 எனது நண்பரொருவர், துபாயிலிருந்து ஊருக்கு போனவர் வீடு வாங்குவதற்க்கு தரகரை நாடினார் வீட்டை விற்பவர் பெரும்பாலும் நொடையில்தானே இருக்க வேண்டும் வில்லங்கம் பார்க்க வேண்டுமெனில் வீட்டுவரி கட்டியாக வேண்டும், வில்லங்கம் பார்க்கவும், விட்டுவரி கட்டவும் வீட்டை வாங்குபவரிடமே பணம் கேட்டார், சரி நாமதானே வாங்க போகிறோம் என பணமும் கொடுத்து விட்டார் இந்த வகையில் தரகர் சுமார் 5000/ ரூபாய் வாங்கி விட்டார், பத்திரம் போடும் நேரத்தில் யாரோ கூடுதலாக 5000/ ரூபாய் தருவதாக சொல்ல வீட்டுக்காரர்கள் வாக்கு மாறி விட்டார்கள், காரியங்கள் முடிந்து விட்டது மறுநாள் தரகர் 
 நண்பரின் வீட்டில் வந்து என்ன கேட்டார் தெரியுமா ?

எனது கமிஷன், எங்கே ? 
எப்படியிருக்கும் நண்பருக்கு. வாங்காத வீட்டுக்கு தரகர் கமிஷனா ? 
முதலில் என்னிடம் வாங்கிய 5000/ ரூபாயை கொடு
அது வில்லங்கம் பார்க்க செலவாகி விட்டது,
அப்படினா அவுங்கள்ட்ட வாங்கிட்டு வா
அவங்க பிச்சைக்காரங்கே எப்படி வாங்க முடியும் ? 
அப்படினா, நான் துபாய்லருந்து அள்ளிக்கிட்டு வந்துருக்கேன் நீ தள்ளிக்கிட்டு போகலாம்னு வந்தியா ? 

நண்பரும் 5000/ ரூபாயை பெருந்தன்மையாக வேண்டாமென விட்டு விட்டார், காரணம் மூன்று பேருமே ஒருவருக்கொருவர் சொந்த பந்தங்கள், அந்த வீடு வாங்காததும் ஒரு வகையில் நண்பருக்கு நல்லதாகிப் போனது, வேறொரு தரகர் மூலம் அதே பணத்துக்குள் வீடும், இடமும் வாங்கி விட்டார், இன்று அதன் மதிப்பு அந்த வீட்டைவிட மூன்று மடங்கு மதிப்பில் இருக்கிறது, அந்த இருவரையும் விட நல்ல நிலையிலும் இருக்கிறார்
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் அந்த தரகர் ஒரு பக்திமான் சாலையில் செல்லும் போதுகூட வழியில் உள்ள கோயில்களில் அரை மணிநேரம் வணங்குவார் இவரை எப்படி இறைவன் ஏற்றுக்கொள்வார் ? பெற்ற தாயை விரட்டி விட்டு தெய்வத்திடம் போய் அம்மா தாயே என்றால் என்ன அர்த்தம் தாயைவிட ஒரு தெய்வம் இருக்க முடியுமா ? அல்லது இதை தெய்வம்தான் ஏற்றுக்கொள்ளுமா ?
அந்த வெளிநாட்டு நண்பர் இந்த கில்லர்ஜிதான். 

புதன், மே 18, 2016

பட்டுக்கோட்டை, பட்டமரம் பட்டாம்பி


ரங்கொத்தி பறவை போல என் மனம் கொத்தினாயே
ரத்தில் கட்டி வைத்து எனை அடி வாங்க விட்டவளே

ரசமாடி என்னை சறுக்கி விழ வைத்த வைதேகியே
ட்டையின்றி சாட்டையால் அடி வாங்க வைத்தவளே

ர் ஊராய் சுற்றி க்ரெடிட் கார்டை தேய்க்க வைத்தாயே
மைக்குத்து வாங்க வைத்து ஊமையாகிப் போனவளே

ரை மணித் துளியில் பலமுறை ஐநூறைக் கரைத்தாயே
றை வாங்கி கொடுத்து விட்டு அப்பாவியாய் நின்றவளே

செல்லும் இடமெல்லாம் செல்லுக்கு ரீ-சார்ஜ் ஏற்றினாயே
செருப்படி வாங்கும் போதும் சென்று விடாமல் ரசித்தவளே

சாயங்காலம் ஆனதும் சாமந்தி தோட்டத்துக்கு அழைப்பாயே
சாணியால் அடிக்கும் போதும் சாய்ந்து கொண்டு பார்த்தவளே

விடிந்தவுடன் இன்றும் உனக்கு விருந்து என்று சொல்வாயே
விளக்கமாற்றால் அடிக்கும் போது விலகி நின்று ரசித்தவளே

காரிருள் சூழ்ந்தாலும் சிரிக்கும் கதைகள் ஆயிரம் பேசினாயே
காறித்துப்பும் பொழுது எனை யாரோவென கண்டு களித்தவளே

ளீர் பளீரென சிரித்து என மனதை கதி கலங்க வைப்பாயே
டீர் படீரென பலரும் பலமுறை பந்தாடப் பார்த்தவளே

ண்ணில் கண்ட இடமெல்லாம் மல்லிகைப்பூ வாங்கி கேட்பாயே
ரும்புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை ஏற்றியதையும் கண்டவளே

உனது கனவுகளுடன் வருங்கால கணவனுடன் நலமுடன் நீ வாழ ! உன் குலம் வாழ ! நான் போறேன் நாட்டை விட்டு.

இப்படிக்கு
பட்டு அழுந்தி பட்ட மரமாகிய பட்டுக்கோட்டை பட்டாம்பி