தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

சனி, ஜூன் 28, 2014

ஸுவாமிஜீ, குத்தியானந்தா


என் வாழ்க்கையில், உள்ள கொள்கையே, எந்த மனிதனுக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன். இதில் துளியளவும் ஐயமில்லை இருப்பினும் எனக்கு கஷ்டங்களும், துன்பங்களும் வரக்காரணம் என்ன ? ஒருவேளை நான் இறைவனுக்கு துரோகம் செய்திருப்பேனோ ? செய்திருக்க சாத்தியம் இல்லையே... நானறியாமல் எப்படி ? இந்தக் குழப்பத்தை தீர்க்க சாமியாரை காணலாமா ? எனக்கு இதில் நம்பிக்கை இல்லையே என்ன செய்யலாம் என ஆலோசித்துக் கொண்டு இருக்கும் போது... வாசலிலிருந்து, நோட்டீஸ் ஒன்றை ஒரு சிறுவன் வீசி விட்டு சென்றான், எடுத்துப் படித்தேன் அதில்..

மனிதகுலமே... நமது,
இருளை விலக்க வந்த ஒளி விளக்கு,
அகத்தை அறிந்து வந்த அகல் விளக்கு,
சிந்தனையை சிலிர வைக்கும் சிமிழி விளக்கு,
குடும்ப உறவுகளை குளிர விடும் குலவிளக்கு,
குழப்பங்களை குறைத்து விடும் குமிழி விளக்கு,
கலக்கங்களை கசக்கி விடும் கலங்கரை விளக்கு,
சிவந்த பார்வையால் சுட்டெரிக்கும் சிவப்பு விளக்கு,
துன்பங்களை துறத்தி விடும் தூண்டா மணி விளக்கு,
சத்தியத்துக்கே, புத்தி சொன்ன, புத்திரமாமணி
ஸுவாமிஜீ, குத்தியானந்தா
அவர்களின் சொற்பொழிவு கேட்டு பக்திப் பழரசம் பருக வாரீர், வாரீர்.

இதைப் படித்ததும், இவரைப் போய் பார்த்தால் என்ன ? உடன் விசாரித்தேன், Appointment வாங்கினால் உடன் காணமுடியும் என்றார்கள் எனது செல்வாக்கைப் பயன்படுத்தி M.P ஆசைத்தம்பி மூலம் Appointment வாங்கிப் போய் பார்த்தேன் தனியறையில் சந்தித்தேன், எல்லா விவரங்களையும் சொன்னேன், என்னைப் பார்த்து, என் கண்ணைப் பார்த்து மீண்டும் ஒருமுறை சொல் என்றார் என்ன அருள் சினிமாவுல விக்ரம் கேட்டது மாதிரி கேட்கிறாரே ? வேறு வழியின்றி மீண்டும் ஒப்புவித்தேன், 

பிறகு வெள்ளி கூஜாவிலிருந்து... தங்கத்திலான சிறிய குப்பியில் அவரே ஊற்றித்தந்து பருகுங்கள் என்றார், எனக்குள் ஆச்சர்யம் மாநிலமே போற்றும் எவ்வளவு பெரிய சாமியார் அவரே பேதபாகுபாடின்றி தானே ஊற்றிக் கொடுக்கிறாரே, பருகியதும் அற்புதமான சுவையாக இருந்தது.

(ஒரு முறை நான் உகாண்டா போயிருந்தபோது PARரில் சாப்பிட்டதும் இதைப் போலவே இருந்தது, இருப்பினும் இதை அதனுடன் ஒப்பிடக்கூடாது தவறு கன்னத்தில் போட்டுக் கொண்டேன்) 

பிறகு வீட்டுக்கு வந்து மனைவி செல்வியிடம் சொன்னேன், அவள் தடுத்தும் கேட்காமல் தாலிச் செயினை தவிர பீரோவைத் திறந்து வீட்டுப் பத்திரங்கள், நகைகள், வெள்ளி நகைகள், பணம், அத்தனையையும் ஒரு பெட்டியில் எடுத்துக் கொண்டு அவர் சொன்னபடியே பௌர்ணமி வெள்ளியன்று இரவு ஆஸ்ரமத்திற்க்கு போனேன், பூஜையறையில், ஸுவாமிஜீ, ஒரு சீடரி (பெண்பால்) நான், வெள்ளி கூஜா, தங்க குப்பி, பூஜை ஆரம்பித்த சிறிது நேரத்தில் தங்ககுப்பியில், ஒழுகப்பட்டு சீடரியால் எனது வாயில் வார்க்கப்பட்டு, மீண்டும், மீண்டும், பிறகு சீடரி எனது கையில் எதையோ கொடுக்கப்பட்டது போல்... I Thing Pen கையெழுத்து பெறப்பட்டது போல்... சுள்ளென்று வெயில் முகத்தில் அடிக்க... கண் விழித்தேன் என்னஇது நாம் எங்கிருக்கிறோம் எழுந்து பார்த்தால் ? ஆற்று மணலில் கிடந்திருக்கிறேன், தூரத்தில் ஒத்தக்கடை விருசுழி ஆற்றுப்பாலம் அதில் வாகனங்கள் போய்க் கொண்டிருந்தது, வேகமாய் மேலே வந்து ஒரு டாக்ஸியை மறித்து வாடியார் வீதி போ என்றேன், வீட்டிற்குள் போனேன், மனைவி டாக்ஸிக்கு பணம் கொடுத்து விட்டு வந்தாள்.

என்னங்க போனகாரியம் என்ன ஆச்சு உங்க கார் எங்கே ?
எல்லாமே புரிந்தது, வெட்கமாக இருந்தது, மனைவி பேயாட்டம் ஆடினாள் நண்பர் சாம்பசிவத்தை அழைத்துக் கொண்டு Police Station போய் விபரம் சொன்னேன், அவர்கள் சிரித்து விட்டு கீழ்ப்பாக்கம் போகச் சொன்னார்கள், M.P ஆசைத்தம்பி வீட்டுக்கு போனேன் அவர் டெல்லி போய் விட்டாராம், கூடாது, கூடாது, இரவு முழுவதும் யோசித்து காலையில் M.Pக்கு போன் செய்து விபரத்தை சொல்லாமல் எனது நண்பர் சாம்பசிவத்திற்கு ஸுவாமிஜீயை காண Appointment வேண்டுமென கேட்டு வாங்கினேன், உடன் ஓடியன் மணி சலூனுக்கு போய் மொட்டையடித்து மீசையை மட்டும் வைத்துக் கொண்டேன், ஸுவாமிஜீயை காணப் போனேன், பூஜையறையில் நானும், அவனும் (ஸுவாமிஜீ) விபரத்தை சொல்லி எங்கேடா என்னோட நகை, பணம், பத்திரங்களெல்லாம் ? அவன் அலாரம் பெல்லை அடிக்க முயல சட்டென தேங்காயை எடுத்து அவன் கையில் அடித்தேன் இருவரும் கட்டிப்புரள, எனது கையில் குத்து விளக்கு கிடைக்க, அடுத்த நிமிடம் குத்து விளக்கு அவன் வயிற்றுக்குள்... ஜில்லென்று முகத்தில் யாரோ தண்ணீர் அடிக்க... கண் விழித்தேன்,

''ஏண்டா இன்னுமா தூங்குறே போய் வேலையப் பாருடா''
கேட்டவர் – ஜெயிலர், ஜெயபால்
இடம் – வேலூர்.

எனக்கு கஷ்டங்களும், துன்பங்களும் வரக்காரணமென்ன ? ஒரு வேளை நான் இறைவனுக்கு துரோகம் செய்திருப்பேனோ ? செய்திருக்க சாத்தியம் இல்லையே... நானறியாமல் எப்படி ? ஒரு வேளை செய்யப் போகிற கொலைக்காகத்தான் கஷ்டத்தையும், துன்பத்தையும் ஏற்கனவே கொடுத்துட்டாரோ ? அப்படினா இப்ப எதற்கு கஷ்டம் ?


CHIVAS REGAL சிவசம்போ-
குலவிளக்கு போல வந்த ''குத்தியானந்தா''''குத்து விளக்கு''ல குத்திட்டீயலே....

காணொளி

செவ்வாய், ஜூன் 24, 2014

வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகள்.

 
நண்பா, உன் மரணத்தை நினைத்து வேதனைப்படுவதா ?
உனது இழப்பால் வாடும் குடும்பத்தை நினைத்து வேதனைப்படுவதா ?
உன்னை இந்த நிலையில் வளர்த்து விட்ட பெற்றோரை நினைத்து வேதனைப்படுவதா ?
உன்னால் இந்த சமூகத்தின் பெயர் அவலப்படுவதை நினைத்து வேதனைப்படுவதா ?
கல்வெட்டுகளில் பெயர் பொறித்த தமிழனின் பெயர் உன்னால் அயல் தேசங்களில் பொரிக்கப்படுவதை நினைத்து வேதனைப்படுவதா ?
இதற்க்கு காரணமானவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லையே அதை நினைத்து வேதனைப்படுவதா ?
உன்னைப்போன்றவர்களுக்கு இன்னும் இவர்களைப்பற்றி தெரியவில்லையே அதை நினைத்து வேதனைப்படுவதா ?
 
இந்த கேள்விகளெல்லாம் உன்னிடமல்ல உன்தலைக்குமேல் தொங்கிகொண்டிருக்கும் வீட்டில் வளர்த்த விட்டில் பூச்சிகளுக்காகவும், இனியெனினும் எவனும் இந்தசெயல்களை செய்யக்கூடாது என்பதற்காகவும். இருப்பினும் உனது ஆன்மா சாந்தியடைய எமது பிரார்த்தனைகள் காரணம் நீ என்இன தமிழனடா....


வெள்ளி, ஜூன் 20, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன ?


நான் ஒரு தப்பும் செய்யலை... நண்பர் சொக்கன் சுப்பிரமணியன் ஏதோ முன்பகை காரணமோ, என்னவோ... என்னை இந்த கொக்கி சிக்கல்ல கோர்த்து விட்டுட்டாரு... நாம ஆஸ்ட்ரேலியாவுல இருக்கோம், அவரு அபுதாபியில இருக்காரு, தூரமா இருக்கிறதால ஒண்ணும் செய்ய முடியாதுனு நினைச்சிட்டாரு... அவரும் ஒருநாள் நமது இனிய இந்தியாவுக்கு வந்துதானே ஆகணும்.... இதுதான் அந்தச் சிக்கல் இந்த பத்து கேள்விக்கும் நான் பதில் சொல்லணுமாம்....


1. உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?

அன்றைய சூழ்நிலையில் எனக்கு இருக்குற வலைப்பூ நண்பர்கள் அனைவரையும் வரவழைத்து வித்தியாசமாக இருக்கட்டுமென ஆளுக்கு ஒரு பவுன் மோதிரம் மாட்டி விடுவேன்.


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?

முடியாத காரியங்களும், தெரியாத விசயங்களும் என்னை அணுகவே கூடாதுனு ஒரு லட்சியத்தோட வாழுறவன் நான் ஆனால், முடியாத காரியங்கள் முக்கால்பாகம் பாக்கியிருக்கு... தெரியாத விசயங்கள் முழுசாவே பாக்கியிருக்கு ஆகவே அது எப்படியென ? கற்றுக்கொள்ள விரும்பி முயற்சிக்கிறேன்.


3. கடைசியாக சிரித்தது எப்போது எதற்காக ?

எனது கல்யாணத்திற்கு முதல் நாள். நாளை முதல் முடியாதோ ? என்ற ஐயத்தில்....


4.24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?

இனிமேல் பழங்கால வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு தாமஸ் ஆல்வா எடிசன் என்றொரு மனிதரை அனைவரும் உடனடியாக மறக்க வேண்டுமென கோரிக்கை வைப்பேன்.


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன ?

உங்கள் வாழ்க்கையின் கடைசி காலம்வரை ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்தே வாழுங்கள் EGO என்ற வார்த்தையை ஆங்கில அகராதியில் இல்லை என நினையுங்கள் என சொல்வேன்.


6. உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்க முடியும் என்றால்

எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?

வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியை நிறுத்த வைத்து பழங்கால வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க வைத்து ஒவ்வொருவரும் பழையபடி 100 ஆண்டுகள் வாழ்வதற்கு வழிவகுப்பேன்.


7. நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள் ?

எப்பொழுமே எனது நண்பரிடம்தான் (அதாங்க என்மனசாட்சி) இது கடைசிவரை நீடிக்கும்.


8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?

கடைசிவரை அவரின் வாயாலேயே தகவல் தவறானது எனசொல்ல வைப்பேன் 90 சதவீதம் அன்பால் முடியாத பட்சத்துக்கு கடைசியாக செவுல் தெறிக்க ரெண்டு விட்டு.


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?

தனது அம்மா இறக்கவில்லை தந்தை உருவில் வாழ்கிறாள் என உனது குழந்தைகள் நினைக்கும்படி வாழ் என அறிவுருத்துவேன்.


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?

அன்று, மட்டுமல்ல... இன்று மட்டுமல்ல... என்றுமே எழுத்துதான். (கடைசிவரை)


-Killergee
கடைசியாக ஒரு பத்து நபர்களை இதுல கோர்த்தும் விடணும்னு கண்டிஷனும் போட்டுடாரு... வேற வழி.... நீங்கதான்...

திண்டுக்கல் தனபாலன் http://dindiguldhanabalan.blogspot.com/
Dr B. ஜம்புலிங்கம் http://drbjambulingam.blogspot.ae/
வே. நடனசபாபதி http://puthur-vns.blogspot.ae/
ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் http://paapunaya.blogspot.ae/
துரை செல்வராஜூ http://thanjavur14.blogspot.ae/
தி. தமிழ்இளங்கோ http://tthamizhelango.blogspot.com/


புதன், ஜூன் 18, 2014

Emergency 2


ஜெயகுமார்
என் இனிய வலையுலக நண்பர்களுக்கு... கடந்த பத்து தினங்களாக நான் இவரை கவனித்துக்கொண்டே வந்ததில் மேற்கண்ட இந்த நண்பர் எனது பதிவுகளை காப்பி எடுத்து அவரது முகநூலில் போட்ட விசயங்களை எடுத்து விட்டார், மற்றவர்களுடையது இருக்கிறது, அது எனக்கு தேவை இல்லாதவிசயம் மேலும் எனது கில்லர்ஜீ வலைபதிவிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார், ஒருதருணத்தில் அவருக்கு செய்தியனுப்பும் சந்தர்ப்பம் கிடைத்ததில் அவருக்கு நன்றி சொல்லி செய்தி அனுப்பி விட்டேன், இதையும் அவர் படிப்பார் என நம்புகிறேன் தவறு செய்வது மனிதஇயல்பு.
 மறப்போம் மன்னிப்போம் மனிதநேயம் காப்போம்.
எனக்கு ஒரு பிரட்சினை என்றதும் ஏதோ பொழுது போக்கிற்காக படிக்கிறோம், என்றில்லாமல் அபுதாபியின் ஒருஓரத்தில் வாழும் எனக்காக பலதேசங்களிலிருந்தும் கண்டனக்குரல் கொடுத்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் நன்றி.

குறிப்பு-நண்பர் ஜெயகுமார் அவர்களுக்கு தங்களை பின் தொடர்வேன்.