தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, ஜனவரி 08, 2023

தீர்த்திடு அமங்கலி

 

ணக்கம் நண்பர்களே... ‘’மல்லிகை என் மன்னன் மயங்கும்’’ என்ற கவியரசர் கண்ணதாசனின் அற்புதமான பாடலை எமது பாணியில் மாற்றி எழுதி இருக்கிறேன் கீழே யூட்டியூப்பின் இணைப்பும் கொடுத்துள்ளேன்
 
இதோ எனது பாடல்...
 
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
உன் வாரமும் என் பூசை போல்
கண் பூவைத்தான் தேடிக்கொள்ளவோ
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
 
என் தாகங்கள் பள்ளி ஏஞ்சல் போல்
மங்கள் தேனியை சொட்டு பாராட்டுது
தளிர் ஆற்றிலே பளிர் மாங்கொடி
கெஞ்சி வீசியே பண்பை ஆராட்டுது
 
உன் மன்னன் அஞ்சத்தான்
உன் பஞ்சும் பஞ்சம்தான்
பையோடு நீ கிள்ளவோ
தன் ராமனே உன் சீதைதான்
அவ்வேளையில் என் சேவை சொல்லவோ
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
 
என் சௌபாக்கியம் கண்ண அச்சாரம்
கொஞ்சும் தங்கமும் இன்றும்தான் வந்தது
ஈராயிரம் துன்ப காவியம்
எந்தன் கைகளில் கிள்ளித்தான் வந்தது
 
எம் கள்ளம் பக்கம்தான்
எம் உள்ளம் பள்ளம்தான்
இன்றோடு நன்றானது
உன் சந்தமும் அந்த சாந்தமும்
என்னோடுதான் சூடிக் கொண்டது
 
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
உன் வாரமும் என் பூசை போல்
கண் பூவைத்தான் தேடிக்கொள்ளவோ
கள்ளிகை உன் கண்ணன் தயங்கும்
கண்ணான மடல் அல்லவோ
 
பாடல்-ஆச்சி-ரியர்-கில்லர்ஜி
 
வருடம்: 1974
படம்: தீர்க்க சுமங்கலி
பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: வாணி ஜெயராம்
 
இதோ கவிஞரின் பாடல் வரிகள்
 
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
 
வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
 
என் கண்ணன் துஞ்சத்தான்
என் நெஞ்சம் மஞ்சம்தான்
கையோடு நான் அல்லவோ
என் தேவனே உன் தேவி நான்
இவ்வேளையில் உன் தேவை என்னவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
 
பொன் மாங்கல்யம் வண்ண பூச்சரம்
மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
ஓராயிரம் இன்ப காவியம்
உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
 
நம் இல்லம் சொர்க்கம்தான்
நம் உள்ளம் வெல்லம்தான்
ஒன்றோடு ஒன்றானது
என் சொந்தமும் இந்த பந்தமும்
உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
 
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
என் நேரமும் உன் ஆசை போல்
பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
மல்லிகை என் மன்னன் மயங்கும்
பொன்னான மலரல்லவோ
 
இதோ யூட்டியூப் இணைப்பு
https://www.youtube.com/watch?v=oAeifBAU-Ns
நன்றி –கில்லர்ஜி தேவகோட்டை

Share this post with your FRIENDS…

27 கருத்துகள்:

  1. ஆகா, நையாண்டியான பரிகாசம்!
    சூப்பர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே தங்களது உடனடி வருகைக்கு நன்றி.

      நீக்கு
  2. கண்ணான மடல் நன்றாக இருக்கிறது.
    தலைப்பு ஏன் அப்படி?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ எதிர்ப்பதாக வைத்தேன் அவ்வளவுதான்...

      நீக்கு
  3. தலைப்பு திடுக்கிட வைத்தது.... ஹா ஹா ஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தமிழரே நீங்களே இப்படி பயப்படலாமா ?

      நீக்கு
  4. நண்பரே,... உங்களுக்கு என்னுடைய ஒரு ஸ்மால் ரிக்கொஸ்ட்.!!..

    பழைய பாடல்களை உங்கள் பாணியில் மாற்றி எழுதுவதற்கு பதிலாக... நீங்களே புதியதாக சினிமாவுக்கு "வாலி"யைப்போல பாடல் எழுத முயற்சிக்கலாமே?!!... நாங்களும் உங்கள் பாடல் ஒலிப்பேழைகளில் ஒலிக்கும்போதெல்லாம் பார்ப்பவர்களிடம் இதோ இந்த பாடலை எழுதியது எங்கள் நண்பராகிய "கில்லர்ஜி"யாக்கும் என்று பெருமையாக பீற்றிக் கொல்வோமே... சாரி... கொள்வோமே... முயற்சி செய்வீர்களா???...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிவா சகோ, இதை நானும் முன்னர் சொல்லியிருக்கிறேன் கருத்தில். கில்லர்ஜி நிறைய எழுதியிருக்கிறார் இங்கு பதிவாகவும். கும்மிப் பாட்டு, நாட்டுப்புறப்பாட்டுன்னு.....நானும் உங்கள் கருத்தைத்தான் சொல்லியிருந்தேன் இப்படி மாற்றி எழுதும் பதிவில்...

      கீதா

      நீக்கு
    2. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      ஆனால் யாராவது வாய்ப்பு வாங்கி வாருங்களேன்.

      நீக்கு
    3. நண்பரே தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      முயற்சி செய்கிறேன்.

      நீக்கு
  5. கில்லர்ஜி, தலைப்பு ஆஆஆஆ.....

    வழக்கம் போல் உங்கள் பாணி!!! நல்லாருக்கு....

    கீதா

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே

    பாடல் பதிவு அருமை. தலைப்பு கொஞ்சம் புதிதாக உள்ளது. தீர்க்க என்பதற்கு வேறு மாற்றுச்சொல் கண்டுபிடித்து இருக்கலாமே...!!

    பாடலுக்கு தகுந்தபடி வார்த்தைகளை மாற்றி யோசித்திருப்பதற்கு வாழ்த்துகள். கருத்தில் சகோதர, சகோதரிகள் கூறியுள்ளபடி தாங்களும் ஒரு திரைப்பட பாடல் ஆசிரியராகி புகழ் அடையலாம். அதற்கான திறமை தங்களிடம் உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      தலைப்பு இவ்வளவு பிரச்சனையை உண்டாக்கி விட்டதே...

      நீக்கு
  7. தலைப்பு படித்ததும் ஏன் இப்படி? என நினைத்தேன்.
    வழமைபோல ஹா..ஹா.....

    பதிலளிநீக்கு
  8. இந்தப் பாடலை எழுதியவர் வாலி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ? இதோ மாற்றி விடுகிறேன் ஜி

      நீக்கு
    2. ஜி பல இடங்களில் பார்த்து விட்டேன் இதுவே தகவல்.
      Song : Malligai En Mannan
      Movie/Album Name : Dheerga Sumangali 1974
      Star Cast : R. Muthuraman and K. R. Vijaya
      Singer : Vani Jayaram
      Music Composed by : M. S. Viswanathan
      Lyrics written by : Kannadasan

      நீக்கு
  9. இந்த முறை ஏனோ மனம் ரசிக்கவில்லை நண்பரே!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக ஜி
      அடுத்த பாடலை இரசிக்கும்படி எழுதி விடலாம்.

      நீக்கு
  10. மாற்றி எழுதுகிறேன் என்று ரசிக்கும்படியான வார்த்தைகள் இல்லாமல் எழுதாமல் சந்தத்துக்கு தகுந்தாற்போல் வருமாறு அர்த்தத்துடனேயே எழுத முயற்சிக்கலாமே நீங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஸ்ரீராம்ஜி அப்படி எழுதினால் தனியாக பாடலாகத்தான் (அதாவது எனது பாடலாக) வரும்.

      நீக்கு
  11. தலைப்பு அதிர்ச்சி அடைய வைத்தது. :( பாடலில் மனம் லயிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு