தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது அய்யா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வெள்ளி, ஜனவரி 13, 2017

கற்பூரவாசனை

இந்தக்கை ஒரு பாலஸ்தீனிய நண்பனுடையது.

கற்பூரவாசனையை பூஜையறையில் காண்பித்து வாசனையை எதிர்பார்ப்பவன் அறிவாளி கழிவறையில் காண்பித்து வாசனையை எதிர்பார்ப்பவன் முட்டாள் அதைப்போல நமது கருத்துக்களை அறிவாளிகளோடு பகிர்ந்து கொள்ளவேண்டும், முட்டாள்களோடு பகிர்ந்து கொள்பவன் கழிவறையில் கற்பூரத்தை காண்பித்தவனுக்கு ஒப்பானவன். நானும் சிலநேரங்களில் கழிவறையில் காண்பித்து மனம் நொந்து இருக்கின்றேன் அந்த நேரங்களில் சகோதரி கஸ்தூரி கணவனின் தத்துவம் ஒன்று என்ஞாபகத்திற்கு வரும்.

முட்டாள்களோடு வாதம் செய்யாதே செய்தால்
யார் முட்டாள் என்பது தெரியாமல் போய்விடும்.
- மஹாத்மா காந்தி

செவ்வாய், ஜனவரி 10, 2017

தலைப்புச் சிரிப்புகள்


லைவர் இன்றைய அறிக்கையில் விட்ட தகவல் பிரச்சினையாகி விட்டதா ?
ஆமா, கொன்றே செய் அதே நன்றே செய் என்று சொல்லி விட்டார்.
*------------------------------ 01
லைவர் கூடவே எல்லா இடத்துக்கும் போறாங்களே புதுசா ஒரு பெண் அவங்க யாரு ?
தலைவருக்கு அரசியல் வாரிசு இல்லாததால இனிமே இவங்கதான் அடுத்த தலைவியாம்.
*------------------------------ 02
லைவர் திருவள்ளுவர் பிரியரா இருக்கலாம் அதுக்காக இதெல்லாம் ரொம்ப ஓவருனு... சொல்லிட்டுப் போறாரே... செக்ரட்டரி ஏன் ?
அரசு கோப்புகளில் எழுத்தாணியாலதான் கையெழுத்து இடுவேன்னு கையெழுத்துப் போட்டே கிழிச்சுட்டாராம்.
*------------------------------ 03
லைவர் நான் ஆட்சிக்கு வந்தால் பிச்சைக்காரர்களை ஒழிப்பேன்னு சொல்றாரே... எப்படி ?
எல்லோரையும் கூண்டோட ஏற்றி பாக்கிஸ்தான் பார்டரில் கொண்டுபோய் விட்ருவாராம்.
*------------------------------ 04
லைவர் கோஷம் போட்ட தொண்டர்கள் எல்லோரையும் திட்டினாரே ஏன் ?
அவங்க எல்லோருமே தலைவர் வால்க ! அப்படினு கத்தினாங்களாம்.
*------------------------------ 05
லைவர் திடீர்னு... எதுக்கு ? காக்காவை எல்லாம் பிடிப்பதற்கு குறவர்களின் உதவி தேவைனு அறிக்கை விடுகிறார் ?
நேற்று அவரு கட்சிக்கொடி ஏற்றும் பொழுது அவரு வாயில காக்கா கக்கா போயிடுச்சாம் அதனாலதான் இந்த அவரசகால உதவி.
*------------------------------ 06
லைவர் எதுக்கு ? எப்பொழுதுமே தனியாக இருக்கும் பொழுது தலையிலேயே அடிச்சுக்கிறாரு... ?
அப்பத்தான் அவருக்கு அக்கப்போரான சிந்தனைகளை ஒழிந்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் வருமாம்.
*------------------------------ 07
லைவர் ஸ்விட்சர்லாந்து போய் பேங்க் அக்கவுண்ட் தொடங்க முடியாமல் திரும்பி வந்துட்டாரா ?
ஆமா கையெழுத்து போட தெரியாமல் ஃபாமில் கைநாட்டு வச்சுருக்கார் திருப்பி அனுப்பிட்டாங்க...
*------------------------------ 08
லைவர் எதுக்கு ? இப்பவும் கட்சியின் முதல் போஸ்டரை அவரே ஒட்டி துவங்கி வைக்கிறாரு ?
அவரு எப்பவுமே பழசை மறக்க கூடாது, கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கனும்’’னு சொல்லுறவராச்சே....
*------------------------------ 09
லைவர் உகாண்டா நாட்டுக்கு புறப்பட்டவர் விமான நிலையத்திலிருந்து திரும்பி வந்துட்டாரே... ஏன் ?
சன்னலோர ஷீட்டுல யாரு ? உட்காருறதுனு... தலைவரோட முதல் தாரத்துக்கும், ரெண்டாம் தாரத்துக்கும் குடுமிபிடி சண்டை வந்துருச்சாம்.
*------------------------------ 10

சனி, ஜனவரி 07, 2017

குற்றம் குற்றமே...


ந்த இடம் மேலோகம் என்று பூலோகத்தில் சொல்வோமே.. அதைப் போல் உணரப்பட்டேன், நிறைய மனிதர்கள் கூட்டம் நின்றிருந்தது இருபாலரும் மட்டுமல்ல குழந்தைகள் உள்பட ஆனால் எந்த நிலையில் இருக்கின்றார்கள் என்பதை சொல்லத் தெரியவில்லை என்பதைவிட முதலில் நானே உணரவில்லை என்பதே மிகச்சரியாகும் நாம் எதில் நிற்கிறோம் என்பதும் தெரியவில்லை சுற்றிலும் சாம்புராணி புகை வந்து கொண்டு இருந்தது கூடவே நல்லதொரு நறுமணம். சொல்லப்போனால் திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற புராண திரைப்படங்களில் பார்த்திருப்போமே அதைப் போன்றே Setting System.

புதன், ஜனவரி 04, 2017

மனை---வி



நமது மனதிலும், மனையிலும் வீற்றிருப்பவள் என்பதால், மனைவி என்றும்...

நமது வாழ்வில் கடைசிவரை துணையாய் வருபவள் என்பதால், துணைவி என்றும்...

நமக்கு பொன் நகையை தாலாட்டி வருகிறாள் என்பதால், பொண்டாட்டி என்றும்...

நம்மை கொஞ்சி மகிழ்ந்து மடியில் சாய்ந்திடுவாள் என்பதால், பொஞ்சாதி என்றும்...

காஃபியை ஆத்திக் கொடுத்தே தனது காரியத்தை சாதித்து விடுவதால், ஆத்துக்காரி என்றும்...

வீட்டில் இரவு வந்ததும் காரிருளை நீக்கி விடுகிறாள் என்பதால், வீட்டுக்காரி என்றும்...

கடைசிவரை வந்து உனக்கு பீப்பீ ஊதப்போவது நாந்தான்யா என்பதால், பீபி ஹிந்தி என்றும்...

உனக்கு கடைசிவரை நாந்தான் எல்லாம் என்பதால், பெல்லாம் தெலுகு என்றும்...

நம்மை மதி மயக்கி அவள் சிரித்துக் கொண்டே இருப்பதால், ஸ்ரீமதி நேபாளி என்றும்...

நம் மனதில் கார்த்திகை தீபம் போல் ஜொளிப்பவள் என்பதால், மனகார்த்தி கன்னடம் என்றும்...

கணவனை என்றும் திட்டிக் கொண்டே இருக்கின்றாள் என்பதால், என்டித்தி கன்னடம் என்றும்...

இந்த உலக சந்தோஷங்களை என்னிடம் பாரய்யா என்பதால், பாரியா மலையாளம் என்றும்...

வாழ்நாள் முழுவதும் கண்ணுக்கு அறியாத Wi-Fi போல் இணைந்து இருக்கிறாள் என்பதால் Wife ஆங்கிலம் என்றும்... 

கடைசிவரை நம்மை விட்டுப் பிரியாமல் ஜவ்வு மிட்டாய் போல் ஒட்டிக் கொண்டு வருவதால் ஜவ்ஜத் அரபிக் என்றும்...

வேலைக்கு செல்லும்போது அசையும் சொத்து போல கையசைத்து பை பை சொல்வதால், அஷாவா பபாய் பிலிப்பைன்ஸ் என்றும்... 

காலம் முழுவதும் நாந்தான்யா உனக்கு பவ்ளர் என்பதால், பவுள சிங்களம் என்றும்...

சொல்கிறார்கள் என்பது எமது கருத்து உமது கருத்து எதுவோ...... ? ? ?