தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 08, 2016

தேளெறும்பு


சிலர் தேள் கொட்டினாலும் எறும்பு கடித்தது போல் இருந்து விடுவார்கள் சிலர் எறும்பு கடித்தால்கூட தேள் கொட்டியது போல் துடித்து விடுவார்கள் இதற்க்கு காரணம் உடல் பலத்தைவிட மனதைரியமே இந்த மனப்பக்குவம் எங்கிருந்து வருகிறது ? புலிக்கு பிறந்தது பூனையாகுமா ? என்கிறார்களே ! அப்படியானால் இது பரம்பரை குணமா ? அல்லது வாழ்க்கையில் அவன் படாதபாடா ? என்கிறார்களே ! அதனால் வாழும் சூழ்நிலையிலிருந்து படித்துக் கொண்டதா ? சிலர் வீட்டில் மரணமே நிகழ்தாலும் கல்லாய் இருந்து விடுவார்கள் சிலர் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் கல்லாய் நின்று விடுவார்கள் இதில் தேளை எறும்பாய் நினைப்பது சரியா ? இல்லை எறும்பை தேளாய் நினைப்பது முறையா ? 
எனது நண்பர் சாம்பசிவம் அவர் பழங்கஞ்சி குடித்து வாழ்ந்து கொண்டிருப்பவர் இன்று வரை எறும்பை தேளாகவே பாவிக்கிறார் அவரது மகனோ பிட்சா போன்ற சாண்ட்விச்களை உண்பவன் அவன் தேளை எறும்பாகவே நினைத்து நசுக்குகிறான் இந்த இடத்தில் உடல் பலம் தோற்று மனபலம் வெற்றி அடைகிறது
 மனம் கவலைபட்டு என்ன ஆகப்போகிறது ? உடல் தளர்ந்து நோயாளியாகிறான் இதுவே மேலும் கவலையை கொடுக்கிறது ஆக மனதுக்கு கவலை என்ற விதையை விதைப்பது உடல் வழியாக மனதுக்கு மேலும் கவலையென்ற கிளையை தொடுக்கிறது கடைசியில் விடையென்ன ? தூர் (மனம்) சீக்கிரமே பழுதடைந்து மரமே (மனிதன்) சாய்கிற(ன்)து மனிதன் கவலை கொள்வதால் நோயாளியாகி ஏழையாகிறான் அதன்மூலம் மருத்துவன் செல்வந்தனாகிறான்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொன்னதைப்போல.... (1962)  
 ''நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை''
என்பது எத்தனை சத்தியமான வார்த்தை ஆகவே கவிஞர் சவீதா அவர்கள் சொன்னதைப்போல.... (1989)  
’’ நேற்று என்பது நம்ம நினைவில் உள்ளது
நாளை என்பது காணும் கனவில் உள்ளது
இன்று நம்ம கையில் உண்டு
இப்ப வந்து கட்டிக்கொள்ளம்மா’’
ஆகவே இன்று வாழ்வதே பாக்கியம் எனநினைத்து கவலைகளை களைந்து  சந்தோஷமாக வாழ முயற்சிப்போம் கஞ்சி குடித்தாலும் சரி பிட்சா சாப்பிட்டாலும் சரி.  

சாம்பசிவம்-
அப்பத்தா செத்தா கல்லுப்போல இருக்கலாம் பேரன் செத்துட்டா கல்லுப்போல நிற்கிறாப்பலதான் வரும். 

புதன், ஜனவரி 06, 2016

கோவை to சென்னை 1 ½ மணி நேரம்

புகைப்படத்தின் மையத்தில் எலியால் சொடுக்கி படித்து பார்க்கவும்.

நட்பூக்களே... மேலேயுள்ள புகைப்படத்தை பார்த்தீர்களா ? வாட்ஸ்-அப்பில் எனக்கு வந்தது கோவை பதிப்பின் நாளிதழில் வந்த செய்தி அதாவது கோவையிலிருந்து சென்னை சுமார் 520 கி.மீ சாதாரணமாக 8 மணி நேர பயணம் ஆகும் தற்போது கோவையிலிருந்து சென்னைக்கு 1 ½ மணி நேரத்தில் செல்லும் அதி நவீன வசதி பேரூந்து இதைப்படித்து மக்கள் பலரும் சந்தோஷப்பட்டும், பெருமையாகவும் பேசுகின்றார்கள் இதன் பிண்ணனி உண்மைகளை நாம் சிந்தித்து பார்ப்பதில்லையா ? அல்லது நமது அறிவுக்கு ஏதும் புலப்பட வில்லையா ?
ஆம் இவர்கள் பேரூந்துடன் விமானத்துக்கு இணையாக பறக்கின்றார்களா ? கோவையிலிருந்து சென்னைக்கு விமானத்தில் போவதற்க்கு 0.40 நிமிடம் ஆகின்றது நான் ஒருமுறை போயிருக்கின்றேன் இவர்கள் நம்மை வாழவே விடமாட்டார்களா ? வேகமாக போனால் நேரம் மிச்சமாகிறது, அவசர காரியங்களுக்கு உதவியாகத்தானே இருக்கின்றது என்று சொல்பவர்களுக்கு இந்த பேரூந்து சாலையில்தானே போகின்றது அல்லது வான வீதியிலா ? இது பிறநாடுகளுக்கு சாத்தியமே நமது நாட்டுக்கு சாத்தியப்படுமா ? என்பதே எமது கேள்வி கோவையிலிருந்து சென்னைக்கு அதி நவீன சாலை அமைக்கப்படுகிறது என்று சொல்லட்டும் பெருமைப்படுவோம், சந்தோஷப்படுவோம் கோவை காந்திபுரம் பேரூந்து நிலையத்திலிருந்து கோவை நகரைக்கடந்து சென்னை சாலையை பிடிக்கவே ½ மணிநேரம் வேண்டுமே பிறகு சாலையில் செல்லும் ஆடு மாடுகள் சாலையை கடக்கும் பாதசாரிகள் இவர்களின் நிலையென்ன ? நமது நாட்டில் இருக்கும் குண்டும், குழியுமான சாலையில் வேகமாக போவது எப்படி ? இப்படி போவதை அரசு அனுமதிக்கின்றதா ? இதற்கு அரசு உடனடி தீர்வு காணவேண்டும் இல்லையேல் இன்னும் நிறைய கோர விபத்துக்களை நாம் காண நேரிடும் இவ்வளவு வேகமாக போகின்ற மனிதன் எதை சாதிக்க ஓடுகின்றான் எல்லாமே ஒருசாண் வயிற்றுப்பசிக்காகத்தானே விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு தேவையே அது மனித உயிர்களுக்கு கொடுக்கின்றதே வீழ்ச்சி.
இந்த (U.A.E) நாட்டில் இருக்கும் சாலைகளில் சீரூந்தின் கடைசி வேக எல்லையான 280 கி.மீ. வேகத்தில்கூட போகமுடியும் காரணம் பாதுகாப்பான சாலை அப்படிப்பட்ட இங்குகூட 140 கி.மீ. மேல் போக அனுமதி இல்லை மீறிப்போனால் ராடாரின் புகைப்படங்களுக்கு இரையாக வேண்டியதிருக்கும் அபராதம் கட்ட வேண்டியதிருக்கும் இங்கு அரேபியர்களுக்கு திறமை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் ? சீரூந்து ஓட்டுவதில் பெரும்பாலும் தைரியசாலிகளே அதற்க்கு முதல் காரணம் இவர்களுக்கு மரணபயம் கிடையாது குடும்ப உருப்பினரே இறந்தாலும் மறுநாளே மறந்து விடக்கூடய இதயம் படைத்தவர்கள் ராடாரைப்பற்றிய கவலையும் கிடையாது பணத்தை தூக்கி வீசி விட்டு போய் விடுவார்கள் நானும்கூட அரேபியர்களைவிட வேகமாக சீரூந்து ஓட்டும் திறன் உள்ள தைரியசாலிதான் ஆனால் ? ராடாரைக் கண்டால் பயந்து விடும் கோழை.
ஆம் திங்காமல் உங்காமல் தண்டமாக பணத்தை இழப்பதில் நான் எப்பொழுதுமே உடன்பாடு இல்லாதவன் அந்தப் பணத்தில் ஏழை எளியவர்களுக்கு உணவுக்கு கொடுக்கலாமே என்பதே எமது கருத்து இதை நடைமுறைப்படுத்தியும் வருகிறேன் சமீபத்தில் நமது நண்பர் ‘’தளிர்’’ சுரேஷ் அவர்கள் மறுபக்கம் என்ற சிறுகதை ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் வரும் மகேந்திரன் என்ற காதாபாத்திரம் உடையவர் எனது குணாதிசயத்தோடு ஒன்றி இருப்பவர் போலவே தோன்றியது வாழ்க அந்த வகை நல்ல உள்ளங்கள்.

திங்கள், ஜனவரி 04, 2016

சோலந்தூர், சோஸியர் சோனைமுத்து


உண்மைகள் சொல்பவருக்கு இனிக்கும் கேட்பவருக்கு கசக்கும்.
எனக்கு சோஸியத்தில் அதிகமான நம்பிக்கை இருந்ததில்லை இருப்பினும் ஒருநாள் எனக்கு தெரிந்த பக்கத்து வீட்டு சோஸியர் ஒருவர் எனது கையைப்பார்த்து விட்டு...

01. உனக்குப் பிடித்த பழம் ஒன்று சொல் என்றார் நானும் எனக்கு பிடித்தது பலாப்பழம் என்று சொன்னேன்.
02. பிறகு உனக்குப் பிடித்த காய் ஒன்று சொல் என்றார் நானும் எனக்கு பிடித்தது பாகற்காய் என்று சொன்னேன்.
03. பிறகு உனக்குப் பிடித்த நிறம் ஒன்று சொல் என்றார் நானும் எனக்கு பிடித்தது கருப்பு என்று சொன்னேன்.

பிறகு அவர் என்னை தீர்க்கமான பார்வை ஒன்றை பார்த்து விட்டு நாலும் மூணும் ஏழு ஏழுல ரெண்டு போனால் அஞ்சு என கணக்கு போட்டு விட்டு அமைதியாக சொன்னார் பலாப்பழம் உள்ளே சுவையாக இருக்கும் ஆனால் வெளியே கரடு முரடாக தெரியும் இதே போலத்தான் உன்னை மேலோட்டமாக பார்ப்பவர்கள் உன்னை தவறாகவே நினைப்பார்கள் உன்னை நல்லவனாக நினைப்பவர்கள் மிகமிக குறைவு என்றார் உண்மைதானே என்னை நல்லவனாக நினைப்பவர் யாருமே இல்லையே ! அடுத்து பாகற்காய் நான் சிறு வயது முதலே விரும்புவது பாகற்காயைப்போல உனது வாழ்க்கை கடைசிவரை கசப்பாகவே இருக்கும் என்றார் முதலில் ஆச்சர்யமாக கேட்ட நான் பாகற்காயைப்பற்றி சொன்னதும் மனதில் சிறிய கனம் ஒன்று தொற்றிக் கொள்வது போன்ற உணர்வு பிறகு நிறம் உனக்கு பிடித்த கருப்புபோல கடைசி வரை உன் வாழ்க்கை இருட்டாகவே இருக்கும் என்றார் என் தலையில் ஒரு மினி லாரி களி மண்ணை கொட்டியது போல இருந்தது எனக்கு கண் முழித்துப் பார்க்க முடியவில்லை அங்கும் ஒரே இருட்டாக கருப்பாக இருந்தது காரணம் களி மண்ணும் கருப்பு என்பதாலோ ? அன்று முழுவதும் இதைப்பற்றிய சிந்தனையின் பலன் ஆறு விசயங்கள் எழுத ''கரு'' உருவானது இவருக்கு என் வாழ்க்கையை பற்றி தெரிந்ததால்தான் இப்படிச் சொன்னாரா ? கேட்ட விசயங்களை நான் தானே தேர்வு செய்தேன் ஒருவேளை வேறு பழம், காய், நிறம் சொல்லி இருந்தால் ? சோஸியம் உண்மைதானோ ? இது உண்மை என்றால் ?

என் வாழ்க்கை கடைசி வரை இப்படித்தானா ?

CHIVAS REGAL சிவசம்போ- (தனக்குள்)
இது கடைசி காலத்துலயா தோனுச்சு ?
சாம்பசிவம்-
நண்பா கசப்பான பாகற்காயில் பலனும் உண்டு, இனிப்பான அமிர்தத்தில் கேடும் உண்டு Take it Easy.

 காணொளி

சனி, ஜனவரி 02, 2016

தூ


வணக்கம் சார் எப்பவுமே உங்கள் கண்ணு சிவப்பாக இருக்கிறதே ?
இரவு பூராம் தூக்கமே இல்லை அதுதான் காரணம்.

எல்லா இரவுகளுமா ?
இதைப்பற்றி மறுபடியும் கேட்டால் தூக்கி அடிச்சுருவேன்.

சாரி சார் இந்த முறை தேர்தலில் எந்த தொகுதியில் நிற்கப்போறீங்க ?
தூத்துக்குடி.

தங்களது தேர்தல் சின்னம் மாறுவதாக செய்தி எந்த சின்னம் ?
தூக்குச்சட்டி.

தாங்கள் தொகுதியில் வெற்றி பெற்றால் தொகுதிக்கு சிறப்பான திட்டங்கள் இருக்கின்றதா ?
சுமை தூக்குவோரின் வாழ்வு பலப்படுத்தப்படும்.

சார், பலப்படுத்தப்படுமா ? வளப்படுத்தப்படுமா ?
காலையிலேயே.. தூங்குறியா ?

இந்த தேர்தல் முடிவுகள் வெளியானால் எதிர் கட்சிகளின் நிலைப்பாடு ?
தூக்குப்போட்டு சாவார்கள்.

உங்கள் கட்சித் தொண்டர்களுக்கு தேர்தல் அறிவுரைகள்... ?
வெற்றி பெரும்வரை தூங்காதே தம்பி தூங்காதே.

உங்கள் கட்சி வெற்றி பெற்றால், தொண்டர்களுக்கு பரிசு ?
அனைவருக்கும் வாழ்நாள்வரை தூக்க மாத்திரைகள் இலவசம்.

ஆட்சிக்கு வந்தால் தங்களின் முதல் பணி ?
பழைய ஊழல்களின் கோப்புகளை தூசி தட்டி கிளறுவேன்.

டெல்லிக்கும், சென்னைக்கும் இடைவெளி எப்படி இருக்கும் ?
தற்காலத்தில் இருக்கும் தூரத்தின் அளவுகள் உடனடியாக குறைக்கப்படும்.

முந்தைய ஆட்சியில் விமானங்கள் பறக்கும் வழியமைப்பில் ஊழல் நடந்ததே... குற்றவாளிகள் பிடிபட்டால் ?
உடனடியாக தூக்கு தண்டனை வழங்கப்படும்.

மற்ற கட்சித்தலைவர்கள் பஸ், ஆட்டோ, மாட்டு வண்டி, டிராக்டர், ரிக்ஷாக்களில் போகின்றார்கள் நீங்கள் மட்டும் காரிலேயே செல்கின்றீர்களே ?
மக்களின் பார்வைக்கு மட்டுமே கார் தெரியும் ஆனால் நான் காரிலும் இருப்பேன், தூரிலும் இருப்பேன்.

தங்களின் முன்னாள் மனைவி திரையுலகில் இருப்பதால் திரையுலகினருக்கு சலுகைகள் உண்டா ?
கண்டிப்பாக ‘’தூ’’ என்ற தூய்மையான எழுத்தில் பெயர் வைக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு தமிழ்நாடு அரசின் வரி விலக்கு அளிக்கப்படும்.

தங்களது ஆட்சியில் முதியோர்களுக்கு சலுகைகள் உண்டா ?
முதியவர்களுக்கு மரணகாலம் வரை மூக்குப் பொடித்தூள், தாய்மார்களுக்கு டீத்தூள் இலவசம்.

தேசிய பறவையை மாற்ற வேண்டும் என்ற செய்தி உண்மையா ?
ஆம் தூக்கணாங் குருவியை தேசிய பறவையாக மாற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

தங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஊழல் செய்தால் ?
மறு நொடியே கட்சியை விட்டே தூக்கி அடிப்பேன்.

சட்டமன்றத்தில் மாற்றம் உண்டா ?
உடனடியாக அனைத்து நாற்காலிகளையும் தூக்கி விட்டு ஷோஃபா போடச்சொல்வேன்.

உள்ளே ஷோஃபா போட்டால் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏஸியின் சுகத்தில் உறங்கி விட்டால் ?
ஷோஃபாவோடு தூக்கி வெளியில் எறிவேன்.

தமிழில் தங்களுக்கு பிடித்தமான வார்த்தை ?
தூ

சார்.... எங்கள் மேல் எச்சில்... ?
தூ மட்டுமே பிடிக்கும் என்று சொன்னேன்.

அப்படியா சரி ரத்தினச் சுருக்கமாக சொல்லுங்கள் தமிழகத்தில் தங்களின் ஆட்சி எப்படியிருக்கும் ?
தூய்மையான ஆட்சி நடக்கும்.

நல்ல முறையில் எங்களுக்கு பதில் சொன்ன தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
எங்கள் தூங்கு மூஞ்சி கழகம் சார்பாக நன்றி வணக்கம்.

தூ என்ற காணொளியை தேடிச்சொன்ன வில்லங்கத்தாருக்கு நன்றி.

சிவாதாமஸ்அலி-
நிருபர் விபரமானவர்தான் ஒரு இடத்தில் கூட (து-தூ) இந்த இரண்டு எழுத்தும் இல்லாமல் கேள்வி கேட்டு இருக்கின்றாரே...

சாம்பசிவம்-
துப்பத்தான் வர்றானு தூக்கி அடிச்சிட்டா... அதனாலதான்.

Chivas Regal சிவசம்போ-
கேள்வி தூள்மா.

வெள்ளி, ஜனவரி 01, 2016

புது வருடமே வருக...

நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும்  காலண்டர் பரிசு.

புதிய வருடமே வருக
புத்துணர்ச்சியைத் தருக
புது சிந்தனையே வருக
புதுமையைத் தருக
கவிஞர்களே வருக
கனி மதுரம் தருக
கற்பனையே வருக
கவிதையை தருக
வலை நட்புகளே வருக
வளர் கருத்துகளை தருக
வருடந்தோரும் வருக
வளர்ச்சியைத் தருக

என்னைத் தொடரும் நண்பர்களுக்கும், நண்பிகளுக்கும், தொட்டும், தொடாமலும், பட்டும், படாமலும், கண்டும் காணாமலும் தொடரும் அனைவருக்கும் இவ்வருடம் அனைத்து நலன்களும் பெற்று சீறுடனும், சிறப்புடனும் வாழ இந்த பரந்த பூமியின் சிறந்த மேலாளரிடம் எமது பிரார்த்தனைகள்.


காணொளி
ஃபுர்ஜ் கலீஃபா - துபாய்
 அனைவருக்கும் எமது 2016 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
 அன்புடன்
- தேவகோட்டை கில்ர்ஜி அபுதாபி -