தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், டிசம்பர் 06, 2022

மறுமுகங்கள்

 

01. வாழும்போது எட்டிப்பார்த்து நலம் விசாரிக்காத உறவுகள் இறந்தவுடன் மாலையோடு வந்து நிற்பது ஏன் ?
 
02. மனதுள் சபித்துக் கொண்டு இருந்தவன் மரண வீட்டுக்கு வந்ததும் சோகமாக முகம் காட்டுவது ஏன் ?
 
03. பணக்கார வீட்டின் கிரஹப் பிரவேசகத்துக்கு வந்தவன் முகத்தை மட்டும் மகிழ்ச்சியாக காட்டுவது ஏன் ?
 
04. நாத்தனார் வந்தால் பிரகாசிக்காத முகம் தங்கை வந்தால் மட்டும் சந்தோஷக்களை கட்டுவது ஏன் ?
 
05. காதலியாக இருந்தபோது தந்த முத்தம் இனித்தபோது, திருமணமாகி மனைவியாக தரும்போது கசப்பது ஏன் ?
 
06. அப்பா சொல்லும் அறிவுரையை கேட்காத மாணவன் தனது அபிமான நடிகன் சொல்வதை கேட்பது ஏன் ?
 
07. தங்கை என்ன சொன்னாலும் எரிந்து விழும் அண்ணன், அவளது தோழிகளிடம் மட்டும் வழிவது ஏன் ?
 
08. விலைவாசி உயர்வைக் கண்டிக்க சேராத மக்கள், சாதி, மதப்பிரச்சனை வந்தால் மட்டும் முன் வருவது ஏன் ?
 
09. இருப்பவனை விருந்துக்கு அழைக்கும் மனிதன் தர்மம் கேட்போருக்கு கஞ்சி கொடுக்காதது ஏன் ?
 
10. கடவுளுக்கு தலை வணங்காதவன்கூட தனது அரசியல் தலைவன்-தலைவி காலில் விழுவது ஏன் ?
 
11. தகப்பனின் பிறந்தநாள் தெரியாதவன் தனது அபிமான நடிகனின் பிறந்தநாள் மறக்காமல் இருப்பது ஏன் ?
 
12. உள்நாட்டில் நான்கு மணி நேரம்கூட உழைக்காதவன், வெளிநாட்டில் பதினாறு மணி நேரம் உழைக்கிறானே ஏன் ?
 
கில்லர்ஜி தேவகோட்டை
 
ChavasRegal சிவசம்போ-
ஒரு குவாட்டர் இறக்குனா விடை வரும் நமக்கு...

Share this post with your FRIENDS…

33 கருத்துகள்:

  1. எல்லா ஏன்களுமே மதிப்பு வாய்ந்த கேள்விகள்.  அர்த்தம் வாய்ந்தவை.  இதற்கெல்லாம் எல்லோருக்கும் பதில் தெரியும்,  ஆனால் வெளியில் சொல்ல முடியாது!

    பதிலளிநீக்கு
  2. ஏன்?.. ஏன்?.. ஏன்?..

    எல்லாம் தெரிந்திருந்தும் ஏதும் தெரியாதவர் போல நடிப்பது ஏன்?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி எனக்கு தெரிந்தால் நான் எதுக்கு கேட்கப் போறேன்...

      நீக்கு
  3. ரசித்துப் படித்தேன்

    பதிலளிநீக்கு
  4. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தெரியாதிருப்பது ஏன்?

    பதிலளிநீக்கு
  5. படம் அழகாகச் செய்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. இவற்றுக்கு எல்லாம் என்ன பதில் சொல்வது? பதில் தெரிந்த கேள்விகள்!

    பதிலளிநீக்கு
  7. இந்தக் கேள்விகளை எ பி க்கு புதன் கேள்வி களாக அனுப்பி வைக்கலாம். பதில் கிடைக்கும். 

    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. சமீப காலமாக உங்கள் பதிவுகளில் விளம்பரங்கள் தெரிகின்றன. இவற்றை நீங்கள் சேர்த்தீர்களா? அல்லது பிளாகர் சேர்க்கிறதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில அனுமதிக்காததும் சேர்கிறது விரைவில் சரி செய்கிறேன்.

      நீக்கு
  9. இன்றைய பதிவில் jockey ஜட்டி விளம்பரங்களாக எனக்கு வருகின்றன. 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மன்னிக்கவும் ஐயா சரி செய்கிறேன்.

      நீக்கு
    2. இதுக்குக் காரணம் நம் கணிணியில் நாம் ஏதேனும் தேடினால், அதனைத் தொடர்ந்த தீம்களே விளம்பரங்களாக வரும். நான் சமீபத்தில் குருவாயூரில் தங்குமிடம் தேடினேன், ஜியோமார்ட் ஆஃபர்கள் பார்த்தேன். அவைகள்தாம் விளம்பரங்களாக இங்கு வருகின்றன. அதனால் ஜெயகுமார் சார் நீங்க உங்க கணிணில ஒருவேளை ஃபேஷன் அல்லது அது சம்பந்தமானவற்றைத் தேடியிருப்பீர்கள்.

      நீக்கு
    3. உண்மை. நான் ஆன்லைனில் கைலி, மற்றும், ஜட்டி வாங்கினேன்.

      நீக்கு
    4. தங்களது மீள் வருகைகளுக்கு நன்றி.

      நீக்கு
  10. தொடர்பதிவு ஆக்கி விடலாமா ஜி...?

    பதிலளிநீக்கு
  11. கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்திருக்கும் இவற்றுக்கெல்லாம் மனம் (முகம் கொடுக்க தயங்குவதுதான் ) காரணமாக இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  12. சார்... உங்கள் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டுமென்றால் அதற்கு முன்னால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.... உங்கள் திருமுகம் தெரியும் அந்த புகைப்படம் உங்கள் கை வண்ணமா? அல்லது டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மாயாஜாலமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே எனது கைவண்ணத்தில் டிஜிட்டல் செய்த மாயம்.

      நீக்கு
  13. கில்லர்ஜி, உங்கள் படம் மிக அருமை. கேள்விகள் கேட்பது எளிது. பதில்தான் கஷ்டம். அத்தனையும் சரியான கேள்விகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி

      நீக்கு
  14. கில்லர்ஜி எனக்கு மிகவும் பிடித்த கேள்விகள் 1, 8,9,10 ....

    அதிலும் 1

    எல்லாக் கேள்விகளுமே எல்லார் மனதிலும் எழுபவைதான். விடைகளும் உண்டு. சுய சிந்தனை இல்லாததால்....சில ஆட்டு மந்தையாக மனிதக் கூட்டம் இருப்பதால்,

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  15. கேள்விகள் அருமை.
    இப்படி நடப்பது உண்டு.
    விதி விலக்கும் உண்டு.என் மறைந்த நாத்தனார் வருகை கண்டு எப்போதும் மகிழ்வேன்.
    அவள் இருக்கும் இடத்தை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விடுவாள்.
    உங்கள் கை வண்ணத்தில் உங்கள் முகம் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

      நீக்கு