தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

புதன், ஜனவரி 17, 2024

ஆண் மோகப்பணி


புஸ்டாக் சுவாமிகள் இவரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது சுற்றியுள்ள பதினெட்டு பட்டிகளுக்கும் இவர்தான் அருள் வாக்கு சொல்வார். வீட்டில் நடக்கும் திருமணம், பூப்புனித நீராட்டு, காதுகுத்து, வீடு வாங்குவது, கிரஹப்பிரவேசம், புண்ணியானம், வளைகாப்பு, ஏன் சுன்னத் கல்யாணம்கூட இவர் சம்மதம் சொன்னால்தான் செய்வார்களாம், இதில் சில நேரங்களில் வளைகாப்பு வேண்டாம் என்று சொன்னாலும், குழந்தை பிறந்த பிறகு வளைகாப்பு நடத்துவார்களாம்.
 
அதே நேரம் இவர் நமது கேள்விகளுக்கு எடக்கு மடக்காக, ஏணி மடைக்கு ஏதோவொரு மடை என்பது போல் பதில் சொல்வாராம் நாம்தான் இதை பக்குவமாக புரிந்து கொண்டு செயல் படணுமாம். உதாரணத்துக்கு மகனுக்கு திருமணத்திற்கு நல்லநாள் குறித்து கொடுங்கள் சுவாமி என்று கேட்டால், உனது வீட்டை பூட்டி சாவியை ஆத்தா காலடியில் போட்டு விட்டு வாடகைக்கு குடியேறுவதே உத்தமம் என்பாராம். உடனே இவர்களும் அதன்படி செய்வார்களாம்.
 
மறுமாதம் பார்த்தால் அந்த வீட்டில் இளவயது வடநாட்டு பெண்மணி குடியிருப்பாராம். நீங்கள் யாரென்று ? கேட்டால் நான் சுவாமிகளுக்கு பால் காய்ச்சி கொடுப்பதே என் பணி என்று கொஞ்சு தமிழில் தத்தக்கா புத்தக்கா என்று சொல்வாராம். வாயிலில் சுவாமிகள் ஆசீர்வாதம் செய்வது போல் புகைப்படம் இருக்குமாம். அதையும் வணங்கி விட்டு செல்வார்களாம்.
 
ஒருமுறை கிழக்குத்தெரு கிருஷ்ணமூர்த்தி தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததால் இரண்டாவது திருமணம் செய்யலாமா ? என்று கேட்டதற்கு செய்யலாம் ஆனால் வீட்டிலிருக்கும் கறவை மாடுளை அதை பராமரிப்பவரோடு ஆஸ்ரமத்தில் கொண்டு வந்து கட்டுவது உத்தமம் என்று சொல்ல, அதன்படி செய்து இருக்கிறார் கிழக்குத்தெரு கிருஷ்ணமூர்த்தி. கறவை மாடுகளை பராமரிப்பவர் அவரது முதல் மனைவி முத்தம்மாளாம்.
 
இதேபோல் ராக்கப்பன் மகன் துபாயிலிருந்து அனுப்பிய பெரிய எல்.ஈ.டி டெலிவிஷனை வடக்கு திசையை நோக்கி பார்க்கலாமா ? என்று கேட்டதற்கு ராக்கப்பனின் மனைவி பெயரில் இருக்கும் புஞ்சை நிலத்தை சிவனாண்டியின் கொழுந்தியாள் கொடிமலர் பெயருக்கு பத்திரம் போடச்சொல்ல உடனே அப்படியே செய்தார்களாம். கொடிமலர் ஆஸ்ரமத்தின் வரவு செலவு கணக்கு பார்க்கும் ஆடிட்டராக பணியை செவ்வனே செய்பவராம்.
நாகப்பன் தனது மகனை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி விட்டு பீ.சி.பீ.சி.டி.சி வங்கியில் கணக்கு துவங்கலாமா ? என்று யோசனை கேட்டதற்கு சுவாமிகள் ஆத்தாளிடம் கேட்டு தவறு இந்த எண்ணுக்கு பணத்தை போடச்சொல். என்று புதிய வங்கியான ஆர்.ஓ.எஸ். வங்கி எண் 1000 0068 2487 2155 கொடுத்து இதில் போடுவதே உத்தமம் என்று சொல்லி இருக்கிறார். அதன்படியே நாகப்பனும் செய்ய, அந்த எண்ணின் வாடிக்கையாளர் பென்னி கடோர்ஸி என்ற நெதர்லாந்து பெண்மணியாம் இவர் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆஸ்ரமத்தில் ஆன்மீகப்பணி செய்கிறாராம்.
 
கில்லர்ஜி அபுதாபி
 
காணொளி

15 கருத்துகள்:

  1. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. புஸ்டாக் ஸ்வாமிகளை பற்றிய கலாய்த்தல்கள் சிரிப்பை வரவழைத்தன. கிருஷ்ணமூர்த்தி கதையை படித்ததும் வாய் விட்டு சிரித்து விட்டேன். .

    காணொளியும் அருமை. ரசித்தேன். உங்களுக்கென்று இப்படியான நகைச்சுவைகள் அள்ளக்குறையாத கடலாக திறமையுடன் உருவாகுவதற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ பதிவை ரசித்து தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  2. அருமையாக அழகாய் சொல்லிப் போன விதமும் சாமியை பற்றிய நிகழ்வுகளும் சாமியை சாமி போன்றவர்களைக் கொன்றே விட்டீர்கள்! கில்லர்ஜி! நகைச்சுவையாகத்தான்! உங்கள் பெயருக்கு ஏற்றாற் போல்! காணொளியும் நன்று.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நீங்களே சாட்சி சொல்லி கூண்டில் ஏற்றி விடுவீர்கள் போலயே....

      நீக்கு
  3. அடக் கடவுளே இப்படி இன்னொரு சாமியாரா! மெய்யாலுமா?! செம நக்கல் கில்லர்ஜி!

    அதிருக்கட்டும் மேல முதல் படத்துல கில்லர்ஜிக்கு வேஷம் போட்டாப்ல இருக்கே!!! ஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஏன்... இரண்டாவது படம் அனில் கபூர் போல் சொல்லக் கூடாதா ?

      நீக்கு
  4. ஹா..  ஹா..  ஹா...  எப்படிதான் இவர்கள் எல்லாம் உங்களிடம் சிக்குகிறார்களோ...!  அது சரி, இதில் அனில் கபூர் படம் எதற்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அவர்தானே அனில்களின் கண்ட்ரோல்.

      நீக்கு
  5. நல்ல நகைச்சுவை . ஆனால் சாமியாரை நம்பி ஏமாறுபவர்கள் இருக்கிற உண்மையை சொல்கிறது பதிவு.
    அனில் நடமாட்டம் ஒயர்களை கட் செய்வதை ஞானதிருஷ்டியில் சொல்லி விட்டாரே! காணொளி அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது ரசிப்புக்கு மிக்க நன்றி

      நீக்கு
  6. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை, ஏமாற்றுபவர்கள் .............

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது வருகைக்கு நன்றி

      நீக்கு
  7. ஹாஹா…. சாமியார் பலே ஆசாமி தான். காணொளியும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களது பதிவுலக வருகைக்கு வாழ்த்துகள்.

      நீக்கு
  8. இந்த உன்னதமான அடியாரின் பெயரில் யூடியூப் சேனல் ஏதும் இருக்கிறதா?

    பதிலளிநீக்கு