துரோகம்
நண்பரை நண்பரிடம் தூது
விட்டான், அந்த நண்பர் ‘
’தூ’’வை மறந்து விட்டு
‘’சூ’’வை வைத்து விட்டார்.
போர்
பெட்டிகட்டி நாடு செல்ல
திட்டமிட்டான் திலகன்
ஆனால் பெட்டியில் கட்டி
அனுப்பி விட்டான் இறைவன்.
பசி
பசிப்பவனுக்கு உணவு
கொடுக்க மறுத்த இறைவன்
உணவு கிடைத்தவனுக்கு
பசி கொடுக்க மறுக்கின்றான்
இறப்பு
போர் தொடுக்கத் துடிப்பவன்
பாதுகாப்பாய் இருக்கிறான்,
போரை மறுக்கும் மனிதர்கள்
நாராய் நசுங்கி இறக்கின்றர்.
ஆளுமை
நாட்டைக் காப்பதுபோல்
நடித்தவன் நாட்டை ஆள்கின்றான்,
நாட்டைக் காத்து நின்றவர் வீட்டு
கேட் வாசலில் நின்கின்றர்.
மாலை
உயிரோடு இருக்கும்போது
ஒருவாய் சோறு தராதவன்
உயிர் மடிந்தபோது வருகின்றான்
இருநூறு ரூபாய் மாலையோடு…
கூத்தாடன்
தனது வாழ்வை, தன்னை
பெற்றவர்களுக்கு தராத
தறுதலைகள் கூத்தாடன்களுக்காக
தனது உயிரையே தருகிறது.
பற்றாளன்
பற்றோடு வாழ்ந்தவனை
பற்று அற்று ஒதுக்கியதால்,
பற்றற்று வாழத் தொடங்கினான்
சுற்றார்களோடு இறுதி நாளில்…
விருப்பம்
விரும்பியது கிடைக்காததால்
கிடைத்ததை விரும்பினான்
கிடைத்ததும் விரும்பாததால்
மனம் வெதும்பினான்.
நாக்கு
அண்ணியை ஐட்டம் என்பர்
ஐட்டத்தை அண்ணி என்பர்
ஐயமில்லை எமக்கு நாளை
ஐட்டத்தை அம்மா என்பர்.
தேவகோட்டை கில்லர்ஜி துபாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக