தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

செவ்வாய், ஜூன் 16, 2015

ரதிமா....

 
பிச்சுமணி, எப்படியி...
நல்லாயிருக்கேன் மதன், நீ எப்படிடா இருக்கே ? வீட்ல அம்மா எப்படி சவுக்கியமா இருக்காங்களா ? வேலையெல்லாம் எப்படி ? போயிக்கிட்டு இருக்கு... ஆமா, போன வாரம் கல்யாணத்துக்கு பொண்ணு பார்க்க போகணும்னு சொன்னே என்ன ஆச்சு ?
பொண்ணு புடி...
பொண்ணு புடிக்கலையா ? ஏன் கருப்பா ? என்ன படிக்கலையா ? வசதியில்லாத வீடா ? அப்பா என்ன செய்யிறாரு ? அண்ணன் தம்பி யாரும் இல்லையாக்கும் ? ஆமா... இப்படியே தட்டிக்கழிச்சா என்ன அர்த்தம் ? உனக்கு எந்த மா3தான் பொண்ணு வேணும்னு நினைக்கிறே ? 
ரதி...
ஆமா... ரதி உல்லாச பறவைகள் படத்துல நடிச்சுருக்காங்க... ஹிந்தியிலே கூட ஏக் துஜே கேலியே படத்துல கமல்கூட நடிச்சுருக்காங்க, படம் நல்ல ஹிட்டாச்சு K. பாலசந்தர் ஸார் டைரக்டர்.
எனக்கு, வேண்டியது ரதிமா..
என்னடா... நீ ரதியம்மாவைப் போயி கேட்கிறே ? அவங்களுக்கு இப்பவே வயசு எப்படியும் ஐம்பதை தாண்டியிருக்கும், ஏங்கிட்டே சொன்னதை வெளியிலே சொல்லிடாதே சிரிப்பாங்கே.... உங்க அப்பாவுக்கு தெரிஞ்சிசுன்னு வச்சுக்க.. நேரே எங்கிட்டே வந்து ஏண்டா ? முட்டாப்பயலே உங்கூட சேர்ந்துகிட்டு யேன் மகனும் கெட்டுப் போயிட்டான்னு என்னைப் புடிச்சு ஏறுவாரு நல்லாயிருப்பே இந்த மா3 எண்ணத்தை மாத்திக்க.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.
டேய், நான் சொல்றதை கேட்....
நீ ஒண்ணும் சொல்லவேணாம் எனக்கு தெரியாததா ? நமக்குன்னு சமூகத்துல ஒரு மரியாதை இருக்கு அதை காப்பாத்திக்க நம்ம கௌரவத்தை மறந்துட்டு நடிகையை கல்யாணம் செய்துக்கிற ஆசைப்படுறியே உனக்கு வெட்கமா ? இல்லை... டேய் ரோட்ல நம்ம மனைவி நடந்து போகும்போது இன்னாரு மனைவினு சொல்லனும்டா அதுதான்டா நமக்கு பெருமை, இன்னாரு புருஷன்னு சொன்னா ? மானக்கேடு ச்சே... நீ இப்படி இருப்பேனு நான் நினைக்கவே இல்லைடா...
டேய், புரியாம...
டேய் என்னடா... எனக்கு புரியலை ஏன்டா ? மனுசனுக்கு ஆசையிருக்கும் அதுக்கு அளவு வேணாம் ? இப்படியாடா ? கேணத்தனமா ஆசைப்படுறது என்னைவிட நீ படிச்சு இருந்தும் உனக்கு புத்தி இல்லையடா நம்மளை விட மூத்தவளை கல்யாணம் செய்துக்கிற நினைக்கிறயடா.. அதுவும் நடிகையை எங்க வீட்ல அம்மா-அப்பாவெல்லாம் உன்மேலே எவ்வளவு மரியாதை வச்சுயிருக்காங்க தெரியுமா ? ஏண்டா ? தெரியாமத்தான் கேட்கிறேன் சோத்தைதானே திங்கிறே....
(சட்டீரென ஒரு சத்தம் மதன் பிச்சுமணியை ஒருஅறை விட்டிருந்தான் கண்ணத்தை பிடித்துக்கொண்டு கீழே உட்காந்து விட்டான் பிச்சுமணி)
ஏண்டா... லூசுப்பயவில்லே நான் என்னசொல்ல வர்றேனு முதல்ல கேட்டியாடா ? ¾ மணிநேரமும் நீ தானடா பேசுனே என்னப்பேச விட்டியாடா ? நாலே வார்த்தை அதையும் முழுசாக்கூட நான் பேசலை... என்னமோ ரதியாம், உல்லாசப்பறவைகளாம், ஏக் துஜே கேலியேவாம், கமலஹாசனாம், பாலசந்தராம் இவுங்கல்லாம் யாருடா ? இனிமே ரோட்ல பார்க்கும்போது கல்யாணத்தை பத்தி பேசுனே ? பிச்சுப்புடுவேன் பிச்சு.
(பிச்சு மணியை திட்டிவிட்டு... நடையை கட்டினான் மதன்)

ஞாயிறு, ஜூன் 14, 2015

மீனாம்பதி



அன்பு நெஞ்சங்களே கடந்த வருடம் நான் வலைச்சர ஆசிரியராக இருந்த பொழுது எமிரேட்ஸ் அல் ஸார்ஜாவில் வாழும் பிரபல வலைப்பதிவர் சகோதரி திருமதி. மனோ சாமிநாதன் அவர்களிடம் ஒரு ஓவியம் வரைந்து கேட்டிருந்தேன் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம் அந்த ஓவியத்தை உள்ளன்போடு வரைந்து தந்த சகோ அவர்களுக்கு எமது நன்றி.

மீனாம்பதி முதியோர் காப்பகம்.... வேப்பமரத்தடி நிழலில்...

ஏங்க, யேன் ஒரு மாதிரியா இருக்கீங்க... ? 
ஒண்ணுமில்லே மீனாட்சி.

இல்லை எனக்குத் தெரியாதா உங்களைப்பத்தி, யேன் எங்கிட்டே மறைக்கிறீங்க ?
இல்லை, என்னைக்காவது நமக்கு இப்படி ஒரு நிலைமை வரும்னு நீ நினைச்சு பார்த்திருப்பியா ?

நான் எதுக்காக இப்படி நினைக்கப் போறேன் ? அதைப்பத்தியே நினைக்காதீங்க.... மனசு கவலைப்பட்டா, ஆத்திரமாகி, கோபம் வரும் அதுவே சாபம் விடச்சொல்லும் அப்புறம் நம்ம புள்ளைங்களுக்குதானே... கஷ்டம் மறந்துடுங்க....
இன்னும்கூட நீ புள்ளைங்கமேலே பாசம் வச்சுருக்கியா மீனாட்சி ? 

என்ன இருந்தாலும் நம்ம புள்ளைங்கதானே....
என்னாலே மறக்க, முடியலையம்மா... அவங்களை  நினைச்சாலே கோபமா வருது.....

யேன் கோபம் வருது தப்பு உங்களிடம்தானே இருக்கு... எல்லா சொத்தையும் இப்பவே புள்ளைங்களுக்கு எழுதி வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்துடுச்சு ?
நமக்குப் பிறகு சொத்து பிரிக்கிறதுல அவங்களுக்குள்ளே சண்டை வரக்கூடாதுன்னு நினைச்சு நியாயமான முறையிலே பிரிச்சு எழுதுனேன், எல்லாமும் மாத்தியாச்சு இந்த வீடு மட்டும் ஏன்... மிச்சம் இருக்கு நம்ம புள்ளைங்க எல்லோரும் ஒண்ணாத்தானே இருக்கோம்னு நினைச்சேன், ஆனா நான் உன்னை மறந்துட்டேனே அது எப்படி ? அதுதான், தாங்க முடியலை.

சேச்சே என்னங்க நீங்க தொழில்ல எவ்வளவு எதிரிகளை எதிர்த்து வந்தீங்க நீங்களா... இப்படி சின்னக் குழந்தையாட்டம் கண் கலங்கிகிட்டு, இனி நமக்கு என்னயிருக்கு ? வீடு போ, போன்னு சொல்லிடுச்சு, காடு வா, வான்னு சொல்லுற வயசு.
தொழில் எதிரிகளெல்லாம் வெளியாட்க அதுனாலே ஜெயிச்சேன், ஆனா வீட்டுக்குள்ளேயே அதுவும் பெத்த புள்ளைங்களே, இப்படி....

புள்ளைங்கதானே போனாங்க, நான் போகலையே... அப்புறம் ஏன் மனசைப் போட்டு குழப்பிகிறீங்க....? 
நமக்கு கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு ? 

முப்பத்து அஞ்சு வருஷமாச்சு, ஏன் திடீர்னு இந்தக் கேள்வி ? 
இந்த முப்பத்து அஞ்சு வருஷத்துல என்னைக்காவது நீ என்னைக் கல்யாணம் செய்து கிட்டதுக்காக வருத்தப்பட்டு இருக்கியா ? 

ஒருக்காலமும் நான் கவலைப்பட்டதில்லை, உங்க மேலே விருப்பபட்டுதானே எங்க அம்மா - அப்பாவை எதிர்த்து கல்யாணம் செஞ்சோம், என்ன... மனக்கஷ்டம் பத்து வருஷமா புள்ளையில்லாம தவமா தவமிருந்து கோயில் குளம்னு ஏறி வந்தேன், தெய்வம் கண் திறந்து ரெட்டை குழந்தை அதுவும், ஆண் குழந்தைங்க எவ்வளவு சந்தோஷப்பட்டேன் தெரியுமா... அந்தக் குழந்தைங்களா இப்படி.... ? 
(மீனாட்சியம்மாள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது சபாபதி ஐயா காண்பது, வாழ்வில் முதல்முறை என்றுகூட சொல்லலாம்)

மீனாட்சி, நமக்கு குழந்தைகள் பிறக்காமல் இருந்திருந்தால், இந்த நிலைமை வந்துருக்காது இல்லே... வீடு இல்லாத நிலைக்கு வந்துருக்க மாட்டோம்ல...
இப்பகூட என்ன... இருபது வருஷத்துக்கு முன்னே நாம முதியோர் இல்லத்துக்கு தானம் கொடுத்த வீட்லதான் இருக்கோம், பார்த்தீங்களா ? நம்ம பேருதான் இப்பவும்கூட இருக்கு, இதுவும் நம்ம வீடுதாங்க....

ஆனா, நம்ம புள்ளைங்க கம்பெனி பேரையெல்லாம் மாத்தி அவுங்க பொண்டாட்டி பேரை வச்சுட்டாங்களே....
அதனால என்னங்க நம்ம மருமக்களோட பேருதானே... நீங்க வைக்கலையா என்பேரை... நான் கட்டாயப்படுத்துனதாலதான் உங்க பேருல பாதியை சேர்த்தீங்க....

நமக்கு ரெண்டு குழந்தைகள் இருக்கிறதாலதானே போட்டி போட்டு கிட்டு வெளியே அனுப்பிட்டாங்க ஒரு புள்ளைய பெத்து இருந்தால் இப்படி ஆகியிருக்காதோ....
நாம, இங்கே வரணும்ங்கிறது விதி குழந்தைகளை கோவிச்சு என்னங்க செய்ய முடியும் ?

நீ உங்க அம்மா வீட்ல எவ்வளவு வசதியா வாழ்ந்தவ... உன்னை இந்த நிலைக்கு அதுவும் இந்த வயசுல... மனசு ஆறமாட்டுதுமா...
ஆனாலும் அதைவிட வசதியா என்னை வச்சிருந்தீங்களே... இனிமே என்ன இருக்கு.

நானாவது சின்ன வயசுல அனாதையா வாழ்ந்து பழக்கப்பட்டவன், ஆனா நீ உன்னை இப்படி விட்டுட்டுப் போறதை நினைச்சா...
யாரும், யாரையும் விட்டுட்டு போக மாட்டோம், பேசாம இருங்க.

ஒரு விசயத்துல, எனக்கு சந்தோஷம்.
என்ன ? 

உன்னோட, அப்பா - அம்மா உயிரோட இல்லை, அவருக்கு முன்னாலே நான் தோற்கலை, ஆனா உன்னோட அண்ணன்கள் போட்ட சவால் நிறைவேறிடுச்சு.
ஏங்க எப்பவோ உள்ள, விசயங்களை இப்பயேன்... நினைக்கிறீங்க ?

இல்லை மீனாட்சி நான் தோத்துட்டேன், தோத்துட்டேன்...
சரி விடுங்க... அதையே நினைக்காம...

மீனாட்சி உன் மடியில கொஞ்சம் படுத்துக்கிறவா....
சரி படுத்துக்கங்க...

மீனட்சியம்மாள் மரத்தில் சாய்ந்து கொண்டு கால்களை நீட்ட சபாபதி ஐயா மடியில் தலைவைத்து சாய்ந்தார்... அவர் நிரந்தரமாக சாய்ந்தது தெரியாமல் மீனட்சியம்மாள் மனஉலைச்சலில் இவரை அனாதையாக விட்டுப் போகிறோமே... எனத்தெரியாமல் அப்படியே.... உறங்கினாள் நிரந்தரமாய்.....

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.

அன்பின் சகோ திருமதி. மனோ சாமிநாதன் அவர்களுக்கு அன்று மின்னஞ்சலில் சொல்லி இருந்தேன் நான் சொல்ல மறந்த விடயத்தை தாங்கள் யதார்த்தமாக புகைப்படத்தில் தந்து விட்டீர்கள் எனது பதிவு வரும்பொழுது தங்களுக்கு புரியுமென அதுதான் இவர்கள் இருவருமே முடிவில் இறந்து கிடப்பது அதன் பாவத்தை (முக பாவணை) தாங்களாகவே தந்து விட்டீர்கள் அதற்காக எமது சிறப்பு நன்றிகள்.

என்றும் அன்புடன் கணபதி – மீனாம்பாள் அவர்களின் மகன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

குறிப்பு நேற்று முன்தினம்12.06.2015 சார்ஜாவில் இருக்கும் திருமதி. மனோ சாமிநாதன் அவர்களின் வீட்டுக்குப் போய் அவர்களின் கணவர், மகன், மருமகள், மற்றும் பேரன் எல்லோரையும் கண்டு வந்தேன் அனைவரும் உள்ளன்போடு வரவேற்று உபசரித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காணொளி

வெள்ளி, ஜூன் 12, 2015

நாகர்கோவில், நாற்காலி நாகரத்தினம்

உலகம் தோன்றி கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள், இந்த கோடிகளில் சிறு துரும்பளவு எனச்சொல்லப்படும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது எங்கள் மதம் எனமனிதன் பீற்றிக்கொள்கிறானே ! அதேநேரம் இவன் விஞ்ஞானத்தையும் நம்புகிறான், இது எப்படி சாத்தியமாகும் ? அப்படியானால் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதன் எந்த மதம் ? அவனும் வாழ்ந்து இறந்துதானே போயிருக்கிறான், (விஞ்ஞானம் இல்லாத காரணத்தால் கூடுதல் காலம் வாழ்ந்து இருக்கிறான், அவ்வளவுதான்) ஆக மதம் என்பது மனிதன் பேசப்பழகி மொழி அமைத்து பிறகு உருவாக்கிய ஒரு கூட்டமைப்பு என்பது உண்மை ஆகிறது இதற்கெல்லாம் மூலகாரணம் என்ன

தலைமை பீடத்தில் அமர்வது, இந்த பாழாப்போன மனிதனுக்கு, ''நாற்காலி ஆசை'' அன்றே தொடங்கி விட்டது ஆசையின் விரிவாக்கம் (EXTENSION) மதங்கள் பிரிக்கப்பட்டு, அதிலிருந்து உறிக்கப்பட்டு, அதிலிருந்தும் பறிக்கப்பட்டு, அதனுள்வர, கம்பளம் விரிக்கப்பட்டது, விரிப்பது சரித்திரம் படைக்க எனநினைத்தார்கள் தரித்தினியம் பிடித்தவர்கள், ஒருசில மனிதர்களின் சுயநல நல்வாழ்வுக்காக... பல மனிதர்களின் வாழ்வு பறிக்கப்பட்டது, பறித்து விட்டான் என்பதின் அர்த்தமென்ன ? தன்கையிலிருந்து அடுத்தவன் அபகறித்து கொண்டான் என்பதாகும் பறித்தவன் யார் ? ஒரு சிலர், பறி கொடுத்தவன் யார் ? பலர்.
(ஆக சிலர் என்பது சிறு பான்மை, பலர் என்பது பெரும்பான்மை)

கொஞ்சம் சிந்தித்தித்துப்பார் மானிடா வெட்கமாக இல்லை பெரும்பான்மையினரிடம் இருந்து சிறுபான்மையினர் பறித்துக் கொண்டது, ஆக அறிவீணர்களாக இருந்தது பெரும்பான்மை என்பது நமக்கு இப்பொழுது தெளிவாகுமே, ஆச்சர்யமாக இருக்கிறதா ? இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை, காரணம் அறிவீணர்கள் அன்று மட்டுமல்ல ! இன்று வரை தொடர்கிறது....

ஆம் மானிடா அந்த பாரம்பரியத்தில் வந்த நாம் இன்றும் ஆட்சி பீடத்திலிருக்கும் ஒரு சிலரின் நல்வாழ்வுக்காக பெரும்பாலானோர் அறிவீணர்களாகவே இருக்கிறோம் ஹூம், இந்த லட்சணத்துல சொல்றாங்கே இந்தியாவின் மக்கள் தொகை 110 கோடியாம்.

சாம்பசிவம்-
என்னய்யா நீரு, மொட்டைத் தலையிலே ஆரம்பிச்சு மொழங்காலுல கொண்டு வந்து முடிச்சுப் போடுறீரு.

CHIVAS REGAL சிவசம்போ-
ஒருவேளை, 110 கோடி ஆக்குனதுல மும்முரமாகி விட்டதால, யோசிக்க நேரமில்லையோ ?

புதன், ஜூன் 10, 2015

தர்மம்

 
என்னை, வேதனைப் படுத்தியவர்கள், உடன் மறந்து விடுகிறார்கள், என் மனம் மட்டும் அந்த வட்டத்தை விட்டு வெளியே வராமல் இரவிலும் தூக்கம் வராமல், மறு நாளும்கூட அதனையே சுற்றிக் கொண்டு இருக்கிறதே..... அப்படியானால் இதற்க்கு காரணம் நான்தானே ! என்னால் மட்டும் மற்றவர்களைப் போல் இருக்க முடிவதில்லையே ஏன் ? எனது சரீரத்தின் எடையைவிட எனது மனதின் கனம் கூடி வருவது என்னாலயே உணர முடிகிறது.

திங்கள், ஜூன் 08, 2015

Fighting Fish.

 
ஒரு முறை பொழுது போகாமல் அபுதாபியில் ஹம்தான் வீதியில் நடந்து போய்க்கொண்டு இருந்தேன் வழியில் வீட்டில் வளர்க்கும் மீன் கடையை காணவும் சரி நண்பரின் வீட்டில் மீன் தொட்டி இருக்கிறதே.. அவரது வீட்டுக்கு ஏதாவது புதிய மாடல் இருந்தால் வாங்கி கொடுப்போமே என உள்ளே நுளைந்தேன் எல்லா வகை மீன்களுமே நண்பர் வீட்டில் இருந்தது போலவே தோன்றிற்று உள்ளே வியாபாரத்துக்கு இருந்தவர்கள் இரண்டு எஜிப்தியர்கள் (EGYPT) அவர்களின் தாய்மொழி அரபு என்றாலும் நான் ஆங்கிலத்தில் பேசினேன். ஒரு இடத்தில் மேலே புகைப்படத்தில் உள்ள சிறிய டப்பாக்களில் ஒரு மீன் மட்டும் போட்டு இருந்தார்கள்
இது மட்டும் ஏன் ? ஒவ்வொரு டப்பாவிலும் ஒவ்வொரு மீனாக இருக்கு ? ஒன்றாக தொட்டியில் போடக்கூடாதா ?
இது பைட்டிங் ஃபிஷ் சிங்கிளாகத்தான் போடனும், டஃபுல்ஸ் போட்டால் ? பைட் போடும்.
டஃபுல்ஸ் பைட் செய்தால்தானே... உனக்கு ட்ரிபுஃல்ஸ் கிடைக்கும் வியாபாரம் பெருகும், இப்படி பிரித்து வைப்பது நீ செய்யும் பாவம் இல்லையா ?
? ? ?
என்னை ஒரு மா3யாக மேலிருந்து கீழாக பார்த்தார்கள்... ஒன்றும் சொல்லவில்லை ஒரு தொட்டியில் ஒரேயொரு மீன் மட்டும் நீந்திக்கொண்டு இருந்தது நான் கேட்டேன்.
இது என்ன ? புதுசா இருக்கு.
இது அரவாண் இது ராசிக்காக வளர்ப்பாங்க, இது இருந்தால் இருக்குமிடத்தில் செல்வம் கொழிக்கும்.
அப்படியா ? அப்ப, ஏன் ? விற்கிறே....
? ? ?
நான் அப்படியே... பார்த்துக்கொண்டே வந்தேன் ஒரு தொட்டியில் குட்டி குட்டியாக ஆமைகள் இருந்தன... நான் கேட்டேன்.
வியாபாரம் எப்படி ? போகுது.
சுமார்தான்.
இப்படி ஆமையை விற்றால் ? வியாபாரம் எப்படி ? சூடு புடிக்கும் முதலில் இதையெல்லாம் நிறுத்து.
ஏன் ?
ஆமை புகுந்த இடம் விளங்காது அதனால்தான்.
யாரு ? சொன்னா... ?
எங்க நாட்டில் இப்படி பெரியவர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அது உங்கள் நாட்டுக்கு எங்க நாட்டுக்கு அப்படியில்லை, இந்த ஆமைதான் இப்பக் கொஞ்சம் வியாபாரம் ஓடுது...
இல்லை ஆமை விற்கிறதை நிறுத்தினால் ? உனக்கு நல்லா வியாபாரம் நடக்கும்.
இப்ப நீ எதற்க்கு ? வந்தே...
மீன் வாங்க..
கதவு திறந்துதான் இருக்கு இடத்தை காலி பண்ணு...
ஹும் நல்லதுக்கு காலம் இல்லை இதற்க்கு மேல் நின்றால் பாரதிராஜாவின் முதல் மரியாதை கிடைக்காது என வெளியேறும்போது... மற்றவன் இவணிடம் சொல்லிக்கொண்டு இருந்தான் அரபு மொழியில்...
இவணை கண்டவுடன் நினைச்சேன் மீன் வாங்குறவனா இல்லை ஆளும், மீசையும்.
வெளியில் வந்த நான் நினைத்துக்கொண்டேன் நல்லவேளை கோட்-ஸூட் போட்டு வந்து இங்கிலீஷுல கேட்டதால மரியாதையா, பதில் சொன்னான் வழக்கம்போல கருப்பு டி - சர்ட் போட்டு வந்து அரபு பேசியிருந்தால் கழுத்தைப்பிடிச்சு வெளியே தள்ளியிருப்பான்.
ஆமா, ஆமை புகுந்த இடம் விளங்காது 80 உண்மையா ? காரணம் அரபிக்காரன் வீட்டில் பெரும்பாலும் ஆமை வளர்க்கின்றான், எல்லா அளவு ஆமைகளும் வளர்க்கிறான், ஆமையை பராமரிக்க வேலைக்கு ஆள் வைத்திருக்கிறான் அவன் மட்டும் செல்வந்தனாக இருக்கிறானே... எப்படி ? நம்மூருல மட்டும் ஆமை புகுந்த வீடும், ஆமீனா புகுந்த வீடும் விளங்காது என்கிறார்கள், அப்படியானால் ? ஆமீனா வேலை பார்ப்பவர் அவரது வீட்டில் நுளையும்போது அவரது மனைவி ஒன்றும் சொல்ல மாட்டாரா ? இது எனக்கு குழப்பமாகவே இருக்கிறது, மேலும் ஆமீனா என்ற பெயரும் வைக்கிறார்களே, இதுவும் எனக்கு குழப்பமாகவே இருக்கு யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்.
ஆமா, அரபு மொழியில் ஆமைக்கு பெயர் என்ன ? தெரிந்து கொள்வோமா ?
 ’’ஸுல்ஹஃபாஹ்’’ ஆமை.سلحــفاه
அப்படியென்றால் ? ‘’ஆம’’ என்று அரேபியர்கள் சொல்கிறார்களே இதன் அர்த்தம் என்ன ?
 ’’ஆம’’ குருடன். أعــــمى
இன்றைக்கு அரபி படிச்சது போதுமடி பொன்னுத்தாயி.

காணொளி – 1
காணொளி - 2