தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, பிப்ரவரி 13, 2015

விபச்சாரன்


சமூகத்தில் ஒரு நல்ல சிந்தனையுள்ள மனிதன், ஒரு நல்ல குணமுள்ள பெண்ணை மணக்க நினைக்கிறான், அவளிள் தாயார் ஒரு காலத்தில் இந்த சமூகத்தின் பார்வையில், தவறானவள் அவளின் சூழ்நிலை கணவனால் மூன்று பெண் குழந்தைகளோடு, கை விடப்பட்டவள், மரணிக்கவும் முடியாமல் தன் குழந்தைகளுக்காக வாழ நினைத்தவள் எத்தனை போராடியும் இந்த சமூகம் அவளை விடவில்லை வேறு வழியின்றி குழந்தைகளின் உணவுக்காக தன்னையே உணவாக்கினாள் சில விபச்சாரன்களுக்கு 

இன்று, அதே விபச்சாரன்கள்கூட அவளின் மகளை மணக்க நினைக்கும், ஆடவனை முட்டாள் என சொல்வது ஏன் ? மகள் நல்லவள்தானே ! உன்னுடைய கருத்து அவள் வீட்டில் பெண் எடுப்பது தவறாக இருக்கலாம், இருக்கட்டும் அதற்காக, மற்றவன் மனதை காயப்படுத்துவது ஏன் ? அப்படியானால் அவளைப் போலவே அவள் மக்களும் உன்னிடம் தன்னை இழக்க வேண்டும் அப்படித்தானே ! 

சரி, இவர்களெல்லாம் சிறிய வட்டத்திற்குள் வாழ்பவர்கள், வெளியுலகம் அறியப்படாதவர்கள், அதேநேரம் உலகமே அறியப்படும் நடிகைகளை மணக்கிறார்களே ! அவர்களை நீ ஒன்றுமே சொல்வதில்லையே ஏன் மானிடா ? அவர்களின் பணபலம் உன்னை பாடாய்படுத்தி விடும் என்ற பயமா ?

அறிவற்ற மனிதா, இங்காவது தாய்தான் கடந்த காலத்தில் வறுமைக்காக விபச்சாரி, அங்கு மகளே நிகழ்காலத்தில் வளமைக்காக விபச்சாரி, 

விபச்சாரியை மணப்பவனை விட, விபச்சாரி மகளை மணப்பவன் உயந்தவன் இல்லையா

மனிதன் கஷ்டமான வாழ்வில், தவிர்க்க வேண்டியது வளமையா ? வறுமையா

போதாக்குறைக்கு வளமைக்கு விபச்சாரம் செய்தவளை, செய்பவளை வாழ்க ! வாழ்க ! வெனகோஷம்வேறு போடுகிறாய் வருங்கால முதல்வரே ! எனவும் கோஷம் போடுகிறாய், இதெல்லாம் போக கோயில்கூட கட்டுகிறாய் உன்னைப் படைத்தவன் இதை எந்த வகையில் ஏற்றுக் கொள்வான் ? அதற்கு, தன்னை படைத்தவனைப் பார்த்து ''கடவுளே இல்லை'' என சொல்லுபவன் உன்னைவிட மேலானவன் மட்டுமல்ல, மரணபயமில்லா தைரியசாலியும்கூட...
 
பின்குறிப்பு - நான் தி.க.காரன், அல்ல !

புதன், பிப்ரவரி 11, 2015

Germany Part - 3

 
You Want See Big size ? Just Click One Time Photo Inside.


ஜெர்மனி, நாட்டைக் குறித்து அதன் அபார வளர்ச்சி, கலாச்சாரம், கண்டு பிடிப்பாளர்களின் எண்ணிக்கை, பொருளாதாரம், அழிந்து வரும் மக்கள் தொகை, அதன் காரணம், பெருகி வரும் ஒரு குறிப்பிட்ட நாட்டு மக்கள், அடுத்த இருபது ஆண்டுகளில் அதன் பாதிப்பு, இதனைக் குறித்து எனது பார்வையில், ஜெர்மனியில், ஜெயாவுடன் ஜெமினி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுத தீர்மானித்து உள்ளேன்.



  அரண்மனை பெயர் மறந்து விட்டேன்.

  வித்தியாசமான தூண்கள் வெளிப்புறந்திலிருந்து எடுத்தது.


பூமிக்கு அடியில்.



பெர்லினில், செக் பாய்ண்ட். அமெரிக்க ஆர்மி.
 
  பெர்லின் சுவர்.


  முழு மரத்தில்.

  பெர்லின் சுவர்.


  என்னைப்போன்ற பாமரர்களுக்கு வழிகாட்டி.

  பூசணிக்காய்கள்தான்.



கல்லிலே கலை வண்ணம்.


  ஆயிரக்கணக்கான தையல் இயந்திரங்கள் விற்பனைக்கு அல்ல.

  காண்டாமிருகம்.

  You Want See Big size ? Just Click One Time Photo Inside.

  கீழே ஆறு ஓடுகிறது.


நண்பர்களே.... இதில் தொங்கி கொண்டு இருப்பதெல்லாம் நமது வலைச்சித்தர் அவர்களின் திண்டுக்கல் பூட்டுதான்... இதைல்லாம்  இதில் பூட்டி வைத்தது யார் தெரியுமா

தெய்வீக காதலர்கள் ஆம் காதலர்கள் தங்களின் காதல் இறுக்கமானதாக இருக்க வேண்டுமென நினைத்து இந்த இரும்பு கேட்டுகளில் பூட்டி சாவியை, என்ன செய்வார்கள் தெரியுமா ? சாவியை.... சாவியை..... சாவியை... கீழே ஓடிக்கொண்டு இருக்கிறதே.... தாமிரபரணி ஆறு அதில் வீசி விடுவார்கள் இப்படிச் செய்தால் தனது காதல் கை கூடி விடுமாம், நம்மூரு கோயில் மரத்தடியிலே  ஆத்தா மகமாயி எம்மவ வவுத்துல ஒரு புழு பூச்சியைக்கொடு அப்படினு நேர்த்திக்கடன் வச்சு தொட்டிகட்டி தொங்க விடுறதுபோல அப்படியொரு நம்பிக்கை இவங்களை என்ன சொல்றது ? நம்மூருல நித்தியை நம்புறகின்ற கூட்டம் இன்னும் இருக்கே இவங்கெளப்போல அங்கே அவங்கே.

(அடப்பேதியிலே ஓயிருவியலா... ஏண்டா அவ அப்பன், ஆத்தா கிட்டப்போயி பேசுங்களேன்டா, எப்படியிருந்தாலும் அவுங்கதானே நாளைக்கு தாரை தம்பட்டம் முழங்க தாரை வார்க்கணும்) 

சாவியை ஆற்றில் வீசினால் அந்த ஆறு அடிச்சு கன்னியாகுமரி கடலில் கொண்டு போயி சேர்த்துட்டா, இவளும் காலம் பூராம் கன்னியாத்தானேடா இருப்பா, இந்த முட்டாப்பயல்கள் எப்படி விஞ்ஞானத்துல இவ்வளவு வளர்ச்சி அடைஞ்சாங்கே

எனக்கு கூட மனதில் தோன்றியது இப்படியே ஒரு ஓரமா சாக்கு விரிச்சு உட்கார்ந்துக்கிட்டு நம்ம நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி ஊருல இருக்குற பூட்டைப்பூராம் வளைச்சுப்புடிச்சு இங்கே அனுப்புங்க ரெண்டு பேருக்கும் 50/50 எப்பூடி ? அப்படினு கேட்கலாம்னு தோணுச்சு, பூட்டும் சாவியும் ஒன்றாக இருந்தால்தானே சிறப்பு இந்தப்பழக்கம் ஜெர்மனியில் மட்டுமல்ல, ஸ்விட்சர்லாண்டிலும் இருக்கிறது. 

//போங்கடா நீங்களும் உங்க காதலும்// அப்படினு கோபமாக திட்டிப்புட்டு வந்துட்டேன்.



பெர்லின் ஜூவின் முகப்பில்....
நான் வியந்த ஓவியம்.
போன இடத்தில் கொழுந்தியாளுக்கு கல்யாணம்.



  ஜெல்லி வகை மீன்கள்.


  மியூசியம் 6-வது மாடி.
எனது கண்ணில் பட்ட மரத்தூர்.

  நம்மூரு வைக்கோல்தான்.
  பென்ஸ் மியூசியம் வெளிப்புறத்தில்.


  முதல் தட்டச்சு இயந்திரம்.
  புகைப்படக்கருவி.


சரி அடுத்து ஸ்ரீலங்கா போவோமா ?
இதன் தொடர்பான மற்ற பதிவுகளை காணதவர்கள் கீழே ‘’கிளிக்’’கவும்.




 ஒலியோடு, ஒளி காண்பீர்.