வராண்டாவின் சோபாவில் உட்கார்ந்து ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான் இளவயது தொழில் அதிபர் அமர்நாத் அருகில் வந்த மனைவி வர்த்தனா தன்னை கணவன் கண்டு கொள்ளாமல் ஏதோ சிந்தனையில் இருக்கவும் தோளில் கை வைத்து...
ஆங்.. என்ன சொல்லு வர்த்தனா ?
ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க ?
இல்லை... ஒண்ணுமில்லையே...
எனக்குத் தெரியாதா... சொல்லுங்க.... கம்பெனியில் எதும் பிரச்சனையா ?
இல்லை, அது வந்து.... வந்து..
இப்ப சொல்றீங்களா.... இல்லையா ?
ம்.............. வர்த்தனா நான் ஒண்ணு கேட்டால் கோவிக்க மாட்டியே ?
உனக்கு வாழ்வாதாரத்துக்கு வேண்டிய வசதிகளை நமக்கு கல்யாணமாகி இந்த 15 வருஷத்துலே சேர்த்து வச்சுட்டேன், பாதுகாப்புக்கு இரண்டு மகன்கள்...
இப்ப எதுக்கு பீடிகை போடுறீங்க ?
அது... வந்து எனக்கு ஏதாவது ஆ....யிட்டா....
ஏதாவதுனா... புரியலையே....
அது.. வந்து நா.. ன் செத்துப் போயிட்டா ?
இப்போ, பிரச்சனையை சொல்லுங்க எதுக்காக இப்படி சமாளிக்கிறீங்க.. அசடு வழியுது துடைச்சிட்டு சொல்லுங்க ? உங்களுக்கு பொய் சொல்லத் தெரியாது.
இல்லை வர்த்தனா சத்தியமா இதத்தான் கேட்கணும்னு நினைச்சேன்.
இப்போ இது அப்படியென்ன, முக்கியமாபோச்சு சோலந்தூர்காரரிடம் சோசியம் பார்த்தீங்களா... நீங்க நம்ம மாட்டீங்களே...
இல்லை தொழில் எதிரிங்க நிறைய வளர்ந்துட்டாங்க... எனக்கு ஏதாவது ஆகிடுமோனு...
உயிர்ப்பயம் இல்லை, உன்னை நினைச்சுத்தான்...
நீங்க நியாயமாத்தானே உழைக்கிறீங்க அப்புறம் எதிரிங்க எப்படி ?
அதான் எனக்கும் புரியலை வர்த்தனா.
கம்பெனி வளர்றதுக்கும், நொடிச்சுப் போறதுக்கும், அடிப்படை காரணவாதிகள் தொழிலாளர்கள்தான் இப்போ நமக்கு வேண்டிய அளவு வசதி வாய்ப்புகள் சொத்து இருக்கு இனிமேல் வர்ற லாபத்தை குறைச்சு எடுக்கலாம் மிகுதியை தொழிலாளர்களுக்கே கொடுக்கலாம் அது நம்மை என்றைக்கும் காக்கும்.
அப்ப தொழிலாளர்களுக்கு சம்பளத்தை கூடுதலாக கொடுக்கச் சொல்றியா அதனால் அசோஷியேசன் மூலமாக கம்பெனி முதலாளிகளை பகைக்க வேண்டியது வரும்.
இது எனக்கு தெரியாதா நாம் சம்பளத்தை நேரடியாக கூட்டினால்தானே பிரச்சனை தீபாவளி போனஸை தாராளமாக கொடுக்கலாம் வருடத்துக்கு ஒரு முறை குறிப்பிட்ட பணத்தை ஒதுக்கி நம்ம குழந்தைகள் பிறந்த நாட்களுக்கு குழந்தைகளை வைத்தே தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாடப்புத்தம், சைக்கிள், கம்ப்யூட்டர் இப்படிப் பரிசுப்பொருள் கொடுக்கலாம் கம்பெனி ஆண்டு விழாவுக்கு பரிசு என்று சொல்லி பணமுடிப்பு அல்லது தங்க காசு இப்படி கொடுத்தால் நமக்கு வரும் எதிரிகளை தொழிலாளர்களே அடையாளம் கண்டு அழிச்சிட வாய்ப்பு இருக்கு, எந்த தொழிலாளரும் கம்பெனிக்கு துரோகம் செய்ய நினைக்க மாட்டாங்க மனசாட்சி சுடும்.
நல்லது வர்த்தனா இனிமேல் இப்படியே செய்வோம்.
நம்ம பசங்களும் மூத்தவன் அடிக்கடி விஞ்ஞானியாவேன்னு சொல்றான், இளையவன் பைலட்டாகணும்னு சொல்றான் அவங்களோட இஷ்டத்துக்கு படிப்பை விட்டால்தான் முழுமூச்சாக படிப்பாங்கே, நம்ம இஷ்டத்துக்கு டாக்டராகணும், இஞ்சினியராகணும்னு நாம் ஆசையை வளர்க்க கூடாது அது ரொம்ப முக்கியம் நாளைக்கு கம்பெனியை நிர்வகிப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இல்லை நமக்குப்பிறகு கம்பெனி தொழிலாளர்களுக்கே போகணும் எனக்கும் இதுதான் ஆசை நாம இவ்வளவு வசதியாக வாழ்வதற்கு அவர்கள்தான் காரணம் அதை நாம கடைசிவரை மறக்க கூடாது இதுக்கு மேல் நமக்கு பணம் வேண்டாங்க அது நமது உயிர்களுக்குத்தான் ஆபத்து அம்பானி குடும்பத்தைப் பார்த்தீங்களா... கோயிலுக்கு சாமி கும்பிடப் போனால்கூட அவங்களைச்சுற்றி 25 செக்யூரிட்டி மிஷின் கன்னோடு போறாங்க.. பிறகு நிம்மதியாக சாமி கும்பிட முடியுமா ? அவுங்களிடம் இல்லாத பணமா... அவங்க குடும்பத்துக்குள்ளே சொத்து பிரிக்க வேண்டிய அவசியமென்ன கூட்டுக் குடும்பம் எவ்வளவு பாதுகாப்பான விசயம் என்பதை தெரிய விடாமல் கண்ணை மறைச்சது இந்த பணம்தானே உயிருக்கு வினையான இந்தப்பணம் நமக்கு வேண்டாங்க, வாழுறதுக்கு தேவையான பணம் மட்டும் போதும் அதுவும் இப்பவே தாராளமாக இருக்கு.
நல்லது வர்த்தனா நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் வெளி உலகத்துக்குத்தான் நான் முதலாளி மற்றபடி உன்னோட ஆலோசனையின் படிதான் கம்பெனி இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சிருக்குனு எனக்கு மட்டும்தானே தெரியும் நமக்கு கல்யாணம் ஆன புதுசுல கோயிலுக்குப் போயி நமது கஷ்டங்களை சொல்லி அர்ச்சனை பண்ணிட்டு அந்த தேங்காய்களை படிக்கட்டுகள்ல உட்கார்ந்து உடைச்சுத் தின்போமே அந்த சுகம் மறுபடியும் கிடைக்குமா ? சமூகத்துக்கு பயந்து அந்த இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியலையே உண்மைதான் இப்பவே தூக்கம் குறைஞ்சு போச்சு இதுக்கு மேலேயும் பணம் சேர்த்தால் உயிருக்குத்தான் பிரச்சனை என்னமோ தெரியலை வர்த்தனா உன்னிடம் ஆலோசனை கேட்டால்தான் மனம் ரிலீஃபாகுது இந்த வருடம் முதல் இதை அமுழுக்கு கொண்டு வருவோம்.
நமக்கு இந்த தமிழ் நாட்டுல யாரு இருக்கா... வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் தாலி கட்டிக்கொண்டு ஓடி வந்த நம்மையும் வாழ வைக்குது உங்களோட கடுமையான உழைப்பால இந்த நிலைக்கு வந்துருக்கோம் இனிமேல் திரும்பி நாம பீகாருக்கு போக முடியுமா ஜாதி வெறி பிடிச்ச நம்ம அப்பாமாரு, சொந்த பந்தங்கள் கண்டால் நம்ம குழந்தைகளைக்கூட உயிரோட விடமாட்டாங்க நாம கடைசிவரை இந்த தமிழ் நாட்டுலயே வாழ்ந்துருவோம் இனிவரும் காலங்கள் எல்லோருமே காதல் செய்துதான் கல்யாணம் செய்வாங்க போல நாளைக்கு நம்ம குழந்தைங்க காதலித்தாலும் நியாயமான நல்லவங்களை காதலிச்சா ஜாதி மதம் பார்க்காமல் சந்தோஷமாக கல்யாணம் செய்து வைப்போம் பின்னாடி இவங்க குழந்தைகள் அடுத்தடுத்த தலைமுறைகள்ல தானாகவே தமிழன் தமிழச்சியாக மாறிடும் அவங்க தேர்தலில் நின்று முதல்வராக கூட வரலாம் யாருக்கு தெரியும்... நம்மளோட கடமையும் நல்ல விதமா முடிஞ்சிரும்.
ஆமா வர்த்தனா உண்மைதான் சரி நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே...
அதைப் பின்னாலே பார்ப்போம்.
என்னடீ... சாதாரணமா சொல்லிட்டே... ?
இப்பச் சொல்லித்தான் ஆகணுமா ?
சொன்னால் தெரிஞ்சுக்கிருவேன்.
ம்.... அதாவது என்னவொண்ணு குழி கொஞ்சம் அகலமாக வெட்ட வேண்டியது வரும்.
பேக்கு... புரியலை நீங்க இல்லைனா நான் உயிரோட இருப்பேன்னு நினைக்கிறீங்களா ?
அவளின் விழிகளில் நீர் துளிர்ப்பது போல் இருந்தது அமர்நாத் அவளை சட்டென இறுக அணைத்துக் கொண்டான் அந்த அணைப்பில் ஒரு அசாத்தியமான அழுத்தம் இருந்தது.
குறிப்பு - மேலே இருவரும் பீகாரி மொழியில் பேசியதை ஒட்டுக் கேட்ட நான் அதை தமிழாக்கம் செய்து எழுதி இருக்கிறேன் ஹி ஹி ஹி – கில்லர்ஜி
தமிழ் நாட்டுக்கு பொழைக்க வந்தவனெல்லாம் முதலாளிதான், உழைக்கிற தொழிலாளி எல்லாம் தமிழன்தான்.
இன்னொண்ணு சொல்லலாமே தமிழ் நாட்டுல பிறந்தவனெல்லாம் ஓட்டுப் போடுறவன், பொழைக்க வந்தவனெல்லாம் ஓட்டு வாங்குறவன்.
இன்னொண்ணும் சொல்லலாம் சொன்னால் என்னை குடிகாரப்பய உழருறானு சொல்லுவாங்கே இலவசம்னு பேரு வச்சு லஞ்சம் கொடுக்கிறவன் பொழைக்க வந்தவன், அதை கடமைனு வாங்கி கிட்டு ஓட்டுப் போடுறவன் தமிழன்.
காணொளி