என், நனவு தேவதை தேவகியும், நானும் தேவகோட்டை தியாகிகள்
பூங்காவில் மாலை வேளையில், ஒருநாள்....
ஏங்க
நாளைக்கு, நானும் உங்ககூட துணைக்கு சென்னைக்கு வர்றேங்க,
எதுக்கு ? துணைக்கு துணையா தொண்டை வலிக்கு
வெணையான்னு போறதுக்கா ?
யேன்
நான் வந்தா ? உங்களுக்கு அப்படியா இருக்கும் ?
நானே,
வேலை தேடிப் போறேன் எனக்கு அங்கே ஆளு இருக்கு, தேவையா ? நீ
எனக்குத்
தெரியாம எவ ? அந்தச்சிறுக்கி ?
சிறுக்கியா ? யாரு ?
நீங்கதானே,
இப்பச் சொன்னீங்க யாரு ? அந்த தேவயானி.
அடி
ஆக்கங்கெட்டகூவை, தேவயானின்னு சொல்லலே, தேவையா ? நீ ன்னு கேட்டேன்.
அப்படியா ? எனக்கென்னமோ சந்தேகமா ? இருக்கு.
உனக்கு,
சந்தேகமென்ன இன்னைக்கு நேத்தா, என்னைக்கு உன்னை LOVE பண்ண ஆரம்பிச்சேனோ ? அன்னையிலேயிருந்து
இருக்கே.
பின்னே,
என்ன BANKல பணம் கெடக்குன்னு
சொன்னீங்க, கல்யாணம் முடிஞ்சவுடனே ACCOUNTடே இல்லைன்னு, சொல்றீங்க.
பணம்,
கெடக்குன்னுதானே, சொன்னேன் என் பேரிலே கெடக்குன்னு சொன்னேனாடி ?
சரி,
சரி கோப்படாம சீக்கிரமா வேலைதேடி ஒரு நல்லவீடா, பார்த்துட்டு என்னைக் கூட்டிட்டு
போங்க ! உங்க அம்மா புடுங்கு
தாங்கலை.
உடனே
எங்க அம்மாவை இழு, முதல்ல வேலை அப்புறமா சின்ன வீடு பார்த்து செட்டப் பண்ணிட்டு,
உன்னைக் கூட்டிட்டுப் போறேன்.
என்னங்க ? சின்னவீடா ?
அடியேண்டி...
எதுக்கெடுத்தாலும் சந்தேகப்படுறே ?
சரி,
பார்த்து கவனமா போயிட்டு வாங்க ! பஸ்ஸூல தனி ஸீட்டாப் பார்த்து
உட்காருங்க.
தனி
ஸீட்டுன்னா, டிரைவர் ஸீட்லதான் உட்காரனும் எனக்கு டிரைவிங் தெரிஞ்சாத்தான்,
யாரையாவது வச்சு செல்வியப் புடிச்சுருவேனே.
அவ,
யாருங்க செல்வி ?
அடி,
நாசமாப் போனவளே நம்ம ரூட்ல ஓடுற SELVI ROAD WAYS சை சொன்னேன்.
சென்னையில
எங்கே ? தங்குவீங்க ?
ஒரு தடவை,
கல்யாணத்துக்கு போகும்போது தங்குனது போல நர்மதாவுலதான் தங்கனும்.
அவ,
யாருங்க ? நர்மதா ?
அடி,
விளங்காமுடுமை நர்மதான்னுங்குறது லாட்ஜோட பேரு.
அப்படியா ? எனக்கு தெரியாதுல,
பார்க்
வந்ததுக்கு பேசாம அருணாவுக்கு, போயிருந்தாலும் ரெண்டுமணி நேரம் நிம்மதியா
இருந்துருப்பேன்.
அவ,
யாருங்க ?
அடி,
முடுதாரு, முடுதாரு அருணா தியேட்டரே சொன்னேன்டி.
யேன்,
எதுக்கெடுத்தாலும் கோபப்படுறீங்க ?
சரி,
இதுக்குமேல இருந்தா ? ஏழரையாக்கிடுவே, கிளம்பு.
ஏங்க,
மணி ஏழுதானே ஆகுது.
நான்,
சொன்னது வேற முதல்ல சுந்தரி, சீச்சீ எந்திரி.
அது...
யா...
அடியே,
வாய் தவறி எந்திரின்னு சொல்றதுக்கு பதிலா, சுந்தரின்னு வந்துருச்சுடி.
சரி, நாளைக்கு
ஊருக்கு போறீங்க, பாயசம் வைக்கனும் நம்ம பாலு ஸ்டோர்ல முந்திரி வாங்கி கொடுங்க.
சரி,
சரி வா ! அப்படியே கோல்டன் காபி
பார்ல ஒரு காஃபி சாப்பிட்டு போகலாம்.
சாம்பசிவம்-
சே...
நனவு தேவதையைவிட, கனவு தேவதையே தேவலையோ ?


