தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 19, 2018

தி கிரேட் இந்தியன்


பல நேரங்களில் நான் எனது அலுவலகத்தில் அரபு மொழி பேசும் அனைத்து நாட்டவர்களிடமும் வாக்கு வாதம் செய்திருக்கிறேன் அது பேசிக்கொண்டு இருக்கும் போதே இந்தி முக் மாபி (இந்தியன் மூளை இல்லாதவன்) எனச்சொல்லி விடுவார்கள் எனக்கு கோபம் வந்து விடும் அது யாராக இருந்தாலும் சரி (Including U.A.E People) சரமாரியாக கேள்விக்கணைகளை தொடுப்பேன் இந்தியனை அயோக்கியன் எனச்சொல் ஒத்துக்கொள்கிறேன் ஏன்... என்னைக்கூட அயோக்கியன் என்றோ, மூளையில்லாதவன் என்றோ நீ நிரூபித்து விட்டால் ? சம்மதமே ஆனால் ஒட்டு மொத்தமாக இந்தியன் மூளையில்லாதவன் என்பதை ஒருக்காலும் ஏற்கமுடியாது இந்தியன் சிந்தித்து தவறுகளை செய்து விட்டு வழிகளை கடந்து தப்பித்து விடுவான் ஆனால் உன்னால் முடியாது காரணம் உனக்கு சிந்திக்கும் திறன் இல்லை ஏனெனில் மிஷான் இந்தே முக் மாபி (உனக்கு மூளை இல்லை) ஆனால் உன்னில் 90% பேர் நல்லவனாக இருக்கலாம் நானறிவேன் ஆனால் இந்தியன் 90% பேர் புத்திசாலி என்பதை உலகமே ஏற்றுக் கொண்டுள்ளது இந்தியனை சொல்லும் நீ எனது கேள்விக்கு பதில்சொல். 

பிலாத் மால் இந்தே கம் நபர் மவுஜூத் ஆலி ?

உனது நாட்டில் விஞ்ஞானிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? 

நீ என்ன கண்டு பிடித்தாய்  ? குப்பூஸை (சப்பாத்தி போன்ற ரொட்டி) வேண்டுமானால் சொல்லலாம் அதுகூட மஷ்ரி (Egyptian) கொண்டு வந்த உணவு. பலரும் பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார்கள் அதில் சிலர் ஏன்... அப்துல் கலாம் இல்லையா ? என்பர் எனக்கு கோபம் உச்சிக்கு ஏறி விடும் அப்துல் கலாம் யாரு ? உனது நாடா ? எனது தி கிரேட் இந்தியன் எனது தமிழன் என்பேன், அதற்கு எங்க ஆளு என்பான் நீ பேசுவது மதவாதம் நான் பேசுவது கணக்கெடுப்பு இதிலிருந்தே தெரிகிறதா ? உனக்கு மூளை இல்லை என்பது. இதற்கு ஆதாரமாக வேலையிலிருந்தே பல விசயங்களை எடுத்து வைத்திருக்கிறேன் அதைப்பற்றி தனிப்பதிவாக போடவேண்டும் பொறுங்கள் இப்படிப் பேசியதால் நான் பலரிடம் கெட்டவன் என்ற பெயரை சம்பாரித்து இருக்கிறேன் ஆனால் இதற்காக நான் துளியளவும் கவலைப்படவோ, வெட்கப்படவோ இல்லை ஏனெனில் நான் பேசியது முழுக்க முழுக்க எனது மனசாட்சிக்கு தெரிய உண்மை, நியாயம்.


வெகுகாலமாக அரேபியர்கள் இந்த வார்த்தையை சொல்வதை கடைப் பிடித்தார்கள். தற்போது குறைந்து உள்ளது உண்மையே காரணம் இப்பொழுது அதிகமான இந்தியர்கள் பட்டதாரிகள்.

47 கருத்துகள்:

  1. ஆவ்வ்வ்வ்வ்வ் மீயேதான்ன்ன்ன் 1ஸ்ட்டூஊஊஊஊ:).. அச்சச்சோ கில்லர்ஜி இப்பூடிப் பொயிங்குறார்ர்... சிறீ சிவசம்போ அங்கிளையும் காணம்:) நேக்குப் பயம்மாக் கிடக்கு:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க உங்க அங்கிள் அடுத்து வருவார்.

      நீக்கு

  2. நீங்க கிரேட் இண்டியன் மட்டுமல்ல கிரேட் தமிழன் இன்னும் சொல்லப் போனால் கிரேட் ப்ளாக்கர் ஜி

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் இந்தியர்கள் அறிவாளிகள் தான் ஜீ!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே!

    பற்றிப் படா்ந்தசொந்த நாடு,இனப் பற்று!நன்கு
    கற்றுக் கொடுத்தீரே காத்து!

    கொந்தளிக்க வேண்டிய இடத்தில் கட்டாயம் உணர்வினைக் காட்டியே தீரணும்!
    தாய்நாடு, இனம் இரண்டிலும் உங்களின் பற்றுக்கண்டு
    உளம் மிக மகிழ்கின்றேன்!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக கவிஞரே தங்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  5. துளசி: இப்படி ஓர் எண்ணம் இருக்கிறதா என்ன? வெளிநாடுகளில்? என் அறிவிற்கு எட்டியவரை இந்தியர்கள் புத்திசாலிகள் என்று சொல்வதைத்தானே கேட்டுள்ளேன்...ம்ம்ம் உங்கள் அனுபவம்!! இல்லையா ஜி?!!

    கீதா: கில்லர்ஜி என்ன ஆச்சு?!!! இதுக்குத்தான் சிவாஸ் வரணும் றது....சரி சரி கூல் கூல்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து அரபு தேசங்களில் மட்டுமே... இதில் சிவசம்போவுக்கு இடமில்லை.

      நீக்கு
  6. கிரேட். கிரேட். கிரேட்... கில்லர்ஜி.

    பதிலளிநீக்கு
  7. வெளிநாட்டில் உங்களின் நிலைப்பாடு முதலில் இந்தியன்; அப்புறம் தமிழன். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே என்னை பாராட்டுவது இருக்கட்டும் இதற்கு எதிர் பதமாக ஒரு விடயம் தருகிறேன்.

      இந்தியர்களை உனக்கு எந்த நாடு என்று கேட்டால் ? இந்தியா என்று பெருமையாக சொல்வார்கள் ஆனால் இந்தியர்களில் மலையாளிகள் மட்டும் கேரளம் என்று சொல்வார்கள் இதில் பல அரேபியர்களும் இந்தியாவில் கேரளம் தனிநாடு என்ற கருத்தும் நிலவுகிறது நான் அறிய பேசிக்கொண்டால் உடனே விடயத்தை உடைத்து விடுவேன்.

      மலையாளிகள் அறிவாளிகள் என்பதில் எனக்கு துளியளவும் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் பத்து ஏக்கரை வைத்துக் கொண்டு கேரளம் தனிநாடு என்பதுபோல பீடா விடுவது எனக்கு எரிச்சலைத் தரும்.

      நீக்கு
  8. பணமும் பதவியும் தேடி வெளிநாடு செல்கிறான் இந்தியன் பல இடங்களில் வரவேற்கப்படுகிறான் ஒட்டு மொத்தமாக இந்தியனைக் குறை சொன்னால் கில்லர்ஜி சும்மா விடு வாரா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா என்னைச் சொல்லலாம் ஆனால் ஒட்டு மொத்தமாக சொன்னால் ஏற்க முடியாதே...

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தங்களி்ன் தேசப்பற்று மிகவும் சந்தோஸபடுத்த வைக்கிறது. வெளிநாடு வேலை பார்க்குமிடம் என்று சிறிதேனும் பயமுறாமல் தங்கள் மனசாட்சிபடி தைரியமாக பேசியது நீங்கள் ஒரு கிரேட் இந்தியன்தான்.
    வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ பேசத் தெரிந்தால் அரேபியர்களிடம் நியாயத்தை எடுத்து வைக்கலாம் ஆனால் நம்மில் பலரும் பேசிப்பழகுவதை விரும்புவதில்லை இதுவே நமது அவமானத்துக்கு காரணம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  10. வாழ்வில் எவ்வாறான சூழலையெல்லாம் சமாளிக்க வேண்டியுள்ளது. உங்களை போன்றோர் மூலமாகத்தான் இவை போன்றனவற்றை அறியமுடிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக என்னால் வாயை வைத்துக்கொண்டு சும்மா அடங்கிப்போக முடிவதில்லை இதுவே அடிப்படை காரணம் முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி

      நீக்கு
  11. அன்பின் ஜி..
    தங்களது தேசப்பற்றுக்கு வணக்கம்!..

    தாங்கள் கூறியுள்ள அனைத்தும் நித்தமும் நான் காண்பவைகளே..

    தங்களைப் போலவே பற்பல சமயங்களில் எதிர்த்துக் கேள்வி கேட்டதனால் நானும் பொல்லாதவன் ஆகி விட்டேன்..

    அதே சமயம் தாய் நாட்டின் மானம் மரியாதைக் கெடுக்கும் வேலைகளில் கொஞ்சமும் தயங்காமல் நம்மவர்கள் இன மத வேறுபாடின்றி ஈடுபடுவதையும் சொல்லத்தான் வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தங்களுக்கு தெரியாத விடயமா ? இல்லாத அனுபவங்களா ? நம்மவர்கள் பலரும் தேசத்தின் பெயர் கெடும் என்று நினைத்துப் பார்ப்பதில்லைதான்.

      நீக்கு
  12. அன்பின் ஜி..

    மற்றொரு செய்தியாக - அடுத்து வரும் பதிவுக்குள்
    தாங்கள் விருந்தினராக வருகின்றீர்கள்..

    ஒன்றும் ஆட்சேபணை இருக்காதென எண்ணுகின்றேன்....

    முன்னதாகவே வரும்படி அழைத்திருக்க வேண்டும்..

    ஆனால் -
    வரும்படி வரும்படியாக இல்லாததால் வரும்படி அழைக்கவில்லை..

    எனவே - குற்றமாகக் கொள்ளாமல்
    குவைத்திற்கு வருகை தர வேண்டும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி
      ஆவலுடன் குவைத் வர காத்திருக்கிறேன்

      நீக்கு
  13. உண்மையை உரத்து சொல்லி நமது நாட்டவரைப் பற்றி அவர்கள் கொண்டுள்ள எண்ணத்தை மாற்றியிருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது பாராட்டுகளுக்கு நன்றி

      நீக்கு
  14. இந்தியன் 90% புத்திசாலிகள்... இங்கு இதனை சொல்வார்கள் அண்ணா ஜீ. ஐடி துறையில் சாதிப்பதும் ஆச்சர்யம் இங்கு. நீங்க இருக்கும் நாட்டவருடன் கோபம் வந்தது பேசியது நியாயமானதே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி

      நீக்கு
  15. உண்மையில் இந்தியர்கள் அறிவாளிகள் தான் நண்பரே
    நிங்கழும் தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே நானுமா....? உண்மையெனில் டபுள் நன்றி

      நீக்கு
  16. பொதுவா அரபுதேசத்தவர்களுக்கு, மேற்கத்தைய தேசத்தவரிடம்தான் மரியாதை உண்டு. அவர்களை (வெள்ளையர்களை) வேலைக்கு வைத்துக்கொள்வதனால், தங்கள் கௌரவம் உயர்வதாக அரபு தொழிலதிபர்கள் நினைப்பதுண்டு. பிரிட்டிஷ்காரர்களுக்கு சம்பளம் மிகவும் அதிகமாகக் கொடுக்கவேண்டும். அது முடியாத சமயத்தில், தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களை ('நாங்க அவங்களை Cheap Whites என்று சொல்லுவோம், எங்களுக்குள்) வேலைக்கு வைத்துக்கொள்வார்கள்.

    ஆனால், அனேகமா எல்லா அரபியர்களின் கம்பெனிகளில் Finance Position நம்ம ஊர் சார்டர்ட் அக்கவுன்டன்ட் கள்தான். பைனான்ஸ் டிபார்ட்மென்டில் பெரும்பாலும் கேரளத்தவர்கள்தான்.

    இந்தியர்களுக்கு பிஸினெஸ் மைன்ட், மேற்கத்தையவர்கள் போல் கிடையாது என்று அரபிகள் நம்புகின்றனர்.

    இந்தியாவில் பட்டதாரிகள் அதிகம். எங்கள் HR Headஆக இருந்த ஒரு தென்னாப்பிரிக்க வெள்ளையர், என்னிடம் ஒரு நாள், 'நாங்கள்லாம் குவாலிஃபைட். நாங்க டிகிரி முடித்திருக்கிறோம் என்றால் அது பெரிய விஷயம். இந்தியா மாதிரி இல்லை. அங்க ஒவ்வொரு தெருவிலும் ஏகப்பட்ட டாக்டர் இஞ்சினீயர், முதுகலைப் பட்டதாரிகள் என்று எண்ணிக்கை மிக அதிகம், தரம் மிகக் குறைவு' என்று சொன்னார். பொதுவா இதுதான் அவர்களின் மன நிலை.

    இந்தியர்களிடம் பெரிய குறையும் உண்டு. அவங்க, தங்களோட மதிப்பை ரொம்பக் குறைத்துக்கொள்வார்கள். முன்னால, CA முடிச்சிருந்தான்னா, அரை லட்சம் சம்பளம் ('நான் சொல்றது 25-30 வருடத்துக்கு முன்பு). அதை போட்டி போட்டு, குறைந்த சம்பளத்துக்கு ஆளெடுத்து இவ்வளவு வருஷம் சென்றும், 40,000 ரூபாய்ல கொண்டுவந்து நிறுத்திவிட்டாங்க. ஆனா, வெள்ளையர்கள், நிறைய சம்பளம் வாங்குவாங்க.

    ஒரு கதையும் உண்டு. சீனியர் மேனேஜர் பொசிஷனில் ஒரு இந்தியரையும் வெள்ளையரையும் வேலைக்கு வைத்த அரபி, வெள்ளையருக்கு (உதாரணத்துக்குச் சொல்றேன்) வீட்டு வாடகை 1 லட்சம் கொடுப்பார், இந்தியருக்கு 30,000தான் கொடுப்பார். காரணம் அவங்களோட Living Style.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே மிகவும் தெளிவாக உணர்ந்து அனுபவப்பட்டு இருக்கின்றீர்கள் அதற்காக எமது சபாஷ்.

      எனக்கும் இவ்வகை ஏற்றத்தாழ்வுகளை எற்றுக்கொள்ள முடிவதில்லை ஒரே நிலைப்பாட்டில் வேலை செய்தும் ஒரே அளவில் வேலை செய்தும் நாட்டின் அடிப்படையில் சம்பளம் தீர்மானிப்பது ஏன் ?

      முன்பு போல இந்தியர்களை அரபியர்கள் சட்டென முக்மாஃபி என்று சொல்லி விடமுடியாது காரணம் நம்மவர்கள் அமெரிக்கன் ஸ்டைலில் ஆங்கிலம் பேசி அரபிகளை கதற விடுகின்றார்கள்.

      எனது உறவினர் ஒருவர் இஞ்சினியர் சவூதி அரேபியாவில் நடந்தது அரபி வந்து அவரிடம் இந்தியன் என்ற காரணத்தால் போய் டீ எடுத்து வா என்று சொல்ல.... அவர் நான் ஆபீஸ் பாய் அல்ல இஞ்சினியர் என்று சொன்னதற்கு அரபி அதனாலென்ன.... என்று சொல்லவும்.

      உன்னிடம் இந்த நொடிமுதல் வேலை செய்ய முடியாது என்று ரிசைன் லட்டர் கொடுத்து விட்டார். தற்போது குடும்பத்துடன் ஜெர்மனியில் வசிக்கின்றார்.

      விரிவான கருத்துரைக்கு நன்றி

      நீக்கு
  17. தன்மானம் தான் முக்கியம் .நமக்கு ஒரு இழுக்குன்னு வரும்போது உரக்க உண்மையை சொல்வதில் தவறில்லை .இன்னொன்று நீங்க சொல்லலைனா அதுவே அட்வான்டேஜ் ஆகிடும் பெரும்பாலானோர் நமக்கென்னன்னு ஒதுங்குவதால்தான் பிரச்சினையே .
    அரபுநாடுகளில் அறிவாளிகள் பிரச்சினை மாதிரி இங்கே இந்தியர்கள் கையால் சாப்பிடுவார்கள் திருமணம் வீட்டில் பெற்றோர்கசொல்படி கல்யாணம் பெற்றோர் பார்த்த பெண் /மாப்பிளை என்ற விஷயங்கள் உண்டு
    ஒரு ஆங்கிலேயர் என்னிடம் கேடற்ற எப்படித்தான் நீங்கலாம் வீட்டில் பார்த்த மாப்பிளையை கல்யாணம் செய்து குடும்பம் நடத்தறீங்களோ அதில் லவ் இருக்குமோன்னு .நான் சொன்னேன் நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி லவ் பண்றீங்க நாங்க கல்யாணம் பண்ணினத்துக்கு அப்புறம் கணவரை லவ் பண்றோம் :) .வேடிக்கை என்னனா நம்ம கல்யாண முறைகளை குற்றம் சொன்னவர் மூன்று கல்யாணம் மூணும் விவாகரத்து !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக பொதுநலத்தில் நமக்கென்ன என்று ஒதுங்குவதே இந்த அவலநிலைக்கு காரணம்.

      கையில் சாப்பிடுவது மருத்துவ ரீதியாக உடல் நலத்துக்கு நல்லது

      மூணு கல்யாணமும் விவாகரத்தா ?
      முடுமைக்கு தெரியுமா முருங்கக்காய் வாசனை ?

      விட்டுத்தள்ளுங்க முடுதாரை...

      நீக்கு
  18. நெ.த. சொல்லுவதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். இங்கே தடுக்கி விழுந்தால் இஞ்சினியர், மருத்துவர். ஆனால் தரம்? அதிலும் சிவில் இஞ்சினியர் என்றால் அவங்க கட்டும் கட்டிடங்கள், சாலைகள் தரத்திலிருந்தே தெரிகிறது! என்னத்தைச் சொல்ல! அதே சமயம் இருக்கும் மூளையைத் தப்பு செய்துட்டு எப்படித் தப்பிப்பது என்பதில் செலவிடுகிறோம்! :( அதில் நம்மை மிஞ்ச ஆளே இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ உண்மைதான்.

      முடிவில் சொன்னீர்களே அதுதான் இப்பதிவின் அடித்தளம் வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. கீசா மேடம்.. அதற்கு மிக முக்கியக் காரணம், இந்தியாவில் நாம் 'உருப்போட்டு, மனப்பாடம் பண்ணி பரீட்சையில் வாந்தி எடுக்கவைக்கிற' கல்விதான், முதுகலைப் பட்டம் (கல்லூரி) வரையில் தொடருகிறது. முதுகலைப் பட்டத்துக்கும் பள்ளிகளில் செய்வதுபோல் நோட்ஸ் ஒவ்வொரு வகுப்பிலும் நடக்கும். ஆனால் மேனாட்டுக் கல்விமுறை புரிந்து படிக்கக்கூடிய கல்வியின் அடிப்படையிலானது.

      நான் கல்லூரியில் படித்தபோது ஒருமுறை, என் அண்ணன் வகுப்பில் அந்த ப்ரொஃபசர் எழுதின நோட்ஸைப் படித்து, என் வகுப்பின் இன்டேர்னலுக்கு எழுதினேன். என் வகுப்பு ப்ரொபசர் மார்க் போடவில்லை, ஏன் என்னுடைய நோட்ஸை எழுதலைன்னு கேட்டார்.

      மேனாட்டினர், பேசிக் டிகிரி ஹோல்டர், அதற்கான படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார். நம் கல்விமுறை காரணமாக, நம் மக்களின் இயல்பான புத்திசாலித்தனம் மங்கிவிடுகிறது.

      நீக்கு
    3. உண்மையான கருத்து மீள் வருகைக்கு நன்றி நண்பரே...

      நீக்கு
  19. உங்கள் கருத்துக்கள் எப்போதும் தெளிவானவை அண்ணா...
    உண்மைதான்... இந்தியர்களை கேவலமாய் பார்ப்பதில் அரபிகளுக்கு முதலிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே உங்களது அனுபவமும் பேச வைக்கிறது வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. //இந்தியர்களை கேவலமாக பார்ப்பதில் அரபிகளுக்கு முதலிடம்//
      முதலிடத்திற்கு எங்கள் நாட்டு சிங்களவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
      ஆனால் இந்திய தமிழர்களுக்கு மட்டும் விதிவிலக்கு உண்டு. நீங்கள் எல்லோரும் எங்களுக்கு support பண்ணுகிறீர்கள் என்ற தவறான புரிதலால் வந்த கோபம் மட்டும் உண்டு. பெரும்பாலான சிங்களவர்களுக்கு இங்குள்ள அனைத்து தமிழர்களிடமும் மிகுந்த மரியாதை உண்டு. இங்குள்ள தமிழர்கள் பற்றிய அவர்களுக்கிருக்கும் நல்லெண்ணம் அனைத்து வெளிநாட்டுத் தமிழர்களிடமும் பிரதிபலிக்கும். கோபமும் துவேஷமும் பெரும்பாலும் அரசியல் சார்ந்தது.

      நீக்கு
    3. வருக நண்பரே தங்களது முதல் வருகைக்கு வந்தனம்.

      நண்பரே இந்தியர்-இலங்கையினர் இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் அரேபியர்கள் காண்கின்றனர் அவர்களுக்கு பிரித்துப் பார்க்கும் பக்குவம் கிடையாது காரணம் நாம் ஒருதாய் வயிற்று பிள்ளைகளே... முகபாவத்தில் கூடுதல் வேற்றுமை இல்லாததே முக்கிய காரணம்.

      நானும் வெகுகாலம் இலங்கையினருடன் நெருங்கி பழகியவனே...
      வருகைக்கு நன்றி தொடர்ந்தால் மகிழ்ச்சி

      நீக்கு
  20. பேச்சிலும் தமிழன் சிறந்தவன் என்று நிரூபித்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி

      நீக்கு
  21. Useful. Discussion. In Army people used to mention "Madharasi dhimagwali; Jaat" Most dhimagwali" Good to learn about Arabis. it seems Arabis also fall in this list.

    பதிலளிநீக்கு