பழங்கால வாகனங்கள் எவ்வளவு பெரிய விபத்து நடந்தாலும்
சிறிய அளவில் நெளிந்தோ, அல்லது வர்ணங்கள் பெயர்ந்த நிலையில் இருக்கும்,
உள்ளே பயணம் செய்த நபர்கள் அதிக பட்சமாக, இறந்து விடுவார்கள், அல்லது படுகாயம்
அடைவார்கள் இதன் காரணம் என்ன
? பழைய
வாகனங்கள் அதிக எடை கொண்டதாக இருக்கும் (2400 kg) இதன் காரணமாக வாகனங்கள் வேகமாக செல்வது
தடைபட்டுக் கொண்டே வந்தது எரிபொருள் செலவுகளும் கூடியது, உள்ளே மனித உயிர்களுக்கு எந்த விதமான பாதுகாப்புகளும் கிடையாது, அனைத்து பகுதிகளும்
இரும்புகளால் வடிவமைக்கப்பட்டது கண்ணாடிகளிலும் அதிகமான பைபர் உபயோகம் இல்லை இதன்
காரணமாக மனிதர்கள் உள்ளுக்குள்ளேயே அல்லோலப்பட்டு காயமடைகிறார்கள், அதிலும் வாகனம்
பல்டி அடித்தால் கண்டிப்பாக மரணம் என்பது நிச்சயிக்கப்பட்டு விட்டது.
இந்நிலையை மாற்றியமைக்கவே விஞ்ஞானிகள் பெரும்
முயற்சிகொண்டு மனிதர்கள் குறைந்த பட்ச காயங்களுடன் பிழைத்துக் கொள்ளவேண்டும் என்ற
வகையில் தயாரித்ததே இன்றைய வாகனங்கள் இவை குறைந்த பட்ச எடையாக (1200 kg) வாகனங்களை உருவாக்கினார்கள், உட்புறத்தில்
பைப்பர் உடைந்தாலும் தெரிக்காமல் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு சிதில் சிதிலாக கீழே
விழுவது போன்ற கண்ணாடிகள், முடிந்த அளவு இரும்பை குறைத்து கனத்த ரப்பர்கள்,
அலுமினியங்கள், வாகனம் ஒரு குறிப்பிட்ட சப்தத்திற்குமேல் மோதினால் எட்டுத்
திசைகளிலும் வாகனத்தின் உட்புறங்களில் காற்றுகளை நிரப்பி திணிக்கப்பட்டிருந்த SRS AIRBAG என்று சொல்லப்படும் (Supplemental Restraint System) ஊதுகூண்டுகள் வெளியேறி மனிதர்கள் உள்ளே எந்தப்பக்கம் வந்து மோதினாலும் ஊதுகூண்டுகளால்
மோதப்பட்டு படுகாயம் அடையாதவாறு காப்பாற்றப்படுகிறார்கள் வாகனம் பல்டி அடித்தாலும்
உயிர் பாதிக்கும் அளவுக்கு போவதில்லை, சுற்றிலும் மென்மையான பஞ்சு இருக்கைகள்
குறைந்த எரிபொருள் செலவில் கூடுதலான தூரம் செல்ல முடிவதோடு விரைவாகவும் செல்கிறது
மேலும் அபார விஞ்ஞான வளர்சியின் உதவியால், போகும் இடத்திற்கு வழிகாட்டும் GPS Navigation என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது அது மனிதனுக்கு
வேண்டிய மொழிகளில் பேசி வழி சொல்கிறது, பின்புறத்தில் இருப்பவர்கள்
தொலைக்காட்சியில் திரைப்படங்கள் காணலாம், சங்கீதம் கேட்கலாம், வாகனம் ஓட்டிச் செல்லும்
பொழுது தொல்லைபேசி அழைத்தால் எடுக்காமலே வாகனத்தின் இணைப்புடன் உள்ள Bluetooth என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது அதன் பொத்தானை அழுத்தி விட்டு பேசிக்கொண்டே
வாகனத்தை ஓட்டலாம், வெகுதூரம் ஓட்டியதால் கால் வேதனை ஏற்பட்டால் Cruise Control என்று சொல்லப்படும் கருவி இருக்கிறது இதன் அமைப்பை சரி செய்து
விட்டால், வாகனம் ஒரே சீரான நிலையில் போய்க்கொண்டு இருக்கும்... கால்களை மாற்றி
வைக்கலாம் அல்லது இருக்கையில் மடித்து வைத்துக் கொண்டு உட்காரலாம்
தயவு செய்து கை வலித்தால் ? என்று கேட்டு விடாதீர்கள், அதன் முயற்சியும்
நடந்து முடிந்து விட்டது விரைவில் நடைமுறைக்கு வருகிறது, அதாவது போகுமிடத்தை பதிவு
செய்து விட்டால் மகிழுந்து தானாகவே கொண்டு போய்விடும் இதில் ஒரு நல்ல செயல்
இருக்கிறது விபத்துக்கள் குறைய வாய்ப்புண்டு மகிழுந்துகள் மனிதனைப்போல போட்டி
போடாமல் விதிமுறைகளை சரியாகப் பயன்படுத்தும் அடுத்த வாகன ஓட்டிகளை சென்னைத்தமிழில்
பெற்றோர்களை திட்டாது காரணம் இவைகளுக்கு ஆறறிவு கிடையாது
இப்படி விபத்துகள் நடந்தால் வாகனம் அதிகமான
அளவில் பாதிக்கப்படும், ஒருவேளை பல்டி அடித்தால் கண்டிப்பாக வாகனம் கண்டம் ஆவது
உறுதி அதேநேரம் மனிதர்களுக்கு அதிகமான காயம் ஏற்படலாம் உயிர்ச்சேதம் ஏற்படுவது
குறைவு என்பது 100/100 உண்மை, மேலும் ஒரு உண்மை
இருக்கிறது இந்த விஞ்ஞான வளர்ச்சியின் உதவியால் செயல்படும் Navigation, Cruise
Control, Supplemental Restraint System, Bluetooth போன்றவைகளின் அலைவரிசைகளால்
மனிதனின் இதயம் பாதிக்கப்பட்டு, மருத்துவர் ராமதா... மன்னிக்க, ஊரில்
உள்ள மருத்துவர்களிடம் சென்று சொந்த வீட்டை விற்று கப்பம் கட்டி அவர்கள் சொந்தமாக
மருத்துவமனையும், அதன் வளாகத்திலேயே மருந்தகமும் கட்டிய பிறகே விரைவில் மரணத்தை
தழுவும் சூழலுக்கு தள்ளப்படுகிறான் என்பதும்100/100 உண்மையே ஆனால் நமக்கு இதனைப்பற்றி கவலையில்லை
காரணம் நாம் அனைத்து விஞ்ஞான அதிசயங்களையும் சீக்கிரம் அனுபவிக்க வேண்டும், இதனால்
நாம் சீக்கிரம் மேலே போகிறோமே என்ற சிந்தை இந்த ஆட்டு மந்தை (ஆறறிவு) கூட்டத்துக்கு என்று தோன்றும் ?
காணொளி




.jpg)

