பூவினும்
மென்மையான வலைப்பூ இதயங்களுக்கு இது நான் முந்தானை முடிச்சு (1985) வெளியான நேரத்தில் நான் எழுதி
பத்திரிக்கைகளுக்கு அனுப்பியது எதுவும் வெளியாகவில்லை என்றாலும் நண்பர்கள்
ரசித்தவை ஆகவே தாங்களும் ரசிக்கட்டுமென பதிவிடுகின்றேன் அன்றைய பாணியில் எழுதியதை
ஞாபகத்தில் கொண்டு வந்து இன்றைய கில்லர்ஜி பாணியில் கொஞ்சம் திருத்தி
இருக்கின்றேன் I know this is too
late.
கேள்வி 1 பதில் 9
கேள்வி
இதுதாங்கோ...
ஏங்க
இன்னைக்கு முருங்கைக்காய் சாம்பார் வைக்கவா ?
கார்பெண்டர், கார்மேகம் வீட்டில...
உன்
இஷ்டத்துக்கு வச்சுப்புட்டு அப்புறம் என்னை ஏன்டி ? குறை சொல்றே ?
மேசன், மேகநாதன் வீட்டில்...
உனக்கு
ஜெமினி கணேசனை பிடிக்கும்னு தெரியும் அதுக்காக தினம் முருங்கைக்காய் சாம்பாரா ?
ஏசி பிட்டிங், ஏகாம்பரம் வீட்டில்...
பக்கத்து
வீட்டு பங்கஜம் ஐடியா கொடுத்தாளோ ?
பிளம்பர், பிச்சைமுத்து வீட்டில்...
பதி
நான் சொல்றதை நம்ம மாட்றே பாக்கியராஜ் சொல்றதை நம்புறியடி.
எலக்ட்ரிசியன், எத்திராஜ் வீட்டில்...
முருங்கைக்காய்
விற்கிற விலையில சாம்பாரா ? மட்டன் குழம்பு வையி.
பெயிண்டர், பெருமாள் வீட்டில்...
வையி,
வையி ஆனா ஊர்வசி மாதிரி வீட்டுல இருக்கிற முருங்கை மரத்தோட வெட்டிடாதே...
இஞ்சினியர், இசக்கி வீட்டில்...
பேருதான்
வேற எல்லாமே ரசம் மாதிரித்தான் இருக்கு.
சர்வேயர், சண்முகம் வீட்டில்...
நேத்து
முந்தானை முடிச்சு படத்துக்கு போனது இதுக்குத்தானா ?
ஹவுஸ் ஓனர், ஹரிஹரன் வீட்டில்...
வையி
உனக்கே இஷ்டம் எனக்கென்ன ? கரும்பு தின்னக்கூலியா ?
Chivas Regal சிவசம்போ-
ஹவுஸ்
ஓனர்கூட முருங்கைக்காயில விழுந்தா ? வீட்டுக்கு கிரஹபிரவேசம்
நடக்காது வீட்டுக்கு வீடு பிரசவம்தான் நடக்கும்.




