தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜூலை 27, 2022

மறு கலை தாகம்

 

ணக்கம் நண்பர்களே... ‘’வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது’’ என்ற டி.ராஜேந்தரின் பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
பாசமுள்ள குயிலிது பாவலனை பாடுது
தேவையுள்ள ஊரிது தேவகோட்டையை தேடுது...
ஏதேதோ தேகம் அன்னாளும் வாடும்
பிழையாதோர் ஊசல் சிலை வைத்து கூடும்
பாசமுள்ள குயிலிது பாவலனை பாடுது
 
சேட்டுக்கொரு பாகம் ஊற்றி வரும் கள்வா
உனக்கேன் பூசை நிலாக்கனி தேளே
கொட்டி வரும் பூனை கொட்டவில்லை தேளே
உனக்கேன் பூசை கலைமதி தேளே
பாசமுள்ள குயிலிது பாவலனை பாடுது
 
என்ன தாகம் கொண்டாய் இன்று வரை படர்ந்து
உனக்கேன் பூசை ரஞ்சிதா தேளே
மஞ்சியவள் உன்னை பண்ணவில்லை இன்றும்
உனக்கேன் பூசை மங்கோந்தை மேலே
பாசமுள்ள குயிலிது பாவலனை பாடுது
 
சேதங்களை எண்ண பதினாறு வரலாம்
உனக்கேன் பூசை பதினேழாய் நீட்ட
சேது தன்னை புரிய கண்ணிரண்டும் மெய்யே
உனக்கேன் பூசை இரவொன்று ஓட
 
பாசமுள்ள குயிலிது பாவலனை பாடுது
தேவையுள்ள ஊரிது தேவகோட்டையை தேடுது...
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1980
படம்: ஒரு தலை ராகம்
பாடலாசிரியர்: டி.ராஜேந்தர்
இசை: டி.ராஜேந்தர்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
 
இதோ டி.ராஜேந்தரின் பாடல் வரிகள்
 
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்...
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்...
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
 
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா...
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே...
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை...
உனக்கேன் ஆசை கலைமகள் போலே...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா...
 
என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து...
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே...
வஞ்சியவள் உன்னை எண்ணவில்லை இன்றும்...
உனக்கேன் ஆசை மன்மதன் போலே...
பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா...
 
மாதங்களை எண்ண பன்னிரெண்டு வரலாம்...
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட...
மாதுதன்னை அறிய கண்ணிரெண்டும் பொய்யே...
உனக்கேன் ஆசை உறவென்றும் நாடா...
 
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=ZoDHVnpK-OU
நன்றி – கில்லர்ஜி தேவகோட்டை

28 கருத்துகள்:

  1. 1980 களில் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்த பாடல்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி இன்றுவரையில் ரசிக்கும் பாடல்தான்...

      நீக்கு
  2. பொருள் தராத வார்த்தைகளும் சேர்ந்திருக்கின்றனவே...  எனிவே ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி கொஞ்சம் இருள் படரும் வேளையில் எழுதியது, ஆகவே இறைவனின் அருள் கிடைக்கவில்லை.

      நீக்கு
    2. ஹா ஹா ஹா. படர்ந்த இருளில், "அவன்"அருள் தெரியாமல் மறைந்து விட்டது என்கிறீர்களா?நகைச்சுவையான பதிலை ரசித்தேன். ஆனாலும், தங்களுக்கு அவனின் அருள் பூரணமாக இருப்பதால்தான் பாட்டுகளுக்கேற்ற வார்த்தைகளை இறைவனே சிருஷ்டித்து தருகிறான். அதில் ஐயமில்லை.

      நீக்கு
    3. தங்களது ரசிப்புக்கு நன்றி

      நீக்கு
  3. உங்கள் திறமைக்கு எல்லையே இல்லை என்பதைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள். ஒரு தலை ராகம் படம் பார்க்கலை என்றாலும் பாடல்கள் எல்லாம் மிகவும் பிரபலம். அடிக்கடி கேட்டு ரசித்த பாடல் உங்கள் கைவண்ணத்தால் மாற்றப்பட்டிருப்பது சிரிப்பை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்தை பதிவு செய்தமைக்கும் நன்றி

      நீக்கு
  4. கல்லூரி காலம் நினைவுக்கு வருகிறது...

    பதிலளிநீக்கு
  5. பாடல் வரிகளில் வழக்கமான கோர்வை இல்லையோ இதில்? என்றாலும் உங்கள் திறமை திறமைதான் கில்லர்ஜி!

    இந்தப் பாடல்கள் எல்லாம் அப்போது கேட்டு ரசித்த பாடல்கள் படமும் ரசித்த படம்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக வார்த்தைகள் கொஞ்சம் சிக்கவில்லை பார்க்கலாம்.

      தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  6. இந்தப் படம் பார்த்ததில்லை. எங்கள் கல்லூரியிக் போட்டாங்க ஆனால் நான் பார்க்கவில்லை. ஏனோ பிடிக்கவில்லை, ஆனால் பாடல்கள் எல்லாம் செம, பிடிக்கும்.

    கில்லர்ஜி உங்க திறமை சூப்பர். ஆனா ரைமிங்க் காக கோர்த்துப் போடுவதால் சில இடங்களில் கோர்வை வரலையோ....

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஆம் வார்த்தைகளை எதிர்பதமாக அமைக்கிறேன், அதனால் சில வரிகள் அர்த்தமில்லாமல் போய் விட்டது பார்க்கலாம். தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு நன்றாக உள்ளது.
    புதிதாக இட்டுக் கட்டிய பாடல் அருமை.

    அர்த்தம் ஒரளவு சரியாக அமையப் பெறாவிடினும், பாட்டுக்கேற்ற பாடல் வரிகளாக இருகின்றன. பாடும் போது வரிகள் நன்றாக பொருந்துகின்றன. ரஞ்சிதா என்றதும் கைலாசத்திற்கு போய் விட்டேன்.:))))) பாட்டுகள் எழுதுவதில் நல்ல திறமை உள்ளது உங்களுக்கு. விரைவில் திரைப்படங்களில் புதுப்புது பாடல்களை இயற்றும் பாடலாசிரியராக மலர்ந்து மணம் வீச மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், விரிவான கருத்தை பதிவு செய்தமைக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. மறந்திருந்த ரஞ்சிதாவை பாடல் மூலம் ஞாபகபடுத்தி விட்டிர்கள் புலவரே!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா.. ஹா.‌ உங்களுக்கு டி.ஆர் ஞாபகம் வரவில்லையா ?

      நீக்கு
  9. ட்டீ.ராஜேந்தர் பாட்டுக்கே எசப்பாட்டா? ஹாஹாஹா...
    இரசிக்கத்தக்கவண்ணம் இருக்கிறது!
    'வாசமிலா மலரிது' -சூப்பர் ஹிட்டுல?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி.

      நீக்கு
  10. மாற்றி அமைத்த பாடல் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  11. புதிய பாடல் வரிகள் அருமை. வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு