தெருக்குரல்

அன்பு பெயர்த்தி க்ரிஷண்யாவுக்கு... உனது 20-வது அகவையில் 07.11.2039 அன்று இந்த தளத்தில் உன்னிடம் நான் பேச வேண்டிய விசயம் பற்றிய கடிதம் வெளிவரும் அறிந்து கொள். நீ நீடூழி வாழ இறைவனை இறைஞ்சுகிறேன் இறுதி மூச்சுவரை... உனது ஐயா (கில்லர்ஜி - किल्लरजि - കില്ലർജി - కిల్లర్ జి - Killergee - كـــيللرجــــي)

இதான் கில்லர்ஜி வூட்டோட மொகப்பு

வியாழன், ஏப்ரல் 28, 2022

அதிர்ஷ்டசாலி


ஒரு பேரழகியை கண்டு...
 
ஓவியம் தீட்டுகின்றான் ஓவியன்
கவிதை வடிக்கின்றான் கவிஞன்
சிலை செதுக்குகின்றான் சிற்பி
படம் எடுக்கின்றான் கலைஞன்
சீரழிக்க நினைக்கிறான் கொடூரன்
கொலை செய்கிறான் கொலைகாரன்
பேரம் பேசிட துடிக்கிறான் தரகன்
விலை கொடுக்கிறான் காமுகன்
அனுபவித்து ரசிக்கிறான் கணவன்
இவளை படைத்தவன் பிரம்மன்.
 
ChavasRegal சிவசம்போ-
கேட்பதற்கு நல்லாருக்கு இப்பத்தான் இப்படி பேரழகியை கண்டால் கொன்று பேயா... அலைய விடுறாய்ங்களே...

27 கருத்துகள்:

  1. இலவச எண்ணெய் சட்டி கொடுக்கிறான் அரசியல்வாதி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களை வறுத்து எடுக்கப் போகிறேன் என்பதை மறைமுகமாக சொல்கிறான் இதை நாம்தான் உணர்தல் வேண்டும்.

      நீக்கு
  2. எல்லாம் சரிதான். மிக அழகாகப் பிறந்ததற்கு எப்போதுமே சந்தோஷப்பட்டுக்கொண்டே இருப்பாளா அந்தப் பேரழகி இல்லை வருந்துவாளா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவளுக்கு அந்தத்த நேரத்தில் கிடைக்கும் அனுபவங்களை பொறுத்து சந்தோஷமும் வருத்தமும்!  ஆராதிப்பவர் வந்தால் சந்தோஷம்.  அடக்கி அனுபவிக்க / அழிக்க  நினைப்பவர் வந்தால் வருத்தம், துயரம்.

      நீக்கு
    2. இந்தியாவில் பிறந்ததற்காக பயப்பட வேண்டும் தமிழரே...

      நீக்கு
  3. அவரவர் ஆசை, மனநிலைக்கேற்ப செயல்கள். கொடூரன்கள் கையில் சிக்காமல் இருந்தால் போதும்.

    பதிலளிநீக்கு
  4. பெண்ணின் பெருந்தக்க யாவுள என்கிறார் வள்ளுவன்...

    பதிலளிநீக்கு
  5. பேரழகு சில சமயம் விலை கொடுத்து ஆபத்தையும் வாங்குகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இந்தியாவில் அழகு ஆபத்தில்தான் முடிகிறது.

      நீக்கு
  6. பேரழகி என்பது பார்ப்பவரின் மனக்கண்ணில் இருக்கிறது!

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக தங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை.
    அதீதமான அழகு என்றுமே ஆபத்துதானதுதான். அழகான உடலழகை பெறுவதை விட நல்ல சிந்தனையுள்ள மனத்தூய்மையான அழகை பெறுகிறவர்களே பாக்கியசாலிகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக சகோ தங்களது அழகிய கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி.

      நீக்கு
  8. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். கொடூரன் கையில் சிக்காமல் இருந்தால் மிக நல்லது.

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. கடந்த மாதம் ஓர் வெளிநாட்டு அழகியை சிதைத்து கொன்று விட்டார்கள்.

      அந்த செய்தியை படித்ததில் விளைவு.

      நீக்கு
  10. கவிதை நன்றாக இருக்கிறது.
    பின்னூட்டங்களுக்கு நீங்கள் கொடுத்த பதில்கள் அருமை.
    இப்போது பயமாக இருக்கிறது பெண் குழந்தையை பெற்றவர்களுக்கு.
    இறைவன் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  11. கவிதை நன்றாக இருக்கிறது. ஒவ்வொருவர் மனநிலையை சொன்னீர்கள்.
    இதற்கு போட்ட பின்னூட்டத்தை காணோமே!
    பெண்ணை பெற்றவர்கள் ஒரு வித அச்சத்தில் தினம் இருக்கிறார்கள். இப்போது உள்ள சூழ்நிலை பெண்களுக்கு பாதுகாப்பு குறைவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

      நீக்கு
  12. அழகான பெண்ணுக்கு மட்டும் ஆபத்து இல்லை. நல்ல புத்தி உள்ள , சம்பாதிக்கும் அழகில்லா பெண்களுக்கும் ஆபத்துதான். அவர்களை வார்த்தைகளால் மயக்கி திருமணம் புரிந்து பின் பணத்தை கொள்ளை அடிப்பவர்களையும் கேள்வி படுகிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய சூழலில் நாம் எப்படி வாழவேண்டும் என்பதை பெண்களும் உணர்வதில்லை.

      நீக்கு