தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

ஞாயிறு, அக்டோபர் 29, 2017

சந்தோஷம் – சந் = தோஷம்


தோஷம் என்னை சந்திப்பதால் சந்தோஷம் என்னை சந்திக்க மறுக்கிறது சந்தோஷம் என்பது இந்த ஜென்மத்தில் எனக்கு இல்லை என்றாகி விட்டது அடுத்த ஜென்மத்தில் நிறைவாக கிடைக்குமோ ஒருவேளை அடுத்த ஜென்மமே இல்லை என்றால் எந்த ஜென்மத்து பாவம் எனக்கு இந்த வாழ்க்கை இதற்கு காரணகர்த்தா யார் நிச்சயமாக நானில்லை

வெள்ளி, அக்டோபர் 27, 2017

நண்பேன்டா...


டேய்... கதவைத்திறடா...
இந்த நேரத்திலே யாருடா ?
நான்தான்டா...
மணிக்குமார்ராயா... என்னடா ?
மச்சான் கவுத்திப்புட்டாடா...
என்னடா... ஆச்சு சொல்லுடா.. ?.
அவ எனக்கு டாட்டா காமிச்சுட்டாடா...
யாருடா... ?
அவதான்டா..
எவடா... ?
என்னைக் கவுத்திப்புட்டாடா...
சொல்லித் தொலையேண்டா... ?
அவளுக்கு கல்யாணமாம்மாடா...
எவளுக்குடா... ?
இதோ மொபைல்ல இருக்கிறவதான்டா..
மாப்பிள்ளை யாருடா... ?
அவன்தான்டா...
எவன்டா... ?
அந்த மாடசாமிதான்டா...
யாரு... மேலத்தெருக்காரனாடா...?
ஆமாடா...
சரி காலையில பார்க்கலாம் போடா...
இல்லடா...
வேறென்ன செய்ய... விடுடா...?
அவ வீட்டுக்கு போனேன்டா...
என்ன... நடந்துச்சுடா...?
பாட்டா செருப்பெல்லாம் கேட்டாளேடா...
அதனால என்னடா...
வாங்கி கொடுத்தேனடா...
அதுக்கு இப்ப என்னடா...?
பாட்டா செருப்பால அடிச்சிட்டாளேடா...
சரி சரி விடுடா...
விட மாட்டேன்டா...
அதான் அடிக்க விடுட்டியேடா..?
நான் டால்டா கம்பெனி ஓனர்டா...
நீ டாட்டா இல்லையேடா...?
அவளை கொல்லப் போறோம்டா...
நான் வரலைடா...
ஏண்டா...?
நேத்து ராத்திரி வந்தியேடா...?
அதுக்கு என்னடா...?
பேசிப்பேசி விடிஞ்சு போச்சேடா...
அப்படீனா... புறப்படுடா...
எனக்கு வேலையிருக்குடா...
நீ நண்பனாடா...?
இன்னைலருந்து இல்லடா...
நான் உன் நண்பேன்டா...?
இப்ப வம்பு ஏண்டா...?
அப்ப நான் போறேன்டா...
எங்கேடா...?
டாஸ்மாக்குடா...
சரி தொலைஞ்சு போடா...


மணிக்குமார்ராய் போகவும், சனியன் தொலைஞ்சான்டா என கதவைப் பூட்டி விட்டு தூங்கப் போன மணிஷ்கர், மணியைப் பார்த்தான் மணி 06:00am இருக்கும் ஆனால் உகாண்டா கடிகாரம் காட்டியது இப்படி...

செவ்வாய், அக்டோபர் 24, 2017

வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி


வணக்கம் ஐயா மக்கள் பிரச்சனைகளை தாங்கி வரும் எங்கள் ஓங்கி பத்திரிக்கைக்கு பேட்டியளிக்க வந்திருக்கும் எதற்குமே வளைந்து கொடுக்காத வலையபட்டி, வலைப்பதிவர் வளையாபதி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் பேட்டியை துவங்கலாமா ?
ஓங்கி பத்திரிக்கை இன்னும் உயரம் தொட்டு ஓங்கி ஒலிக்க எமது வாழ்த்துகளோடு நன்றிகளும் துவங்கலாம்.

ஞாயிறு, அக்டோபர் 22, 2017

அர்த்தமென்ன ?


ம் நாட்டில் பெரும்பாலானவர்கள் இறைவணக்கம் செய்கின்றார்கள் அப்படி என்றால் இறைவனை நம்புவதாகத்தானே அர்த்தம் கோயிலுக்குப் போகின்றார்கள் அங்கு சாதி அடிப்படையில் தனக்குத்தான் முதல் மரியாதை தரவேண்டுமென பிரச்சனையை கிளப்பி அடி, உதை, வெட்டு, குத்து என்று போய் பல உயிர்கள் கொலையில் வந்தும் முடிகிறதா ? இல்லை மீண்டும் அதையே காரணமாக வைத்து தொடர்கிறது.... பல ஊர்க்கோயில்களில் தேரோட்டம் நிறுத்தப்பட்டு இறைவனையே பல வருடங்களாக சிறை வைத்தும் பூட்டி இருக்கின்றார்கள் உண்மைதானே.... இதை சமூகத்தை சாக்கடையாக்கிய திரைப்படங்களிலும் கூட நாம் கண்டு இருக்கின்றோம்.

வெள்ளி, அக்டோபர் 20, 2017

கடமை கண்ணியம் கட்டுப்பாடு


அண்ணே அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு சொன்னாரே இதுக்கு என்னண்ணே அர்த்தம்
அடேய் அண்டாச்சட்டி தலையா... நமக்கு அம்மா அப்பா கல்யாணம் செய்து வைக்கிறாங்கள்ல... அது அவங்களோட கடமை.
சரிண்ணே கண்ணியம்
அதாவது கல்யாணம் செய்து வச்ச மனைவிக்கிட்டே கண்ணியத்தோட நடந்துக்கிறணும்.
அது எப்படிண்ணே... அண்ணிகிட்டே நீங்க கண்ணியத்தோட நடந்துக்கிட்டா குழந்தை பிறக்காதேண்ணே
அடேய் விளங்கா மடையா.... கண்ணியம்னா.... நீ சொல்றது இல்லைடா... அப்படி இப்படி நடந்து மனைவிக்கு துரோகம் செய்யாம நடந்துக்கிறணும் முதல்ல நீ அண்ணிக்கிட்டே கண்ணியம் தவறக்கூடாது
சரிங்கண்ணே.... அப்படினா.... கட்டுப்பாடு
கல்யாணம் முடிஞ்சு மனைவிகூட சந்தோஷமா வாழ்ந்து ரெண்டு குழந்தை பெத்துக்கிட்டதும் குடும்ப கட்டுப்பாடு பண்ணிக்கிறணும் இதத்தான் அண்ணா கடமை கண்ணியம் கட்டுப்பாடுனு சொன்னாரு
இப்ப புரிஞ்சுக்கிட்டேண்ணே
சரி இதை புரிஞ்சு கல்யாணம் செய்துக்கிட்டு இரண்டு குழந்தை பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்துக்கிட்டு கண்ணியம் தவறவிடாமல் வாழ்ந்து கடமையை நிறைவேற்று
இப்ப விற்கிற விலைவாசியில கல்யாணம் செய்து மனைவியை வாழ வைக்கிறதே கஷ்டமாக இருக்கு இதுல குழந்தை எதுக்குணே
அப்படீனாக்கா நம்ம மோடி மாதிரி கல்யாணம் செய்யாமல் இரு பிரமச்சாரியாக சந்தோஷமாக வாழலாம்
அப்படினா... சம்பாரிச்ச காசு மிஞ்சிப்போகுமேண்ணே
அந்தப்பணத்தை வச்சு வெளிநாடு சுற்றிப்பாருடா
நல்லதுண்ணே நீங்க சொன்னதுபடியே செய்யிறேன்

-சிவாதாமஸ்அலி
அவரு சொல்லிட்டு போனது தலைகீழா வந்துடுச்சே

-Chivas Regal சிவசம்போ

அந்தப் பணத்துலதான் மோடி ஊர் சுத்துறாரா... நான்கூட மோசடி பணத்துல சுத்துறாரோன்னு நினைச்சிட்டேன்

குறிப்பு கேள்விக்குறி இடமுடியவில்லை மன்னிக்கவும்

திங்கள், அக்டோபர் 16, 2017

நையாண்டி தர்பார்

வடிவேலு கிணற்றைக் காணோம்னு
சொன்னதை உண்மை ஆக்கிட்டீங்களேடா...
நாந்தேன் ரெண்டு பேருக்கும் வாடகைக்கு விட்டேன்.

சனி, அக்டோபர் 14, 2017

கலிகாலம்


கலிகாலமாகிப் போச்சு, உலகம் அழியத்தான் இந்த மாதிரியான அக்கிரமங்கள் நடக்குது என பெரியவர்கள் சொல்வதற்கு தகுந்தாற்போல இன்றைய விஞ்ஞான வளர்ச்சியும் அதைதானே நமக்கு காட்டுகிறது, எங்கு நோக்கிணும் அழிவு சுனாமி, பூகம்பம், நிலநடுக்கம், பனிக்கட்டி மழை, சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு, எரிமலை வெடிப்பு, புயல், எங்கும் மனித உயிர்கள் பலி புதிது புதிதாக ஏதேதோ வருகிறது. இந்த அழிவிற்கு நாங்கள்தான் பெயர் சூட்டுவோம் என ஒவ்வொரு நாடுகளும் போட்டி போடுகின்றன... இதை என்னவென்று சொல்வது ?

வியாழன், அக்டோபர் 12, 2017

வியக்கத்தகு வில்லியம்ஸ்

Williams Shakespeare

ஒரு சமயம் உலகே ஆச்சர்யப்பட்ட இங்கிலாந்து நாட்டு பேரறிஞர் ஷேக்ஸ்பியரை அந்தக் காலகட்டத்தில் உலக அழகி பட்டம் பெற்றவள் சந்தித்தாள் அப்பொழுது அவள் ஷேக்ஸ்பியரிடம்...

நீயோ உலகறிந்த அறிவாளி நானோ உலகில் சிறந்த அழகி. நீயும், நானும் திருமணம் செய்து கொண்டால் என்னைப்போல் அழகாகவும், உன்னைப்போல் அறிவாகவும், குழந்தை பிறக்கும் என்றாள்.

செவ்வாய், அக்டோபர் 10, 2017

என் நினைவுக்கூண்டு (7)

கோவளம் கடற்கரையில் நீ

இதன் பின்னணிகளை அறிவதற்கு கீழே சொடுக்கலாம்... 

உனது மறைவு நாளில் எனது மரணகாலம்வரை என்னால் இயன்ற நல்ல காரியத்தை உனக்காக செய்வேன் என்று உறுதியேற்று தேவகோட்டை நோக்கி பயணித்தேன்.

சனி, அக்டோபர் 07, 2017

கவுண்டர்க்காரி


ஒருமுறை அபுதாபி மாலில் குளியல் சோப் நான்கு வாங்கினேன் அதன் விலை பத்து திர்ஹாம்ஸ் கவுண்டரில் பணம் கொடுப்பதற்காக வரிசையில் நிற்க எனக்கு முன்னாலிருந்த பெண் பொருட்களை மிஷினில் வைத்துக் கொண்டு இருந்தாள் கவுண்டரில் வழக்கம்போல பிலிப்பைனி பெண் கூடவே சூப்பர்வைசர் பெண்ணும் கவுண்டரில் இருந்தவள் என்னை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தாள் பல இடங்களிலும் இதுதானே நடக்கிறது இறைவன் தெரியாத்தனமாக என்னை அழகாக படைத்து விட்டதே காரணம் வேறன்ன செய்வது எனக்கும் இது பழகி விட்டது பொதுவாக பிலிப்பைனிகள் பேசுவதை யாருமே கவனிக்க மாட்டார்கள் காரணம் பேச்சின் தொணி நம்மூரில் குறத்திகள் பேசுவார்களே அதைப்போலவே இருக்கும் அவர்கள் கூடினால் பேஸிக்கே இல்லாமல் பேசிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் நான் ஒட்டுக் கேட்பேன். அப்பத்தானே பதிவு போடமுடியும் இவள் சொன்னாள் சூப்பர்வைசரிடம்...

பயான் பிகோத்தி நக்கீதா மல்லாக்கி மைரோன்.
இவன் மீசையைப்பார் பெரிசா இருக்கு
சூப்பர்வைசரும் சிரித்துக் கொண்டே...
பாகெட் கட்டொலெட் நிடோ ?
ஏன் இந்த மாதிரி ?
பயான் அஷாவாங் பபாய் சலித்தா குஸ்தகோ...
இவன் மனைவி வேணும்னு.... சொல்லியிருப்பாள்.
இவள் சிரிக்க... எனது நேரம் வந்தது சோப்பை மிஷினில் செக் செய்தவள்
குட் ஈவ்னிங் சார்.
குட் ஈவ்னிங் ட்டூ யூ.
டென் திர்ஹாம்ஸ் ப்ளீஸ்.

நான் நூறு திர்ஹாம்ஸ் எடுத்துக் கொடுக்க, பாக்கி தொண்ணூறு திர்ஹாம்ஸுக்கு, இரண்டு இருபது திர்ஹாம்ஸும், மூன்று பத்து திர்ஹம்ஸும், நான்கு ஐந்து திர்ஹாம்ஸும் கொடுக்க, நான் வாங்கி அவளுக்கும் கேட்கும்படி எண்ணினேன் இப்படி.

டலவாம்போ இருபது
அபாட்னபோ நாற்பது
லிமாங்போ ஐம்பது
அனினபோ அறுபது
பிதோம்போ எழுபது
பிதோம்போத் லிமா எழுபத்து ஐந்து
வாலோம்போ எண்பது
வாலோம்போத் லிமா எண்பத்து ஐந்து
ஷ்யாம்னபோ தொண்ணூறு
பணத்தை பர்ஸில் வைக்கும்போது கவனித்தேன் மிரண்டு போய்...

நாக்ஸிஸிஸி
ஸாரி
ஓலா ப்ராப்லமா
பிரச்சனை இல்லை
சலாமத்
நன்றி
ஓலாங்கனுமான்
பரவாயில்லை

நகரும்போது எதிர்ப்புறமுள்ள கண்ணாடியில் கவனித்தேன் இரண்டு பிலிப்பைனிகளும் சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இதை எதற்காக பதிவு செய்தேன் தெரியுமா ?
எங்கள் கழுத்தை அறுக்கத்தான்
இல்லை நண்பா அதன் பிறகு நான் அங்கு போனால் அவளது கவுண்டருக்கே போவேன்
அதான் தெரியுமே...
இதில் பழக்கம் தொற்றிக் கொண்டது
எழுதிய விதி இப்படித்தான்

மற்றொரு தருணத்தில் நானும் எனது பிலிப்பைனி நண்பனும் பிலிப்பைன்ஸ் தூதரகம் சென்றோம் அவனது குழந்தையின் பாஸ்போர்ட்டில் ஒரு பிரச்சனை. அதை சரி செய்வதற்காக நான் பொழுது போகாமல் சும்மா உதவிக்காகத்தான் எனது காரை எடுத்துக் கொண்டு போனோம் அங்கு பிரச்சனை தலைதூக்க நான் கவுண்டர்க்காரிக்கு போன் செய்தேன் அடுத்த பத்து நிமிடத்தில் உள்ளிருந்து ஒரு பெரியவர் வந்தார்
ஹூஸ் இஸ் ஹியர் மிஸ்டர் கில்லர்ஜி
யெஸ் ஸார்
எங்களிடமிருந்து பாஸ்போர்ட்டையும் பேப்பர்களையும் பெற்றுக்கொண்டு உள்ளே போனவர் அடுத்த கால்மணி நேரத்தில் வேலையை முடித்துக் கொண்டு பாஸ்போர்ட்டுடன் வந்தார் சித்தப்பாவுக்கு நன்றி சொல்லி விட்டு வெளியேறினேன் அவர்தான் கவுண்டர்காரியின் தாய்மாமன் அன்று அவள் எனது மீசையை கிண்டல் செய்ததற்கு கண்டு கொள்ளாமல் வந்திருந்தாலோ, இல்லை அவளுடன் சண்டையிட்டு வந்திருந்தாலோ, இன்று இந்த வேலை முடிந்து இருக்குமா... கோபம் வந்து பயன் என்ன... ஏதோ கொழுந்தியாள்தானே என்று நான் விட்டுக் கொடுத்து வந்ததால் லாபம்தானே... பொருத்தவர் பூமி ஆள்வார் என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா... ?

// மற்றவரைத்தாக்கி வீழ்த்துகிறவன் வீரனல்ல கோபம்
வரும் சமயம் அதை அடக்கி கொள்பவனே வீரனாவான் //
எங்கோ எப்பொழுதோ சுவற்றில் எழுதியிருந்து நான் படித்த வாசகம் என் மனக்கண்ணில் வந்து போனது 

CHIVAS REGAL சிவசம்போ-
இதே ஆம்பளை ஒருத்தன் மீசையை இழுத்துப் பார்த்திருந்தால் ?
சாம்பசிவம்-
இழுத்தவன் கையில கோடரி வெட்டுதான்.

வியாழன், அக்டோபர் 05, 2017

இது பெரியார் சொன்னது அல்ல !

மேலே புகைப்படத்தில் உள்ளது மட்டும் தந்தை பெரியார் சொன்னது

ட்சியை கலைத்து விட்டு இவர்களை வீட்டுக்கு அனுப்ப போறேன்னு சொல்றாரே... இவரு கவர்னரா ? இல்லை கட்சித்தலைவரா ? இல்லை ஏதாவது தொகுதி சட்டமன்ற உறுப்பினரா ? ஒண்ணுமே புரியலையே... சும்மாவா நம்ம தாத்தன் பாட்டன் சொல்லி வச்சாங்க.... கேனப்பயல்க ஊருல கிறுக்குப்பய நாட்டாமைன்னு.. இப்படி சொன்னது கில்லர்ஜி’’னு நினைக்காதீங்கோ... ஊருக்குள்ளே நாலுபேரு நாலு விதமா பேசிக்கிட்டாய்ங்கே...
* * * * * * * * * * 01 * * * * * * * * * *

தினம் சாயங்காலம் ஆயிட்டா... இந்த ஊடககாரங்கே பத்து வெத்து வேட்டுகளை கூட்டி வச்சுக்கிட்டு நாட்டை இவங்கேதான் திருத்தப்போறது மாதிரி இலவு வீட்ல சண்டை போட்டது போல போடுறாங்களே... இதனால எந்த அரசியல்வாதி திருந்தப் போறாய்ங்க எல்லாப்பயலும் திருடன்னு தெரிஞ்சும் மக்கள் ஓட்டுப் போடுவதற்கு தயாராகத்தான் இருக்காங்க என்ன செய்யிறது ? எல்லாம் கலிகாலம். இப்படி புலம்புவது கில்லர்ஜி இல்லை தெருவுக்குள்ளே ரெண்டு பெருசுங்க புலம்பிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 02 * * * * * * * * * *

ல்லக்கைகள் நாலுபேரு பக்கத்தில் இருந்ததால... நீதி கேட்டு நெடும்பயணம்னு சொன்னவருக்கு நிதித்துறையை கொடுத்ததால இப்ப ஆத்தா சாவுல மர்மம் இல்லைனு ஆயிடுச்சு போலயே.. அவரு வாயை மூடிட்டாரே... எல்லாம் நாற்காலி ஆசை வேறென்ன ? காலக்கொடுமையய்யா காலமேகப்புலவரய்யான்னு ஆயிடுச்சு இப்படி பேசுனது கில்லர்ஜி கிடையாது கார்மேகம் டீக்கடையில பேசிக்கிட்டாய்ங்கே...
* * * * * * * * * * 03 * * * * * * * * * *

மிழ்நாடு முழுக்க எல்லாக் கட்சிக்காரனும் அனிதா, அனிதான்னு பேசுறாய்ங்கே... அன்புமகள்’’னு சொல்றாங்கே... எல்லாம் ஓட்டுக்காகத்தானே.... அடுத்து ஒரு வினிதா செத்துடக் கூடாதுன்னு யாராவது அதற்கான வேலையை செய்யிறாய்ங்களா ? உங்களைச் சொல்லி குற்றமில்லை மக்கள் இன்னும் மாக்களாக இருக்கும்வரை உங்க வீட்ல பணமழைதான் இப்படிச் சொன்னது கில்லர்ஜி இல்லை முனீஸ்வரர் கோயில் முச்சந்தியில மூணு பேரு பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 04 * * * * * * * * * *

சும்மா சொல்லக்கூடாது இரும்பு மனுஷின்னு சொன்னது சரிதான் போல... ஆத்தா சாகவும் ஆளாளுக்கு வாய் பேசுறாய்ங்களே.... ஸிஸ்டம் சரியில்லையாம் இவ்வளவு நாளா புடுங்கவா போனாரு ? என்னமோ போர் வருதாம் இவங்களோட அக்கப்போரும் ஆரம்பமாகப் போகுதோ... ச்சே அன்னைக்கே குண்டடிபட்டு செத்து இருக்கலாம். இப்படி அலட்டிக் கொண்டது கில்லர்ஜி இல்லை சுப்பையா சந்துல இருக்கிற சுதந்திரப் போராட்ட தியாகி மோகனசுந்தரம் பிள்ளை சொல்லிக்கிட்டு இருந்தாரு...
* * * * * * * * * * 05 * * * * * * * * * *

ன்னமோ அசிங்கமா பாடிட்டான் பீப், மட்டன் அப்படி இப்படினு மாதர் சங்கம் எல்லாம் கொடி பிடிச்சாங்க இதோ அவனோட படத்துக்கு தியேட்டருல கூட்டத்தை பார்த்தியா ? எல்லாம் பொம்பளைப் புள்ளைங்கதான் இந்த நாடு திருந்தும்னு நினைக்கிறே.... ? சுனாமி வரணும் அப்படியாவது கூமுட்டை ஜனங்கள் குறையணும் நாட்டுல கோடிக்கணக்குல முட்டாள் ஜனங்கள் இருக்கிறதைவிட நூற்றுக்கணக்குல அறிவாளிங்க இருந்தால் போதும் மோடி இல்லாமல் நாட்டை ஆளலாம் இப்படி சலிச்சுக்கிட்டது கில்லர்ஜி இல்லைங்கோ.... சமூக ஆர்வலர்கள் இரண்டு பேரு பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 06 * * * * * * * * * *

ன்ன ஸார் நம்ம பணத்தை பேங்க்ல போட்டு வைக்கிறதுக்கு இப்படி மணிக்கணக்கா வரிசையில நிற்க வேண்டியது இருக்கு ? என்ன ஸார் இதுக்கே இப்படி சலிச்சுக்கிறீங்க ? தேர்தல்ல நின்னு லட்சங்கள் செலவு செய்து எம்எல்ஏவாகி கோடிக்கணக்குல சம்பாரிச்சு ஆடம்பரமாக வாழப்போறான்னு நமக்கு கண்கூடாகவே தெரியுது அப்படி இருந்தும் நாம் நமது கடமை, வாக்குரிமை, மண்ணாங்கட்டின்னு சொல்லிக்கிட்டு வெயில்ல நின்னு காத்திருந்து ஓட்டுப்போட்டு அவனை சட்டமன்றத்துக்கு அனுப்பி வச்சுட்டு அஞ்சு வருசத்துக்கு மறந்துடுறோம் இதுல நம்மலோட பணத்தை பாதுகாப்பாக பேங்க்ல போடுறதுக்கு பொறுக்க மாட்றீங்க ? இப்படி சொன்னது கில்லர்ஜி இல்லை அம்போ ஓவர்லோடு பேங்க்ல பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 07 * * * * * * * * * *

ண்டி பரிமளா நம்ம மோடி டிஜிடல் இந்தியான்னு சுகாதாரமாக ஆக்கப்போறாராமே... எப்படி ? ஆமாக்கா எம்புருஷனும் சொன்னாரு நம்ம குப்பைகளை வீட்டு மச்சுக்குள்ளே மக்கு குப்பை, மக்கா குப்பைனு ரெண்டு பிரிவா சேகரிச்சு மறுவருஷம் முனுஷிபாலிட்டியில கொடுத்தா நம்மலோட ஸ்விஸ் அக்கவுண்ட்டுல எடைக்கு எடை ஸ்வீட் போட்டு வப்பாகலாம். அப்படியா.... நானும் புருஷன்ட்ட சொல்லி லோன் போட்டு மச்சுல ரூம் போடச் சொல்லணும். இப்படி நான் சொல்லலைங்கோ... பக்கத்து வீட்டு பரிமளாவும், அடுத்த வீட்டு அகிலாவும் அவங்க ரெண்டுபேர் வீட்டுக்கும் இடையில் வீடு கட்டாமல் காலியாக கிடக்கும் கில்லர்ஜியின் இடத்தில் குப்பைகளை கொட்டி விட்டு பொறணி பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 08 * * * * * * * * * *

லைவன் வர்றான்னு தெருவுல மக்கள் நடக்க முடியாத அளவுக்கு ப்ளக்ஸ் போர்டு வக்கிறாங்கே.... தலைவன் செத்துட்டாலும் வைக்கிறாங்கே... கல்யாணத்துக்கு நண்பனை வாழ்த்தி வைக்கிறாங்கே... கோவில் திருவிழான்னு வைக்கிறாங்கே... பாட்டி செத்ததுக்குமாடா எதற்குத்தான் பகட்டு வாழ்க்கை வாழுறதுன்னு இப்ப உள்ளவங்களுக்கு தெரியலையே... ரெண்டாம்நாள் பார்த்தால் அந்த ப்ளக்ஸ் போர்டு புறம்போக்குல வீடு இல்லாதவன் கக்கூஸ் மறைவுக்கு வச்சு அதுமேல ஒண்ணுக்கு அடிக்கிறான் என்னாங்கடா உங்களோட மரியாதை ? இப்படி வருந்தியது நானில்லை சமூக அக்கரையுள்ள கில்லர்ஜி மாதிரி ஒருத்தன்னு வச்சுக்கங்களேன்...
* * * * * * * * * * 09 * * * * * * * * * *

சிரியர்கள் நியாயம் கேட்டு போராட்டம் நடத்தியதால் அன்றைய தினம் சம்பளம் கிடையாது என்று சொல்ற அரசு சட்டமன்ற உறுப்பினராகி மூன்றரை வருடமாகியும் சட்டமன்றம் செல்லாத தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மட்டும் சம்பளம் சரியாக போய்க்கிட்டு இருக்கே இது நியாயமா ? இதைப்போல விடுமுறை எடுத்த எல்லா சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சம்பளம் பிடிக்க அரசுக்கு திராணி இருக்கா ? அப்படினு கில்லர்ஜி கேட்கலை. போராட்டத்தில் ஈடுபட்டவங்க பேசிக்கிட்டாங்க...
* * * * * * * * * * 10 * * * * * * * * * *


சிவாதாமஸ்அலி-
அப்படீனாக்கா... மேலே எழுதியதெல்லாம் சுயபுத்தி இல்லையா ? அடுத்தவங்க பேசும்பொழுது ஒட்டுக்கேட்டதா ?
சாம்பசிவம்-
எல்லாம் காரணமாகத்தான் பிரச்சனை வரும்பொழுது துளசிதரன் மாதிரியான ஆசிரியர்கள் பேசிக்கிட்டதுனு சொல்லி தப்பிச்சுக்கிறலாம்ல...
Chivas Regal சிவசம்போ-
பழம் விழுந்தால் தேவகோட்டை, கொட்டை விழுந்தால் பாலக்காடு.

 காணொளி